July 15, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-42



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-42

“””””உயிர் காப்பான் தோழன்””””

உலகம் முழுவதும்
எடுத்துக் கொண்டால்
பிறருடன் நட்பு
கொள்பவர்களின்
நட்பை இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்

   ஒன்று  எதிர்பார்ப்புடன்
           நட்பு கொள்பவர்கள்

   இரண்டு எதிர்பார்ப்பு
            அற்று
            நட்பு கொள்பவர்கள்

எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்களை
ஆதாயத்திற்காக
நட்பு கொள்பவர்கள்
என்றும்
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்பவர்களை
ஆதாயம் இல்லாமல்
நட்பு கொள்பவர்கள்
என்றும் சொல்லலாம்

எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்பவர்களின்
எண்ணிக்கையை விட
எதிர்பார்ப்புடன்
நட்பு கொள்பவர்களின்
எண்ணிக்கையே அதிகம்

பெரும்பாலானவர்கள்
பிறருடன் நட்பு
கொள்ளும் போது
இவரால் தனக்கு
எத்தகைய லாபங்கள்
கிடைக்க வாய்ப்பு
இருக்கிறது என்பதை,
கணக்கில் எடுத்துக்
கொண்டு நட்பு
கொள்கின்றனர்.
இவ்வாறு நட்பு
கொள்கிறவர்கள்
எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்கள்

துரிபோதனன் கர்ணன்
நட்பு எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பு

துரியோதனன், கர்ணனிடமும்
கர்ணன், துரியோதனனிடமும்
நட்பு கொண்டிருந்தது
ஏதோ ஒன்றை
எதிர்பார்த்துத்தான்
கர்ணன் போர்க் கலைகளில்
வல்லவனாக இருக்கிறான்
என்ற காரணத்தினாலும்,
அர்ஜுனனை
எதிர்த்து போர் புரியக்கூடிய
ஆற்றல் கர்ணனிடம்
இருக்கிறது என்ற
காரணத்தினாலும்,
அர்ஜுனனை அழிக்கக்
கூடிய சக்தி
கர்ணனிடம் இருக்கிறது
என்று நினைத்த
காரணத்தினாலும்
தான் துரியோதனன்
கர்ணனிடம் நட்பு
கொண்டான்.
அதைப்போல கர்ணனும்
தன்னுடைய
விரோதியாகக் கருதிய
அர்ஜுனனை அழிக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும்,
அரச நிலையில் இருக்கும்
அர்ஜுனனை அழிக்க
வேண்டுமானால்
அரசனுடைய உதவி
தேவைப்படும் என்ற
காரணத்தினாலும் தான்
துரியோதனனுடன் கர்ணன்
நட்பு கொண்டான்,

துரியோதனன் கர்ணன்
நட்பு எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பு

துரியோதனன் தவறு
செய்த போதெல்லாம்
அவன் செய்யும் தவறுகளை
சுட்டிக் காட்டி
அவனை திருத்த முயற்சி
செய்யாமல்
அவனுடன் இருந்து
அவன் செய்த அனைத்து
தவறான செயலுக்கும்
துணையாக இருந்தான்
கர்ணன்

நண்பன் தவறு
செய்யும் போது
அவன் செய்யும்
தவறுகளை சுட்டிக் காட்டி
அவனை திருத்த முயற்சி
செய்பவனே
உண்மையான நண்பன்
ஆனால் கர்ணன்
அதைச் செய்யவில்லை
துரியோதனனை திருத்த
முயற்சி செய்யவில்லை

கர்ணன் நண்பனுக்காக
உயிரை கொடுத்தான்
உயிர் காப்பான் தோழன்
என்பதற்கு கர்ணன்
எடுத்துக் காட்டு
என்று சொல்ல முடியாது
தவறான நண்பர்களுடன்
சேர்ந்தது மட்டுமல்லாமல்
அவர்கள் செய்த
தவறுகளை சுட்டிக்காட்டி
அவர்களை திருத்த
முயற்சி செய்யாமல்
தானும் சேர்ந்து
தவறு செய்த
காரணத்தினால் தான்
கர்ணன் இறந்தான்
என்று தான் எடுத்துக்
கொள்ள வேண்டும்
நண்பனுக்காக உயிரைக்
கொடுத்தான்
என்று எடுத்துக்
கொள்ள முடியாது

எதிர்பார்ப்புடன் நட்பு
கொள்பவர்களை
உயிர் காப்பான் தோழன்
என்று சொல்ல முடியாது
ஆனால்
எதிர்பார்ப்பு இல்லாமல்
நட்பு கொள்பவர்களை
உயிர் காப்பான் தோழன்
என்று சொல்ல முடியும்

நண்பன் ஒருவன்
நான் கஷ்டத்தில்
இருக்கிறேன் எனக்கு
உதவி செய் என்று
கேட்கும் போது
உதவி செய்பவனும்,
நண்பன் ஒருவன்
நான் கஷ்டத்தில்
இருக்கிறேன் எனக்கு
உதவி செய் என்று
கேட்காவிட்டாலும்
நண்பன் கஷ்டத்தில்
இருக்கிறான்
என்பதை அறிந்து
ஓடிச்சென்று
உதவி செய்பவனும்
தான் உண்மையான நண்பன்
அவன் தான்
உயிர் காப்பான் தோழன்

நண்பன் கஷ்டத்தில்
இருக்கும் போது
எனக்கு உதவி செய்
என்று கேட்டும்
உதவி செய்யாமல்
இருப்பவனும் நண்பன்
கஷ்டத்தில் இருக்கிறான்
என்பதை உணர்ந்தும்
அவனுக்கு
உதவி செய்யாமல்
எதுவும் தெரியாதது போல்  
கண்டு கொள்ளாமல்
இருப்பவனும்,
உயிர் காப்பான்
தோழன் இல்லை

----------இன்னும் வரும்
----------15-07-2018
///////////////////////////////////////////////////////////

July 12, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-41


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-41

ஆறாவது நாள்
திண்ணனார்
வேட்டையாடி
ஊனமுது, நீர், பூ
எடுத்துக் கொண்டு
திருக்காளத்தியப்பரிடம்
வந்தார்.

காளத்தியப்பர்
திண்ணனாருடைய
பக்தியை முனிவருக்குக்
காட்டும் பொருட்டு
தனது ஒரு கண்ணில்
இரத்தம் வருமாறு செய்தார்.

இக்காட்சியைக் கண்ட
திண்ணனார் ஐயோ
என்று அலறினார்
மயங்கி கீழே விழுந்தார்
வாயில் கொண்டு வந்த
அபிஷேக நீர் சிந்தியது
கையிலிருந்து ஊனும்
வில்லும் விழுந்தது
தலையிலிருந்த
மலர்கள் சிந்தின.

திண்ணனார் எழுந்தார்
இத்தகைய செயலைச்
செய்தது யார்
விலங்குகள் செய்தனவா
வேறு வேடர்கள்
யாரேனும் செய்தார்களா
என்று வருந்தினார்
என்ன செய்தால் இந்த
இரத்தம் நிற்கும்
என்று யோசித்தார்

அரிய வகை
மூலிகைகளைக் கொண்டு
வந்து கண்ணில் அதனுடைய
சாற்றைப் பிழிந்தார்
இரத்தம் வருவது
நிற்கவில்லை

“””ஊனுக்கு ஊன்
உற்றநோய் தீர்க்கும்”””” என்ற
பழமொழி திண்ணனார்
நினைக்கு வந்தது

என்னுடைய கண்ணை
எடுத்து அப்பினால்
இறைவன் கண்ணுக்கு
மருந்தாகி இரத்தம் நிற்கும்
என்று துணிந்து
அம்பினை எடுத்துத்
தனது வலக்கண்ணை தோண்டி
எடுத்து அப்பினார்
இரத்தம் நின்று விட்டது

அதைக் கண்ட
மகிழ்ச்சியில் திண்ணனார்
தன்னை மறந்து ஆடினார்.
திண்ணனாருடைய
பக்தியை மேலும்
சிவகோசரியாருக்கு
காட்டுவதற்காக இறைவன்
தன்னுடைய மற்றொரு
கண்ணிலும் இரத்தம்
வருமாறு செய்தார்.

இதனைக் கண்ட
திண்ணனார்
இதற்கெல்லாம் நான்
கலங்க மாட்டேன்
எனக்கு மேலும்
ஒரு கண் இருக்கிறது
அதை எடுத்து அப்புவேன்
என்று கண்ணை
பிடுங்கி எடுக்க தயாரானார்.

கண்ணை பிடுங்கி விட்டால்
சிவலிங்கத்தில் இரத்தம்
வழியும் கண்
எங்கே இருக்கிறது
என்று தெரியாது
என்பதற்காக தன்
இடக் காலை
சிவலிங்கத்தின் இரத்தம்
வரும் கண்ணில்
அழுத்தி வைத்து
அம்பினால் இரண்டாவது
கண்ணையும் பிடுங்குவதற்கு
அம்பை கண்ணில்
ஊன்றினார்.

காளத்தியப்பர்
நேரில் தோன்றி
திண்ணனாருடைய
கையைப் பிடித்து
நில்லு கண்ணப்பா
நில்லு கண்ணப்பா
என்று தடுத்து அருளினார்

கண்ணப்பா என்றும்
என் வலப்பக்கம் நிற்பாய்
என்று அருள் புரிந்தார்.

கண்ணப்ப நாயனார்
வெறியுடன்
கடவுளை வணங்கவில்லை
பக்தியுடன் கடவுளை
வணங்கினார்

பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்களுக்கே
அனைத்து உயிர்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதையும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதையும்
உணர்ந்து கொள்ள முடியும்

அதனால் தான்
கண்ணப்ப நாயனார்
கல்லிலும் கடவுளைக்
கண்டார்.

அனைத்து உயிர்களிலும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதை யார் ஒருவர்
உணருகின்றாரோ
அவரே பக்தியுடன்
கடவுளை வணங்குபவர்

இத்தகையவர் தான்
தன் கடவுள்
மேல் வைத்திருக்கும்
பக்தியைப் போன்றே
பிற கடவுள்களின் மேலும்
பக்தியை வைத்திருப்பார்
பிற கடவுளை
இழிவு படுத்தும்
வகையில் நடந்து
கொள்ள மாட்டார்

அனைத்து உயிர்களிலும்
அனைத்து பொருள்களிலும்
கடவுள் இருக்கிறான்
என்பதை யார் ஒருவர்
உணரவில்லையோ
அவர் தான் வெறியுடன்
கடவுளை வணங்குபவர்

இத்தகையவர் தான்
தான் வணங்கும்
கடவுளே உயர்ந்தது
தான் வணங்கும்
கடவுளே உண்மையானது
என்று சொல்லிக் கொண்டு
பிற கடவுளை
இழிவு படுத்தும்
வகையில் நடந்து கொள்வர்

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்களால் தான்
இந்த உலகத்தில்
சண்டையும் அமைதி
இன்மையும் ஏற்படுகிறது

பக்தியுடன் கடவுளை
வணங்கினால் மட்டுமே
இந்த உலகத்தில்
அமைதி நிலவும்
சமத்துவ, சமதர்ம
சமுதாயம் மலரும்
என்பதை உணர்ந்து
கடவுளை வெறியுடனும்
வணங்கக் கூடாது
கடவுளை பயத்துடனும்
வணங்கக் கூடாது
கடவுளை பக்தியுடன் தான்
வணங்க வேண்டும் என்று
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////


July 11, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-40



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-40

பொதப்பி நாட்டின்
உடுப்பூர் தலைநகரத்தில்
வேடர்குல தலைவனான
நாகனுக்கு
இறைவனின் அருளால்
திண்ணன் பிறந்தார்
அவர் கல்வி பயிலும்
காலம் வந்த போது
வேட்டையாடுவதற்கு
தேவையான அனைத்து
கலைகளுடன்
விற்பயிற்சியும் கற்றார்

தின்னணார் ஒருநாள்
வேட்டையாடச்
சென்ற போது
வலிமையுடைய பன்றி
வலைகளை அறுத்துக்
கொண்டு மிக்க
வேகத்துடன் ஓடியது
அதனை மிகுந்த
வேகத்துடன் துரத்திச்
சென்று கொண்டிருந்த
திண்ணனாரைக் கண்ட
நாணன், காடன் ஆகிய
இருவரும் திண்ணனாரை
தொடர்ந்து சென்றனர்
அந்த பன்றி தொலை
தூரம் ஓடி ஒரு
மலைச்சாரலில் அதற்கு
மேலும் செல்ல
முடியாமல் மரங்களுக்கு
இடையில் நின்றது.
திண்ணனார் கணை
எறிந்து கொல்லாமல்
வீரத்துடன் எதிர்த்து
உடைவாளால் பன்றியின்
உடம்பைப் பிளந்தார்.

திண்ணனார் பொன்முகலி
நதியைக் கடந்து
வரும்போது
காளத்தி மலையில்
குடுமித் தேவர் என்ற
சிவலிங்கத்தைக் கண்டார்
சிவலிங்கத்தைக் கண்ட
திண்ணனார்
மெய் மறந்து நின்றார்
அவர் கல்லிலே
கடவுளைக் கண்டார்
அனைத்து பொருள்களிலும்
கடவுளைக் காண்பவர்களால்
மட்டுமே பக்தி செலுத்த
முடியும் அத்தகைய
நிலையில் தான்
தின்னணார் இருந்தார்
அவர் கல்லிலும்
கடவுளைக் கண்டார்

பொன்முகலி ஆற்றின்
நீரைத் தூய வாயினில்
எடுத்துக் கொண்டார்
மலர்களைக் கொய்து
தலைமயிரில்
சொருகிக் கொண்டார்
ஒரு கையில் வில்லும்
அம்பும் தாங்கியும்
மற்றொரு கையில்
இறைச்சியையும் எடுத்துக்
கொண்டு காளத்தி 
மலையை அடைந்தார்

சிவலிங்கத்தின் மேல்
இருந்த மலர்களை
தன் காலில் அணிந்த
செருப்பால் தள்ளினார்
வாயில் வைத்திருந்த
நீரை சிவலிங்கத்தின்
மேல் உமிழ்ந்தார்
தலைமயிரில் சுமந்த
மலரை சாத்தினார்
இறைச்சியை சிவலிங்கத்தின்
முன் வைத்து இறைவா
இதை சாப்பிடுங்கள்
என்று வேண்டினார்.

இரவு நேரத்தில்
விலங்குகளால் இறைவனுக்கு
துன்பம் நேரக்கூடாது
என்பதற்காக இறைவன்
கூடவே விழித்திருந்து
அருகில் நின்றார்.
மறுநாள் விடியும் நேரம்
இறைவனை விழுந்து
வணங்கி விட்டு
இறைவனுக்கு
உணவளிக்க மீண்டும்
வேட்டையாடச் சென்றார்.

கதிரவன் உதயம் ஆனதும்
திருக்காளத்தியப்பரை
முறைப்படி வழிபாடு
செய்யும் சிவகோசாரியார்
நீர், மலர், திருவமுது
எடுத்துக் கொண்டு
இறைவன் முன் வந்தார்
இறைவன் முன்
படைக்கப்பட்டிருந்த
இறைச்சிகளைக் கண்டு
மனம் நொந்து
வேடர்கள் யாராவது
இதனை செய்து இருப்பர்
என்று வருத்தப்பட்டு
இறைச்சிகளை அகற்றி
அந்த இடத்தை
தூய்மை செய்து
தான் கொண்டு வந்த
நீரால் சிவலிங்கத்திற்கு
அபிஷேகம் செய்து
மலர் சாத்தி
திருவமுது படைத்து
சிவலிங்கத்தை வணங்கி
விட்டு சென்றார்.

இந்த நிகழ்வு
தொடர்ந்து நடந்தது
திண்ணனார் பகலில்
வேட்டையாடுவார்
இரவில் காவல் புரிவார்
சிவகோசாரியார் நாள்தோறும்
அவைகளை அகற்றி
சுத்தம் செய்வார்

இவ்வாறாக நான்கு நாட்கள்
கடந்து விட்டது
திண்ணனார் அதிகாலையில்
வேட்டையாடச்
சென்று விட்டார்
ஐந்தாவது நாள்
சிவகோசாரியார் முறைப்படி
அன்றாடம் செய்ய
வேண்டியவைகளை செய்து
இறுதியில் கடவுளே உன்
சன்னிதானத்தில் வந்து
உன்னை அசிங்கப்படுத்துவது
யார் என்பதை
எனக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்று
சிவபெருமானை வேண்டினார்

சிவகோசாரியார் கனவில்
சிவபெருமான் தோன்றி
என்னை வணங்குபவனை
சாதாரணமாக எண்ணிவிடாதே
அவன் என் மேல்
வைத்திருக்கும் கடவுள்
பக்தியை நான்
உனக்குக் காட்டுகிறேன்
மறைந்து நின்று நடக்கும்
நிகழ்வைப் பார்
பக்தி என்றால் எப்படி
இருக்க வேண்டும்
என்பதை அவன் மூலம்
நீ தெரிந்து
கொள்வாய் என்றார்

ஆறாம் நாள் உதயம்
ஆனதும் திண்ணனார்
வேட்டையாடச் சென்றார்.
வீரகோசாரியாரும்
அன்றாடம் செய்ய
வேண்டிய பூசை
முறைகளைச் செய்துவிட்டு
மறைவாக நின்று கொண்டு
நடக்கப்போகும் நிகழ்வை
காணக் காத்திருந்தார்.

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////////