August 11, 2022

ஜபம்-பதிவு-839 (சாவேயில்லாத சிகண்டி-173)

 ஜபம்-பதிவு-839

(சாவேயில்லாத

சிகண்டி-173)

 

சமாதானத்தின்

அனைத்து

கதவுகளும்

அடைக்கப்பட்டு விட்டது.

குருக்ஷேத்திரத்தில்

பாண்டவர்களும்

கௌரவர்களும்

போர் புரிவதற்காக

எதிர் எதிராக நின்று

கொண்டிருந்தனர்.

 

யுதிஷ்டிரன் தேரில்

இருந்து இறங்கி வந்து

இருவருக்கும் நடுவில்

நின்று கொண்டு

பாண்டவர் படையில்

இருந்து யாரேனும்

கௌரவர் படைக்கு

செல்ல விரும்பினால்

செல்லலாம்

 

அதைப்போல்

கௌரவர் படையில்

இருந்து

பாண்டவர் படைக்கு

வருவதற்கு விரும்புபவர்

வரலாம் என்று

சொன்னதால் யுயுத்சு

கௌரவர் படையில்

இருந்து

பாண்டவர் படைக்கு

சென்றான்

 

இந்தக் காட்சியைக்

காணும் துச்சாதனன்

துரியோதனனிடம்

பேசத் தொடங்குகிறான்

 

துச்சாதனன் :

அண்ணா
கௌரவர்கள்

படையிலிருந்து

பாண்டவர்கள் படைக்கு

யுயுத்சு சென்றதைக்

கண்டும்

தாங்கள் எதுவும்

பேசாமல் அமைதியாக

இருக்கிறீர்களே

 

துரியோதனன் :

எதிர்பார்த்த

விஷயம் தான் இதில்

ஆச்சரியப்படுவதற்கு

ஒன்றும் இல்லை

 

துச்சாதனன் :

இது நடக்கும் என்று

ஏற்கனவே உங்களுக்குத்

தெரியுமா

 

துரியோதனன் :

விதுரர் வில்லை

ஒடித்து விட்டு

சென்ற போதே தெரியும்

அடுத்து இவனும்

செல்வான் என்று

 

துச்சாதனன் :

அவன் போகாமல்

இருக்க நீங்கள் எதுவும்

செய்யவில்லையா

 

துரியோதனன் :

செய்யவில்லை

 

துச்சாதனன் :

ஏன் செய்யவில்லை

 

துரியோதனன் :

கூடவே இருந்து

துரோகியாக

குழிபறிப்பதை விட

எதிரில் எதிரியாக

இருக்கட்டும் என்று

விட்டு விட்டேன்

 

துச்சாதனன் :

அவனை

விட்டிருக்கக் கூடாது

என்ன இருந்தாலும்

 

அவன் நம்முடைய

சகோதரன் அல்லவா

இரத்த சம்பந்தம்

கொண்டவன் அல்லவா

 

துரியோதனன் :

சரி

கௌரவர்கள்

எத்தனை பேர்

என்று சொல்

 

துச்சாதனன் :

100 பேர்

 

துரியோதனன் :

யுயுத்சு நம்முடைய

சகோதரன் என்றாய்

இரத்த சம்பந்தம்

உள்ளவன் என்றாய்

கௌரவர்கள் எத்தனை

பேர் என்றால்

100 பேர் என்கிறாய்

 

துச்சாதனன் :

வழக்கத்தில் உள்ளது

வாயில் வந்து விட்டது

 

துரியோதனன் :

வழக்கத்தில் இருக்கலாம்

பழக்கத்தில் இருக்கலாம்

உன்னைச் சுற்றி

இருப்பவர்கள்

சொல்லலாம்

உன்னோடு இருப்பவர்கள்

சொல்லலாம்

உன்னுடைய சகோதரனை

நீ எப்படி மறக்கலாம்

கௌரவர்கள்

எண்ணிக்கையை

எப்படி குறைக்கலாம்

 

துச்சாதனன் :

தவறு நடந்து விட்டது

 

துரியோதனன் :

தவறுக்கு நீ

காரணமும் இல்லை

தவறை நீ

செய்யவும் இல்லை

இந்த உலகம் உன்னை

தவறு செய்ய

வைத்து விட்டது

 

துச்சாதனன் :

கௌரவர்கள்

மொத்தம்

102 பேர்கள்

அண்ணா

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment