April 07, 2021

பதிவு-1 - ஊரார்-பழமொழி

 பதிவு-1 - ஊரார்

பழமொழி

 

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை

தானே வளரும்

 

-----பழமொழி

 

வேறு ஒருவர்

வீட்டில் பிறந்து

வளர்ந்து

திருமணம் செய்து

தனக்கு மனைவியாக

வந்த பெண் என்ற

காரணத்தினால்

அந்த பெண்ணை

ஊரார் பெண்.

என்று சொன்னார்கள்

 

மனைவியாக வந்த

அந்த பெண்ணை

தன்னுடைய

பராமரிப்பில் வைத்து

ஊட்டி வளர்க்கும் போது

அந்த பெண்ணின்

வயிற்றில் வளரும்

தன்னுடைய

குழந்தையானது

தானே வளரும்

என்பது தான்

ஊரார் பிள்ளையை

ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளை

தானே வளரும்

என்பதற்கு

சொல்லப்பட்ட

அர்த்தம்

 

இவ்வாறு சொல்லப்பட்ட

அர்த்தத்தை சிந்தித்து

நோக்கும் போது

நமக்குள் பல்வேறு

கேள்விகள் எழுந்த

வண்ணம் இருக்கிறது.

 

தன்னுடைய மனைவியின்

வயிற்றில் வளரும்

குழந்தை தன்னுடைய

குழந்தை என்றால்

தன்னுடைய மனைவிக்கு

அந்த குழந்தையின்

மீது உரிமை

உண்டா இல்லையா

என்ற கேள்வி எழுகிறது.

 

தன்னுடைய மனைவியின்

வயிற்றில் தன்னுடைய

குழந்தை வளர

வேண்டும் என்ற

காரணத்திற்காக

மட்டும் தான்

தன்னுடைய

மனைவியை ஊட்டி

வளர்க்க வேண்டுமா

என்ற கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

தன்னுடைய

குழந்தையை சுமக்கவில்லை

என்றால் தன்னுடைய

மனைவிக்குத்

தேவையான உணவை

ஊட்டி வளர்க்க

வேண்டுமா அல்லது

வேண்டாமா என்ற

கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

தன்னுடைய குழந்தையை

சுமக்கும் காலங்களைத்

தவிர்த்து தன்னுடைய

குழந்தையை சுமக்காத

காலங்களில் எல்லாம்

தன்னுடைய மனைவிக்குத்

தேவையான உணவை

ஊட்டி வளர்க்க

வேண்டுமா அல்லது

வேண்டாமா என்ற

கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

கர்ப்பமே தரிக்கவில்லை

என்றால் தன்னுடைய

மனைவிக்குத் தேவையான

உணவை ஊட்டி

வளர்க்க வேண்டுமா

அல்லது வேண்டாமா

என்ற கேள்வி எழுகிறது

 

எளிமையாக சொல்ல

வேண்டும் என்றால்

தன்னுடைய மனைவி

தன்னுடைய குழந்தையை

சுமக்கும் காலங்களில்

மட்டும் தான்

தன்னுடைய மனைவிக்குத்

தேவையான

உணவை அளித்து

தன்னுடைய மனைவியை

ஊட்டி வளர்க்க

வேண்டும்

மற்ற காலங்களில்

எல்லாம் தன்னுடைய

மனைவிக்கு தேவையான

உணவை ஊட்டி

வளர்க்க வேண்டுமா

அல்லது வேண்டாமா

என்று கேள்வி எழுகிறது

 

தன்னுடைய மனைவி

தன்னுடைய குழந்தை

ஆகியோரை மட்டும்

காப்பாற்றும் வகையில்

செயல்பட வேண்டும்

என்று சுயநலத்தை

வலியுறுத்தி இப்பழமொழி

சொல்லப்படவில்லை.

 

இந்தப் பழமொழியின்

அர்த்தம் தன்னுடைய

மனைவி தன்னுடைய

குழந்தை என்று

சுயநல நோக்கத்துடன்

செயல்படுபவர்களுக்காகவும்

சுயநலத்துடன்

வாழ்பவர்களுக்காகவும்

சொல்லப்பட்டவில்லை.

 

இந்த பழமொழி

பொதுநலத்துடன்

செயல்படும்போது

ஏற்படும் நல்ல

நிகழ்வுகளைப்

பற்றி சொல்கிறது.

 

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment