April 16, 2022

ஜபம்-பதிவு-742 (சாவேயில்லாத சிகண்டி-76)

 ஜபம்-பதிவு-742

(சாவேயில்லாத

சிகண்டி-76)

 

அம்பையின்

விஷயத்தில் நான்

எந்தத் தவறும்

செய்யவில்லை.

தவறு செய்யாத

நான் எதற்காக

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

என்று சொன்னேன்

 

பிரம்மச்சரியம்

விரதம்

ஏற்ற என்னால்

அம்பையை

எப்படி திருமணம்

செய்து கொள்ள

முடியும்

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள முடியாது

என்று சொன்னேன்

 

சத்தியவதி :

பரசுராமர்

கோப்பட்டிருப்பாரே

 

கோபத்தில் என்ன

பேசுவது என்று

தெரியாமல்

பேசியிருப்பாரே

 

பீஷ்மர் :

கோபத்தில்

தான் பேசினார்

 

என்ன பேசுகிறோம்

என்று தெரியாமல்

தான் பேசினார்

 

உண்மையை

உணராமல்

தான் பேசினார்

 

உண்மை எது

என்று அறிந்து

கொள்ளாமல்

தான் பேசினார்

 

தான் பேசுவது

தான் சரி என்று

நினைத்துக் கொண்டு

தான் பேசினார்

 

தான் பேசுவது

மற்றவர் இதயத்தை

காயப்படுத்துமே

என்பது தெரியாமல்

தான் பேசினார்

 

சீடனின் குணத்தை

உணர்ந்து

கொள்ளாமல்

தான் பேசினார்

 

அம்பையின்

பேச்சில் தான்

உண்மை இருக்கிறது

என்று நம்பிக்

கொண்டு

தான் பேசினார்

 

அம்பையை

முழுவதுமாக

நம்பியதால்

தான் பேசினார்

 

அம்பையின்

எண்ணத்தை

செயல்படுத்துவதற்காகத்

தான் பேசினார்

 

சத்தியவதி :

அம்பையின்

எண்ணமே உன்னைக்

கொல்வது தானே

 

பீஷ்மர் :

என்னைக்  கொல்வது

என்ற அம்பையின்

எண்ணத்தை

நிறைவேற்ற

பரசுராமர் முடிவு

செய்து விட்டார்

என்பதை

அவருடைய

வார்த்தையே

வெளிப்படுத்தியது

 

சத்தியவதி :

என்ன

வெளிப்படுத்தினார்

 

பீஷ்மர் :

தன் மனதில்

உள்ளதை அப்படியே

வெளிப்படுத்தினார்

 

பரசுராமரின்

வார்த்தைக்கு

மதிப்பு

கொடுத்து

அம்பையை

திருமணம்

செய்து

கொள்ளாத

காரணத்தினால்

நாளை

பரசுராமருக்கும்

எனக்கும்

குருஷேத்திரத்தில்

போர் என்று

சொன்னார்

 

அவருடைய

வார்த்தையை

ஏற்றுக் கொண்டேன்

 

சத்தியவதி :

குருவை எதிர்த்து

போரிட ஒத்துக்

கொண்டாயா

 

பீஷ்மர் :

என்னை

எதிரியாக

நினைத்து விட்டார்

 

எனக்கு எதிராக

நின்று போரிடத்

தயாராகி விட்டார்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment