October 22, 2020

அறிய வேண்டியவை-148

 

ஜபம்-பதிவு-640

(அறிய வேண்டியவை-148)

 

சகுனி :

“ஒரு விஷத்தை

உனக்குக்

கொடுக்கிறேன்

நீ அதை

சாப்பிட்டால்

உனக்கு மரணம்

ஏற்படுகிறது”

 

“விஷம் உன்னுடைய

உடலில்

செயல்பட்டால்

தானே உனக்கு

மரணம் நிகழும்

விஷம்

உன்னுடைய உடலில்

செயல்படாவிட்டால்

மரணம்

என்பது எப்படி

உனக்கு ஏற்படும்

அப்படி என்றால்

விஷம் உன்னுடைய

உடலில் செயல்பட்டு

இருக்கிறது என்று

தானே அர்ததம்”

 

“விஷம்

உன்னுடைய

உடலில்

செயல்படாவிட்டால்

உன்னால்

எப்படி

இறக்க முடியம்”

 

“விஷம்

செயல்பட வேண்டும்

என்றால்

அந்த விஷத்தில்

உயிர்

இருக்க வேண்டும்

உயிர் எங்கு

இருக்கிறதோ

அங்கு

அறிவு என்பது

இருக்கும்”

 

“எந்த

ஒருபொருளை

எடுத்தாலும்

அது

செயல்படும் போது

மட்டும் தான்

அதனுடைய

அறிவானது

வெளிப்படும் “

 

“அதுபோல

அனைத்து

பொருட்களுக்கும்

உயிர்

இருக்கும் போது

என்னுடைய

பகடைகளுக்கும்

உயிர்

இருக்கும் தானே

உயிர் இருந்தால்

செயல்படும் தானே

செயல்பட

வேண்டும்

என்றால்

அறிவு

இருக்க

வேண்டும் தானே “

 

“அறிவு

இருந்தால்

மட்டும் தான்

நாம்

பேசும்

பேச்சைக் கேட்கும்

அதனால் தான்

நான் என்னுடைய

பகடைகளிடம்

பேசிக் கொண்டு

இருக்கிறேன்”

 

“என்னுடைய

பகடைகள்

உயிருள்ளவை

என்பதை

நான் உணர்ந்து

,இருக்கிறேன் “

 

“நான் பேசினால்

அவைகளுக்கு

கேட்கும்

என்பதை

நான்

தெரிந்து

வைத்திருக்கிறேன்”

 

“நான்

சொன்னவைகளை

செயல்படுத்தியிருக்கிறது

என்பதை

நான்

கண்டிருக்கிறேன்”

 

“நான்

மனதில்

நினைத்தவைகளை

செயல்படுத்தியிருக்கிறது

என்பதை

நான்

உணர்ந்திருக்கிறேன்”

 

“என்னுடைய

பகடைகள்

நான்

சொல்கிறவைகளை

கேட்டு நடக்கக்கூடிய

குழந்தையாக

இருப்பதை

நினைத்து நான்

சந்தோஷப்

பட்டிருக்கிறேன்”

 

“அதனால் நான்

என்னுடைய

பகடைகளுடன்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்னுடைய

எண்ணங்களை

நிறைவேற்ற

சொல்லி

அவைகளுடன்

பேசிக்கொண்டு

இருக்கிறேன் “

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------21-10-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment