October 27, 2020

அறிய வேண்டியவை-151

 

ஜபம்-பதிவு-643

(அறிய வேண்டியவை-151)

 

கர்ணன் :

"ஏன் இல்லை

நான் எல்லா

இடங்களிலும்

ஒரே

மாதிரியாகத் தானே

வாழ்ந்து

கொண்டிருக்கிறேன்"

 

சகுனி :

"கர்ணா

நீ அவ்வாறு

வாழவில்லை"

 

கர்ணன் :

"நீங்கள் தவறாக

சொல்கிறீர்கள்"

 

சகுனி :

"நான்

சரியாகத் தான்

சொல்கிறேன்"

 

கர்ணன் :

"எதை சரி

என்கிறீர்கள்?"

 

சகுனி :

"நீ நல்லவனாக

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

வாழவில்லை

என்று தான்

சொல்கிறேன்"

 

கர்ணன் :

"ஏன் அவ்வாறு

சொல்கிறீர்கள்?"

 

சகுனி :

"உண்மையாகவே நீ

நல்லவனாக

இருந்திருந்தால்

பாண்டவர்களுக்கு

எதிராக நாங்கள்

சதித்திட்டங்களைத்

தீட்டி அதனை

செயல்படுத்தும்

போதெல்லாம்

அதனை

தடுத்து நிறுத்தி

நாங்கள் அதை

செயல்படுத்தாமல்

செய்திருக்க

வேண்டும்.

ஆனால் நீ

அவ்வாறு

செய்யவில்லையே?"

 

"நீ நல்லவனாக

இருந்திருந்தால்

எல்லா

இடங்களிலும்

ஒரே மாதிரியாக

நல்லவனாக

வாழ்பவனாக

இருந்திருந்தால்

நாங்கள் செய்த

செயல்களை

தடுத்திருக்க

வேண்டும்

ஆனால் நீ

அவ்வாறு

செய்யவில்லையே.?"

 

"நாங்கள்

பாண்டவர்களுக்கு

எதிராக தீட்டிய

சதித்திட்டங்கள்

அனைத்திற்கும்

நீ உடந்தையாகத்

தானே இருந்தாய்

நீ எங்களுக்குத்

துணையாகத் தானே

இருந்தாய்? "

 

"நீ செய்த செயலை

என்னவென்று

சொல்வது

என்ன செயல்

என்று சொல்வது "

 

"நீ செய்த

செயலை

நல்ல செயல் என்று

சொல்ல முடியுமா?

அல்லது

உன்னை நல்லவன்

என்று சொல்ல

முடியுமா ?

அல்லது

நல்லவன்

செய்த செயல்

என்று சொல்ல

முடியுமா ? "

 

"எந்த இடத்தில்

நீ நல்லவனாக

இருந்திருக்க

வேண்டுமோ

அந்த இடத்தில்

நீ நல்லவனாக

இல்லையே

கெட்டவனாகத் தானே

இருந்திருக்கிறாய்"

 

 

"நீ நல்லவனாக

இருந்திருந்தால்

பாண்டவர்களுக்கு

எதிராக நாங்கள்

சதித்திட்டத்தை

தீட்டி அதை

செயல்படுத்தும்

போதேல்லாம்

அந்த இடங்களில்

எல்லாம் நீ

நல்லவனாகத் தானே

இருந்திருக்க

வேண்டும்

ஆனால் நீ

அவ்வாறு

நல்லவனாக

இருக்கவில்லையே

எங்களுக்கு

உடந்தையாக

கெட்டவனாகத் தானே

இருந்திருக்கிறாய்?"

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------27-10-2020

/////////////////////////////////

 

No comments:

Post a Comment