May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-5


             ஜபம்-பதிவு-497
        (அறிய வேண்டியவை-5)

குந்தி :
“நாங்கள் செய்ததில்
எந்த செயலை
தவறான செயல்
என்கிறாய்”

கிருஷ்ணன் :
“நீங்கள் அனைவரும்
செய்த செயல்
தவறான செயல்”

“பிஷையில் கிடைத்தது
பொருளாக இருந்தால்
மட்டுமே அதை
பிஷை என்று
சொல்ல வேண்டும்;
உயிருள்ள
திரௌபதியை
பிஷை என்று
சொன்னது
பாண்டவர்களாகிய
நீங்கள் அனைவரும்
செய்த தவறு “

“ஒரு தாயானவள்
தன்னுடைய
பிள்ளைகளுக்கு
அழியாத அன்பை
மட்டுமே
சமமாக பிரித்துக்
கொடுக்க முடியும்;
அழியக்கூடிய
எந்த ஒன்றையும்
சமமாக பிரித்துக்
கொடுக்க முடியாது ;
ஒருவருடைய
கர்ம வினைப்
பயனால் தான்
ஒருவருக்கு
என்ன கிடைக்க
வேண்டுமோ ?
அது அவருக்கு
கிடைக்கும் ;
என்பதை உணர்ந்து
இருக்க வேண்டும்
பெற்ற பிள்ளைகள்
வாழ்வில் அடையும்
உயர்வும் தாழ்வும்
அவரவர் செய்த
கர்ம வினைப்பயனால்
தான் என்பதை
பெற்ற தாயான
அத்தை நீங்கள்
தெரிந்து வைத்து
இருக்க வேண்டும்”

“ஆனால் இத்தகைய
விஷயங்கள் எதையும்
நீங்கள் தெரிந்து
வைத்துக் கொள்ளாமல்
ஐவரும் சமமாக
பிரித்துக்
கொள்ளுங்கள் என்று
சொன்னது அத்தை
உங்களுடைய தவறு”

“கடவுளிடம்
என்ன வரத்தைக்
கேட்க வேண்டும் ;
எப்படி
கேட்க வேண்டும்
என்று தெரியாமல்
தவறாகக் கேட்டது
திரௌபதியின் தவறு“

“ஆக நீங்கள்
அனைவரும்
உங்களுடைய
நிலையை மறந்து
எத்தகைய தவறான
செயலைச்
செய்யக் கூடாதோ
அந்த செயலைச்
செய்துவிட்டீர்கள் “

“எந்த ஒரு
செயலைச் செய்தாலும்
அதற்கு விளைவு
என்ற ஒன்று
உண்டு - அந்த
விளைவிலிருந்து யாரும்
தப்பிக்க முடியாது “
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்”

“இனி ஏற்படப் போகும்
விளைவுகளை நீங்கள்
அனைவரும்
ஏற்றுக் கொள்ளத்
தயாராக இருங்கள் “

குந்தி :
ஏற்படப் போகும்
விளைவுகளை தடுத்து
நிறுத்த முடியாதா
நீ தடுத்து நிறுத்த
மாட்டாயா கிருஷ்ணா

கிருஷ்ணன் :
“கடவுளே என்றாலும்
மனிதனுக்கு
ஏற்படக்கூடிய
விளைவை தடுத்து
நிறுத்தக் கூடாது
தடுத்து நிறுத்தவும்
முடியாது - ஆனால்
விளைவின் தாக்கத்தை
குறைக்க முடியும் “

குந்தி :
“கிருஷ்ணா ! நீ
எங்களுடன் இருந்தாலே
விளைவானது எங்களை
தாக்காதே கிருஷ்ணா “

கிருஷ்ணன் :
“இப்போது தான்
உண்மை என்றால் என்ன
என்று உணர்ந்து
இருக்கிறீர்கள் அத்தை “

(என்று சொல்லி விட்டு
கிருஷ்ணன் அங்கிருந்து
சென்று விடுகிறார்)

“இந்தக் கதையில்
உள்ள அறிய
வேண்டிய
உண்மைகளை
அறிந்து கொண்டாலே
அறிய வேண்டியவை
எவை என்பதை
உணர்ந்து
கொள்ள முடியும் “

“இந்த பிரபஞ்சத்தில்
அறிய வேண்டியவைகள்
கணக்கிலடங்காத
எண்ணிக்கையில்
இருக்கிறது - அறிய
வேண்டியவைகளை
அறிந்து கொள்ள
வேண்டாமா ?
அறிய வேண்டியவை
எவை என்று
பார்ப்போமா ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment