November 14, 2019

பரம்பொருள்-பதிவு-83


            பரம்பொருள்-பதிவு-83

“அந்தப் பெண்
அர்ஜுனனை கங்கையின்
அடிவரை தன்னுடைய
மாய சக்தியால்
இழுத்துச் சென்றாள் ;
கங்கையின் அடியில்
கட்டப்பட்டிருந்த
அழகான அரண்மனையில்
அர்ஜுனனை
விட்டு விட்டாள் ;
அழகான அரண்மனையில்
அர்ஜுனனை விட்டு
விட்ட அந்தப் பெண்
அர்ஜுனனுக்கு
தெரியாத வகையில்
அர்ஜுனன் தன்னைப்
பார்க்க முடியாத
வகையில் ;
அந்தப் பெண்
அந்த அரண்மனையில்
மறைந்து கொண்டாள் ;

“கங்கையின் அடியில்
மிகவும்
பிரமிக்கத்தக்க
விதத்தில்
கட்டப்பட்டிருந்த
அந்த அரண்மனையை ;
அற்புதம் என்று
ஒரே வார்த்தையில்
சொல்ல முடியாதபடி
கட்டப்பட்டிருந்த
அந்த அரண்மனையை ;
கற்பனையில் கூட
சிந்தித்துக் கூட பார்க்க
முடியாத வகையில்
அழகுடன் திகழ்ந்த
அந்த அரண்மனையை ;
கண் இமைக்காமல்
அந்த அரண்மனையை
சுற்றிப் பார்த்துக்
கொண்டே வந்தான்
அர்ஜுனன் ;”

“அக்னிஹோத்திரம்
செய்வதற்காக
கங்கையில்
குளித்து விட்டு
கரை ஏறிய
அர்ஜுனனை ;
அக்னிஹோத்திரம்
செய்ய விடாமல் தடுத்து;
அந்தப் பெண்
அர்ஜுனனை
கங்கைக்குள்
இழுத்துச் சென்று ;
கங்கையின்
அடியில் உள்ள
அரண்மனையில்
விட்டு விட்டதால் ;
அக்னிஹோத்திரம்
செய்யாமல் இருந்த
அர்ஜுனன் ;
அக்னிஹோத்திரம்
செய்வதற்கான
சரியான இடத்தைத் தேடி
அந்த அரண்மனை
முழுவதும் அலைந்தான் ;
நியமங்களைத்
தவறாது கடைபிடிக்கும்
அர்ஜுனன்
அக்னிஹோத்திரம்
செய்வதற்கான
சரியான இடம்
அந்த அரண்மனையில்
இருக்கிறதா என்று
தேடி அலைந்தான்;”

“அந்த அரண்மனையில்
ஒரு இடத்தில்
அக்னி எரிந்து
கொண்டிருப்பதைக்
கண்டான் அர்ஜுனன் ;
அந்த இடம்
அக்னி ஹோத்திரம்
செய்வதற்கு
ஏற்ற இடமாக
இருந்த காரணத்தினால்
அர்ஜுனன் அந்த
இடத்தில் அமர்ந்து
அக்கினையை வளர்த்து
அக்னிஹோத்திரம்
செய்தான் ;”

“அர்ஜுனன் செய்த
அக்னிஹோத்திரத்தை
ஏற்றுக் கொண்ட
அக்னி பகவான்
மனம் குளிர்ந்தார்”

“அர்ஜுனன்
அக்னிஹோத்திரம்
செய்து முடித்தபின்
மறைவில் இருந்து
வெளிப்பட்டாள்
அந்தப் பெண்”

அர்ஜுனன் :
“அச்சத்துடன்
காணப்படும்
அழகிய பெண்ணே !
வார்த்தைகளால்
சொல்ல முடியாமல்
தயக்கத்துடன்
நின்று கொண்டிருக்கும்
இளம் பெண்ணே !
நீ யார் ?
நீ யாருடைய
பெண் ?
இது எந்த இடம் ?
இந்த அரண்மனை
யாருடையது ?
என்ன காரணத்திற்காக
என்னை இங்கே
கொண்டு வந்தாய் ?
என்னுடைய அனுமதி
இல்லாமல் என்னை
இங்கே கொண்டு
வந்ததன் காரணம் என்ன?
உன்னுடைய நோக்கம்
தான் என்ன ?
நீ என்ன
காரியம் செய்து
இருக்கிறாய் என்று
தெரியுமா ?
நீ மிகப்பெரிய
தவறை செய்திருக்கிறாய்
என்பதை
உணர்ந்திருக்கிறாயா?
என்று அடுக்கடுக்கான
கேள்விகளால்
அந்த பெண்ணை
துளைத்து எடுத்தான்
அர்ஜுனன்”

“அர்ஜுனன் கேட்ட
கேள்விகளால்
தாக்குண்ட அந்தப்
பெண் பேசத்
தொடங்கினாள்”

“ஐராவத
நாக குலத்தில்
பிறந்த
கௌரவ்யனென்னும்
நாகராஜன் ஒருவன்
இருக்கிறான் ;
நான் அவனுடைய
மகளான
நாககன்னிகை ;
நாககன்னிகையான
என்னுடைய பெயர்

உலூபி……….!
உலூபி……….!
உலூபி……….!”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------14-11-2019
//////////////////////////////////////////


November 13, 2019

கடிதம்


அன்பிற்கினியவர்களே!

“19-10-2011-ஆம் தேதி முதல்
kbalagangadharan.blogspot.com
என்ற BLOGSPOT-முகவரியில்
“பாலாவின்
பார்வையில் சித்தர்கள்”
என்ற தலைப்பில் நான்
எழுதத் தொடங்கினேன்!”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைகளுக்கு
விளக்கங்கள்!”

“அகஸ்தியர், போகர்,
சிவவாக்கியர் என்று
பெரும்பாலான சித்தர்கள்
எழுதிய கடினமாக
பாடல்களுக்கு விளக்கங்கள்!”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும் 
ஒப்பீடு செய்து ஆய்வுக்
கட்டுரைகளுடன்
கூடிய விளக்கங்கள்!”

“பல்வேறு வகையான
தமிழ் இலக்கியங்களில்
உள்ள பலதரப்பட்ட
பாடல்களுக்கு விளக்கங்கள்!“

“திருவள்ளுவர் எழுதிய
திருக்குறளுக்கு விளக்கங்கள்!

“பழமொழிகளை மாற்றாமல்
அதற்குரிய விளக்கங்கள்!”

“வாழ்த்து மடல்!
கவிதைகள்!
வரலாற்றுக் கட்டுரைகள்!
அறிவியல் கட்டுரைகள்!
என்று பல்வேறு விதமான
கட்டுரைகள் என
இன்று வரை 476-க்கும்
மேற்பட்ட கட்டுரைகளை
எழுதி இருக்கிறேன்
எழுதிக் கொண்டு
இருக்கிறேன்!”

“பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
BLOGSPOT-லும்,

Bala Gangadharan-என்ற
பெயரைக் கொண்ட
FACE BOOK-லும்,

பாலாவின் பார்வையில்
சித்தர்கள் என்ற
தலைப்பைக் கொண்ட
FACE BOOK-லும்,

தொடர்ந்து கட்டுரைகள்
எழுதி வருகிறேன்”

“ஒரு வருடத்திற்கு முன்பு
WHATS APP-ல் ஜபம் என்ற
தலைப்பில் பல்வேறு
கட்டுரைகள் எழுதி
வருகிறேன்!”

“உலகத்தில் நடந்தவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
எழுதப்பட்டவைகள்
எதுவாக இருந்தாலும் சரி!
அதனுடைய
மையக் கருத்தையும்
கதையையும் மட்டுமே
எடுத்துக் கொண்டு
கதை,திரைக்கதை,வசனம்,
என்னுடைய சொந்த
அறிவைப் பயன்படுத்தி
தமிழ்மொழியில் எழுதிக்
கொண்டு வருகிறேன்
என்பதை அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்ள
ஆசைப்படுகிறேன்”

“உலகம் முழுவதும்
இருக்கும் என்னுடைய
ரசிகர்கள் என்மேல்
அன்பு கொண்டவர்கள்
என பல்வேறு தரப்பினரும்
ஒன்றாக இணைந்து
என்னுடைய கட்டுரைகளை
ஒவ்வொரு கால கட்டத்திலும்
புத்தகமாக கொண்டுவர
முயற்சி செய்தோம்”

“இயேசு கிறிஸ்து என்ற
தலைப்பில் இயேசு கிறிஸ்து
சொன்ன உவமைக்குரிய
விளக்கங்களை புத்தகமாக
கொண்டு வர முயற்சி
செய்தோம் முடியவில்லை”

“சித்தர்கள் எழுதிய
பாடல்களுக்கு நான்
எழுதிய விளக்கங்கள்
அடங்கியவைகளை
புத்தகமாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“கிறிஸ்தவ மதத்தையும்
இந்து மதத்தையும்
ஒப்பிட்டு நான் எழுதிய
ஆய்வுக் கட்டுரையை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“நான் எழுதிய பல்வேறு
கட்டுரைகளை ஒன்றிணைத்து
கட்டுரைகளாக கொண்டு
வர முயற்சி செய்தோம்
முடியவில்லை”

“ஆனால் தற்போது
BLOGSPOT-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
FACEBOOK-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
WHATSAPP-ல்
நான் எழுதி வரும்
கட்டுரைகள்
ஆகிய அனைத்தையும்
புத்தகமாக கொண்டு
வருவதற்கான அனைத்து
ஆயத்த வேலைகளையும்
தொடங்கி செய்து
கொண்டு இருக்கிறோம்”

“இதற்காக உலகம்
முழுவதும் இருக்கும்
என்னுடைய ரசிகர்கள்
என்மேல் அன்பு
கொண்டவர்கள் ஆகிய
அனைவரும் ஒன்றாக
இணைந்து பொருளுதவி
மற்றும் பல்வேறு
உதவிகளை தங்களால்
இயன்ற அளவு
செய்து வருகிறார்கள்”

“நான் எழுதிய கட்டுரைகளை
எப்படி எந்த வடிவில்
புத்தகமாக கொண்டு
வருவது என்பதைப் பற்றியும்
எத்தகைய புத்தகங்களாக
பதிப்பு செய்வது
என்பதைப் பற்றியும்
எத்தகைய வடிவத்தில்
கொண்டு வருவது
என்பதைப் பற்றியும்
கட்டுரைகளை எந்த
தலைப்பின் கீழ்
தனித்தனியாக பிரித்து
வெளியிடுவது என்பதைப்
பற்றியும் கடினமாக அலுவல்
பணிகளுக்கிடையேயும்
கஷ்டமான குடும்ப
சூழ்நிலைகளுக்கிடையேயும்
என்னுடைய கட்டுரைகளை
புத்தகமாக கொண்டு வர
முயற்சி செய்து
அனைவரும் உழைத்துக்
கொண்டிருக்கிறார்கள்”

“இறைவனின் அருளாலும்
சித்தர்களின் ஆசியினாலும்
அன்புள்ளம் கொண்டவர்களின்
வழிகாட்டுதலினாலும்
உயிரனைய உறவுகளின்
உழைப்பாலும் -என்னுடைய
கட்டுரைகள் அனைத்தும்
2020 ஆம் ஆண்டு
ஒவ்வொன்றாக
புத்தகமாக வெளிவரும்
என்பதைத் தெரிவித்துக்
கொள்வதில் நான்
மிகுந்த மகிழ்சசி
அடைகிறேன்!”

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
--------13-11-2019
//////////////////////////////////////////////





November 11, 2019

பரம்பொருள்-பதிவு-82


             பரம்பொருள்-பதிவு-82

“மாவீரனாகிய
அர்ஜுனன்
போகும் போது
உயர் எண்ணம்
கொண்ட
மகாத்மாக்களும் ;
வேதங்களில்
கரை கண்ட
உத்தமர்களும் ;
வேதங்களையும்,
வேதாங்கங்களையும்
அறிந்த அறிவில்
சிறந்தோர்களும் ;
ஆத்ம ஞானம்
உள்ளவர்களும் ;
பிசைஷ
எடுப்பவர்களாகிய
பிரம்மச்சாரிகளும் ;
கடவுள் மேல்
உண்மையான பக்தி
செலுத்துபவர்களும் ;
புராணங்கள்
சொல்லும்
ஸூதர்களும் ;
பிரபஞ்ச
ரகசியங்களை
எளிமையான
கதைகளின்
மூலமாக
சொல்லுகிறவர்களும் ;
காட்டில்
வசிக்கின்ற
சந்நியாசிகளும் ;
சிறந்த
இதிகாசங்களை
அனைவரும்
உணரும் வண்ணம்
இனிமையாகப்
படித்து
காட்டுகிறவர்களும் ;
பிறர் மனம்
மகிழும்படி இனிய
கதைகளைச்
சொல்லுகிறவர்களும் ;
பல்வேறு
வகையான
தனித்திறமை
கொண்டவர்களும் ;
என அநேகம் பேர்
சூழப்பட்டவனாக
அர்ஜுனன்
தேவர்களால்
சூழப்பட்ட
இந்திரனைப் போல
நடந்து சென்றான்”.

“அழகியவைகளையும்;  
புதியவைகளையும் ;
வனங்களையும் ;
தடாகங்களையும் ;
நதிகளையும் ;
கடலையும் ;
தேசங்களையும் ;
புண்ணிய
தீர்த்தங்களையும் ;
கண்டான்
அர்ஜுனன் ;
கங்கை
உற்பத்தியாகும்
இடமான
கங்கோத்பத்தியை
அடைந்து
அங்கே தங்கினான்;”

“அர்ஜுனனும்
பிராமணர்களும்
அங்கே தங்கியிருந்த
போது - அந்தப்
பிராம்மணர்களில்
பலர்
அக்கினிஹோத்திரங்களைச்
செய்ய
ஆரம்பித்தனர் ;”

“வித்வான்களாலும் ;
நியமம்
தவறாதவர்களாலும்;
சன்மார்க்கத்தில்
இருக்கக்கூடிய
மகாத்மாக்களாலும் ;
கங்கைக்
கரையில்
அக்கினிகளை
உண்டாக்கியபோது
எழுந்த
பிரகாசமும் ;
ஹோமமும் ,
புஷ்பார்ச்சனையும் ,
செய்யப்பட்டபோது
உண்டான
தெய்வீகமும்;
அந்த கங்கை
உற்பத்தியாகும்
இடத்தை அழகாக
மாற்றியது ;”   
       
“அர்ஜுனன்
குளிப்பதற்காக
கங்கையில்
இறங்கினான்,
அங்கே குளித்து
பிதிர்தர்ப்
பணமுஞ்செய்து
அக்கினி
ஹோத்திரம்
செய்வதற்காக
நீரிலிருந்து
கரையேற
நினைக்கும்போது
ஒரு பெண்
அர்ஜுனனைத்
தன் மாய
சக்தியால்
நதியின்
அடித்தளத்திற்கு
இழுத்துச்
சென்றாள்”

“அந்தப்
பெண் தான்”

“அந்தப்
பெண்ணின்
பெயர் தான்……………..?”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------11-11-2019
//////////////////////////////////////////