July 20, 2022

ஜபம்-பதிவு-806 (சாவேயில்லாத சிகண்டி-140)

 ஜபம்-பதிவு-806

(சாவேயில்லாத

சிகண்டி-140)

 

ஸ்தூணாகர்ணன் :

சிவனே சொன்னாலும்

மாற்றுப்பாலினமாக

மாறிய பிறகு

மாற்றுப்பாலினத்தவரால்

என்ன செய்ய முடியும்

என்பது தெரியாமல்

திருமணம் செய்தது

அறிவு கெட்டத்தனம்

அல்லவா

 

சிகண்டினி :

அதனால் தான் நான்

தங்களைத் தேடி

வந்திருக்கிறேன்

அறிவைத் தாங்கள்

தருவீர்கள்

நான் வாங்கலாம்

என்று வந்திருக்கிறேன்,

 

ஸ்தூணாகர்ணன் :

அறிவைக்

கொடுக்கவும் முடியாது

வாங்கவும் முடியாது

 

சிகண்டினி :

அப்படி என்றால்

அறிவு எப்படி வரும்

 

ஸ்தூணாகர்ணன் :

அறிவு

வரவும் செய்யாது

போகவும் செய்யாது

 

சிகண்டினி :

அறிவு வளர என்ன

தான் செய்ய வேண்டும்

 

ஸ்தூணாகர்ணன் :

அறிவு

வளரவும் செய்யாது

தேயவும் செய்யாது

 

சிகண்டினி :

குழப்புகிறீர்கள்

 

ஸ்தூணாகர்ணன் :

நான் உன்னை

குழப்பவில்லை

இந்த உலகம் தான்

உன்னை குழப்பி

வைத்திருக்கிறது

 

அறிவென்றால்

என்னவென்று

நீ தெரிந்து

கொள்ளாத வகையில்

இந்த உலகம்

உன்னை உருவாக்கி

வைத்திருக்கிறது

 

சிகண்டினி :

அறிவு என்ன தான்

செய்யும்

 

ஸ்தூணாகர்ணன் :

அறிவு வெளிப்பட

மட்டுமே செய்யும்

 

சிகண்டினி :

வெளிப்படும் என்றால்

 

சிகண்டினி :

இந்த பிரபஞ்சத்தில்

இருளால் மறைக்கப்பட்டு

இருந்த அனைத்து

பொருட்களும்

சூரியனின் ஒளி பட்டதும்

நம்முடைய

கண்ணுக்குத் தெரிகிறது

 

இருளில் ஏற்கனவே

பொருட்கள் இருந்தது

இருள் அந்த

பொருட்களை மறைத்து

வைத்து இருந்தது

இருள் விலகியவுடன்

இருளில் ஏற்கனவே

மறைந்து இருந்த

பொருட்கள் அனைத்தும்

நம்முடைய

கண்ணுக்குத் தெரிகிறது

 

ஏற்கனவே இருந்தது

தான் தெரிகிறது

புதியதாக எந்த பொருளும்

தோன்றுவதுமில்லை

தெரிவதுமில்லை

 

அறிவும் அதைப்

போலத் தான்

அறிவு அனைவருக்கும்

இருக்கிறது

 

அந்த அறிவை

கொடுக்கவும் முடியாது

வாங்கவும் முடியாது

வரவும் செய்யாது

போகவும் செய்யாது

வளரவும் செய்யாது

தேயவும் செய்யாது

 

இத்தகைய சிறப்பு

வாய்ந்த அறிவினை

அறியாமைத் திரை

மறைத்து வைத்திருக்கிறது

 

அறியாமைத் திரை

விலகும் போது

அறிவு வெளிப்படும்

 

சிகண்டினி :

புரியவில்லை

 

ஸ்தூணாகர்ணன் :

தெளிவாகச் சொல்கிறேன் கேள்

 

ஸ்தூணாகர்ணன் :

ஆசிரியர் தன்னுடைய

மாணவனுக்கு பாடத்தை

கற்பிக்கிறார்

மாணவன் பாடத்தைக்

கற்றுக் கொண்டதின் மூலம்

அவனுடைய அறிவை

மறைத்து இருந்த

அறியாமைத் திரை

விலகுகிறது

மாணவனுடைய

அறியாமை நீங்கி அறிவு

வெளிப்படுகிறது

 

அறிவு மாணவனிடம்

ஏற்கனவே இருந்தது

அறியாமை அந்த அறிவை

மறைத்து வைத்து இருந்தது

அறியாமை விலகியவுடன்

அறிவு வெளிப்பட்டது

 

சிகண்டினி :

பாடத்தைக் கற்றுக்

கொள்வதின் மூலம்

மட்டும் தான்

அறியாமைத்

திரை விலகுமா

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழு.த்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----20-07-2022

-----புதன் கிழமை

 

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment