July 12, 2021

பதிவு-5- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-5-

உலகத்தார்-

திருக்குறள்-

 

இதைத் தான் கர்மா

தன்னுடைய விளைவைக்

கொடுக்கப் போகிறது

என்று பொருள்

 

அதாவது கர்மா

07.25 மணி முதல்

07.30 மணிக்குள்

இயங்கி தன்னுடைய

விளைவை

கொடுக்கப் போகிறது

என்று பொருள்

 

அதாவது

07.25 மணி முதல்

07.30 மணிக்குள் நாம்

புளியந்தோப்பில்

பஸ்ஸிலிருந்து

கீழே விழுந்து விபத்து

நடக்க வேண்டிய

சூழ்நிலையை கர்மா

ஏற்படுத்தப் போகிறது

என்று பொருள்.

 

நாம் செய்த

கர்மாவானது

தன்னுடைய விளைவை

கொடுப்பதற்காகத்

தயார் நிலையில்

இருக்கிறது

 

கர்மா தன்னுடைய

விளைவைக்

கொடுக்கப் போகிறது

என்பது தெரியாமல்

நாம் தெருவில்

நடந்து சென்று

கொண்டிருக்கிறோம்

 

அப்போது ஒரு

கல்லில் இடிபடுகிறோம்

அப்போது நாம்

என்ன சொல்கிறோம்

என்றால்

கல் என்னை

இடித்து விட்டது

என்கிறோம்.

 

சகுனத்துடன்

தொடர்புடைய கர்மா

தன்னுடைய விளைவைக்

கொடுக்கத் தயாராக

இருக்கும் போது

சகுனத்துடன்

தொடர்புடைய காலம்

நமக்கு வரக்கூடிய

ஆபத்திலிருந்து

நம்மை எச்சரிக்கை

செய்து நம்மைக்

காப்பாற்ற வேண்டும்

என்பதற்காக

கல்லில் இடிபட்ட

நிகழ்வை வைத்து

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையைச்

சொல்ல வைத்து

காலம்

சகுனத்தின் மூலம்

நம்மைக்

காப்பாற்றுவதற்கான

செயலைச் செய்கிறது

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

நாம் செய்தோம்

என்பதைக்

குறிக்கவில்லை.

வேறு யாரோ

நமக்காக செய்தார்

நம்மைச்

செய்ய வைத்தார்

என்பதைக் குறிக்கிறது

 

அதாவது நமக்கு

ஏற்படப்போகும்

ஆபத்திலிருந்து நம்மைக்

காப்பாற்றுவதற்காக

காலம் செய்தது

என்று பொருள்

 

காலம் நம்மை

கல்லில்

இடிக்க வைத்து நம்மை

சிறிது நேரம்

அதே இடத்தில்

அந்த இடத்தை

விட்டு நகராமல்

அப்படியே

இருக்க வைத்து

விடுவதால்

புளியந்தோப்பில்

07.25 மணிக்கு

இருக்க வேண்டிய

நாம் பத்து நிமிடம்

கால தாமதாக

சென்று

07.35 மணிக்குத் தான்

புளியந்தோப்பு

செல்கிறோம்

 

புளியந்தோப்புக்கு

நாம் 07.35 க்கு

செல்வதால்

நமக்கு விபத்து

எதுவும் நடக்காது

 

ஏனென்றால்

கர்மாவானது

ஒரு குறிப்பிட்ட

காலத்தில்,

ஒரு குறிப்பிட்ட

இடத்தில்,

ஒரு குறிப்பிட்ட

நேரத்தில்,

ஓரு குறிப்பிட்ட

சூழ்நிலையில் தான்

விளைவை

ஏற்படுத்தும்

 

07.25 மணி முதல்

07.30 மணிக்குள்

சென்று இருந்தால்

நமக்கு விபத்து

ஏற்பட்டிருக்கும்

ஆனால் நாம்

07.35 மணிக்கு

புளியந்தோப்பு

சென்றதால்

நமக்கு விபத்து

என்பது

ஏற்படவில்லை

 

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////

No comments:

Post a Comment