April 20, 2020

பரம்பொருள்-பதிவு-204


             ஜபம்-பதிவு-452
           (பரம்பொருள்-204)

தர்மர் :
“அரவான்
பாலகன்
அவன் அவ்வாறு
கேட்டிருந்தாலும்
அனைத்தையும்
உணர்ந்த தாங்கள்
அரவானுடைய
தலைக்கு மட்டும்
உயிரைக்
கொடுக்காமல்
உடலுக்கும் சேர்த்து
உயிர் கொடுத்து
இருக்கலாமே ? “

கிருஷ்ணன் :
“தர்மா !
உன்னுடைய பேச்சு
நீ இன்னும்
அரவானை
சரியாகப் புரிந்து
கொள்ளவில்லை
என்பதைத்தான்
காட்டுகிறது “

“நீங்கள் இன்னும்
அரவானைப் புரிந்து
கொள்ளவில்லை
என்பதை
நினைக்கும்
போது எனக்கு
வேதனையாகத்
தான்
இருக்கிறது “

“மரணத்தைப்
பார்த்து
பயப்படாதவன்
அரவான் “

“மரணத்தைப்
பார்த்து
பயப்படுபவனாக
அரவான்
இருந்திருந்தால்
களப்பலிக்கு
சம்மதித்தே
இருக்க மாட்டான் “

“அரவான்
களப்பலியானதிலிருந்து
மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன்
அரவான் என்பதை
நீங்கள் தெரிந்து
கொண்டிருக்க
வேண்டாமா “

“வாழ்க்கையைப்
பார்த்து
பயப்படுபவன் தான்
மரணத்தைப் பார்த்து
பயப்படுவான் “

“மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன்
வாழ்க்கையைப்
பார்த்து பயப்படவும்
மாட்டான்  

“வாழ்க்கையை
பெரியதாக நினைத்து
தனக்காக வாழ
வேண்டும் என்று
நினைக்கவும்
மாட்டான் “

“அரவான்
மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன்
அதனால் தான்
களப்பலியானான் “

“மரணத்தைப் பார்த்து
பயப்படாமல்
களப்பலியானவன்
களப்பலியான பிறகு
தான் வாழ வேண்டும்
என்ற வரத்தை
எப்படி கேட்பான் “

“இந்த உலகத்தில்
உள்ளவர்கள்
வாழ்க்கையை வாழ
வேண்டும் என்று
ஆசைப்பட்டு
மரணத்தைப் பார்த்து
பயப்படுகிறார்களே
அவர்களைப் போல்
நினைத்தாயா
அரவானை “

“அரவான்
மரணத்தைப் பார்த்து
பயப்படாதவன் “

“வாழ
வேண்டும் என்று
ஆசைப்படுபவர்கள்
தான் உயிர் பயத்தில்
இருப்பார்கள்
அவர்களால்
ஒரு செயலையும்
சரியாகச் செய்ய
முடியாது “

“அவர்களுக்கு
கிடைத்த
வாழ்க்கையைக்
கூட அவர்களால்
நிம்மதியாக வாழ
முடியாது “

“மரண பயத்தை
மனதில் வைத்துக்
கொண்டுத் தான்
வாழ்ந்து
கொண்டிருப்பார்கள் “

“தான் இறந்து
விட்டால்
தன்னுடைய
குடும்பம்
நிர்க்கதியாகிவிடும்  ;
தன்னுடைய
குடும்பத்தை
காப்பாற்ற
யாரும் இல்லை
என்று பல்வேறு
காரணங்களை
அவர்கள்
சொன்னாலும்
தாங்கள் வாழ
வேண்டும் என்ற
ஆசையே
அவர்களுடைய
மரண பயத்திற்கு
காரணம் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-203


             ஜபம்-பதிவு-451
           (பரம்பொருள்-203)

கிருஷ்ணன் :
“இந்த இடத்தில்
இருந்து கொண்டு
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
அரவான்
பார்ப்பதற்கு
வசதியாக
அரவானுடைய
தலையை
இந்த இடத்தில்
கம்பத்தில்
பொருத்தி
வைக்க
வேண்டும் “

“அரவானுடைய
தலையை
இந்த இடத்தில்
கம்பத்தில்
பொருத்தி
வைப்பதற்கு
வசதியாக
கம்பத்தை
எடுத்து வந்து
இந்த இடத்தில்
நட்டு
வையுங்கள் “

(பஞ்ச
பாண்டவர்கள்
அனைவரும்
கம்பத்தை
எடுத்து வந்து
நட்டு வைக்க
கிருஷ்ணன்
அரவானுடைய
தலையை அந்த
கம்பத்தில்
பொருத்தி
வைத்தார்

அரவானின்
தலை
குருஷேத்திரப்
போரை
பார்க்கும்
வகையில்
அந்தக் கம்பத்தில்
பொருத்தி
வைத்தார்)

தர்மர் :
“இப்போது
சொல்லுங்கள்
நீங்கள் என்ன
செய்து
கொண்டிருக்கிறீர்கள் “

கிருஷ்ணன் :
“அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு
என்னிடம்
இரண்டு
வரங்களைக்
கேட்டான் “

“நான் ஒரு
பெண்ணை
திருமணம்
செய்து கொண்டு
அவளுடன்
ஓர் இரவு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க
வேண்டும் என்று
அரவான் கேட்ட 
இரண்டாவது
வரத்தை
அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு
நிறைவேற்றி
விட்டேன் “

“நான் களப்பலி
ஆனாலும்
வெட்டுப்பட்ட
என் தலைக்கு
உயிர் இருக்க
வேண்டும்;
வெட்டுப்பட்ட
என்னுடைய
தலையில் உள்ள
கண்களின் மூலம்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்க்கும்
சக்தியை
எனக்குத்
தர வேண்டும்
என்று அரவான்
முதல் வரத்தைக்
கேட்டான் 

“அரவானுடைய
முதல் வரத்தை
நிறைவேற்ற
வேண்டும்
என்பதற்காகத்
தான் நான்
இங்கே
வந்திருக்கிறேன் “

“இந்த இடத்தில்
இருந்து கொண்டு
குருஷேத்திரப்
போர்
முழுவதையும்
அரவான்
பார்ப்பதற்கு
வசதியாக
இந்த இடத்தில்
கம்பத்தை நட்டு ;
அந்த கம்பத்தில்
அரவானுடைய
தலையை
பொருத்தி வைத்து ;
அரவானுடைய
தலைக்கு
உயிர் கொடுத்து ;
அரவானுடைய
கண்களின்
மூலமாக
குருஷேத்திரப்
போர்
முழுவதையும்
பார்க்க
வைப்பதற்காகத்
தான் நான் இங்கு
வந்திருக்கிறேன்”

தர்மர் :
“அரவான் செய்த
தியாகத்திற்கு
நீங்கள்
அரவானுடைய
உடலுக்கும்
தலைக்கும்
சேர்த்தே உயிர்
கொடுக்கலாமே-ஏன்
அரவானுடைய
தலைக்கு மட்டும்
உயிர் கொடுக்க
வேண்டும்
என்கிறீர்கள் “

கிருஷ்ணன் :
“ஏனென்றால்
அரவான்
தன்னுடைய
தலைக்கு
உயிர் கொடுங்கள்
என்று தானே
கேட்டான்  

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////


பரம்பொருள்-பதிவு-202


             ஜபம்-பதிவு-450
           (பரம்பொருள்-202)

“காளி மறைந்து
விட்ட அதே
கணத்தில்
கிருஷ்ணன்
ஆவேசமாக
குரல் எழுப்பி
பேசினார் “

கிருஷ்ணன் :
“பிறருக்காக
தன்னையே
தந்தவனுடைய
உடலைத்
தாங்கிப் பிடிக்க
யாரும் இல்லை
என்பதற்காக
அரவானுடைய
உடல் தானாகவே
தரையில் விழுவது
நல்லதல்ல  

“அதனால்
அனைவரும்
ஓடிச் சென்று
அரவானுடைய
உடலைத் தாங்கிப்
பிடியுங்கள் “

(என்று கிருஷ்ணன்
சொன்னபோது
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
ஓடிச்சென்று
அரவானுடைய
உடலைத்
தாங்கிப் பிடித்துக்
கொண்டனர் )
   
கிருஷ்ணன் :
“தர்மா !
அர்ஜுனா !
நீங்கள் இருவரும்
சென்று
அரவானுடைய
கையில் இருக்கும்
அரவானுடைய
தலையைப் பிரித்து
எடுத்து என்னிடம்
கொண்டு வந்து
ஒப்படையுங்கள் ;
மற்றவர்கள்
அனைவரும்
அரவானுடைய
உடலைப் பிடித்து
பொறுமையாக
நிதானமாக
கொஞ்சம்
கொஞ்சமாக
அரவானுடைய
முதுகு தரையில்
படும்படி படுக்க
வையுங்கள் “

(அர்ஜுனனும்
தர்மரும்
அரவானுடைய
தலையை
கொண்டு வந்து
கிருஷ்ணனின்
கையில்
ஒப்படைத்தனர் ;
கிருஷ்ணன்
அரவானுடைய
தலையைப் பெற்றுக்
கொண்டார் ;
மற்ற பாண்டவர்கள்
அனைவரும்
அரவானுடைய
உடலை
பொறுமையாக
தரையில் படுக்க
வைத்தனர் )

கிருஷ்ணன் :
“நமக்கு ஒரு
முக்கியமான வேலை
காத்திருக்கிறது “

“அந்த வேலையை
செயல்படுத்துவதற்கு
நாம் ஒரு
முக்கியமான
இடத்திற்கு செல்ல
வேண்டியதிருக்கிறது ;
விரைந்து
வாருங்கள்
அந்த இடத்திற்கு
செல்ல வேண்டும்  ;
காலம் போய்க்
கொண்டே இருக்கிறது ; “

தர்மர் :
“என்ன வேலை  ?
எங்கே செல்ல
வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும்
இடத்திற்கு
செல்ல வேண்டும் “

தர்மர் :
“எதற்காக செல்ல
வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“எதற்காக என்பதை
விளக்கமாக
சொல்வதற்கு
இப்போது எனக்கு
நேரமில்லை ; “

“எப்போது சொல்ல
வேண்டுமோ
அதை அப்போது
சொல்கிறேன் “

“எப்போது அதை
நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டுமோ
அப்போது அதை
நீங்கள் அப்போது
தெரிந்து கொள்வீர்கள் “

“இப்போது
குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும்
இடத்திற்கு
செல்வோம் ;
அமைதியாக
அனைவரும் என்
பின்னால் வாருங்கள் ; “
 
(கிருஷ்ணன்
அரவானுடைய
தலையை
எடுத்துக் கொண்டு
முன்னே செல்ல
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
அவர் பின்னால்
நடந்து சென்று
குருஷேத்திரப் போர்
நடக்கப்போகும்
இடத்திற்கு அருகில்
உள்ள ஒரு
இடத்தை அடைந்தனர்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 20-04-2020
//////////////////////////////////////////