March 18, 2020

பரம்பொருள்-பதிவு-157


              ஜபம்-பதிவு-405
            (பரம்பொருள்-157)

அரவான் :
“அம்மா உங்களை
நான் புரிந்து கொண்டவன்
என்பதால் கேட்டேன்”

“நீங்கள் அனைத்து
உண்மைகளையும்
புரிந்து கொள்பவர்
என்பதால் கேட்டேன் “

“நான் சொல்லும்
உண்மைகள் அனைத்தையும்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
என்பதால் கேட்டேன்”

“என்னைப் போலவே
நீங்களும் உண்மையை
உணர்ந்திருப்பீர்கள்  ;
களப்பலிக்கு என்னை
ஆசிர்வதித்து
வழியனுப்பி வைப்பீர்கள்
என்பதால் கேட்டேன் ; ”

“நான் நல்லது
செய்வதற்காக என்னை
ஆசிர்வதிக்க வேண்டும்
என்பதால் கேட்டேன்”

“இந்த உலகத்தையே
தனக்குள் வைத்து கட்டி
காப்பாற்றிக் கொண்டிருக்கும்
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என்னைத் தேடி
வந்து நின்று - என்
முன்னால் தலை
குனிந்து நின்று
தன்னுடைய இரண்டு
கைகளையும் ஏந்தி நின்று
பாண்டவர்கள் சார்பாக
என்னுடைய உயிரை
களப்பலியாகத் தர
வேண்டும் என்று
யாசகம் கேட்டு
நின்றார் என்றால்
அவர் செய்த செயலின்
பின்னால் உள்ள
உண்மைகளைப் புரிந்து
கொள்ளுங்கள் அம்மா “

“வருங்கால உலகத்தில்
வாழக்கூடிய மக்கள்
அனைவரும் நிம்மதியாக
வாழ வேண்டும்
என்பதற்காகத் தான் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“வருங்கால உலகத்தில்
வாழக்கூடிய ஒவ்வொரு
பெண்ணும் மானத்தோடு
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
பெண்கள் அனைவரும்
அச்சம் நீங்கி நிம்மதியாக
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
தன்னுடைய கற்புக்கு
எந்தவிதமான களங்கமும்
ஏற்படாமல் வாழ வேண்டும்
என்பதற்காகவும் தான்
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக வேண்டும்
என்று என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“இந்த உலகத்தில்
அதர்மம் அழிய வேண்டும்
என்பதற்காகவும் ;
தர்மம் நிலைபெற்று
இருக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார்  

“வருங்கால உலகத்தில்
கெட்டவர்கள் அனைவரும்
அழிந்து நல்லவர்கள்
வாழக்கூடிய இடமாக - இந்த
உலகம் இருக்க வேண்டும்
என்பதற்காகவும்  ;
வருங்கால உலகம்
தீமைகள் அழிந்து
நல்லவைகள் பிறக்கும்
இடமாக இருக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என் முன்னால் கையேந்தி
நின்றார் என்றால் என்
பிறவியின் நோக்கமான
களப்பலி எவ்வளவு
முக்கியமானது என்பதை
நீங்கள் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா “

“பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என் முன்னால்
கையேந்தி நின்றார்
என்றால் என்னுடைய
களப்பலி இந்த உலகத்திற்கு
எவ்வளவு தேவையானது
என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா”

“இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
தங்களுடைய நன்மைக்காக
பரந்தாமன் கிருஷ்ணனிடம்
கையேந்தி யாசித்து
நிற்கும் போது இந்த
உலகத்தில் உள்ள மக்கள்
அனைவருடைய
நன்மைக்காக அந்த
பரந்தாமனே என்னிடம்
வந்து கையேந்தி
யாசித்து நின்றார் என்றால்
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாவது
எவ்வளவு அவசியம்
என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா ”

“பரந்தாமன் கிருஷ்ணன்
மேற்கொண்டிருக்கும்
செயலுக்கும் என்னுடைய
பிறவியின் நோக்கத்திற்கும்
எந்தவிதத் தடையையும்
ஏற்படுத்தாமல்
ஆசிர்வதித்து வழியனுப்பி
வையுங்கள் அம்மா”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 18-03-2020
//////////////////////////////////////////

March 16, 2020

பரம்பொருள்-பதிவு-156


                ஜபம்-பதிவு-404
               (பரம்பொருள்-156)

உலூபி :
“என்ன வார்த்தை
சொல்லி விட்டாய்
என் மகனே ! “

“இந்த வார்த்தையை
உன்னால் எப்படி
சொல்ல முடிந்தது ? “

“என்னைப் பற்றித்
தெரிந்திருந்தும்
எப்படி இப்படி ஒரு
வார்தையை சொன்னாய் ? “

“நீ !  சொன்ன
வார்த்தைகளைக்
கேட்டு விட்டு - என்
இதயம் இன்னும்
வெடிக்காமல் இருக்கிறதே ? “

“நான் இன்னும்
இறக்காமல் 
இருக்கிறேனே ! “

“ஐயோ! நான்
என்ன செய்வேன் ?”

“என்னைச் சுற்றி
உள்ளவர்கள் அனைவரும்
என்ன வார்த்தைகளை
பேசக்கூடாதோ ? - அந்த  
வார்த்தைகளை எல்லாம்
பேசியதைக் கேட்டும்
என்னுடைய மனம்
கலக்கமடையவில்லை “

“ஆனால் நீ சொன்ன
இந்த ஒரு வார்த்தை
என்னுடைய மனதை
கலக்கமடையச்
செய்து விட்டது “

“உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்கச் சொல்கிறாய்
உலகத்தில் உள்ள
எந்தத் தாயாவது
தன்னுடைய மகனின்
வாழ்க்கையை
முடித்து வைப்பாளா ? “

“மகனின் உயிருக்கு
ஆபத்து என்றால்
தன்னுடைய உயிரைக்
கொடுத்தாவது தன்னுடைய
மகனுடைய வாழ்க்கையை
காப்பாற்றத் தானே எந்தத்
தாயும் முயற்சி செய்வாள்  

“இந்த உலகத்தில் உள்ள
எந்த ஒரு தாயையும்
எடுத்து கொண்டால்
தன்னுடைய மகனுடைய
உயிருக்கு ஆபத்து என்றால்
தன்னுடைய உயிரைக்
கொடுத்தாவது தன்னுடைய
மகனின் உயிரை காப்பாற்றத்
தானே முயற்சி செய்வாள்
அதையே தானே
நானும் செய்தேன் “

“அப்படி இருக்கும் போது
எப்படி தாயான என்னை
உன்னுடைய வாழ்க்கையை  
முடித்து வைக்கச் சொல்கிறாய் “

“பத்து மாதம் உன்னை
கஷ்டப்பட்டு பெற்றெடுத்து
மார்பிலும் தோளிலும்
போட்டு வளர்த்தது
எதற்காக ?
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலிக்கு அனுப்பி
வைப்பதற்காகவா ? “

“நீ பேசிய பேச்சிலும்  ;
சிந்திய சிரிப்பிலும் ;
செய்த சேட்டையிலும் ;
என்னுடைய கணவர்
என்னுடன் இல்லாததை
மறந்து இருந்தேனடா
எதற்காக ?
இதற்கு காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“இந்த உலகத்தில்
எனக்கு ஆதரவாக
யாருமே இல்லாத
போதும் நீ ஒருவன்
எனக்காக இருக்கிறாய்
என்று கவலையை
மறந்து உனக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்கு காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“இந்த உலகமே நீ
தான் என்று - நீ
விடும் சுவாசக்
காற்றில் வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்குக் காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு - இந்த
உலகத்தில் உள்ளவர்கள்
பல்வேறு நியாயங்களைக்
கற்பிக்கிறார்கள் ;
நீதி என்கிறார்கள் ;
நியாயம் என்கிறார்கள் ;
தர்மம் என்கிறார்கள் ;
ஆனால் யாரும் என்னுடைய
மனதை புரிந்து கொள்ளாமல்
என்னுடைய மனதை
புண்படுத்தும்படித் தான்
பேசிக் கொண்டிருக்கிறார்கள் “

“அவர்களைப் போலவே
நீயும் என்னைப் புரிந்து
கொள்ளாமல் உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்கச் சொல்கிறாய்  ;
களப்பலிக்கு ஆசிர்வாதம்
கேட்கிறாய் ; “

“நீ பேசும் பேச்சு
ஒரு தாயினுடைய மனதை
எந்த அளவிற்கு
பாதிப்பை ஏற்படுத்தும்
என்பது உனக்குத்
தெரியாதா மகனே ! “

“தெரிந்திருந்தால் நீ
இப்படி பேசி
இருக்க மாட்டாய் ? “

“இந்தத் தாயைப்
புரிந்து கொள் மகனே ! “

“இந்தத் தாயின் மனதைப்
புரிந்து கொள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 14-03-2020
//////////////////////////////////////////

March 13, 2020

பரம்பொருள்-பதிவு-155


              ஜபம்-பதிவு-403
            (பரம்பொருள்-155)

உலூபி  :
“உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களிடம் என்னுடைய
அம்மா சம்மதித்தால்
மட்டுமே - நான்
களப்பலியாவேன்
என்று நீ சொல்லி
இருக்க வேண்டும் “

“அவ்வாறு சொல்லி
விட்டு என்னுடைய
கருத்தைக் கேட்டிருந்தால்
அரவானைக்
களப்பலியாகக் கொடுப்பதற்கு
எனக்கு சம்மதமில்லை
என்று அன்றே
என்னுடைய கருத்தைச்
சொல்லி இருப்பேன் “

“உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களால் ஆரம்பித்து
வைக்கப்பட்ட களப்பலியை
முளையிலேயே கிள்ளி
எறிந்து இருப்பேன் “

“களப்பலியாக உன்னை
கொடுப்பதிலிருந்து
தடுத்திருப்பேன் “

“களப்பலியையே
தடுத்திருப்பேன்”

அரவான்  :
“நான் களப்பலியாவதை
யாராலும் தடுக்க
முடியாது அம்மா ? “

“இந்த உலகத்தில்
மனிதர்கள் அனைவரும்
பிறக்கிறார்கள் ;
வாழ்கிறார்கள் ;
இறக்கிறார்கள் ;
மனிதனாக பிறந்த
ஒவ்வொருவரும் தாங்கள்
இந்த உலகத்தில்
ஏன் பிறந்தோம்  ?
எதற்காக வாழ்கிறோம் ?
என்ன காரணத்திற்காக
இந்த உலகத்திற்கு
வந்தோம்? - என்று
தெரியாமல் தன்னுடைய
பிறவியின் நோக்கத்தை
அறிய முடியாமல்
இறந்து விடுகின்றனர் “

“தாங்கள் எதற்காக
இந்த உலகத்தில்
பிறந்து வந்தோம்
என்பதற்கான காரணத்தை
அறிந்து கொள்ளாமல்
இறந்தவர்கள் தான்
இந்த உலகத்தில் அதிகம் “

“ஆனால் நான் பிறந்ததே
களப்பலியாகத் தான்
என்பதை நான்
அறிந்து வைத்திருக்கிறேன் “

“என்னுடைய பிறவியின்
நோக்கமே களப்பலியாவது
தான் என்பதை நான்
உணர்ந்து வைத்திருக்கிறேன் ‘

“களப்பலியாவதற்குத்
தான் நான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
என்பதையும்
களப்பலியாகத் தான்
போகிறேன் என்பதையும்
நான் தெரிந்து
வைத்திருக்கிறேன் “

“நான் எதற்காக பிறந்தேன்
என்னுடைய பிறவியின்
நோக்கம் என்ன
என்பதைத் தெரிந்து கொண்ட
காரணத்தினால் தான்
பரந்தாமன் கிருஷ்ணன்
தர்மம் இந்த உலகத்தில்
நிலைபெற்று இருக்க
வேண்டும் என்பதற்காக
பாண்டவர்கள் சார்பாக
என்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு என்னிடம்
ஒப்புதல் பெற்று
நாளைய தினத்தை
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளாக
தேர்ந்தெடுத்து
வைத்திருக்கிறார் ‘

“பாண்டவர்கள் சார்பாக
நாளைய தினத்தில் நான்
களப்பலியாவதால்
களப்பலியாவதற்கு முன்
தங்களிடம் ஆசிகள்
பெற்று விட்டு செல்லலாம்
என்று வந்தேன் அம்மா ‘

உலூபி  :
“நான் எப்படியடா
உன்னை
ஆசிர்வதிக்க முடியும் ?”

அரவான்  :
“நீங்கள் தான் அம்மா
என்னை ஆசிர்வதிக்க
வேண்டும் “

“என்னை ஆசிர்வதிக்கும்
முழு உரிமையும்
உங்களுக்கு மட்டும்
தான் இருக்கிறது ;”

“என்னுடைய பிறப்பிற்கு
காரணமாக இருந்தவர்
நீங்கள் தான் ! “

“நான் இந்த
உலகத்தை பார்ப்பதற்கு
காரணமாக இருந்தவர்
நீங்கள் தான் ! “

“என்னுடைய வாழ்க்கைக்கு
ஆதாரமாக இருந்து
கொண்டிருப்பவர்
நீங்கள் தான் ! “

“என்னுடைய ஆரம்பத்திற்கு
காரணமாக இருந்த
நீங்கள் தான் என்னுடைய
முடிவுக்கும் காரணமாக
இருக்க வேண்டும் “

“என்னுடைய பிறப்பிற்கு
காரணமாக இருந்த
நீங்கள் தான் என்னுடைய
இறப்பிற்கும் காரணமாக
இருக்க வேண்டும் “

“என்னை பிறக்க வைத்து
என்னுடைய வாழ்க்கையை
ஆரம்பித்து வைத்த
நீங்கள் தான் களப்பலியாகப்
போகும் என்னை
ஆசிர்வதித்து வழியனுப்பி
வைத்து என்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்க வேண்டும் “

“என்னை ஆசிர்வதித்து
என்னை களப்பலிக்கு
என்னை அனுப்பி
வையுங்கள் அம்மா “

“ஆமாம், என்னுடைய
வாழ்க்கையை ஆரம்பித்து
வைத்த நீங்களே
என்னுடைய வாழ்க்கையை
முடித்து வையுங்கள் அம்மா!“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-03-2020
//////////////////////////////////////////