March 06, 2022

ஜபம்-பதிவு-707 (சாவேயில்லாத சிகண்டி-41)

 ஜபம்-பதிவு-707

(சாவேயில்லாத

சிகண்டி-41)

 

விசித்திர வீர்யன் :

பின்னர் எதற்காக

வந்திருக்கிறீர்கள்

 

அம்பை :

நியாயம் பெற்றுத்

தாருங்கள் என்பதைக்

கேட்கவே வந்திருக்கிறேன்

 

விசித்திர வீர்யன் :

தவறு செய்தது

யார் என்று

சொல்லுங்கள்

 

உண்மையாகவே

உங்களுக்கு அநீதி

இழைக்கப்பட்டிருந்தால்

கண்டிப்பாக

நியாயம் கிடைக்கும்

 

அம்பை :

எனக்கு அநீதி

இழைத்தது பீஷ்மர்

 

விசித்திர வீர்யன் :

என்னுடைய அண்ணன்

நீதியின் வடிவமாக

இருப்பவர்

அநீதி இழைக்க

மாட்டார்

 

அம்பை :

பீஷ்மர் அநீதி

இழைத்தாரா இல்லையா

என்பதை

பீஷ்மரால் பாதிக்கப்பட்ட

என்னால் தான்

சொல்ல முடியும்

 

விசித்திர வீர்யன் :

எப்படி

பாதிக்கப்பட்டீர்கள்

 

அம்பை :

நான்

சௌபால நாட்டு

மன்னன் சால்வனை

காதலித்தேன்

 

சுயம்வரத்தில் அவரை

மாலையிட்டு

திருமணம் செய்ய

முடிவு செய்தேன்

 

ஒரு பெண்ணை

சிறை எடுப்பதற்கு

முன்னர்

அந்தப் பெண்

யாரையாவது

காதலிக்கிறாளா

என்பதை

அறிந்து கொள்ளாமல்

பீஷ்மர் என்னை

சிறை எடுத்தார்

 

விசித்திர வீர்யன் :

உங்கள் விருப்பம்

தெரிந்த பின்

தான் உங்களை

சால்வனிடம் அனுப்பி

வைத்து விட்டாரே

 

அம்பை :

சால்வன்

சொல்கிறார்

பீஷ்மரை வீழ்த்தி

என்னை பெற்றிருந்தால்

அவருக்கு பெருமையாம்

 

பீஷ்மரால் அனுப்பி

வைக்கப்பட்டதால் நான்

பிச்சைப் பொருளாம்

 

பீஷ்மரால்

கொடுக்கப்பட்ட

பிச்சைப் பொருளை

ஏற்றுக் கொண்டால்

சௌபால நாட்டு

மக்கள் ஏளனம்

செய்வார்களாம்

 

அவருடைய வீரத்தை

இகழுவார்களாம்

 

என்னை

ஏற்றுக் கொண்டால்

அவருக்கு அவமானமாம்

யாரும் மதிக்க

மாட்டார்களாம்

 

அதனால் என்னை

ஏற்றுக் கொள்ள

மாட்டேன் என்று

என்னை

அவமானப்படுத்தி

அனுப்பி

வைத்து விட்டார்

 

வாழ்வதற்கு

வழி இன்றி

அடைக்கலத்திற்காக

பெற்றோர்களைத் தேடி

காசி நாடு சென்றேன்

 

பீஷ்மர் சிறை

எடுத்துச் சென்ற

என்னை

ஏற்றுக் கொண்டால்

காசி நாடு

பீஷ்மரின்

கோபத்திற்கு ஆளாக

நேரிடுமாம்

 

பீஷ்மரின் கோபத்திற்கு

ஆளாகாமல்

காசி நாட்டையும்

காசி நாட்டு

மக்களையும்

காப்பாற்றும் பொறுப்பு

என்னுடைய தந்தை

பீமதேவனுக்கு

இருக்கிறதாம்

 

மகளா நாடா

என்றால் அவருக்கு

நாடு தான்

முக்கியமாம்

 

நாட்டிற்காக

மகளையும் பலி

கொடுப்பாராம்

அதற்காகத்

தயாராகியும்

விட்டாராம்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-706 (சாவேயில்லாத சிகண்டி-40)

 ஜபம்-பதிவு-706

(சாவேயில்லாத

சிகண்டி-40)

 

அம்பையை

பீமதேவன், புராதேவி,

பால்குனர் மற்றும்

பலர் பார்த்துக்

கொண்டு இருந்தனர்.

 

அம்பை

காசி நாட்டை

விட்டு வெளியேறி

அஸ்தினாபுரம் நோக்கி

சென்று

கொண்டிருந்தார்.

அஸ்தினாபுரத்தை

அம்பை என்ற

புயல் தாக்க

வருவதை

அறியாமல்

அஸ்தினாபுரத்தின்

அவை நடந்து

கொண்டிருந்தது.)

 

(அஸ்தினாபுரத்தின்

அவைக்குள்

அம்பை நுழைய

முயன்றபோது

காவலர்கள்

அவரை தடுத்தனர்.

 

தடையை மீறி

அம்பை

அஸ்தினாபுரத்தின்

அவைக்குள் நுழைந்தாள்.

சிம்மாசனத்தில்

விசித்திரவீர்யன்

அமர்ந்து இருந்தான்.

சிம்மாசனத்திற்குச்

சற்று கீழே

போடப்பட்ட

அரியணையில்

பீஷ்மர் அமர்ந்து

இருந்தார்.

 

அமைச்சர்

மக்கள்

என்று பலர்

அந்த அவையில்

இருந்தனர். )

 

விசித்திர வீர்யன் :

காவலர்களின்

தடையை மீறி

உள்ளே

வந்திருக்கிறீர்களே

யார் நீங்கள்

 

அம்பை :

காசி நாட்டின்

அரசர் பீமதேவனின்

மூத்த மகள் அம்பை

 

விசித்திர வீர்யன் :

எதற்காக

வந்திருக்கிறீர்கள்

 

அம்பை :

நியாயம் கேட்டு

வந்திருக்கிறேன்

 

விசித்திர வீர்யன் :

அநீதி யாருக்கு

இழைக்கப்பட்டிருக்கிறது

 

அம்பை :

எனக்கு

 

விசித்திர வீர்யன் :

நீங்கள் விரும்பும்

வாழ்க்கையை

தேர்ந்தெடுக்கும்

உரிமை தான்

உங்களுக்கு

வழங்கப்பட்டதே

 

அம்பை :

அதைத் தான்

பிச்சை என்கிறார்

 

விசித்திர வீர்யன் :

யார்

 

அம்பை :

சௌபால நாட்டு

மன்னன் சால்வன்

 

விசித்திர வீர்யன் :

ஏன் அவ்வாறு

சொல்கிறார்

 

அம்பை :

சிறை எடுத்துச்

சென்ற பெண்ணை

பெறுவது

பிச்சையாம்

 

சிறை எடுத்துச்

சென்றவரை கொன்று

அந்த பெண்ணைப்

பெறுவது தான்

வீரமாம்

 

எனவே,

பிச்சையாக வந்த

என்னை ஏற்றுக்

கொள்ள மறுத்து

விட்டார்

 

விசித்திர வீர்யன் :

இப்போது நாங்கள்

என்ன செய்ய

வேண்டும் என்று

எதிர்பார்க்கிறீர்கள்

 

அம்பை :

நியாயம் வழங்க

வேண்டும்

 

விசித்திர வீர்யன் :

தவறு செய்த

சால்வன் மீது

படையெடுத்து

அவனை தண்டிக்க

வேண்டுமா

 

அம்பை :

இல்லை

 

தவறு செய்தவன்

சால்வன் கிடையாது

 

தண்டிக்கப்பட

வேண்டியவனும்

சால்வன் கிடையாது

 

நான் யாரையும்

தண்டிக்க வேண்டும்

என்று கேட்பதற்காகவும்

வரவில்லை

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-705 (சாவேயில்லாத சிகண்டி-39)

 ஜபம்-பதிவு-705

(சாவேயில்லாத

சிகண்டி-39)

 

இந்த உலகத்தில்

ஒரு பெண்

தலையாட்டி

பொம்மையாக

அடிமையாக

உணர்ச்சியற்ற

பிண்டமாகத்

தான் வாழ

வேண்டுமா

சுய உணர்ச்சியுடன்

வாழ விட

மாட்டீர்களா

 

ஆணுக்குத் தான்

ஒரு பெண்ணை

காதலிக்கும் உரிமை

காதலை

சொல்லும் உரிமை

காதலித்தவளை

திருமணம் செய்யும்

உரிமை உண்டா

ஏன் பெண்ணுக்கு

இல்லையா

 

அமைதியாக இருந்தால்

அடக்கமாக பெண்

அநீதியை எதிர்த்து

போராடினால்

கெட்ட பெண்ணா

 

மற்றவர்கள்

சொற்படி கேட்டு

நடந்தால்

நல்ல பெண்

சொல்லும்

சொல்லில் தவறு

இருக்கிறது என்று

எதிர்த்துக் கேள்வி

கேட்டால்

கெட்ட பெண்ணா

 

தவறுக்கு

துணை போனால்

நல்ல பெண்

தவறுக்கு துணை

போகவில்லை என்றால்

கெட்ட பெண்ணா

 

ஆணிற்கு

அடங்கி நடந்தால்

குடும்ப பெண்

அடங்காமல் இருந்தால்

குடும்பத்திற்கு

லாயக்கில்லாத பெண்ணா

 

பெண்களை

இந்த சமூகம்

அடிமையாகத் தான்

வைத்திருக்கிறது

அடிமையாக

வைக்கத் தான்

நினைக்கிறது

 

பெண்களுக்குள்ள

உரிமையை

கொடுப்பதற்கு

அது

நினைப்பதேயில்லை

பெண்களுக்கான

உரிமையை இந்த

சமூகம்

தருவதேயில்லை

 

பெண்களுக்கு

சுதந்திரம்

கொடுக்கிறோம் என்று

சொல்லிவிட்டு

கொடுப்பதேயில்லை

 

காசி நாட்டில்

பெண்கள் தங்கள்

கணவரை தாங்களே

தேர்ந்தெடுக்க

வேண்டும்

என்ற

காரணத்திற்காகத்

தான் சுயம்வரம்

நடத்துகிறோம்

என்று சொன்ன

பீமதேவன்

தன் மகள்

விரும்பிய ஆணுக்கு

திருமணம் செய்து

வைக்க முடியவில்லை

 

சிறை எடுத்துச்

சென்றவரிடமிருந்து

தன் மகளை

காப்பாற்ற

முடியவில்லை

 

பெற்ற மகளைக்

காப்பாற்ற முடியாது

என்று சொன்ன

கையாலாகாத

பெற்றோர்களிடம்

அடைக்கலம் கேட்டு

வந்ததை எண்ணி

வெட்கப்படுகிறேன்

 

இந்த உலகத்தில்

அம்பையின் பெயர்

இருக்கும் வரைக்கும்

பெற்ற மகளை

காப்பாற்ற

வக்கில்லாதவன்

பீமதேவன்

என்று

பீமதேவா

உன்னுடைய

பெயரும் இருக்கும்

 

காதலன்

கைவிட்டாலும்

பெற்றோர்கள்

கைவிட்டாலும்

வாழ வழி

இல்லாமல் நிற்பாள்

இந்த அம்பை

என்று நினைத்தீர்களா

 

எதற்கும் கலங்காதவள்

இந்த அம்பை

 

எந்த பிரச்சினை

வந்தாலும்

நேருக்கு நேராக

சந்திப்பவள்

இந்த அம்பை

 

யாருக்கும் எதற்கும்

அஞ்சாதவள்

இந்த அம்பை

என்பதை நினைவில்

கொள்ளுங்கள்

 

(என்று அம்பை

சொல்லி விட்டு

அரண்மனையின்

அறையை விட்டு

வெளியேறும் போது

காவலர்கள் விலகி

வழி விட்டனர்.

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-704 (சாவேயில்லாத சிகண்டி-38)

 ஜபம்-பதிவு-704

(சாவேயில்லாத

சிகண்டி-38)

 

அம்பை :

கோபத்தில்

இருக்கும் போது

அறிவென்பது

வேலை செய்யாது

அதனால்

நினைத்ததை

பேச முடியாது

தப்பாகத் தான்

பேசுவார்கள் என்று

எந்த அறிவு

கெட்டவன்

சொன்னான்

 

கோபத்தில்

இருக்கும் போது

தான் மனதில்

உள்ளதைப்

பேசுவார்கள்

 

தங்கள்

மனதில் மறைத்து

வைத்திருந்தவைகளைப்

பேசுவார்கள்

 

எதை

வெளிப்படுத்த

முடியாமல்

இருந்தார்களோ அதை

வெளிப்படுத்தி

பேசுவார்கள்

 

எதை எல்லாம்

சொல்ல முடியாமல்

தவித்துக்

கொண்டிருந்தார்களோ

அதைப் பேசுவார்கள்

 

தாங்கள்

என்ன பேச

வேண்டும் என்று

நினைத்திருந்தார்களோ

அதைப் பேசுவார்கள்

 

தங்களால் எந்த

உணர்வுகளை

வெளிப்படுத்த முடியாமல்

தவித்துக் கொண்டு

இருந்தார்களோ

அந்த உணர்வுகளை

வெளிப்படுத்தி

பேசுவார்கள்

 

பால்குனர்

ஆனால் அவைகள்

அனைத்தும்

உண்மையாக இருக்காதே

 

அம்பை :

அவைகள் உண்மையாக

இருக்கட்டும்

அல்லது

பொய்யாக

இருக்கட்டும்

எப்படி இருந்தாலும்

அவைகள் மனதில்

மறைத்து

வைத்திருந்தவைகள்

தானே

 

பால்குனர்

அதனால்

என்ன பலன்

ஏற்பட்டு

விடப்போகிறது

பகை தான் ஏற்படும்

 

கோபப்படும் போது

பகை ஏற்படும்

என்ற

காரணத்தினால் தான்

கோபப்படும் போது

பேச வேண்டாம்

என்று சொன்னார்கள்

 

அம்பை :

நான் கோபப்பட்டு

என்னுடைய மனதில்

உள்ளவைகளைப்

பேசிக் கொண்டு

இருக்கிறேன்

அதனால் பகை

ஏற்பட்டு விடும்

என்று பயப்படுகிறீர்களா

 

எந்தப் பகையையும்

கண்டு அஞ்சாதவள்

இந்த அம்பை

 

எந்த பகைக்கும்

பயப்படமாட்டாள்

இந்த அம்பை

 

பீமதேவன் :

அம்பிகை அம்பாலிகை

ஆகிய இருவரும்

தங்களுக்கு கிடைத்த

வாழ்க்கையை

எந்தவிதமான

எதிர்ப்பையும்

தெரிவிக்காமல்

ஏற்றுக் கொண்டார்கள்

அதனால்

அவர்கள் வாழ்க்கை

அமைதியாக சென்று

கொண்டிருக்கிறது

 

ஆனால்

நீங்கள் கோபப்பட்டு

உங்கள் வாழ்க்கையை

வீணாக இழந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

அம்பை :

இந்த உலகத்தில்

ஒரு பெண்

விரும்பியபடி

வாழக்கூடாதா

 

விரும்பியபடி

வாழ்க்கையை

அமைத்துக்

கொள்ளக்கூடாதா

 

விரும்பியவரை

திருமணம் செய்து

கொள்ளக் கூடாதா

 

தன்னுடைய

ஆசைகள்

அனைத்தையும்

குழி தோண்டி

புதைத்து விட்டுத் தான்

இந்த உலகத்தில்

ஒரு பெண்

வாழ வேண்டுமா

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////