August 26, 2018

திருக்குறள்-பதிவு-7


                        திருக்குறள்-பதிவு-7

உலகத்தில் படைக்கப்படும்
படைப்புகள் அனைத்தையும்
மூன்று நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : எழுத்து மூலம்
        படைக்கப்படும்
        படைப்புகள்

இரண்டு :சொல் மூலம்
         படைக்கப்படும்
         படைப்புகள்

மூன்று : செயல் மூலம்
         படைக்கப்படும்
         படைப்புகள்

எழுத்து மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
கதை, கவிதை, கட்டுரை
ஆகியவற்றை
குறிப்பிடலாம்

சொல் மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
பாடுவது, பேசுவது
ஆகியவற்றை
குறிப்பிடலாம்

செயல் மூலம்
படைக்கப்படும்
படைப்புகளுக்கு
கட்டிடம் கட்டுதல்,
சிற்பம் செதுக்குதல்
மற்றும் அனைத்தையும்
இந்தப் பிரிவில்
குறிப்பிடலாம்

எழுத்து, சொல்
செயல் மூலம்
படைப்புகள்
படைக்கப்பட்டாலும்,
படைக்கப்பட்ட
படைப்புகள் அனைத்தும்,
இரண்டு நிலைகளைத்
தன்னுள் கொண்டு
இருக்கும்

ஒன்று : உயிருள்ள படைப்பு
இரண்டு:  உயிரற்ற படைப்பு

உயிருள்ள படைப்பு
என்பது
காலத்தால்
அழியாத படைப்பு

உயிரற்ற படைப்பு
என்பது
காலத்தால் அழியும்
படைப்பு

காலத்தால் அழியாத
உயிருள்ள படைப்புக்கு
திருக்குறள்,
பகவத் கீதை,
இராமாயணம்,
மகாபாரதம்
ஆகியவற்றைக்
குறிப்பிடலாம்

எந்த படைப்பு
காலத்தால் அழியாமல்
மக்களால்
காலம் காலமாக
நினைக்கப்பட்டு
பேசப்பட்டு
பின்பற்றப்பட்டு
வருகிறதோ
அது தான்
காலத்தால்
அழியாத படைப்பு;
உயிருள்ள படைப்பு;

எந்த படைப்பு
காலத்தால் அழிந்து
மக்களால்
நினைக்கப்படாமல்,
பேசப்படாமல்,
பின்பற்றப்படாமல்,
இருக்கிறதோ
அது தான்
காலத்தால்
அழியும் படைப்பு;
உயிரற்ற படைப்புl;

திருக்குறள் காலத்தால்
அழியாத
உயிருள்ள படைப்பு
இத்தகைய உயர்ந்த
சிறப்பைப் பெற்றது
திருக்குறள்

திருக்குறளை
எழுதி முடித்ததோடு
என் கடமை
முடிந்து விட்டது
இனி திருக்குறளை
ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச்சமுதாயத்தை
சார்ந்தது என்று சொன்ன
திருவள்ளுவரை நோக்கி
ஒளவையார்
சொன்னார்

நாம் நமக்காக
செல்லவில்லை
தமிழுக்காக செல்கிறோம்
புலவர்கள் மறுத்தாலும்
அல்லது
பாண்டியனே தடுத்தாலும்
உலகில் உள்ள
அனைத்து மக்களும்
மனிதன்
மனிதனாக இருந்து
மனிதனாக வாழ்வதற்கு
தேவையான அனைத்து
கருத்துக்களையும்
தன்னுள் கொண்ட
திருக்குறள்
மக்கள் கையில்
சேர வேண்டும்
மக்களுக்காக பாடப்பட்ட
திருக்குறள்
மக்களுக்கு
கிடைக்க வேண்டும்
அதற்காக
எப்பாடு பட்டேனும்
திருக்குறளை அரங்கேற்றம்
செய்ய வேண்டியது
என்னுடைய பொறுப்பு
தாங்கள் தயவு செய்து
என்னுடன் வாருங்கள்
என்று திருவள்ளுவரை
அழைத்துக் கொண்டு
பாண்டிய மன்னனை
காணச் சென்றார்
ஔவையார்

ஔவையார்
பாண்டிய மன்னனை
பார்க்க வந்திருக்கிறார்
என்று தெரிந்தும்
ஔவையாரை
பாண்டிய மன்னனின்
அமைச்சர் தடுத்தார்
அமைச்சரின்
தடைகளைத் தகர்த்து
ஔவையார்
கடந்து சென்றார்
ஔவையார் இறுதியில்
பாண்டிய மன்னனைக்
கண்டார்

ஔவையார்
பாண்டிய மன்னனிடம்.
திருவள்ளுவரின்
அரிய நூலான
திருக்குறளை
சங்கத்தில்
கேட்காமலேயே மறுத்து
விட்டார்களாம்
மீண்டும்
சங்கத்தை கூட்டி
நூலைக் கேட்க
வேண்டும் என்றார்

ஔவையாரின்
வேண்டுகோளுக்கிணங்க
தமிழ்ச்சங்கம்
மதுரையில்
திருவள்ளுவரின்
திருக்குறளை
அரங்கேற்றம்
செய்வதற்கு
பாண்டிய மன்னனால்
கூட்டப்பட்டது

--------  இன்னும் வரும்
---------  26-08-2018
/////////////////////////////////////////////////


August 25, 2018

திருக்குறள்-பதிவு-6



                       திருக்குறள்-பதிவு-6

ஔவையார் நேரில்
திருவள்ளுவரைச் சந்தித்து
திருவள்ளுவரிடம்
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
தாங்கள் பாடிய திருக்குறளை
அரங்கேற்றம் செய்கிறார்கள்
என்று கேள்விப்பட்டு
ஓடோடி வந்தேன்
திருக்குறள் சங்கத்தில்
அரங்கேற்றம் ஆகிவிட்டதா
என்று ஔவையார்
திருவள்ளுவரை
நோக்கி கேட்டார்

மதுரை தமிழ்ச் சங்கத்தில்
தான் இயற்றிய
திருக்குறள் நூல்
அரங்கேற்றப்படவில்லை
என்று திருவள்ளுவர்
ஔவையாரிடம் கூறினார்

அதற்கு ஔவையார்
திருக்குறள் தமிழ்ச் சங்கத்தில்
அரங்கேற்றப்படவில்லை
என்றால் அது திருக்குறள்
என்ற நூலுக்கு இழுக்கல்ல
அது தமிழுக்கே இழுக்கு
வாருங்கள் நாம் இருவரும்
ஒன்றாகச் சென்று
பாண்டிய மன்னனை சந்தித்து
மதுரை தமிழ்ச்சங்கத்தை
கூட்டி திருக்குறளை
எப்படியும் அரங்கேற்றம்
செய்யலாம் வாருங்கள்
என்று அழைத்தார்

அதற்கு திருவள்ளுவர்
சொல்லிய வார்த்தை
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது
திருவள்ளுவர் சொல்கிறார்

“””ஔவையே
திருக்குறளை நான்
எப்போது எழுதி முடித்து
இச்சமுதாயத்திற்கு
எப்போது அளித்தேனோ
அப்போதே என்னுடைய
கடமையை நான் செய்து
முடித்து விட்டேன்
திருக்குறளை
ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இந்தச் சமுதாயத்தைச்
சார்ந்தது
அதற்காக நான் ஏன்
பதற வேண்டும் என்று
திருவள்ளுவர்
சொல்லிய சொல்லில்
பல அர்த்தங்கள்
மறைந்து உள்ளன”””””

என் மூலம்
இச் சமுதாயத்திற்கு
என்ன வழங்கப்பட
வேண்டுமோ
அது என் மூலமாக
வழங்கப்பட்டு விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச் சமுதாயத்தைப்
பொறுத்தது
நான் அதைப் பற்றி
கவலைப்பட வேண்டிய
அவசியமில்லை
என்னுடைய படைப்பு
உயர்ந்த படைப்பு என்று
உணர்ந்து தகுதி
வாய்ந்தவர் வரும் பட்சத்தில்
என்னுடைய படைப்பு
அவருக்கு கிடைக்கும்
உயர்ந்த படைப்பைத்
தேடி வரும்
நாட்டம் உள்ளவர்களுக்கு
நான் இயற்றிய
திருக்குறள் கிடைக்கும்

உலகின் எந்த
கோடியில் இருந்தாலும்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்பை
தேடுபவர்களுக்கு
உயர்ந்த படைப்பு
கிடைத்தே ஆக வேண்டும்
என்பது தான் திருவள்ளுவர்
சொன்னதற்கு அர்த்தம்

உயர்ந்த படைப்புகளைப்
படைப்பவர்கள்
உயர்ந்த படைப்புகளைப்
படைத்து
உயர்ந்த படைப்புகளை
இச்சமுதாயத்திற்காக
அளித்து விடுவார்கள்
இச்சமுதாயம்
ஏற்றுக் கொள்கிறதா
ஏற்றுக் கொள்ளவில்லையா
எனபதைப் பற்றி
அவர்கள் கவலைப்பட
மாட்டார்கள்

உயர்ந்த படைப்புகளை
ஏற்றுக் கொள்ளும்
தகுதி உடையவர்கள்
அதை தேடி வருவார்கள்
அதை ஏற்றுக் கொள்வார்கள்
யாருக்கு உயர்ந்த
படைப்புகள் கிடைக்க
வேண்டுமோ அவர்களுக்கு
கண்டிப்பாக கிடைக்கும்

உயர்ந்த படைப்புகளில்
உள்ள ரகசியங்கள்
நமக்கு புரிய வேண்டுமானால்
நாம் அந்த உயர்ந்த படைப்பின்
உயர்ந்த நிலைக்கு
செல்ல வேண்டும்

உயர்ந்த படைப்புகளை
படைப்பவர்கள்
தங்களால்
படைக்கப்பட்ட உயர்ந்த
படைப்புகளை
தங்கள் படைப்பு என்று
விளம்பரப்படுத்திக் கொண்டு
புகழைத் தேடியும்
பணத்தைத் தேடியும்
ஓட மாட்டார்கள்

உயர்ந்த படைப்புகள்
உயர்ந்தவர்களால்
படைக்கப்படும்போது
உயர்ந்த படைப்புகளை
இவை உயர்ந்தவர்களால்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்புகள் என்று
புரிந்து கொண்டால்
உயர்ந்த படைப்புகள்
பயனைத் தரும்
உயர்ந்த படைப்புகளை
உயர்ந்தவர்களால்
படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்புகள்
என்பதை புரிந்து
கொள்ளாமல்
உயர்ந்த படைப்புகளை
இழிவு படுத்தினால்
இழப்பு படைத்தவருக்கும்
படைக்கப்பட்டதற்கும்
இல்லை
சமுதாயத்திற்கு தான் இழப்பு
உயர்ந்த படைப்புகளை
புரிந்து கொண்டு
உயர்ந்த படைப்புகளை
படைத்தவர்களை
புரிந்து கொண்டு
உயர்ந்த படைப்புகளை
அனைவரும் ஏற்றுக் கொண்டு
பின்பற்ற முன்வர
வேண்டும் அப்போது தான்
உயர்ந்த படைப்புகள்
படைக்கப்பட்டதின்
நோக்கம் நிறைவேறும்
உயர்ந்த படைப்புகள்
அனைவருக்கும் பயன்பட்டு
நன்மை தரும்

அதனால் தான் திருவள்ளுவர்
நூலைப் பாடியதோடு
என் கடமை முடிந்து விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இச்சமுதாயத்தைப்
பொறுத்தது என்றார்

---------  இன்னும் வரும்
---------  25-08-2018
///////////////////////////////////////////////////////////


August 24, 2018

திருக்குறள்-பதிவு-5


                            திருக்குறள்-பதிவு-5
                                                   
“”””எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”””””

நன்றி மறப்பது
என்ற சொல்லுக்கும்,
நன்றி கொல்லுதல்
என்ற சொல்லுக்கும்,
சிறிதளவு வேறுபாடு
மட்டுமே உண்டு.


நன்றி மறப்பது
என்றால்,
ஒருவர் நமக்கு
செய்த உதவியை
மறந்து விடுவது
என்று பொருள்.

நன்றி கொல்லுதல்
என்றால்,
நமக்கு உதவி
செய்த ஒருவருக்கு
நாம் தீமையான
செயலைச் செய்வது
என்று பொருள்

பெற்றோர்கள்
ஒரு மகனை பெற்று
வளர்த்து,
படிக்க வைத்து,
வீடு கட்டி கொடுத்து,
கல்யாணம்
செய்து வைத்து,
நல்ல நிலையில்
மகன் வாழ்வதற்கு
தேவையான
நன்மையான செயல்கள்
பலவற்றை செய்து
கொடுத்து,
மகன் வாழ்வதற்காக
தங்கள் வாழ்க்கையையே
அர்ப்பணித்த பெற்றோர்கள்
செய்த உதவியை மகன்
மனதில் கொள்ளாமல்,
பெற்றோர்களுக்கு
முடியாத காலத்தில்
தன்னுடன் தங்க
வைத்து பெற்றோர்களுக்கு
தேவையான உதவிகளைச்
செய்யாமல் இருந்தால்
அது “”நன்றி மறத்தல்””
எனப்படும்.

வாழ்க்கை முழுவதும்
மகனுக்காகவே வாழ்ந்து,
மகனுக்காகவே உழைத்து,
மகனை வாழ வைப்பதற்காக,
கஷ்டப்பட்டு உழைத்த
பெற்றோர்கள் செய்த
உதவியை நினைக்காமல்,
அவர்களை கொண்டு போய்
வயதாகி விட்டது என்ற
காரணத்தினால்
முதியோர் இல்லத்தில்
சேர்த்து விடுகிறான் மகன்

வயதான காலத்தில்
தன்னுடைய மகனுடனும்,
மருகளுடனும்,
பேரன், பேத்திகளுடனும்
மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும் என்று
நினைத்த பெற்றோர்களின்
மனம் என்ன
வருத்தங்களை அடையும்

மகனிடமிருந்து பிரிந்து,
மருமகளிடமிருந்து
பிரிந்து,
பேரப்பிள்ளைகளிடமிருந்து
பிரிந்து,
தனிமையில்
உறவுகள் இல்லாத
ஓரிடத்தில்
வாழ்வது என்பது
நினைத்து கூடப் பார்க்க
முடியாத செயல்
இத்தகைய தீமையான
செயலை பெற்றோர்களுக்கு
செய்கிறான் மகன்

இது தான்
பெற்றோர்கள் செய்த
நன்மையான செயலுக்கு
மகன் செய்த
தீமையான செயல்
இது தான்
“””நன்றியைக் கொல்லுதல் “””
எனப்படும்.

சிலர் சொல்வார்கள்
பெற்றோர்கள்
பெற்றார்கள்
நம்மை வளர்க்க
வேண்டியது
அவர்களது கடமை
அதனை உதவி என்று
வைத்துக் கொண்டு
நாம் ஏன் உதவி
செய்ய வேண்டும்
என்று சொல்வார்கள்
அது தவறான வார்த்தை

உலகில் மனிதனால்
அடைக்க முடியாத
கடனை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

 ஒன்று  : பெற்ற கடன்
 இரண்டு : வளர்த்த கடன்

நாம் இந்த உலகத்தில்
மனிதனாக
பிறந்து வருவதற்கும்,
நாம் சுயமாக
சிந்தித்து நம்மை நாமே
காப்பாற்றிக் கொள்ளும்
நிலை வரும் வரைக்கும்
நமக்கு உதவியாக
இருந்தவர்கள் பெற்றோர்கள்.


நாம் பிறந்து வருவதற்கும்,
நாம் வளர்வதற்கும்,
பெற்றோர்கள் நமக்கு
உதவியாகத் தான்
இருந்தார்களே ஒழிய
அது அவர்களது
கடமை இல்லை.

மனிதனால் இந்த
பெற்ற கடன்
வளர்த்த கடன்
என்ற இந்த இரண்டு
கடன்களையும்
அடைக்க முடியாது
எனவே, மனிதன்
பெற்றோர்கள்
செய்த உதவியை
மனதில் கொள்ளாமல்
நன்றியை மறந்து
உதவி செய்யாமல்
இருந்தாலும் பரவாயில்லை
நன்மை செய்த அவர்களுக்கு
தீமை செய்து நன்றியைக்
கொல்லக்கூடாது

எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் என்றால்,
உலகில் செய்யப்படும்
எந்த பாவத்திற்கும்
பிராயச்சித்தம் உண்டு
என்று பொருள்.

உய்வில்லை செய்ந்நன்றி
கொன்ற மகற்கு என்றால்,
நன்றி கொன்ற
பாவத்திற்கு மட்டும்
பிராயச்சித்தம் என்பது
கிடையவே கிடையாது
என்று பொருள்.

உலகில் செய்யப்படும்
எந்த பாவத்திற்கும்
பிராயச்சித்தம்
என்ற ஒன்று உண்டு
ஆனால்
நன்றி கொன்ற
பாவத்திற்கு மட்டும்
பிராயச்சித்தம் என்பது
கிடையவே கிடையாது
என்பதைத் தான்

“”””எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”””””

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரிவிக்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  24-08-2018
///////////////////////////////////////////////////////////