April 12, 2020

பரம்பொருள்-பதிவு-189


                ஜபம்-பதிவு-437
              (பரம்பொருள்-189)

“நான் அனைவருடைய
மனமும் வேதனைப்பட
வேண்டும் என்பதற்காக
இதைச் சொல்லவில்லை”

“அனைவருடைய
மனமும்
வேதனைப்படும்
என்றால் நான்
இதைச் சொல்லி
இருக்கவே மாட்டேன்”

“நான் உண்மையைச்
சொல்ல வேண்டும்
என்பதற்காகச்
சொன்னேன்”

“நான் சொல்லும்
உண்மையில் உள்ள
அர்த்தத்தை நீங்கள்
புரிந்து கொள்வீர்கள்
என்பதற்காகச் சொன்னேன் “

“நான் சொன்ன
உண்மையில்
ஏதேனும் தவறு
இருந்தாலோ
அனைவருடைய
மனதையும்
புண்படுத்தும் வகையில்
என்னுடைய
உண்மைகள்
இருந்தாலோ என்னை
மன்னித்து விடுங்கள் “

“ஆனால் ஒன்றை
மட்டும் தெளிவாகச்
சொல்கிறேன்  

“நான் அரவானுடைய
தலையை
வெட்டக் கூடாது  

கிருஷ்ணன்  :
“எனக்கே ஆச்சரியமாக
இருக்கிறது
நகுலனா இப்படி
எல்லாம்
பேசுவது என்று “

“எப்போதும்
பேசாத நீ
எப்போதும் பேசாமல்
அமைதியாக
இருக்கும் நீ
இப்போது எப்படி
இப்படி பேசினாய் “

“அமைதியாக
இருப்பவர்கள்
அமைதியாக இருந்தால்
ஆழ்கடல் ;
ஆர்த்தெழுந்து
விட்டால்
சீறிப்பாயும்
பொங்கு கடல் ;  
என்பதை
நிரூபித்து விட்டாய் “

“அமைதியாக
இருப்பவர்கள்
ஆர்த்தெழுந்து
பேசத் தொடங்கினால்
ஆர்த்தெழும் கடலும்
அடங்கி விடும் ;
என்று சொல்லத்தக்க
வகையில்
அமைந்து இருந்தது
உன்னுடைய பேச்சு “

“அமைதியாக
இருப்பவர்கள்
ஒன்றும் தெரியாமல்
அமைதியாக
இருக்கவில்லை  ;
அனைத்தையும்
தெரிந்து வைத்துக்
கொண்டு தான்
அமைதியாக
இருக்கிறார்கள் ;
என்பதை
உணர்த்துவது போல்
இருந்தது
உன்னுடைய பேச்சு “

“பேசக்கூடாத
நேரத்தில்
பேசுவதும் ;
பேச வேண்டிய
நேரத்தில் பேசாமல்
இருப்பதும் குற்றம் ;
என்பதை உணர்ந்து
பேச வேண்டிய
நேரத்தில்
பேச வேண்டியதைப்
பேசி இருக்கிறாய் “

“யாரும் மறுப்பு
சொல்ல முடியாத
அளவிற்கு
பேசி இருக்கிறாய் “

“யாரும் எதிர்ப்பு
சொல்ல முடியாத
அளவிற்கு
பேசி இருக்கிறாய் “

“அரவானுடைய
தலையை நான்
வெட்ட மாட்டேன்
என்று
ஒவ்வொருவரும்
சொன்ன
காரணம்
வித்தியாசமாக
இருந்தது “

“ஆனால் நீ
சொன்ன காரணம்
யாராலும்
யோசிக்கக் கூட
முடியாத
அளவிற்கு
இருந்தது “

“உன்னுடைய
கருத்துக்கு நான்
மறுப்பு சொல்ல
மாட்டேன் “

“உன்னுடைய
கருத்தை நான்
ஏற்றுக் கொள்கிறேன் “

“இப்போது
சகாதேவனை
அழைக்கிறேன் “

“பஞ்ச பாண்டவர்களில்
கடைசியாக இருக்கும்
சகாதேவனை
அழைக்கிறேன் ;
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்காக
அழைக்கிறேன் ; ‘

“சகாதேவா
வருகிறாயா ? “

“அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு
வருகிறாயா ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 12-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment