May 17, 2020

பரம்பொருள்-பதிவு-243


               ஜபம்-பதிவு-491
              (பரம்பொருள்-243)

“உண்மையை
உரக்கச்
சொல்வதின் மூலம்
என்னுடைய
உயிர்
எடுக்கப்படுமானால்
நான்
என்னுடைய
உயிர்
இருக்கும் வரை
உண்மையை
சொல்லிக்
கொண்டு தான்
இருப்பேன்
என்று
சொல்லி
சாகும் வரை
உண்மையை
சொல்லி
உயிர் விட்டவர்
தான் சாக்ரடீஸ் “

“சாக்ரடீஸ்
சொல்லிச்
சென்ற உண்மை
மட்டுமல்ல
இந்த உலகத்தில்
உள்ள
அனைத்து
உண்மைகளும்
சீடர்களின்
மூலம் தான்
இந்த உலகத்தில்
காலம் காலமாக
கொண்டு செல்லப்
பட்டுக் கொண்டே
இருக்கிறது
உண்மையானது
இந்த உலகத்தில்
சீடர்களின்
மூலமே
வாழ்ந்து
கொண்டிருக்கிறது ”

“காலத்தை
கடந்து
உண்மையை
இந்த உலகத்தில்
கொண்டு செல்லும்
மிகப்பெரிய
பொறுப்பை
ஏற்று இருப்பவர்கள்
சீடர்கள் மட்டுமே ;
சீடர்கள்
மூலமே
உண்மையானது
இந்த உலகத்தில்
பரிமாற்றம்
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கிறது ;
உயிர்த்துடிப்புடன்
வாழ்ந்து
கொண்டிருக்கிறது ;”

“உண்மையை
உணர்ந்து
இந்த உலகத்திற்கு
சொல்ல
வந்தவர்களை
இந்த உலகம்
ஏற்றுக்
கொள்வதேயில்லை “

“பொய்யை
மூலதனமாகவும் ;
பித்தலாட்டத்தை
கடையாகவும் ;
தான் செய்யும்
தவறை
மறைத்து
நல்லவர்கள் போல்
தங்களை
காட்டிக் கொண்டு
பொய் வியாபாரம்
செய்பவர்களையும் ;
பணத்திற்காக
காலடியில் வீழ்ந்து
கிடப்பவர்களையும் ;
வாயில் இனிப்பு
வைத்து
மனதில்
நஞ்சு வைத்து
பேசிக் கொண்டு
திரிபவர்களையும் ;
தன்னுடைய
தவறை சரி
என்று நிரூபிக்க
ஆயிரம் பொய்க்
காரணங்களை
சொல்லிக் கொண்டு
நல்லவர்கள் போல்
நடித்துக் கொண்டு
திரிபவர்களையும் ;
தான் இந்த
உலகம்
தலை மேல்
வைத்து
கொண்டாடுகிறது”

“உண்மையை
உணர்ந்தவர்கள்
உண்மையை
இந்த உலகத்திற்கு
சொல்ல
வந்த போது
அதை கூட
இருப்பவர்கள்
யாரும்
உணர்ந்து
கொள்ளவேயில்லை
உண்மையை
உணர்ந்தவர்களை
அவர்களுடைய
எதிரிகளே
அதிகம்
உணர்ந்து
இருக்கின்றனர் ;”

“எதிரிகள்
மட்டுமே
நம்முடைய
திறமையை
சரியாகக்
கணிப்பார்கள்
எதிரிகளால்
மட்டுமே
நம்முடைய
திறமையை
சரியாகக்
கணிக்க
முடியும் - கூட
இருப்பவர்களால்
நம்முடைய
திறமையை
சரியாகக்
கணிக்க
முடியாது
என்பதற்கு
சாக்ரடீஸ்
அவர்களுடைய
மரணமே சாட்சி “

“சமுதாயம்
தான் என்ற
ஆணவத்தால்
தலை விரித்து
சதிராட்டம்
ஆடிக்
கொண்டிருப்பதால்
தான்
உண்மையை
உணந்தவர்கள்
இந்த உலகத்தில்
பிறப்பதேயில்லை “


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 17-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment