April 12, 2020

பரம்பொருள்-பதிவு-188


               ஜபம்-பதிவு-436
             (பரம்பொருள்-188)

நகுலன் :
“பஞ்ச பாண்டவர்கள்
என்பது எங்கள்
ஐவரையும் குறிக்கும்
என்பது அனைவரும்
அறிந்த விஷயம்  

“பஞ்ச பாண்டவர்களில்
அண்ணன்கள் தர்மர்
பீமன் அர்ச்சுனன்
ஆகியோர்
மகாராஜா பாண்டுவின்
முதல் மனைவியான
குந்தி தாய்க்கு
பிறந்தவர்கள் ;
நகுலனாகிய நானும்
சகாதேவனும்
மகாராஜா பாண்டுவின்
இரண்டாவது
மனைவியாகிய
மாத்ரி தாய்க்கு
பிறந்தவர்கள் “

“பெரும்பாலானவர்கள்
அறிந்த விஷயமும்
இது தான்  :
பெரும்பாலானவர்கள்
மறந்த விஷயமும்
இது தான் ; “

“நானும் சகாதேவனும்
இரட்டைப் பிறவிகள் “

“நாங்கள் ஐவரும்
இரண்டு வெவ்வேறு
தாய்க்கு பிறந்தவர்கள்  

“எங்களுடைய
தாய் வேறு
அவர்களுடைய
தாய் வேறு “

“பஞ்ச பாண்டவர்களில்
இத்தகைய ஒரு
வேறுபாடு இருக்கிறது “

“நாங்கள் ஐவரும்
ஒரே தாய்க்கு பிறந்து
நான் அரவானுடைய
தலையை வெட்டினால்
இந்த உலகம்
ஒன்றும் சொல்லாது “

“ஆனால் நாங்கள்
இரு வேறு தாய்க்கு
அல்லவா
பிறந்திருக்கிறோம் ;
மாத்ரி தாய்க்கு
பிறந்த நான்
குந்தி தாய்க்கு
பிறந்தவர்களின்
வாரிசான அரவானை
கொன்றால் இந்த
உலகம் என்னை
வசைபாடாதா ? “

“நான் அரவானுடைய
தலையை வெட்டினால்
மாத்ரி தாய்க்கு
பிறந்த நகுலன்
குந்தி தாய்க்கு
பிறந்த வாரிசான
அரவானுடைய
தலையை வெட்டினான்
என்று என்னை
இந்த உலகம்
தவறாக சொல்லாதா ? “

“ஒரு தாய்க்கு
பிறந்தவர்கள் என்றால்
இந்த உலகம்
ஒன்றும் சொல்லாது “

“ஆனால் நாங்கள்
ஐவரும் ஒரு தாய்க்கு
பிறந்தவர்கள்
கிடையாதே “

“ஒரே தாய்க்கு
பிறந்திருந்தால்
நகுலன் இந்த
செயலைச் செய்து
இருக்க மாட்டான் ;
மாற்றாந் தாய்க்கு
பிறந்தவன் அதனால்
தான் இந்த
இரக்கமற்ற செயலை
செய்து இருக்கிறான்
என்று இந்த
உலகம் என்னை
வ்சை பாடாதா ? “

“அண்ணன்கள் தர்மர்
பீமன் அர்ச்சுனன்
ஆகியோர்
அரவானுடைய
தலையை வெட்டினால்
இந்த உலகம்
அவர்களை ஒன்றும்
சொல்லாது -ஏனென்றால்
அது அவர்களுடைய
வாரிசு அதனால்
அவர்களை ஒன்றும்
சொல்லாமல்
இந்த உலகம்
விட்டு விடும் ; “

“ஆனால் நான்
அரவானுடைய
தலையை வெட்டினால்
நகுலன் குந்தி தாயின்
வாரிசு கிடையாது  ;
நகுலன் குந்தி தாயின்
வாரிசாக இருந்திருந்தால்
அரவானுடைய
தலையை வெட்டி
இருகக மாட்டான் ; அவன்
மாத்ரி தாயின் வாரிசு
அதனால் தான் நகுலன்
அரவானுடைய
தலையை
வெட்டினான் என்று
இந்த உலகம்
என்னை குற்றம்
சொல்லாதா ?
நீக்க முடியாத
அவப்பெயருக்கு நான்
ஆளாக மாட்டேனா ? “

“இப்படி ஒரு
அவப்பெயர் ஏற்பட்டால்
அது என்னை
மட்டும் பாதிக்காதே
பாண்டவர்களாகிய
எங்கள் ஐவரையும்
சேர்த்துத் தானே
பாதிக்கும்  

“நான் அரவானுடைய
தலையை வெட்டினால்
பாண்டவர்களுக்கு
கெட்டப்பெயர்
தான் ஏற்படும் “

“இத்தகைய ஒரு
கெட்ட பெயர்
அனைவருக்கும்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால் நான்
அரவானுடைய தலையை
வெட்டக் கூடாது “

“அதனால் தான்
நான் சொன்னேன்
அரவானுடைய
தலையை நான்
வெட்டக் கூடாது என்று “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 12-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment