October 27, 2020

அறிய வேண்டியவை-150

 

ஜபம்-பதிவு-642

(அறிய வேண்டியவை-150)

 

கர்ணன் :

"என் நண்பன்

துரியோதனனுக்கு

கிடைக்க

வேண்டிய

நீதியை

பெறுவதற்காக

நீங்கள் செய்யும்

செயல்கள் தான்

தவறாக

இருக்கிறது

என்று

சொல்கிறேன்"

 

"நீங்கள்

கெட்ட

செயல்களைச்

செய்வதால் தான்

உங்களை

கெட்டவன் என்று

இந்த உலகம்

நினைக்கிறது"

 

"இடத்திற்கு

தகுந்தபடி மாறிக்

கொண்டிருப்பவர்

என்கிறது

இந்த உலகம்"

 

"இடத்திற்கு

தகுந்தபடி

குணங்களை

மாற்றுபவர்

என்கிறது

இந்த உலகம்"

 

"வாழ்க்கையை

வெவ்வேறு

கோணத்தில்

வாழ்பவர் நீங்கள்

என்கிறது

இந்த உலகம்"

 

"ஏன் நீங்கள்

உங்கள்

வாழ்க்கையை

உண்மையாக

வாழக்கூடாது

போலியாக

வாழ்வதை விட

உண்மையாக

வாழ்வது

சிறந்ததல்லவா"

 

சகுனி :

"எதை

உண்மையுள்ள

வாழ்க்கை

என்கிறாய் கர்ணா"

 

கர்ணா :

"நல்லவர்கள்

எல்லா

இடங்களிலும்

நல்லவர்களாக

வாழ்வதைத் தான்

உண்மையான

வாழ்க்கை

என்கிறேன்"

 

சகுனி :

"நல்லவர்கள்

எல்லோரும்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாகத்

தான் வாழ்ந்து

கொண்டிருக்கிறார்களா?"

 

கர்ணன் :

"ஆமாம் நல்லவர்கள்

எப்போதும்

எல்லா

இடங்களிலும் ஒரே

மாதிரியாகத் தான்

வாழ்கிறார்கள் ;

வாழ்ந்து

கொண்டு தான்

இருக்கிறார்கள் ;

அவர்கள்

இடத்திற்கு

தகுந்த படி

வாழ மாட்டார்கள் ;

அவர்கள்

உண்மையாகத்  

தான் வாழ்வார்கள் ; "

 

சகுனி :

"கர்ணா நீ

நல்லவனா

கெட்டவனா?"

 

கர்ணன் :

"இதிலென்ன சந்தேகம்"

 

சகுனி :

"கேட்ட

கேள்விக்கு பதில்

சொல் கர்ணா

நீ நல்லவனா

கெட்டவனா?"

 

கர்ணன் :

"ஆமாம் நான்

நல்லவன் தான்"

 

சகுனி :

"நல்லவன்

என்று

உன்னை

சொல்லிக்

கொள்ளும்

நீ எல்லா

இடங்களிலும்

இடங்களிலும்

நல்லவனாகத் தான்

வாழ்கிறாயா

ஒரே மாதிரியாகத்

தான் வாழ்கிறாயா?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////

No comments:

Post a Comment