March 30, 2020

பரம்பொருள்-பதிவு-165


              ஜபம்-பதிவு-413
            (பரம்பொருள்-165)

அரவான்  :
“அழகு என்ற
உளி எடுத்து,
பருவம் என்ற
பாறையில்,
கவர்ச்சியாக
செதுக்கப்பட்ட,
மனதை மயக்கும்
சிலையாக-நீ,
இருக்கிறாய் “

“அது மட்டுமா ?”

“காற்றுப் பட்டு
கலைந்து ஓடும்
கருநிற மேகங்களைப்
போன்று காற்றில்
அசைந்தாடிக்
கொண்டிருக்கும்
கருநிற மேகங்களைப்
போன்ற உன்னுடைய
கூந்தலும் ;”

“வானத்தில்
ஒளிர்ந்து
ஒளி வீசி மக்களின்
மனதை மயக்கிக்
கொண்டிருக்கும்
பிறைச்சந்திரனை
வெட்டி எடுத்து
வந்து வைத்தது
போல் இருக்கும்
பிறைச்சந்திரனைப்
போன்ற உன்னுடைய
நெற்றியும் ;”

“எதிரிகளை
வீழ்த்துவதற்கென்றே
உருவாக்கப்பட்ட
வீரம் செறிந்த
வில்லைப் போன்று
வளைந்திருக்கும்
வில்லைப்
போன்ற உன்னுடைய
புருவங்களும் ;”

“வில்லிலிருந்து
புறப்பட்ட அம்பு
எதிரிகளை
வீழ்த்தாமல்
பாதை மாறி வந்து
என்னுடைய
இதயத்தை
துளைத்துக்
கொண்டிருக்கும்
அம்பை விடக்
கூர்மையான
உன்னுடைய
கண்களும் ;”

“அமைதியாக
ஆரவாரம் அற்று
அடக்க நிலையில்
இருக்கும்
என்னுடைய
உணர்வுகளைத்
தட்டி எழுப்பி
கிறங்கடிக்கும்
உணர்வு மிக்க
உன்னுடைய நீண்ட
மூக்கும் ;”

“இரத்தமே
இருப்பதிலே
சிவப்பு என்றால் - அந்த
இரத்தத்தையே
மிஞ்சும் வகையில்
சிவப்பாக இருக்கும்
உன்னுடைய
கவர்ச்சியான
இதழ்களும் ; “

“தேன் எப்படி
தேன் கூட்டிற்குள்
இருக்குமோ
அதைப்போல்
அமிர்தம்
குடிகொண்டு
வழிந்தோடி
போதையை
உண்டாக்கும்
வகையில்
அமிர்தம் நிறைந்து
இருக்கும்
உன்னுடைய
வாயும் ;”

“ஆப்பிளை
வெட்டி எடுத்து
இருபுறமும்
வைத்தது போல்
இருந்து கொண்டு
ரோஜாவைப் போல்
ஒளி வீசி
மிளிர்ந்து
கொண்டிருக்கும்
வசீகரிக்கும்
உன்னுடைய
கன்னங்களும் ;”

“மாதுளம் பழத்தில்
உள்ள முத்துக்களை
வரிசையாக அடுக்கி
வைத்தாற் போல்
பளபளப்பாக இருக்கும்
உன்னுடைய
ஒளிவீசும்
பற்களும் ;”

“பௌர்ணமி நிலவை
கொண்டு வந்து
உருக்கி வார்த்து
செய்தது போல்
இருக்கும்
மதியை மயக்கும்
பௌர்ணமியைப்
போன்ற உன்னுடைய
முகமும் ;”

“காண்போர் கண்களை
கவர்ந்திழுக்கும்
வகையில் மின்னும்
அணிகலன்களை
அணிந்து
பூங்கொடிகள் சுற்றிய
கமுகைப்
போன்று இருக்கும்
உன்னுடைய
கழுத்தும் ;”

“மூங்கிலை
வளைத்து வைத்து
உருவாக்கியது போல்
இருக்கும் மூங்கிலைப்
போன்ற உன்னுடைய
தோள்களும் ;”

“வான வில்லாள்
ஓரளவிற்குத் தான்
வளைய முடியும்
என்னால் அதையும்
தாண்டி வளைய
முடியும் என்று
நெளிந்தாடிக்
கொண்டிருக்கும்
வானவில்லைப்
போன்ற உன்னுடைய
இடையும் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////




சிறப்பு பதிவு


அன்பிற்கினியவர்களே,

கொரோனா வைரஸ்
காரணமாக 144
தடையுத்தரவை
முன்னிட்டு வீட்டினுள்
பாதுகாப்பாக
இருக்கும்
அனைவருக்காகவும்
ஜபத்தின்
சிறப்பு பதிவுகளை
வெளியிடலாம்
என்று முடிவு செய்து
ஜபத்தின் மூன்று
பதிவுகளை
30-03-2020 - இன்று
வெளியிடுகிறேன்

144 தடையுத்தரவு
நீக்கப்பட்டு
மக்கள் தங்களுடைய
இயல்பு
வாழ்க்கைக்கு
திரும்பும் வரை
ஜபத்தின் சிறப்புப்
பதிவுகள்
வெளிவரும்
என்பதை
மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்
கொள்கிறேன்

நன்றி

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////



March 28, 2020

பரம்பொருள்-பதிவு-164


             ஜபம்-பதிவு-412
           (பரம்பொருள்-164)

(அரவானுடைய
தனி அறையில்
உள்ள கட்டிலில்
அரவானும்
திருநங்கையும்
ஒன்றாக
அமர்ந்து கொண்டு
இருக்கும் போது
அரவான் பேசத்
தொடங்கினார் )

அரவான்  :
“நடந்து முடிந்த
நம்முடைய
காந்தர்வ திருமணம்
என்னுடைய
விருப்பத்தின்
பேரில் இருளை
சாட்சியாக
வைத்து நடந்து
முடிந்து விட்டது “

“இனி இந்த
அறையில்
நடக்கப்போகும்
நம்முடைய
இன்பம் நிறைந்த
இந்த இரவிற்கு
இருள் இருக்க
வேண்டுமா ?
அல்லது
ஒளி இருக்க
வேண்டுமா?
என்பதை
முடிவு செய்யும்
பொறுப்பை
உன்னுடைய
விருப்பத்திற்கே
விட்டு விடுகிறேன் “  

திருநங்கை  :
(அரவானின்
வார்த்தைகளைக்
கேட்ட திருநங்கை
நாணத்தால்
தன்னுடைய
முகத்தை மூடிக்
கொண்டாள்)

அரவான்  :
“நிலவை மேகம்
மூடும்போது
இந்த உலகம்
எப்படி இருளால்
சூழ்ந்து
விடுகிறதோ
அதைப்போல
நிலவு போன்று
இருக்கும்
உன்னுடைய
முகத்தை
கைகள் என்ற
மேகத்தால் மூடிக்
கொண்டதால்
இந்த அறை
இருளால் சூழ்ந்து
விட்டதைப் பார் “

திருநங்கை  :
“நீங்கள் பெரிய
கவிஞராக
இருப்பீர்கள் போல
இருக்கிறது ;
நீங்கள் பேசும்
வார்த்தையே
கவிதையாக
இருக்கிறது ;”

அரவான் :
“நம்முடைய
மனதைக் கவர்ந்த
பெண் நமக்கு
அருகில்
இருக்கும் போது
எந்த ஒரு
ஆணும்
கவிஞனாகத்தான்
மாறுவான் “

“கவிஞனாக
இல்லாதவனும்
கவிஞனாகத்
தான் மாறுவான்”

“கவிஞனாக
பிறக்காதவனும்
கவிஞனாகத்
தான் மாறுவான்”

“நானும்
அப்படித்தான்
உன்னைப்
பார்த்தது முதல்
கவிஞனாக
மாறி விட்டேன்”

“கவிஞனாவதற்கு
முன் கண்களால்
உன்னுடைய
அழகை ரசித்தேன்  ;
கவிஞனனான பின்
வார்த்தைகளால்
உன்னுடைய
அழகை
ரசிக்கிறேன் ;”

திருநங்கை  :
“நீங்கள் ரசித்த
என்னுடைய
அழகை
கவிதையாக்கி
சொல்வீர்களா ?
உங்களுடைய
வாயிலிருந்து
வரும் அழகான
வார்த்தைகளின்
மூலம் அதை
நான் கேட்க
விரும்புகிறேன் “

“என்னுடைய
ஆசையை
நிறைவேற்றுவீர்களா?”

அரவான்  :
“உங்களை
வர்ணித்து ஒரு
கவிதை என்ன
ஓராயிரம்
கவிதை
சொல்லலாமே ?
ஆயிரம் கவிதை
போதுமா-அல்லது
அதற்கு மேலும்
வேண்டுமா ? “

திருநங்கை  :
“ஓர் ஆயிரம்
கவிதை எல்லாம்
தேவையில்லை
என்னுடைய
மனதை கவரும்
வகையில்
ஒரே ஒரு
கவிதை
சொல்லுங்கள்
அது போதும் “

அரவான்  :
“சரி சொல்கிறேன் ! “

(என்று
அரவான்
கவிதை சொல்லத்
தொடங்கினார்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-03-2020
//////////////////////////////////////////


March 27, 2020

பரம்பொருள்-பதிவு-163


               ஜபம்-பதிவு-411
             (பரம்பொருள்-163)

அரவான்  :
“இந்த இருளை
சாட்சியாக வைத்து
காந்தர்வ முறைப்படி
திருமணம் செய்து
கொள்வோம் “

திருநங்கை  :
“என்னது இருளை
சாட்சியாக
வைத்து திருமணமா
விசித்திரமாக
இருக்கிறது “

“எந்த சுபகாரியத்தை
செய்தாலும்
பஞ்ச பூதங்களான
நிலம், நீர், நெருப்பு,
காற்று, விண்,
ஆகியவற்றை
சாட்சியாக
வைத்துத் தானே
செய்வார்கள் - அதிலும்
பெரும்பான்மையானவர்கள்
ஒளியை சாட்சியாக
வைத்துத் தானே
செய்வார்கள் “

“அப்படி இருக்கும்
போது சுபகாரியமான
திருணத்தை - நாம்
செய்து கொள்ளும் போது
எதற்காக இருளை
சாட்சியாக வைத்து
திருமணம் செய்ய
வேண்டும் என்கிறீர்கள் “

 அரவான் :
“பஞ்சபூதங்களுக்கும்
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;
இந்த பிரபஞ்சத்திற்கு
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;
இந்த உலகத்தில்
உள்ள தோற்றங்கள்
அனைத்திற்கும்
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;”

“ஆதியும் இருள் தான் ;
அந்தமும் இருள் தான் ;
ஆரம்பமும் இருள் தான் ;
முடிவும் இருள் தான் ;”

“அன்று இருந்ததும்
இருள் தான் ;
இன்று இருப்பதும்
இருள் தான் ;
நாளை இருக்கப்
போவதும்
இருள் தான் ;”

“இந்த உலகம்
முழுவதும் நிரம்பி
இருப்பதும்
இருள் தான் ;
அனைத்துப்
பொருட்களிலும்
ஊடுருவி நிரம்பி
இருப்பதும்
இருள் தான் ;”

“இருள் இன்றி
இந்த உலகத்தில்
எதுவும் இல்லை “

“ஒளியானது தனது
ஆயுட்காலம்
இருக்கும் வரை
இருளுக்குள் இருந்து
விட்டு செல்லும் ;
ஒளியானது
நிலையானது
கிடையாது ;
நிலையற்றது ;
என்றும் இருக்கப்
போவது இருள்
ஒன்று தான் ; “

“அதனால் தான்
நிலையற்ற ஒளியை
சாட்சியாக வைக்காமல்
நிலையான இருளை
சாட்சியாக வைத்து
நாம் காந்தர்வ
முறைப்படி
திருமணம் செய்து
கொள்ளலாம் என்றேன் “

திருநங்கை  :
“நீங்கள் வித்தியாசமாக
யோசிப்பவர் என்று
கேள்விப்பட்டேன் ;
ஆனால் இவ்வளவு
வித்தியாசமாக
யோசிப்பவர் என்பதை
இப்போது தான்
தெரிந்து கொண்டேன் ; “

“உங்கள் கருத்தை
நான் ஏற்றுக்
கொள்கிறேன் ;
நாம் இருளை
சாட்சியாக வைத்தே
திருமணம்
செய்து கொள்வோம் “

(ஏற்கனவே அழகாக
கோர்த்து வைக்கப்பட்ட
மாலையை அரவான்
தன்னுடைய கையில்
எடுத்து திருநங்கையின்
கழுத்தில் போட்டான் ;
திருநங்கை தன்னுடைய
கையில் இருந்த
மாலையை அரவான்
கழுத்தில் போட்டாள் ;
அரவானின்
திருமணம் காந்தர்வ
முறைப்படி நடக்க
இருள் அதற்கு
சாட்சியாக இருந்தது ;)

அரவான் :
“வாருங்கள் என்னுடைய
மாளிகைக்குள் இருக்கும்
என்னுடைய தனிமையான
அறைக்குள் செல்வோம் “

திருநங்கை :
“என்னை நீங்கள்
உள்ளே வா என்று
அழைத்தால் தான்
நான் மாளிகைக்குள்
வருவேன் “

அரவான்  :
“அப்படியா !
என்னுடைய
இதயசிம்மாசனத்தில்
வீற்றிருக்கும்
என்னுடைய
இதய ராணியே  !
என்னுடைய
மாளிகைக்கு வர
வேண்டும்  

(என்று
திருநங்கையைப்
பார்த்துக் கொண்டே
தன்னுடைய ஒரு
கையை நீட்டினான்
அரவான் “

“வெட்கத்தால்
தலைகுனிந்த
திருநங்கை
அரவானின் கையைப்
பற்றிக் கொண்டு
அரவானின்
மாளிக்கைக்குள்
இருக்கும் அரவானின்
தனி அறைக்குள்
நுழைந்தாள் “)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 27-03-2020
//////////////////////////////////////////