April 07, 2021

பதிவு-2 - ஊரார்-பழமொழி

 

பதிவு-2 - ஊரார்

பழமொழி

 

முதலில் தங்கி

இருக்கும் வீட்டை

விட்டு வெளியே வந்து

இந்த பரந்த

உலகத்தைப் பாருங்கள்

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

அற்புதமான

காட்சியையும் பாருங்கள்.

இந்த உலகத்தில்

பரந்து வாழும்

பல்வேறு தன்மை

கொண்ட மனிதர்கள்

அனைவரையும்

உற்று பாருங்கள் 

 

உயர்ந்தவர் தாழ்ந்தவர்

ஏழை பணக்காரர்

படித்தவர் படிக்காதவர்

என்ற பேதம் நீக்கி

அனைவரையும்

மனிதர்கள்

என்ற நிலையில்

ஆண் பெண் திருநர்

என்ற வார்த்தைக்குள்

அடக்கிக் கொண்டு

பாருங்கள்

அப்பொழுது

தான் தெரியும்

இவர்கள் அனைவருமே

வேறு ஒருவர் பெற்ற

பிள்ளைகள் என்று.

அதாவது

ஊரார் பெற்ற

பிள்ளைகள் என்று.

ஆமாம்

இந்த பிரபஞ்சம்

முழுவதும் நிரம்பி

இருக்கக்கூடிய

இவர்கள் தான்

ஊரார் பெற்ற

பிள்ளைகள்

 

ஊரார் பிள்ளை

என்றால்

தன்னுடைய மனைவி

என்று சுயநலத்துடன்

குறுகிய எல்லைக்குள்

நின்று பொருள்

கொள்ளக்கூடாது.

 

ஊரார் பிள்ளை

என்றால்

இந்த பிரபஞ்சம்

முழுவதும் நிரம்பி

இருக்கக் கூடிய

மனிதர்கள்

என்று பொருள்

கொள்ள வேண்டும்.

 

தன் பிள்ளை என்றால்

தன்னுடைய பிள்ளை

என்று சுயநலத்துடன்

குறுகிய எல்லையில்

நின்று பொருள்

கொள்ளக் கூடாது. 

 

தன்னுடைய பிள்ளை

என்றால் தன்னைச்

சார்ந்தவர்கள்

என்று பொருள்

கொள்ள வேண்டும்.

தன்னைச் சார்ந்தவர்கள்

என்றால் அது

தந்தையாக இருக்கலாம்

தாயாக இருக்கலாம்

சகோதரனாக இருக்கலாம்

சகோதரியாக இருக்கலாம்

கணவனாக இருக்கலாம்

மனைவியாக இருக்கலாம்

குழந்தையாக இருக்கலாம்

 

ஊட்டி வளர்த்தால்

என்றால்

உணவை ஊட்டி

வளர்ப்பது

என்று பொருள்

கொள்ளக்கூடாது.

 

ஊட்டி வளர்த்தால்

என்றால்

யார் ஒருவருக்கு

எந்த ஒன்றை

கொடுத்தால்

அவர் வாழ்க்கையில்

வளர்வாரோ

அந்த ஒன்றை

அவருக்கு கொடுத்து

அவர் வாழ்க்கையில்

உயர்வதற்கு தேவையான

உதவிகள் செய்ய

வேண்டும் என்று பொருள்

 

அதாவது ஒருவர்

கல்வி கற்க

விரும்பினால்

அந்த கல்வியை

அவருக்கு கற்றுக்

கொடுத்து அவர்

வாழ்க்கையில்

உயர்வதற்கு

தேவையான

செயல்களைச் செய்வது

 

ஒருவர் வியாபாரத்தில்

நஷ்டம் அடைந்தால்

அவருக்குத் தேவையான

பொருளுதவி செய்து

அவர் வாழ்க்கையில்

உயர்வதற்கு

தேவையான

செயல்களைச் செய்வது

 

ஒருவர் ஆன்மீகத்தில்

உயர் நிலை அடைய

முயற்சி செய்தால்

அவருக்கு

தேவையானதைச்

சொல்லிக் கொடுத்து

அவர் ஆன்மீகத்தில்

உயர்வதறகுத்

தேவையான

உதவிகளைச் செய்வது..

 

----------என்றும் அன்புடன்

----------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

----------07-04-2021

./////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment