April 07, 2020

பரம்பொருள்-பதிவு-179


                  ஜபம்-பதிவு-427
                (பரம்பொருள்-179)

“கிருஷ்ணன் களப்பலி
நடக்கப்போகும்
காளிதேவி சிலை
இருக்கும் இடத்திற்கு
வந்து நின்ற போது
அங்கு நின்று
கொண்டிருந்த
பஞ்சபாண்டவர்கள்
அனைவரும்
அவருக்கு இரண்டு
கரங்களையும்
குவித்து வணக்கம்
செலுத்தினர் “

“பதிலுக்கு கிருஷ்ணனும்
வணக்கம் செலுத்தினார்”

“அரவான் கிருஷ்ணன்
காலில் விழுந்து
வணங்கினான் “

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“உன்னுடைய புகழ்
என்றும் நிலைத்து
இருக்கட்டும் அரவான் “

(கிருஷ்ணன்
பஞ்சபாண்டவர்கள்
பக்கம் திரும்பினார்)

“களப்பலிக்குத்
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
நான் சொன்னபடி
செய்து முடித்து
விட்டீர்களா ? “

தர்மர் :
“செய்து முடித்து
விட்டோம்  

“நாங்கள் எந்த
செயல்களை செய்ய
வேண்டும் என்று
எங்களிடம்
செய்யச் சொன்னீர்களோ
அந்த செயல்களை
செய்து முடித்து
விட்டோம் “

“களப்பலி
கொடுப்பதற்கு
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து முடித்து
விட்டோம் “

“தங்கள் வரவுக்காக
காத்துக்
கொண்டிருந்தோம் “

“இப்போது
களப்பலி கொடுப்பதற்கு
தங்கள் உத்தரவிற்காக
காத்துக்
கொண்டிருக்கிறோம் “

கிருஷ்ணன் :
“உங்களிடம் நான்
ஏற்கனவே
சொன்னபடி
இன்று நடந்து
கொண்டிருந்த
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் “

“இப்போது
அமாவாசை நடந்து
கொண்டிருக்கிறது “

“நாளை தான்
அமாவாசை என்று
நினைத்துக்
கொண்டிருக்கும்
துரியோதனன்
நாளைக்குத் தான்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானைத்
தேடி வருவான் “

“அரவானைத் தேடி
துரியோதனன் இன்று
வரமாட்டான்  

“அதனால்
இன்று நடந்து
கொண்டிருக்கும்
அமாவாசையில் - நாம்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கும் போது
துரியோதனனால்
நமக்கு எந்தவிதமான
இடையூறும்
ஏற்படப்போவதில்லை “

“அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
எந்தவிதமான
தடையையும் யாரும்
ஏற்படுத்தப்போவதும்
இல்லை “

“எந்தவிதத் தடையும்
இல்லாமல் நாம்
களப்பலியை
நடத்தலாம் “

“களப்பலி
கொடுப்பதற்குரிய நேரம்
நெருங்கி விட்டது”

“களப்பலியை நாம்
ஆரம்பிக்கலாம் “

“அரவான் நீ
தயாராக
இருக்கிறாயா ? “

அரவான் :
“நான் தயார்”

(என்று சொல்லிக்
கொண்டே அரவான்
தன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
வசதியாக தரையில்
முட்டிகால்
போட்டுக் கொண்டு
இருந்தான் ;
தன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
ஏதுவாக தன்னுடைய
தலையை தாழ்த்தி
வைத்துக்
கொண்டிருந்தான் ; )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////

April 06, 2020

பரம்பொருள்-பதிவு-178


               ஜபம்-பதிவு-426
             (பரம்பொருள்-178)

“களப்பலி நடக்கும்
இடத்தில்
மிகப்பெரிய
காளி தேவியின் சிலை
நின்று கொண்டு
இருந்தது ;”

“பார்ப்பவர் மனதில்
கலக்கத்தை
ஏற்படுத்தும்
வகையில்
காளிதேவியின்
சிலை நின்று
கொண்டு இருந்தது ; “

“தைரியமுள்ள
மனதைக்
கொண்டவர்களால்
மட்டுமே
பார்க்க முடியும்  ;
தைரியமில்லாதவர்களால்
பார்க்கவே
முடியாது
என்று சொல்லத்தக்க
வகையில்
காளிதேவியின்
சிலை நின்று
கொண்டு இருந்தது ;”

“தைரியமில்லாதவர்கள்
பார்த்தால்
மரண பயத்தால்
இதயம் வெடித்து
இறந்து விடுவார்கள்
என்ற உண்மையை
சொல்லத் தக்க
வகையில்
மரண பயத்தை
உண்டாக்கும்
வகையில்
காளிதேவியின்
சிலை நின்று
கொண்டு இருந்தது  

“தன்னுடைய
இரத்தத் தாகத்தை
தீர்த்து விட்டு
நேரில் வந்து
ஆசிகளை அளித்து
வரம் அருளுவதற்காக
உயிரோடு
காளிதேவியானவள்
நேரில் வந்து நின்று
கொண்டிருக்கிறாள் என்று
சொல்லத்தகக்க வகையில்
காளி தேவியின் சிலை
அச்சத்தை மூட்டும்
வகையில் நின்று
கொண்டிருந்தது “

“காளிதேவியின் சிலை
முழுவதும் கழுவி
சுத்தம் செய்யப்பட்டு  ;
அலங்காரங்கள்
செய்யப்பட்டு ;
அணிகலன்கள்
அணியப்பட்டு ;
மலர்கள் சூட்டப்பட்டு ;
களப்பலி பூஜை
செய்வதற்கு
உகந்த வகையில்
காளிதேவியின் சிலை
தயார்
செய்யப்பட்டிருந்தது “

“களப்பலி
நடத்துவதற்குத்
தேவையான
அனைத்து பொருட்களும்
காளிதேவியின் சிலையின்
முன்னால் வரிசையாக
அடுக்கி
வைக்கப்பட்டிருந்தது “

“மலர்கள்  ; பழங்கள்  ;
வாசனை திரவியங்கள் ;
காளிதேவிக்கு
உகந்த பொருட்கள் ;
ஆகிய அனைத்தும்
தட்டுகளில் முறைப்படி
அடுக்கி வைக்கப்பட்டு
காளிதேவியின் முன்னால்
வைக்கப்பட்டிருந்தது ;”

“அரவானுடைய தலையை
வெட்டுவதற்காக
நன்கு தயார்
செய்யப்பட்டு
வைக்கப்பட்டிருந்த
வாளானது
காளிதேவியின்
கால்களில்
வைக்கப்பட்டு
மின்னிக் கொண்டிருந்தது ; “

“இவைகள் அனைத்தையும்
இமை கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்த
அரவான்
காளிதேவி சிலையின்
அருகில் நின்று
கொண்டிருந்த
பஞ்ச பாண்டவர்களின்
பக்கமாக தன்னுடைய
பார்வையை செலுத்தினான் “

“அவர்கள்
அனைவரையும்
இரு கரங்கள் கூப்பி
வணக்கம்
செலுத்தியதோடு
நிற்காமல்
அனைவருடைய
கால்களிலும் விழுந்து
வணங்கினான் ;
வணங்கிய அரவானை
பஞ்ச பாண்டவர்களும்
ஆசிர்வாதம் செய்தனர்  ; “

“அனைவரிடமும்
ஆசிகளைப் பெற்ற
அரவான்
கிருஷ்ணனிடம்
ஆசிகள் பெறுவதற்காக
கண்களால்
கிருஷ்ணனை தேடினான்
அந்த இடத்தில்
கிருஷ்ணன் இல்லை
என்பதை
உணர்ந்து கொண்ட
அரவான்
பேசத் தொடங்கினான் “

அரவான் :
“நான் களப்பலிக்கு
தயாராக இருக்கிறேன் “

தர்மர் :
“பரந்தாமன்
கிருஷ்ணனுடைய
வரவுக்காகக்
காத்திருக்கிறோம்  ;
அவர் இன்னும்
வரவில்லை ;
அவர் வரட்டும் ;”

(கிருஷ்ணன் வருகிறாரா
என்று அனைவரும்
பாதையையே பார்த்துக்
கொண்டிருந்த போது
அந்த பாதை வழியாக
கிருஷ்ணன் நடந்து
வந்து கொண்டிருந்தார் )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 06-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-177


               ஜபம்-பதிவு-425
             (பரம்பொருள்-177)

“தூக்கத்திலிருந்து
விழித்து எழுந்தான்
அரவான் ;
படுக்கையையும்
அந்த அறையும்
சுற்றும் முற்றும்
பார்த்தான்
திருநங்கை இல்லை
என்பதை
தெரிந்து கொண்டான் ;
அவள் தன்னுடைய
கடமைகளை
முடிப்பதற்காக
சென்றிருக்கிறாள்
என்பதை
உணர்ந்து கொண்டான் ; “  

“உடல் முழுவதும்
சந்தனத்தால் பூசப்பட்ட
நிலையில் நின்று
கொண்டிருந்த அரவான்
கஸ்தூரி ; அத்தர் ;
ஜவ்வாது ; புனுகு ;
கோரோஜன் ; போன்ற
வாசனை திரவியங்கள்
தெளிக்கப்பட்ட பன்னீரில்
குளித்து எழுந்தான் “

“பகைவனின் பகையை
முடிக்க வேண்டும்
என்றால் தான்
களப்பலியாக வேண்டும்
என்ற உண்மையை
உணர்ந்திருந்த அரவான்
போருக்கு செல்பவர்கள்
போரின் போது
அணியக் கூடிய
போர் ஆயுதங்களுடன் கூடிய
போர் உடையை
அணிந்து கொண்டு
குகை விட்டுக்
வெளிக்கிளம்பும்
ஒரு புலியென  ;
வில்லிலிருந்து
புறப்பட்ட
ஒரு அம்பென ;
உறை விட்டுக்
கிளம்பும்
ஒரு வாளென ;
வெளிக் கிளம்பிய
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“குருஷேத்திரப் போரில்
பாண்டவர்கள் வெற்றி
பெற வேண்டுமென்றால்
தான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை
உணர்ந்திருந்த
அரவான்
இந்த உலகம்
கண்டிராத தியாக
மனப்பான்மை
கொண்டிருந்த
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“நாளைய உலகத்தில்
வாழக்கூடிய
மக்கள் அனைவரும்
அமைதியாக
வாழ வேண்டும்
என்றால் ,
நிம்மதியாக
வாழ வேண்டும்
என்றால் ,
ஒருவருக்கொருவர்
பகை நீக்கி
ஒற்றுமையுடன்
வாழ வேண்டும்
என்றால் ,
கவலை நீக்கி
இன்பமாக உயிரோடு
வாழ வேண்டும்
என்றால்,
தான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை
உணர்ந்திருந்த
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“குமுறும் எரிமலைக்
குழம்பில் பிறந்து ;
சுழன்றடிக்கும் சூறாவளிக்
காற்றில் தவழ்ந்து ;
ஆவேசத்துடன் ஓடி
வரும் வெள்ளத்தில்
எதிர் நீச்சல்
அடித்து வாழ்ந்து ;
கொண்டிருந்த அரவான்
வீரத்தின் விளை நிலமாக
திகழ்ந்து கொண்டிருந்த
அரவான்
நாளைய உலகத்தில்
வாழக்கூடிய பெண்கள்
அனைவரும்
மானத்தோடு வாழ
வேண்டும் என்றால்
தான் களப்பலியாக
வேண்டும் என்ற
உண்மையை
உணர்ந்திருந்த
அரவான்
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து சென்று
கொண்டிருந்தான் “

“அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்டி
நாளைய உலகத்தை
பேரழிவிலிருந்து
காப்பாற்றுவதற்காக
தன்னையே
களப்பலியாகக்
கொடுப்பதற்காக
களப்பலி நடக்கப்
போகும் இடத்தை
நோக்கி நடந்து
சென்று கொண்டிருந்த
அரவான்
களப்பலி நடக்கும்
இடத்தை அடைந்தான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 06-04-2020
//////////////////////////////////////////

April 04, 2020

144-கடிதம்


அன்பிற்கினியவர்களே,

கொரோனா வைரஸ்
தொற்று காரணமாக
144 தடையுத்தரவு
போட்டதால்
வீட்டில் தனிமையில்
இருக்கும் நான்
வீட்டில் இருந்த படியே
பல விஷயங்களைச்
செய்து கொண்டிருக்கிறேன்

ஜபம் என்ற
தலைப்பில் நான்
WHATS APP
Kbalagangadharan.blogspot.com
FACE BOOK
ஆகியவற்றில்
பல்வேறு கட்டுரைகளை
எழுதிக் கொண்டு
வருவதை
அனைவரும் அறிவீர்கள்

தற்போது
அரவான் களப்பலி
கதையை
உலகில் உள்ள
பெரும்பான்மையானவர்களின்
அமோக ஆதரவுடனும்
உங்கள் அனைவரின்
பேராதரவுடனும் எழுதிக்
கொண்டு வருகிறேன்

அரவான் களப்பலி
கதை முடியும்
தருவாயில் இருப்பதால்
அரவான் களப்பலி
என்ற தலைப்பில்
புத்தகமாக கொண்டு
வருவதற்கான
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கிறேன்

அதற்கு
என்னுடைய சீடர்கள்
என்னுடைய நண்பர்கள்
என்னுடைய உறவினர்கள்
என்மேல் அன்புள்ளம்
கொண்ட
உயர்ந்த உள்ளங்கள்
ஆகிய அனைவரும்
எனக்கு உதவிகள்
செய்து கொண்டு
வருகிறார்கள்

அரவான் களப்பலி
கதையை
COPY RIGHT
வாங்கி
வெளியிட இருக்கிறேன்

அனைத்து பணிகளும்
முடிவடைந்த பின்னர்
என்னுடைய
அரவான் களப்பலி
புத்தகம்
என்னுடைய முதல்
நூலாக வெளிவரும்
என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்

என்னுடைய முதல்
நூலாக
அரவான் களப்பலி
என்ற கதை
வெளியிடப்படும்போது
அனைவரும்
அழைக்கப்பட்டு
அந்த விழாவில்
கலந்து கொண்டு
சிறப்பிக்கும் வகையில்
என்னுடைய முதல்
புத்தக வெளியீட்டு
விழா நடைபெற
இருக்கிறது

இதற்காக வீட்டில்
என்னுடைய
நேரங்களை ஒதுக்கி
வேலை செய்து
கொண்டிருக்கிறேன்
இருந்தும் எனக்கு
நேரம் போதவில்லை

இவைகளுக்கு நடுவில்
நான் பல சித்தர்
பாடல்களுக்கு
விளக்கங்களும்
பல கதைகளையும்
கட்டுரைகளையும்
பழமொழிகளுக்கு
விளக்கங்களையும்
வரலாற்றுக்
கட்டுரைகளையும்
ஆய்வுக் கட்டுரைகளையும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

இவைகளை தொடர்ந்து
உங்களுக்காக
வெளியிட இருக்கிறேன்
படித்து
பயன் பெறவும்

கொரோனா வைரஸ்
தொற்று காரணமாக
144 தடையுத்தரவு
போட்டதால்
நான் வீட்டில்
இருக்கும் போது
எடுக்கப்பட்ட என்னுடைய
புகைப்படங்கள்

----------என்றும் அன்புடன்
----------K.பாலகங்காதரன்
----------04-04-2020
/////////////////////////////////////////////