April 16, 2022

ஜபம்-பதிவு-740 (சாவேயில்லாத சிகண்டி-74)

 ஜபம்-பதிவு-740

(சாவேயில்லாத

சிகண்டி-74)

 

குற்றமற்றவருக்குத்

தான் குற்றவாளி

என்று சொல்வதற்கு

உரிமை இருக்கிறது

குற்றம் செய்தவருக்கு

குற்றவாளி என்று

சொல்வதற்கு

உரிமை இல்லை

 

ஒருவரை

குற்றவாளி என்று

சொல்கிறவர்

எந்த தவறும்

செய்யாதவராக

இருக்க வேண்டும்

எந்த குற்றமும்

செய்யாதவருக்குத்

தான்

குற்றவாளி என்று

சொல்வதற்கு

உரிமை உண்டு.

 

குற்றவாளியான

பரசுராமர் உன்னை

குற்றவாளி

என்று சொல்வதற்கு

உரிமையும் இல்லை

அந்த வார்த்தையை

சொல்வதற்கு

அவருக்கு

அருகதையும் இல்லை

 

பீஷ்மா

நீ சொன்ன

வேலைகளைச்

செய்தவன்

 

சொன்ன வேலைகளைச்

செய்தவன்

எப்படி

குற்றவாளியாக

இருக்க முடியும்

 

உடல்நிலை

சரியில்லாமல் இருந்த

விசித்திரவீர்யனுக்காகவும்

அஸ்தினாபுரத்தின்

பரம்பரை

பட்டுப் போகாமல்

இருக்க வேண்டும்

என்பதற்காகவும்

நீ என்னுடைய

அனுமதி பெற்று

அம்பையை

சிறை எடுத்தாய்

அஸ்தினாபுரத்தின்

அனுமதியுடன்

சிறை எடுத்தாய்

விசித்திரவீர்யன்

உடல் நலக்

குறைவாக இருந்த

காரணத்தினால்

விசித்திரவீர்யனுக்காக

சிறை எடுத்தாய்

விசித்திரவீர்யனின்

அனுமதியுடன்

சிறை எடுத்தாய்

சொன்ன வேலையைச்

செய்தவன் நீ

 

நீ எப்படி

குற்றவாளியாக

இருக்க முடியும்

பரசுராமர் எப்படி

உன்னை குற்றவாளி

என்று சொல்ல

முடியும்

 

அம்பையை எதற்காக

சிறை எடுத்தாய்

என்ன காரணத்திற்காக

சிறை எடுத்தாய்

என்ற உண்மையை

அறியாதவர்கள் தான்

உன்னை குற்றவாளி

என்பார்கள்

 

ஏன் பரசுராமர்

உண்மையை ஆராய்ந்து

அறியவில்லையா

 

அல்லது

 

உண்மை எது

என்பதை ஆராய்ந்து

அறிய வேண்டும்

என்பது

பரசுராமருக்குத்

தெரியாதா

 

அல்லது

 

உண்மையை

அறியும் திறன்

அவருக்குக்

குறைந்து விட்டதா

 

அல்லது

 

தான் என்ற ஆணவம்

அவரை யோசிக்க

விடாமல்

செய்து விட்டதா

 

அல்லது

 

யோசிக்கும் திறனை

அவர் இழந்து

விட்டாரா

 

அல்லது

 

வயதானதால்

சிந்தை மழுங்கி

விட்டதா

 

ஒருவரை

குற்றவாளி என்று

சொல்வதற்கு முன்

ஆராய்ந்து பார்த்து

சொல்ல

வேண்டும் என்பது

அவருக்கு தெரியாதா

 

நாம் சொல்லும்

வார்த்தைகள்

மற்றவர்கள் மனதை

மகிழ்ச்சியடையச்

செய்யும் படி

இருக்க வேண்டும்

பிறரை

வருத்தம்படும்படி

இருக்கக் கூடாது

என்பது அவருக்கு

தெரியாதா

 

சமுதாயம்

தன்னை புகழ்கிறது

தன்னை

உயர்ந்த நிலையில்

வைத்திருக்கிறது

என்ற காரணத்திற்காக

தன் எதிரில்

இருப்பவர் யார்

என்று தெரிந்தும்

இப்படி பேசலாமா

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment