July 20, 2022

ஜபம்-பதிவு-805 (சாவேயில்லாத சிகண்டி-139)

 ஜபம்-பதிவு-805

(சாவேயில்லாத

சிகண்டி-139)

 

ஸ்தூணாகர்ணன் :

நீ சொல்லும்

வார்த்தைகளில் உள்ள

அர்த்தம் புரியவில்லை

 

சிகண்டினி :

நான் பெண்ணிலிருந்து

ஆணாக மாறிக்

கொண்டு இருக்கிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

எப்படி தெரியும்

 

சிகண்டினி :

உடலில்

ஏற்பட்ட மாற்றம்

உயிரில்

ஏற்பட்ட எழுச்சி

உணர்வில்

ஏற்பட்ட மறுமலர்ச்சி

மனதில்

ஏற்பட்டட புத்துணர்ச்சி

 

ஸ்தூணாகர்ணன் :

நமக்குள் ஏற்படும்

மாற்றத்தை வைத்து

மட்டும் எதுவும்

சொல்லி விட முடியாது

 

சிகண்டினி :

என்னுடைய

மனைவியே சொன்னாள்

நான் பெண்ணிலிருந்து

ஆணாக மாறிக்கொண்டு

இருக்கிறேன் என்று

 

ஸ்தூணாகர்ணன் :

திருமணம் நடந்து விட்டதா

 

சிகண்டினி :

ஆம்

நடந்து விட்டது

 

ஸ்தூணாகர்ணன் :

புரிந்தவரையா

திருமணம் செய்து

கொண்டாய்

 

சிகண்டினி :

இல்லை

புரியாதவரை திருமணம்

செய்து கொண்டேன்

 

ஸ்தூணாகர்ணன் :

ஏன்

 

சிகண்டினி :

அரச கட்டளை

 

ஸ்தூணாகர்ணன் :

எந்த கட்டளையாக

இருந்தாலும்

புரியாதவரை திருமணம்

செய்து கொண்டால்

நிம்மதி போய் விடுமே

 

சிகண்டினி :

அதை அசிங்கப்பட்டப்

பிறகே தெரிந்து

கொண்டேன்

 

ஸ்தூணாகர்ணன் :

மாற்றுப் பாலினமாக

மாறிய பிறகு

புரிந்தவரைத் திருமணம்

செய்து கொண்டால்

இந்த அசிங்கம்

ஏற்பட்டு இருக்காது

அல்லவா

 

சிகண்டினி :

அதை அனுபவத்தின்

மூலம் தெரிந்து

கொண்டேன்

 

ஸ்தூணாகர்ணன் :

அனுபவத்தின் மூலம்

பெற முடியாத ஒன்றை

வேறு எந்த ஒன்றின்

மூலமும் பெறவே முடியாது

 

சிகண்டினி :

ஆமாம்

உணர்ந்து கொண்டேன்

 

ஸ்தூணாகர்ணன் :

உன்னுடைய மனைவி

என்ன சொன்னாள்

 

சிகண்டினி :

என்னால் தாம்பத்ய

சுகத்தை அவளுக்குத்

தர முடியுமா

என்று கேட்கிறாள்

 

என்னால் அவளுக்கு

குழந்தையைத் தர முடியுமா

என்று கேட்கிறாள்

 

ஸ்தூணாகர்ணன் :

இரண்டே கேள்விகள்

தான் என்றாலும்

சரியான கேள்விகள்

 

சரியாகக்

கேட்கப்பட்ட கேள்விகள்

 

ஆனிவேரையே அசைத்துப்

பார்க்கும் விதத்தில்

கேட்கப்பட்ட கேள்விகள்

 

பதில் சொன்னாயா

 

சிகண்டினி :

சொல்லவில்லை

 

ஸ்தூணாகர்ணன் :

ஏன் சொல்லவில்லை

 

சிகண்டினி :

பதில் தெரியாது

 

ஸ்தூணாகர்ணன் :

பதில் தெரியாமல் தான்

திருமணம் செய்து

கொண்டாயா

 

சிகண்டினி :

ஆமாம்

 

பெண்ணிலிருந்து ஆணாக

மாறுவேன் என்று

சிவபெருமான் சொன்னது

உண்மையாக இருக்கும்

என்று நம்பினேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment