March 11, 2020

பரம்பொருள்-பதிவு-153


              ஜபம்-பதிவு-401
            (பரம்பொருள்-153)

கிருஷ்ணன் :
"தாங்கள் வாழ வேண்டும்
என்பதற்காக என்னிடம்
வரங்களைப் பெற்று ;
வாழும் காலத்தில்
வாழ்க்கையை
வாழாமல்
வாழ்க்கையைத்
தொலைத்து விட்டு ;
புகழை இழந்து விட்டு ;
மக்கள் மனதில்
இடம் பெறாமல்
காலத்தால் காணாமல்
போனவர்கள் தான் ;
இந்த உலகத்தில் அதிக
எண்ணிக்கையில் உண்டு"

"ஆனால் நீ கேட்ட
வரங்களை - நான் உனக்கு
அளிப்பதன் மூலம்
உன்னுடைய வாழ்க்கை
முடிந்த பிறகும் - இந்த
உலகம் இருக்கும் வரை
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவருடைய
மனதிலும் இடம் பெற்று
காலத்தால் காணாமல்
போகாமல் இறவாப்
புகழுடன் இருக்கக்கூடிய
பாக்கியம் இந்த உலகத்தில்
உனக்கு மட்டுமே
கிடைக்கப் போகிறது "

"பேரறிவே பரிணமித்து
படைப்புகளாகி
இருக்கும் நிலையில்
அந்த படைப்புகளில்
உள்ள பேரறிவை
சாட்சியாக வைத்து
கிருஷ்ணனாகிய நான்
அரவானாகிய உனக்கு
நீ கேட்ட இரண்டு
வரங்களை அளிக்கிறேன் "

“அரவான் நீ
களப்பலி ஆனாலும்
உன்னுடைய வெட்டுப்பட்ட
தலையில் உள்ள
கண்களின் வழியாக
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்ப்பாய் என்ற
முதல் வரத்தை
உனக்கு அளிக்கிறேன் “

“நீ ஒரு பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு அந்த
பெண்ணுடன் ஒரு
இரவு தாம்பத்ய சுகம்
அனுபவிப்பாய் என்ற
இரண்டாவது வரத்தையும்
அளிக்கிறேன் “

"தான் இறக்காமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக பல்வேறு
வார்த்தைகளைப்
பயன்படுத்தி என்னிடம்
வரங்களைக்
கேட்டுப் பெற்றும்
இறந்தவர்கள் தான்
இந்த உலகத்தில் அதிகம்
பேர் இருக்கிறார்கள் "

"ஆனால் இறக்கப்
போகிறோம் என்று
தெரிந்தும் நீ கேட்ட
வரத்தின் மூலம்
நீ இறந்தாலும்
உன்னுடைய புகழ்
இந்த உலகத்தில்
இறக்காமல் வாழ்ந்து
கொண்டிருக்கத் தான்
போகிறது "

"இந்த உலகத்தில்
வாழ்ந்த யாருக்குமே
கிடைக்காத மிகப்
பெரிய புகழ் - நீ
இறந்த பிறகு உனக்கு
கிடைக்கப் போகிறது "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உன்னுடைய புகழ்
அழியாமல் நிலைத்து
நிற்கப்போகிறது "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உன்னை கடவுளாக
வணங்கக் கூடியவர்கள்
இருந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உனக்காக கண்ணீர்
சிந்தி கதறி
அழக்கூடியவர்கள்
இருந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் "

"யாருமே செய்ய
முடியாத மிகப்
பெரிய தியாகத்தைச்
செய்யப்போகும் உனக்கு
இந்த உலகமே
நன்றிக்கடன் பட்டிருக்கிறது
அரவான் நன்றிக்கடன்
பட்டிருக்கிறது "

அரவான்  :
“பரந்தாமா ! நீங்கள் எனக்கு
அளித்த வரங்களும் ;
உங்களுடைய
வார்த்தைகளும் ;
என்னுடைய மனதை
மகழ்வித்தது “

கிருஷ்ணன்  :
“உன்னுடைய மனம்
மகிழ்ந்ததற்கான காரணத்தை
உன்னுடைய தாய்
உலூபியை சந்தித்து
சொல்லி விட்டு ,
களப்பலியாவதற்கு
ஆசிகளைப் பெற்று விட்டு ,
இரவில் வந்து - இந்த
மாளிகையில் தங்கி இரு “

“இன்று இரவு அழகிய
பெண் ஒருத்தி
உன்னைத் தேடி - இந்த
மாளிகைக்கு வருவாள்  ;
அந்த பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு தாம்பத்ய
சுகம் அனுபவிப்பாய் ; “

“இன்று இரவு
இந்த மாளிகையில்
தங்கி இருந்து
உன்னைத் தேடி
வரப்போகும்
அந்த பெண்ணுக்காக
காத்துக் கொண்டிரு
அரவான் “

“காத்துக் கொண்டிரு “

(அரவான்
கிருஷ்ணனுடைய
பாதங்களில் விழுந்தபோது
கிருஷ்ணன் அரவான்
தலையில் கை
வைத்து விட்டு
எதுவும் பேசாமல்
சிறிது நேரம்
அமைதியாக இருந்தார் ;
எதுவும் பேசாமல்
அமைதியாக இருந்த
கிருஷ்ணன் அந்த
அறையை விட்டு
வெளியேறினார்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 11-03-2020
//////////////////////////////////////////

March 08, 2020

பரம்பொருள்- பதிவு-152


             பரம்பொருள்- பதிவு-152

அரவான்  :
“களப்பலி ஆனாலும்
வெட்டுப்பட்ட என்
தலைக்கு உயிர்
இருக்க வேண்டும் ;
வெட்டுப்பட்ட என்னுடைய
தலையில் உள்ள
கண்களின் மூலம்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்க்கும் சக்தியை
எனக்குத் தர வேண்டும் ;”

இது என்னுடைய
முதலாவது வரம்”

கிருஷ்ணன்  :
“முதல் வரத்தில்
எந்த பிரச்சினையும்
இல்லை ;
அடுத்து ? “

அரவான்  ;
“நான் ஒரு பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு அவளுடன்
ஓர் இரவு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும் “

கிருஷ்ணன்  :
“அரவான் நீ கேட்ட
முதல் வரத்தை
நிறைவேற்றி விடலாம் ; ”

“ஆனால்
இரண்டாவது வரத்தை
நிறைவேற்றுவது என்பது
கடினமான ஒன்று  ;
நிறைவேற்றுவதற்கு
தேவையான
சாத்தியக் கூறுகள்
எதுவும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை ; “

“நாளை காலை - நீ
களப்பலியாகப் போகிறாய்
என்பது தெரிந்தால்
எந்த பெண் - உன்னை
இன்று இரவு
திருமணம் செய்து
கொள்ள சம்மதிப்பாள் ;

“சம்மதிக்கக்கூடிய பெண்
இந்த உலகத்தில்
எங்கே கிடைப்பாள் ;
எங்கே தேடினாலும்
கிடைக்க மாட்டாளே ; “

“அப்படி இருக்கும் போது
நீ கேட்ட இரண்டாவது
வரத்தை என்னால்
எப்படி நிறைவேற்ற
முடியும் என்று
எனக்குத் தெரியவில்லை “

“இருந்தாலும் எனக்கு
ஒரு சந்தேகம்
ஏற்பட்டுள்ளது அதை
நீ தான் தீர்க்க வேண்டும் “

அரவான்  ;
“நான் தீர்க்கும் அளவுக்கு
தங்களுக்கு அப்படி
என்ன சந்தேகம்
தங்களுக்கு
ஏற்பட்டுள்ளது பரந்தாமா ? “

கிருஷ்ணன்  :
“பெண் சுகம் அனுபவிக்க
வேண்டும் என்ற
எண்ணத்துடன் தானே
நீ இரண்டாவது
வரத்தைக் கேட்கிறாய் “

அரவான் :
“இல்லை நான்
அதற்காக கேட்கவில்லை “

“நான் கேட்ட வரத்தின்
அர்த்தத்தை தாங்கள்
தவறாக எடுத்துக்
கொண்டு இருக்கிறீர்கள் ‘

“கடவுளான தாங்களே
தவறான அர்த்தத்தை
எடுத்துக் கொண்டீர்கள்
என்றால் - இந்த
உலகத்தில் வாழும்  
மக்களுக்கு நான்
கேட்ட வரத்தின்
அர்த்தம் எப்படி புரியும் “

“நான் இரண்டாவது
வரத்தைக் கேட்டதற்கு
இரண்டு காரணங்கள்
இருக்கிறது “

“ஒன்று
நான் இறந்த பிறகு
கணவன் என்று சொல்லி
என் பிணத்தை
கட்டிபிடித்து கதறி
அழுவதற்கு  மனைவியாக
இந்த உலகத்தில்
எனக்கு ஒரு உறவு
இருக்க வேண்டும் - என்ற
காரணத்திற்காகவும் ;
நான் இறந்த பிறகு
என்னுடைய இறுதிச்
சடங்கை உரிமை
கொண்டாடி செய்து
முடிப்பதற்கு மனைவி
என்ற முறையில்
ஒரு பெண் இருக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் ;
தான் - நான் ஒரு
பெண்ணை திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டேன் “

“இரண்டு
ஒரு மனிதனுடைய
வாழ்வில் எதிர்ப்படும்
நான்கு பருவங்களான
பிரம்மச்சரியம் ;
கிரகஸ்தம் ;
வானப்பிரஸ்தம் ;
சந்நியாசம் ;
ஆகியவற்றில்
பிரம்மச்சரியம் ;
வானப்பிரஸ்தம் ;
சந்நியாசம் ஆகிய
மூன்றையும்
பார்த்து விட்டேன் “

“இல்லறம் என்று
சொல்லப்படக்கூடிய
கிரகஸ்தம் என்பதையும்
பார்த்து விட்டால்
நான் முழுமையான
மனிதனாகி விடுவேன்  
என்ற காரணத்திறக்காகவும்
தான் – நான் ஒரு
பெண்ணை திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டேன் “

“நான் இரண்டாவது
வரத்தைக் கேட்டதற்கு
இவைகள் இரண்டும்
தான் காரணம் ;
வேறு எந்தவொரு
காரணமும் இல்லை “

-----------இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 08-03-2020
------------மகளிர் தின
      வாழ்த்துக்கள்
//////////////////////////////////////////

March 07, 2020

பரம்பொருள்-பதிவு-151


           பரம்பொருள்-பதிவு-151

அரவான் :
“ஆமாம் ! நான்
பாண்டவர்கள்
சார்பாகத் தான்
களப்பலியாகப்
போகிறேன் “

“பாண்டவர்கள்
சார்பாக
களப்பலியாவதற்கு
ஒப்புதல்
கொடுக்கிறாயா என்று
நீங்கள்
என்னிடம் கேட்டு
என்னுடைய
ஒப்புதலைப்
பெற்ற போது
நான் கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“உன்னுடைய
ஒப்புதல்
மட்டும் போதாது
உன்னுடைய தாய்
தந்தை மற்றும்
உன்னுடன் இரத்த
சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் கேட்கப்
போகிறேன் என்று
நீங்கள்
சொன்ன போது
இன்னும்
கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று
விட்டேன் என்று
நீங்கள்
சொன்ன போது
இன்னும்
கொஞ்சம்
தெரிந்து கொண்டேன் “

“ஆனால் நீங்கள்
நாளை
அமாவாசை என்று
சொன்னபோது
தான் நான்
முழுவதுமாக
தெரிந்து கொண்டேன் “

“நான்
பாண்டவர்களுக்காகத்
தான் களப்பலியாகப்
போகிறேன் என்று “

“ஏனென்றால் நாளை
அமாவாசை
கிடையாது ;
நாளை மறுநாள்
தான் அமாவாசை ;
நாளை நடைபெற
இருக்கும்
சதுர்த்தசி திதியை
அமாவாசை
என்று நீங்கள்
சொன்ன போதும் ;
நாளை
களப்பலியாவதற்கு
தயாராக இரு
என்று நீங்கள்
சொன்ன போதும் ;
நான் ஒன்றைத்
தெளிவாகத்
தெரிந்து கொண்டேன் “

“இந்த உலகம்
நிம்மதியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக  ;
எந்தவிதமான
பிரச்சினையும்
இல்லாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக ;
பாண்டவர்கள்
சார்பாக
என்னை
களப்பலியாக
கொடுக்க வேண்டும்
என்பதற்காக ;
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றுவதற்குத்
தேவையான
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்
என்பதைத்
தெரிந்து கொண்டேன் “

“அதனால் தான்
நான் சொன்னேன்
பாண்டவர்கள்
சார்பாக நான்
களப்பலியாகப்
போகிறேன் என்று “

கிருஷ்ணன் :
“அற்புதம் அரவான்
அற்புதம் “

“காலத்தை
கணிக்கக் கூடிய
உன்னுடைய
அற்புதமான
சக்தியையும் ;
தொலை நோக்குப்
பார்வையுடன்
சிந்திக்கும்
உன்னுடைய
சிந்திக்கும்
திறனையும் ;
கண்டு நான்
வியக்கிறேன் “

“இந்த உலகம்
கண்டிராத
அற்புதப் பிறவி நீ ! “

“யாராலும் கணிக்க
முடியாத அற்புத
ஞானி நீ ! “

“யாருடனும் ஒப்பிட
முடியாத
அற்புதமானவன் நீ ! “

“நீ செய்யப் போகும்
தியாக செயலுக்கு
நீ கேட்ட படி
நான் உனக்கு
இரண்டு வரங்களை
அளிக்கிறேன் “

“கேள் அரவான் கேள் “

“உன்னுடைய
இரண்டு
வரங்களைக் கேள் “

“உனக்கு
என்ன வரம்
வேண்டும் கேள் “

“கேள் அரவான் கேள்”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-03-2020
//////////////////////////////////////////