October 22, 2020

அறிய வேண்டியவை-145

 

ஜபம்-பதிவு-637

(அறிய வேண்டியவை-145)

 

(சகுனியின் அறையில்

சகுனி தன்னுடைய

பகடைகளைப்

பார்த்து பேசிக்

கொண்டிருந்தார்.)

 

சகுனி :

“என் உதிரத்தில்

கலந்து

உயிரில் பிணைந்து

உணர்வுடன்

உறவாடிக்

கொண்டிருக்கும்

என்னருமைப்

பகடைகளே !”

 

“என்னுடைய

எண்ணத்தைப்

புரிந்து கொண்டு

அதனை

செயல் படுத்துவதற்காகவே

வாழ்ந்து கொண்டிருக்கும்

என்னருமைச்

செல்வங்களே!”

 

“நான் கேட்கும்

எண்களை

எனக்கு

தவறாது அளித்து

என்னுடைய ஆசைகளை

நிறைவேற்றி

இன்று வரை

என்னைக் கைவிடாமல்

காப்பாற்றிக்

கொண்டு வரும்

என்னருமைக்

குழந்தைகளே!”

 

“என்னுடைய

உள்ளத்தில்

என்ன இருக்கிறது

என்பதை அறிந்து

அதை அப்படியே

செயல்படுத்திக்

கொண்டிருக்கும்

நீங்கள்

என்றுமே என்னைக்

கைவிட்டதில்லை”

 

“நான் எப்போது

எல்லாம் எனக்கு

வெற்றி

வேண்டும் என்று

உங்களிடம்

கேட்டிருக்கிறேனோ?

அப்பொழுதெல்லாம்

எனக்கு வெற்றியைத்

தேடித் தந்திருக்கிறீர்கள்”

 

“நான் உங்கள்

மேல் வைத்துள்ள

பாசத்தைப்

புரிந்து கொண்டு

இன்று வரை

எனக்காகவே

நீங்கள்

உழைத்து கொண்டு

இருக்கிறீர்கள்”

 

“என் அன்பைப்

புரிந்து கொண்ட

காரணத்தினால் தான்

என்னுடைய கைக்குள்

அடக்கமாகி

இருக்கும் நீங்கள்

என்னுடைய

தேவையைப்

புரிந்து கொண்டு

அதை நிறைவேற்றிக்

கொண்டு வருகிறீர்கள்”

 

“என்னுடைய

சிந்தனையில்

என்ன இருக்கிறது

என்பதைப்

புரிந்து

கொண்டிருக்கும்

காரணத்தினால் தான்

என்னுடைய

சிந்தனையில்

உள்ளவற்றை

நிறைவேற்றும்

செயல்களை

என்னுடைய

வாழ்க்கையில்

தொடர்ந்து செய்து

கொண்டிருக்கிறீர்கள்”

 

“எந்த ஒரு

நாளுக்காக - நான்

இவ்வளவு நாள்

காத்துக்

கொண்டிருந்தேனோ

அந்த நாள்

நாளை வருகிறது”

 

“எந்த ஒரு

நாளுக்காக - நான்

இவ்வளவு நாள்

உழைத்துக்

கொண்டிருந்தேனோ

அந்த நாள்

நாளை வருகிறது”

 

“எந்த விஷயத்தை

நிறைவேற்ற வேண்டும்

என்று இத்தனை

நாள் நான் காத்துக்

கொண்டிருந்தேனே

அந்த நாள்

நாளை வருகிறது”

 

“எதை செயல்படுத்த

வேண்டும் என்று

என்னுடைய

வாழ்நாள் முழுவதும்

காத்துக்

கொண்டிருந்தேனோ

அந்த நாள்

நாளை வருகிறது.”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------21-10-2020

/////////////////////////////////

 

No comments:

Post a Comment