May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-1


                ஜபம்-பதிவு-493
           (அறிய வேண்டியவை-1)

(பாண்டவர்கள்,
குந்தி, திரெளபதி,
ஆகியோர் பேசிக்
கொண்டிருக்கும்
போது உள்ளே
நுழைந்தார் கிருஷ்ணன்)

குந்தி :
“வா! கிருஷ்ணா வா!
நலமாக இருக்கிறாயா? ”

கிருஷ்ணன் :
“உங்களுடைய ஆசி
எனக்கு இருக்கும்
போது என்னுடைய
நலத்திற்கு என்ன
குறை ஏற்படப்
போகிறது அத்தை”

“ஆனால் நீங்கள்
அனைவரும்
நலமாக இல்லை
போல் தெரிகிறதே ;
நலத்தில் ஏதோ
குறை ஏற்பட்டது
போல் தெரிகிறதே ;
பிரச்சினையில்
மாட்டிக் கொண்டு
விடை தெரியாமல்
அல்லல் படுவது
போல் தெரிகிறதே ;
பிரச்சினையை
தீர்ப்பதற்குரிய வழி
தெரியாமல் விழி
பிதுங்கிக் கொண்டு
இருப்பது போல்
தெரிகிறதே ;

குந்தி :
“ஆமாம்! கிருஷ்ணா
நீ சொல்வது சரி தான்
எங்களுக்கு ஒரு
பிரச்சினை
ஏற்பட்டிருக்கிறது ;
பிரச்சினையை
தீர்ப்பதற்குரிய வழி
எது என்று
தெரியாமல்
கலங்கிக் கொண்டு
இருக்கிறோம் ;”
நீ தான் எங்கள்
பிரச்சினையை
தீர்ப்பதற்கு ஒரு
நல்ல வழியைச்
சொல்ல வேண்டும்”

கிருஷ்ணன் :
“என்னை
நம்பியவர்களுக்கு
ஒரு பிரச்சினை
என்றால் நான்
ஓடி வந்து
உதவி
செய்ய மாட்டேனா?”

குந்தி :
“ஆனால், கிருஷ்ணா
எங்களுக்கு பல்வேறு
பிரச்சினைகள்
ஏற்பட்ட போது
உதவி செய்வதற்கு
நீ வரவே
இல்லையே”

கிருஷ்ணன் :
“நன்றாக யோசித்துப்
பாருங்கள் அத்தை !
உங்களுக்கு பிரச்சினை
ஏற்பட்ட போது
நான் எப்போது
வந்திருக்கிறேன் ;
எப்போது
வரவில்லை ;
என்பதை நன்றாக
யோசித்துப் பாருங்கள் ;
நீங்கள் யோசித்துப்
பார்த்தீர்கள் என்றால்
மனிதர்களுக்கு
பிரச்சினை ஏற்படும்
போது கடவுள்
எப்போது வருவார்
எப்போது வரமாட்டார்
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம் அத்தை”

குந்தி :
“அதைத் தெரிந்து
கொள்ளும் அளவிற்கு
எனக்கு ஞானம்
இல்லையே
கிருஷ்ணா !
நீ சொன்னால்
அதைத் தெரிந்து
கொள்கிறேன் “

கிருஷ்ணன் :
“சில விஷயங்களை
சொல்லி தெரிந்து
கொள்ள முடியாது
வாழ்க்கையில் அனுபவம்
என்பது பாடத்தை
கற்பிக்கும் போது
தான் அதைத்
தெரிந்து கொள்ள
முடியும் அத்தை “

குந்தி :
“அனுபவம் என்பது
எப்போது ஏற்படும்
அது எப்போது
பாடத்தைக் கற்பிக்கும்”

கிருஷ்ணன் :
“பிரச்சினை என்னும்
சூறாவளிக் காற்றில்
சிக்கி சின்னா
பின்னமாகும் போது
ஏற்படும் அனுபவம்
நல்ல பாடத்தைக்
கற்பிக்கும் “

குந்தி :
“பிரச்சினை என்று
எதைக் குறிப்பிடுகிறாய்
கிருஷ்ணா “

கிருஷ்ணன் :
“இப்போது உங்களுக்குள்
ஏற்பட்டிருக்கிறதே
அந்த பிரச்சினையைத்
தான் குறிப்பிடுகிறேன்
அத்தை ! “

குந்தி :
“அந்த பிரச்சினையைத்
தீர்ப்பதற்குத் தான்
நீ வழி காட்ட
வேண்டும் என்று
கேட்கிறேன் கிருஷ்ணா “

கிருஷ்ணன் :
“முதலில் பிரச்சினை
என்ன என்று கூறுங்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment