May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-4


              ஜபம்-பதிவு-496
          (அறிய வேண்டியவை-4)

மேலும் சிவபெருமான்
“நீ கேட்ட குணங்கள்
அனைத்தையும் ஒருங்கே
கொண்ட மனிதன்
இந்த உலகத்தில்
கிடைப்பது என்பது
இயலாத காரியம்
எனவே இந்த
உலக நடைமுறைக்கு
சாத்தியமற்றவைகளைக்
கேட்காமல் இந்த
உலக நடைமுறைக்கு
சாத்தியமான
வரங்களைக்
கேட்பாயாக “ என்றார்

அதற்கு திரௌபதி
“எத்தகைய விளைவுகள்
வந்தாலும் அதை நான்
பார்த்துக் கொள்கிறேன்
எனக்கு வரங்களை
அருளுங்கள்” என்றாள்

“சிவபெருமானும்
வரத்தை
அளித்து விட்டார்
திரௌபதியும்
அந்த வரத்தை
சென்ற ஜென்மத்தில்
பெற்று விட்டாள் “

“சென்ற ஜென்மத்தில்
திரௌபதி
கேட்ட வரங்கள்
இந்த ஜென்மத்தில்
இயக்கத்திற்கு
வந்து விட்டது  ;
அதாவது
நடைமுறைக்கு
வந்து விட்டது ;”

“சென்ற ஜென்மத்தில்
தொட்டு விட்டு
விட்டு விட்டு வந்தது
இப்போது திரௌபதியை
தொற்றிக் கொண்டது “

“இப்போது
இந்த உலகத்திலேயே
சிறந்த தர்மவானாக
இருப்பது – தர்மர்
சிவன் அருளிய
முதல் வரம்”

“இப்போது
இந்த உலகத்தில்
யாராலும்
வெல்ல முடியாத
ஆஞ்சநேயரைப் போன்று
சிறந்த பலசாலியாக
இருப்பது – பீமன்
சிவன் அருளிய
இரண்டாவது வரம் “

“இப்போது
இந்த உலகத்தில்
யாராலும்
வீழ்த்த முடியாத
பரசுராமனைப்
போன்ற சிறந்த
வில் வித்தை வீரனாக
இருப்பது – அர்ஜுனன்
சிவன் அருளிய
மூன்றாவது வரம் “

“இப்போது
இந்த உலகமே
நின்று மயங்கி
வேடிக்கை பார்க்கும்
அளவுக்கு அழகு
நிறைந்தவராய்
இருப்பது – நகுலன்
சிவன் அருளிய
நான்காவது வரம் “

“இப்போது
இந்த உலகத்தில்
பொறுமைக்கு ஒரு
எடுத்துக் காட்டாய்
வாழ்ந்து கொண்டு
இருப்பது – சகாதேவன்
சிவன் அருளிய
ஐந்தாவது வரம் “

“இப்போது சொல்லுங்கள்
திரௌபதி
சிவபெருமானிடம்
சென்ற ஜென்மத்தில்
கேட்ட வரங்களின்படி
இப்போது இந்த
உலகத்தில்
ஐவரும் இருக்கிறார்கள் ;
இப்போது
இந்த உலகத்தில்
பாண்டவர்களாக
இருக்கும் ஐவரையும்
திரௌபதி திருமணம்
செய்யலாமா
வேண்டாமா என்பதை
அத்தை நீங்களும்
திரௌபதி
பாண்டவர்கள்
ஆகிய அனைவரும்
தான் முடிவு
செய்ய வேண்டும் “

குந்தி :
“முடிவு எடுக்கும்
பொறுப்பை ஏன்
எங்களிடமே ஒப்படைத்து
விட்டாய் கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“மனிதன் எந்த
ஒரு செயலைச்
செய்யும் போதும்
ஒன்றுக்கு பலமுறை
யோசித்து தான்
செய்ய வேண்டும் ;
அவ்வாறு செயலைச்
செய்யும் போது
தான் செய்யும் செயல்
நல்ல செயலா
அல்லது
தவறான செயலா
என்பதை யோசித்துப்
பார்த்துத் தான்
செய்ய  வேண்டும் ;
யோசித்த பிறகே
எந்த ஒரு செயலையும்
செய்ய வேண்டும்  ; “

“ஏனென்றால்
எந்த ஒரு செயலுக்கும்
விளைவு உண்டு ;
ஒரு செயலைச்
செய்து விட்டு
செய்த செயலுக்குரிய
விளைவிலிருந்து
யாரும் தப்ப
முடியாது என்பதை
உணர்ந்து செயலைச்
செய்ய வேண்டும் ;”

“ஆனால், நீங்கள்
அனைவரும்
செயலைச்
செய்வதற்கு முன்னர்
யோசிக்கவே இல்லை ;
செய்யும் எந்த
ஒரு செயலுக்கும்
விளைவு உண்டு
என்பதையும் ;
செயலைச்
செய்து விட்டு
விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதையும் l
யோசிக்காமல்
தவறான செயலைச்
செய்து இருக்கிறீர்கள் “

“செய்யக் கூடாத
தவறுகள்
அனைத்தையும்
செய்து விட்டு
முடிவுகளை மட்டும்
நான் எப்படி
எடுக்க முடியும் ;
முடிவை நீங்கள்
அனைவரும் தான்
எடுக்க வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment