May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-3


               ஜபம்-பதிவு-495
           (அறிய வேண்டியவை-3)

“விட்ட குறை
தொட்ட குறை என்று
ஒரு வார்த்தை உண்டு
அந்த வார்த்தையைக்
கேள்வி பட்டிருக்கிறீர்களா”

“போன ஜென்மத்தில்
ஒரு செயலைச்
செய்ய வேண்டும்
என்று ஆரம்பித்து
அந்த செயலைச் செய்து
கொண்டிருக்கும் போது
அந்த செயல்
முடிவடைதற்குள்ளாகவே
மரணம் என்பது
ஏற்பட்டு விட்டால்
அந்த செயலை
முடிப்பதற்காக
அடுத்தாற்போல் மீண்டும்
ஒரு ஜென்மம் எடுத்து
சென்ற ஜென்மத்தில்
தொட்டு பிறகு
விட்டு விட்டு வந்த
அந்த செயலை இந்த
ஜென்மத்தில் தொடர
வேண்டும் என்பதே
அதற்கு அர்த்தம் “

“திரௌபதியின்
வாழ்க்கையிலும்
இத்தகைய ஒரு
நிகழ்வு தான்
நடந்து இருக்கிறது”

“திரௌபதி சென்ற
ஜென்மத்தில் கடலை
சங்குக்குள் அடைக்க
முற்பட்டாள் ;
காற்றை குடுவைக்குள்
அடைக்க முற்பட்டாள் ;
இந்த உலகத்தில்
யாரும் செய்ய
முடியாத செயலை
செய்ய முற்பட்டாள் ;
ஆம் திரௌபதி
சென்ற ஜென்மத்தில்
யாரும் நினைத்து
பார்க்க முடியாத
யாரும் இது வரை
கேட்காத வரத்தைப்
பெற வேண்டும்
என்று சிவபெருமானை
நோக்கி கடும்
தவம் புரிந்தாள் “

“அவளுடைய கடுமையான
தவத்தை மெச்சிய
சிவபெருமான் நேரில்
தோன்றி திரௌபதிக்கு
வரத்தை தர
முயற்சித்த போது
தனக்கு இந்த வரங்களை
இந்த ஜென்மத்தில்
அளித்து அதை
அடுத்த ஜென்மத்தில்
அனுபவிக்கும் படி
செய்தால் போதும்
என்று சொல்லி விட்டாள் “

“ஒரு வரத்திற்குள்
ஐந்து வரங்களை
சிவபெருமானிடம்
கேட்டாள் திரௌபதி
அனைத்தையும்
அளிக்கவல்ல
சிவபெருமான் அவள்
கேட்டதையும்
அளித்து விட்டார் “

குந்தி :
“அப்படி என்ன வரம்
கேட்டாள் திரௌபதி”

கிருஷ்ணன் :
“சிவபெருமானிடம்
அவள் என்ன
வரங்களைக் கேட்டாள்
என்று தெரியுமா
அவளுக்கு
வாய்க்கும் கணவன்

இந்த உலகத்திலேயே
சிறந்த தர்மவானாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்தில்
யாராலும்
வெல்ல முடியாத
ஆஞ்சநேயரைப்
போன்று சிறந்த
பலசாலியாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்தில்
யாராலும் வீழ்த்த
முடியாத
பரசுராமனைப்
போன்ற சிறந்த
வில் வித்தை
வீரனாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகமே
நின்று வேடிக்கை
பார்க்கும் அளவுக்கு
அழகு நிறைந்தவராய்
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்திற்கே
பொறுமைக்கு ஒரு
எடுத்துக் காட்டாய்
இருப்பவராய்
இருக்க வேண்டும் ;

என்ற வரங்களைக்
கேட்டாள் திரௌபதி “

அதற்கு சிவபெருமான்
”கடவுளை வணங்கி
தனக்கு என்ன
தேவையோ அதை
கேட்கும் போது
வார்த்தைகளைச்
சரியாக பயன்படுத்தி
கவனமாக
கேட்க வேண்டும் ;
ஏற்படப் போகும்
விளைவுகளை
உணர்ந்து
கேட்க வேண்டும் ;
வார்த்தைகள் என்பது
மிக முக்கியம்
என்பதை உணர்ந்து
கேட்க வேண்டும் ;
வார்த்தைகளில் உள்ள
முக்கியத்துவத்தை
அறிந்து
கேட்க வேண்டும் ;
தான் கேட்பவை
தனக்கு பாதிப்பை
உண்டாக்குமா
என்பதை அறிந்து
கேட்க வேண்டும் ;
அப்படி உணர்ந்து
கேட்கவில்லை எனில்
தான் கேட்டவைக்குரிய
விளைவுளைகளை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் ;
கடவுளிடம்
வரங்களைக் கேட்கும்
போது வார்த்தைகளைப்
பார்த்து அதில்
உள்ள அர்த்தங்களை
அறிந்து தான் கேட்க
வேண்டும் “ என்றார்

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment