May 17, 2020

பரம்பொருள்-பதிவு-244


                ஜபம்-பதிவு-492
              (பரம்பொருள்-244)

“அப்படியே
உண்மையை
உணர்ந்தவர்கள்
இந்த உலகத்தில்
பிறந்தாலும்
இந்த சமுதாயத்தை
மாற்ற முடியாது
திருத்த முடியாது
சீரமைக்க முடியாது
என்று வருத்தப்பட்டு
பிரபஞ்ச ரகசியங்கள்
முதல்
பிரம்ம ரகசியம்
வரை
தன்னைச்
சார்ந்தவர்களுக்கோ
தன்னுடைய
குடும்பத்தைச்
சார்ந்தவர்களுக்கோ
தன்னுடைய
உறவினர்களுக்கோ
தன்னுடைய
நண்பர்களுக்கோ
சொல்லாமல்
உண்மையின்
ரகசியத்தை
தன்னுடைய
சீடர்களுக்கு
மட்டுமே சொல்லி
உண்மையை
உணர்ந்தவர்கள்
உண்மையை
காத்து
வந்திருக்கின்றனர் “

“உண்மையானது
இந்த சமுதாயத்தில்
மறைந்து தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறது
உண்மை கூட
இந்த உலகத்தில்
வாழ்வதற்கு
மறைந்து தான்
சுவாசிக்க
வேண்டியதிருக்கிறது”

“உண்மைக்கே
இந்த நிலைமை
என்றால்
உண்மையை
கடைபிடிப்பவர்கள்
உண்மையை
உணர்ந்தவர்களுடைய
நிலையை சொல்ல
வேண்டியதில்லை”

“இந்த உலகம்
கெட்டு விட்டது
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
கெட்டு விட்டனர்
என்று பிறரையே
குறை சொல்லித்
திரிந்து
கொண்டிருப்பவர்கள்
தாங்கள்
நல்லவர்களா
என்று ஒரு
நிமிடம்
கூட நின்று
யோசிப்பதேயில்லை ;
இவர்கள்
பக்கத்து வீடு
தீப்பிடித்து
எரியும் போது
அதை அணைக்க
ஓடி வராமல்
வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருப்பவர்கள்
அடுத்து தன்னுடைய
வீடும் எறியப்
போகிறது என்ற
அறிவு இல்லாமல்
இருப்பவர்கள் “

“பொய்யானது
நல்லது என்ற
போர்வையில்
இந்த உலகத்தில்
சுதந்திரமாக
உலா வரும் போது
உண்மைகள்
மறைந்து
வாழ வேண்டிய
நிலை தான்
ஏற்படும் “

“ஆனால்
உண்மையை
உணர்ந்தவர்கள்
உண்மையை
இந்த உலகத்தில்
செத்து விடக்
கூடாது
என்பதற்காக
தங்களுடைய
உயிரையே
கொடுத்துக்
கொண்டு தான்
இருக்கின்றனர்”

“உண்மையை
உணர்ந்தவர்கள்
தங்களை
வெளிப்படுத்திக்
கொள்ளாமல்
இந்த உலகத்தில்
வாழ்ந்து
கொண்டிருந்தாலும்
உண்மையானது
இந்த உலகத்தில்
உயிர்த்துடிப்போடு
வாழ்ந்து கொண்டு
தான் இருக்கும் “

“உண்மை
என்பதில் கடவுள்
என்பவர் குடி
கொண்டிருக்கிறார் ;
என்பதை
உணர்ந்து
கொண்டால்
கோயில்கள்
எதற்காக கட்டி
வைக்கப்பட்டு
இருக்கிறது
என்பதையும் ;
கோயிலில்
கடவுள்
சிலைகள்
எதற்காக வடித்து
வைக்கப்பட்டிருக்கிறது
என்பதையும் ;
அறிந்து
கொள்ளலாம் “

“உண்மை
என்பது
நம்முடைய
மனதில்
குடியேறாத வரை
கடவுள் என்ற
உண்மையை
யாராலும்
உணர்ந்து
கொள்ள முடியாது “

“கடவுளை
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்றால்
உண்மையை
உணர்ந்து
தான்
ஆக வேண்டும் “

---------- பரம்பொருள் சுபம்-----

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 17-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment