October 27, 2020

அறிய வேண்டியவை-149

 

ஜபம்-பதிவு-641

(அறிய வேண்டியவை-149)

 

கர்ணன் :

"நீங்கள்

வித்தியாசமாக

சிந்திக்கிறீர்கள் ;

மயக்கும் விதத்தில்

பேசுகிறீர்கள் ;

ஆனால் செய்யும்

செயல்கள் தான்

ஏற்றுக்

கொள்ளத்தக்கதாக

இல்லை"

 

சகுனி :

"எதைச்

சொல்கிறாய்?"

 

கர்ணன் :

"பாண்டவர்களுக்கு

எதிராக

நீங்கள் செய்யும்

செயல்களைத் தான்

சொல்கிறேன்"

 

சகுனி :

"நான் பாண்டவர்களுக்கு

எதிராக செயல்களைச்

செய்யக்கூடாதா?"

 

கர்ணன் :

"நீங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக செயல்களைச்

செய்ய வேண்டாம்

என்று சொல்ல

வரவில்லை.

அவர்களுக்கு எதிராக

சதித்திட்டம் தீட்டி

கெட்ட செயல்களைச்

செய்ய வேண்டாம்

என்று தான்

நான் சொல்ல

வருகிறேன்  "

 

சகுனி :

"எதை

கெட்ட செயல்

என்கிறாய் கர்ணா"

 

"என் மருமகனுக்கு

உரிய நாட்டை

என் மருமகனிடம்

ஒப்படைப்பதற்காக

நான் செய்யும்

செயல்களை

கெட்ட செயல்

என்கிறாயா?"

 

(அல்லது)

 

"கௌவரவர்களுக்கு

கிடைக்க

வேண்டிய

அரசுரிமையை

பெற்றுத்

தருவதற்காக

நான் போராடிக்

கொண்டிருக்கிறேனே

அந்த செயல்களை

கெட்ட செயல்

என்கிறாயா?"

 

"எதை கெட்ட

செயல் என்கிறாய்?"

 

கர்ணன் :

"நீங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக செய்யும்

செயல்களை நான்

கெட்ட செயல்

என்று

சொல்ல

வரவில்லை “

 

“நீங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக

சதித்திட்டங்களைத்

தீட்டி

செயல்படுத்துவதைத்

தான் நான்

கெட்ட செயல்

என்கிறேன் "

 

சகுனி :

"என் மைத்துனர்

திருதராஷ்டிரருக்கு

கிடைக்க

வேண்டிய

நீதியை

தடுத்து விட்டு;

என் தங்கைக்கு

கிடைக்க வேண்டிய

மரியாதையை

கிடைக்க

விடாமல்

செய்து விட்டு;

என் மருமகன்

துரியோதனனை

அரியணை

ஏற விடாமல்

தடுத்து விட்டு;

கௌரவர்களுக்கு

முறைப்படி

கிடைக்க

வேண்டியவைகளை

கிடைக்க விடாமல்

செய்து விட்டு;

கௌரவர்களை

வாழ விடாமல்

செயல்களைச்

செய்து

கொண்டிருப்பவர்களுக்கு

எதிராக நான் எந்த

செயல்களையும்

செய்யக்கூடாது

என்கிறாயா?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////

 

 

 

 

 

 

No comments:

Post a Comment