July 20, 2022

ஜபம்-பதிவு-812 (சாவேயில்லாத சிகண்டி-146)

 ஜபம்-பதிவு-812

(சாவேயில்லாத

சிகண்டி-146)

 

அது மட்டுமல்ல

நாடிப்பிடித்துப் பார்த்து

நோயைக் கண்டறிந்து

வைத்தியம் பார்க்கும்

முறையும் நம்

நாட்டில் தான் இருக்கிறது

 

நாடிப்பிடித்து

பார்ப்பவர்களும் நம்

நாட்டில் தான்

இருக்கிறார்கள்

 

நாடிப்பிடித்து பார்த்து

எந்த நோய் உடலைத்

தாக்கியிருக்கிறது

என்பதையும்

 

நோய் எதனால்

ஏற்பட்டது என்பதையும்

 

எந்த மருந்து

கொடுத்தால் நோய்

குணமாகும் என்பதையும்

கண்டறிந்து வைத்தியம்

செய்யக்கூடிய

வைத்தியர்களும் நம்

நாட்டில் தான் உள்ளனர்

 

நம் நாட்டின்

வைத்திய முறைகளின்

பெருமைகளைக்

கேள்விப் பட்டு

அயல் நாடுகளில்

இருந்து வந்து

நம் நாட்டின்

வைத்திய முறைகளைக்

கற்றுக் கொண்டு

செல்கின்றனர்

நம் நாட்டில்

இருந்து அயல்

நாடுகளுக்குச் சென்று

வைத்திய முறைகளை

கற்றுக் கொடுத்து

விட்டு வருகின்றனர்

 

இதிலிருந்து நம் பாரத நாடு

வைத்திய முறையில்

எவ்வளவு உயர்ந்த

நிலையில் இருக்கிறது

என்பதைத் தெரிந்து கொள்

 

சிகண்டினி :

அதனைப்

பயன்படுத்தி என்னை

பெண்ணிலிருந்து

ஆணாக மாற்றுவீர்களா

 

ஸ்தூணாகர்ணன் :

கண்டிப்பாக மாற்றுகிறேன்

 

அறுவை சிகிச்சை

செய்வதற்கு முன்னரும்

பின்னரும்

பத்தியத்துடன்

இருக்க வேண்டும்

பத்திரமாக

இருக்க வேண்டும்

 

நான் சொல்கிற

முறையின்படி செய் என்று 

ஸ்தூணாகர்ணன் சொன்ன

முறைகளைப் பின்பற்றி

அவர் சொன்னபடியே

நடந்து கொண்டாள்

சிகண்டினி

 

அறுவை சிகிச்சை

அனைத்தும்

முடிந்த பின்னர்

மறுபிறப்பு எடுத்து

நிம்மதியாக ஓய்வு

பெற்று முடித்த

சிகண்டினியிடம்

பேசத் தொடங்கினார்

ஸ்தூணாகர்ணன்

 

ஸ்தூணாகர்ணன் :

இப்போது என்ன

உணர்கிறாய்

 

சிகண்டினி :

என்னை ஒரு முழு

ஆணாக உணர்கிறேன்

 

ஸ்தூணாகர்ணன் :

உன்னுடைய பல

கேள்விக்கான பதில்கள்

கிடைத்து இருக்குமே

 

சிகண்டினி :

ஆமாம்

கிடைத்து விட்டது

 

ஸ்தூணாகர்ணன் :

அப்படி என்றால்

 

உன்னால் தாம்பத்ய

சுகத்தை எனக்குத்

தர முடியுமா

உன்னால் எனக்கு

குழந்தையைத் தர முடியுமா

என்று உன்னுடைய

மனைவி கேட்ட

இரண்டு கேள்விகளுக்கும்

உன்னால் பதில்

சொல்ல முடியுமா

 

சிகண்டினி :

பதில் சொல்ல

என்னால் முடியும்

 

ஸ்தூணாகர்ணன் :

பதில் சொல்கிறாயா

 

சிகண்டினி :

தற்போது சொல்ல

வேண்டிய அவசியம் இல்லை

என்று நினைக்கிறேன்

 

ரகசியமான கேள்விகள்

ரசசியமாகக்

கேட்கப்பட்ட கேள்விகள்

ரகசியத்தை தன்னுள்

அடக்கி வைத்திருக்கும்

கேள்விகள்

என்னுடைய மனைவி

கேட்ட இரண்டு கேள்விகள்

 

அவைகளுக்கான பதிலை

தனிமையில் தான்

சொல்ல வேண்டும்

வெளிப்படையாக

சொல்லக் கூடாது

 

ஸ்தூணாகர்ணன் :

நாம் தனியாகத்

தானே இருக்கிறோம்

தனிமையில் தானே

இருக்கிறோம்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment