April 16, 2022

ஜபம்-பதிவு-743 (சாவேயில்லாத சிகண்டி-77)

 ஜபம்-பதிவு-743

(சாவேயில்லாத

சிகண்டி-77)

 

என்னை கொல்வது

என்ற முடிவுக்கு

பரசுராமர்

வந்து விட்டார்

 

அப்புறம் எப்படி

நான் ஏற்றுக்

கொள்ளாமல்

இருக்க முடியும்

 

என்னுடைய

வார்த்தைகளில்

உள்ள

உண்மைகளை

பரசுராமர்

ஏற்றுக் கொள்ளாத

காரணத்தினால்

பரசுராமரை

எதிர்த்து

நான் போர்

செய்கிறேன்

என்று

பரசுராமரிடம்

சொல்லி

விட்டேன்

 

நாளை

எனக்கும்

பரசுராமருக்கும்

மட்டுமே

நேருக்கு

நேராக

குருஷேத்திரத்தில்

போர்

நடக்க

இருக்கிறது

 

பரசுராமரிடம்

நேருக்கு

நேராக

தனியாக

போரிடப்

போகிறேன்

 

இந்த

விஷயத்தை

தங்களிடம்

சொல்லி விட்டு

செல்லலாம்

என்று

வந்தேன்

தாயே

 

சத்தியவதி :

பரசுராமனின்

இரத்தத்தைக்

கொண்டு

உனக்கு

ஏற்பட்ட

களங்கத்தை

துடை

மகனே

 

உன்னை

யாரும்

வெற்றி

கொள்ள

முடியாது

 

விரும்பினால்

மட்டுமே

மரணம்

ஏற்படும் என்ற

வரத்தைப் பெற்ற

உன்னை

எப்படி

கொல்ல முடியும்

 

உன்னைக்

கொல்லக்

கூடியவர்

இந்த

உலகத்தில்

இது வரை

பிறக்கவில்லை

 

இனி

பிறந்தால்

உண்டு

 

பரசுராமரின்

ரத்தத்தால்

உன்

களங்கத்தைக்

கழுவு

 

பீஷ்மன்

யார்

என்பதை

இந்த

உலகத்திற்கு

காட்டு

 

வெற்றியுடன்

திரும்பி வா

மகனே

உனக்காக

நான் காத்துக்

கொண்டிருப்பேன்

 

என் ஆசி

உனக்கு

எப்போதும்

உண்டு

 

(தாய்

சத்தியவதியிடம்

ஆசி பெற்ற

பீஷ்மர்

அங்கிருந்து

வெளியே

செல்கிறார்.)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------16-04-2022

-------சனிக்கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment