May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-2


             ஜபம்-பதிவு-494
         (அறிய வேண்டியவை-2)

தர்மர் :   
“நாங்கள் சொல்லித்
தான் நீங்கள்
தெரிந்து கொள்ள
வேண்டிய அவசியம்
என்பது இல்லை
பரந்தாமா இருந்தாலும்
சொல்கிறேன் “

“நாங்கள் ஐவரும்
தினமும் பிஷை
எடுத்து வருவோம்  ;
அதை எங்களின்
தாயிடம்
சொல்லுவோம் ;
தாய் அதை
நீங்கள் ஐவரும்
சமமாக பகிர்ந்து
கொள்ளுங்கள் என்பார்
நாங்கள் அனைவரும்
அதை சமமாக
பகிர்ந்து கொள்வோம்”

“ஆனால் இன்று
சுயம்வரத்தில்
நடைபெற்ற போட்டியில்
திரௌபதியை
அர்ஜுனன் வென்றான்”

“பீமனும், அர்ஜுனனும்,
தாயிடம் வந்து
இன்று நாங்கள்
நல்ல ஒரு
பிஷை கொண்டு
வந்திருக்கிறோம்
என்றார்கள் ;
எங்களுடைய தாயாரும்
பிஷை எது
என்று பார்க்காமல்
கிடைத்த பிஷையை
நீங்கள் ஐவரும்
சமமாக பகிர்ந்து
கொள்ளுங்கள் என்று
சொல்லி விட்டார்”

“திரௌபதி பகிர்ந்து
கொள்ளக்கூடிய
பொருள் கிடையாதே ;
எங்களால் எப்படி
திரௌபதியை
பகிர்ந்து கொள்ள
முடியும் இது
தர்மம் கிடையாதே;”

கிருஷ்ணன் :
“இந்த பிரச்சினையை
தீர்ப்பதற்குரிய வழியை
நீங்கள் திரௌபதியிடமே
கேட்டிருக்கலாமே “

அர்ஜுனன் :
“திரௌபதிக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பில்லையே
பரந்தாமா”

கிருஷ்ணன் :
“மற்றவருக்கு என்ன
தெரிந்திருக்கிறது
என்ன தெரியவில்லை
என்பதை உன்னால்
எப்படி சொல்ல
முடியும் அர்ஜுனா “

“எதையும் தெரிந்த
பிறகே சொல்ல வேண்டும்
தெரியாமல் எந்த
ஒரு விஷயத்தையும்
சொல்லக் கூடாது”

“உனக்கு திரௌபதியைப்
பற்றித் தெரியவில்லை
அதனால் தான்
இவ்வாறு பேசுகிறாய்”

“திரௌபதி பற்றி
எறிந்த நெருப்பில்
பூத்து வந்தவள் ;
தர்மத்தை
காப்பாற்றுவதற்கு
உதித்து வந்தவள் ;
கற்பிற்கு
இலக்கணமாகத்
திகழ்ந்து
கொண்டிருப்பவள் ;
வீரத்தின்
வடிவமாக வாழ்ந்து
கொண்டிருப்பவள் ;
சரித்திரத்தை
உருவாக்கக் காத்துக்
கொண்டிருப்பவள் ; 
என்பதை முதலில்
நீங்கள் அனைவரும்
தெரிந்து கொள்ள
வேண்டும் “

“ஆதலால்
பிரச்சினையைத்
தீர்ப்பதற்கு என்ன வழி
என்று அவளிடமே
கேட்டிருக்கலாமே “

குந்தி :
“பிரச்சினைக்குள்
நாங்கள் அனைவரும்
மூழ்கி இருக்கும்
போது எப்படி
எங்களால் தெளிவாக
சிந்திக்க முடியும் “

“பிரச்சினையை விட்டு
வெளியே இருப்பவன் நீ
அதனால் நீ தான்
இதற்கு ஒரு நல்ல
தீர்வு சொல்ல
வேண்டும் கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“பிரச்சினையை ஏன்
என் தலை மேல்
சுமத்துகிறீர்கள் அத்தை”

குந்தி :
“மனிதர்களுக்கு
பிரச்சினை என்ற
ஒன்று ஏற்பட்டால்
கடவுளிடம் தானே
முறையிட வேண்டும்  ;
கடவுள் தானே
அந்த பிரச்சினையைத்
தீர்த்து வைக்க
வேண்டும் - அதனால்
தான் உன்னிடம்
கேட்கிறேன் கிருஷ்ணா”

“எங்களுக்கு நீ
தான் உதவ வேண்டும்”

கிருஷ்ணன் :
“உங்களுடைய வார்த்தையை
மறுக்க முடியுமா அத்தை”

“பிரச்சினை எங்கே
ஆரம்பித்தது என்பதை
முதலில் சொல்கிறேன் “

“நடந்த விஷயத்தைத்
தெரிந்து கொண்டு ;
நடந்து
கொண்டிருப்பவைகளை
மனதில் கொண்டு ;
நடக்க
வேண்டியவைகளை
எப்படி நடத்துவது
என்று யோசியுங்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment