April 28, 2020

பரம்பொருள்-பதிவு-215


               ஜபம்-பதிவு-463
             (பரம்பொருள்-215)

“அர்ஜுனன்
தனக்கு எதிராக
சேனையில் இருக்கின்ற
பாட்டன் ; ஆசிரியர்கள் ;
மாதுலர்கள் ; சதோரர்கள் ;
மைந்தர்கள் ;
மைந்தரின் மைந்தர்கள் ;
மைத்துனர்கள் ; நண்பர்கள் ;
உறவினர்கள் ;
ஆகியோர்
போர் புரிவதற்கு
தயாராக நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான் “

அர்ஜுனன் :
“பரந்தாமா ! எனக்கு
எதிராக நின்று
கொண்டிருக்கும்
உறவினர்களைக்
கண்டு - என்னுடைய
அங்கங்கள் நடுங்குகிறது ;
உடல் தளர்வடைகிறது ;
மனம் கலக்கமடைகிறது ;
என்னுடைய தலை
சுற்றுகிறது ; “

“எதிரே இருப்பவர்கள்
என்னுடைய
பகைவர்கள் இல்லை  ;
எதிரே இருப்பவர்கள்
என்னுடைய
பாட்டனார் ;
என்னுடைய
குருநாதர் ;
என்னுடைய
பெரிய தந்தையின்
புதல்வர்கள் ;
என்னுடைய
உறவினர்கள் ;
இவர்கள்
என்னைக் கொல்ல
விரும்பினாலும் நான்
அவர்களைக்
கொல்ல மாட்டேன் “

“உறவினர்களைக்
கொல்வதன்
மூலம் எனக்கு
கிடைக்கும் வெற்றி
எனக்குத்
தேவையில்லை  ;
அதனால் 
கிடைக்கும் நாடும்
எனக்குத்
தேவையில்லை ;
நாட்டை ஆளவும் நான்
விரும்பவில்லை ;
என்று சொல்லிக்
கொண்டே
அர்ஜுனன்
தன்னுடைய
காண்டீபத்தை கீழே
வைத்து விட்டான்  

“தன்னால் போரிட
முடியாது என்று
சொன்ன
அர்ஜுனனுக்கு
கிருஷ்ணன் கீதையை
உபதேசம் செய்தார் “

“கிருஷ்ணனின்
கீதை உபதேசத்தைக்
கேட்ட
அர்ஜுனன்
காண்டீபத்தை
எடுத்துக் கொண்டு
போரிடுவதற்கு
தயாரானான்  

“கந்தர்வர்கள்  ;
தேவர்கள் ;
பித்ருக்கள் ;
சித்த சாரணர்கள் ;
முதலியோர்கள்
இந்திரனை
முன்னிட்டுக் கொண்டு
அப்பெரிய போரை
பார்க்க விரும்பி
விண்ணிலே
கூடி நின்றார்கள் “

“யார் முதலில்
போரை ஆரம்பிக்கப்
போகிறார்கள்
என்பதை அனைவரும்
ஆவலுடன்
எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருந்தார்கள் “

“முதலில் பாணத்தை
துச்சாதனன் செலுத்தினான் “

“குருஷேத்திரப்
போர் ஆரம்பமானது “

“யானை யானையையும்  ;
தேராளி தேராளியையும் ;
குதிரை வீரன்
குதிரை வீரனையும் ;
காலாள் காலாளையும் ;
எதிர்த்துப் போரிட்டார்கள் “

“தந்தை மகனை
மகன் என்றும் பார்க்காமல்
மகனைக் கொன்றான்  ; “

“மகன் தந்தையை
தந்தை என்றும் பார்க்காமல்
தந்தையைக் கொன்றான்  

“சகோதரன் சகோதரனை
சகோதரன் என்றும் பார்க்காமல்
சகோதரனைக் கொன்றான்  

“நண்பன் நண்பனை
நண்பன் என்றும் பார்க்காமல்
நண்பனைக் கொன்றான்  

“மாமன் மருமகனை
மருமகன் என்றும் பார்க்காமல்
மருமகனைக் கொன்றான்  

“மருமகன் மாமனை
மாமன் என்றும் பார்க்காமல்
மாமனைக் கொன்றான்  

“ஒருவருக்கொருவர்
பகை கொண்டவர்கள்
போல் வெறியுடன்
போரிட்டு ஒருவரை
ஒருவர் கொன்றார்கள்  

“குதிரை வீரர்கள் பெரிய
பெரிய ஈட்டிகளை
எறிந்து போரிட்டார்கள்  

“கத்தி ; கடாரி ; ஈட்டி ;
சுரிகை ; கோடாலி ;
இரும்புலக்கை ;
கதை ; வளைதடி ;
சக்கரம் ; முதலிய
ஆயுதங்களைக் கொண்டு
வீரர்கள் போரிட்டார்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment