August 11, 2022

ஜபம்-பதிவு-843 (சாவேயில்லாத சிகண்டி-177)

 ஜபம்-பதிவு-843

(சாவேயில்லாத

சிகண்டி-177)

 

உனக்குள் இருக்கும்

பெண்ணைக் காணும்

தாத்தா பீஷ்மர்

ஆயுதங்களைக் கீழே

போட்டு விடுவார்

போர் செய்ய மாட்டார்

 

அந்த

சந்தர்ப்பத்தைப்

பயன்படுத்தி

உன்னுடன் வரும்

அர்ஜுனன்

தாத்தா பீஷ்மரை

வீழ்த்துவான்

இயங்க விடாமல்

செய்வான்

 

போரிலிருந்து அவரை

அப்புறப்படுத்துவான்

 

சிகண்டி :

இது நடக்காது

 

யுதிஷ்டிரன் :

ஏன் நடக்காது

 

நீ தாத்தா பீஷ்மர்

முன்னால் போய்

நிற்க மாட்டாயா

 

சிகண்டி :

பீஷ்மன் முன்னால்

போய் நான் நின்றாலும்

அர்ஜுனனால்

அவரை வீழ்த்த

முடியாது

 

யுதிஷ்டிரன் :

ஏன் முடியாது

 

அர்ஜுனன் :

ஏன்

என் மேல் உனக்கு

நம்பிக்கையில்லையா

 

என்னை

சந்தேகப்படுகிறாயா

 

தாத்தா மேல்

கொண்ட பாசத்தால்

அவரை வீழ்த்த

மாட்டேன் என்கிறாயா

 

சிகண்டி :

அர்ஜுனனே உங்கள்

மேலும் எனக்கு

சந்தேகமில்லை

உங்களுடைய வீரத்தின்

மேலும் எனக்கு

சந்தேகமில்லை

 

உலகத்திற்கே

வீரத்திற்கு உதாரணமாக

இருப்பவர் நீங்கள்

அஞ்சா நெஞ்சம்

கொண்டவர் நீங்கள்

வில்லுக்கு விஜயன்

என்ற பெயரை

வாங்கியவர்கள் நீங்கள்

 

உங்கள் மேல் நான்

சந்தேகப்பட முடியுமா

 

உங்களால் மட்டுமல்ல

இந்த உலகத்தில்

உள்ள வேறு யாராலும்

பீஷ்மனை

வீழ்த்த முடியாது

 

யுதிஷ்டிரன் :

நீ இவ்வாறு

சொல்வதற்குக்

காரணம் என்ன

 

சிகண்டி :

காரணம் இருக்கிறது

 

போர்க்களத்தில்

அவருக்கு எதிராக

போர் செய்வதற்கு

பெண் வந்தால்

போர் செய்ய

மாட்டேன் என்று

தான் சொன்னாரே

தவிர

அர்ஜுனனால்

அவரை வீழ்த்த

முடியும் என்று

சொல்லவில்லையே

 

அர்ஜுனன் :

தாத்தா பீஷ்மர்

பொய் சொன்னாரா

 

சிகண்டி :

ஆமாம்

பொய் தான்

சொன்னார்

 

அர்ஜுனன் :

ஏன் இவ்வாறு

சொல்கிறீர்கள்

 

சிகண்டி :

அர்ஜுனனே

போர்க்களத்தில்

உங்களுக்கு எதிராகப்

போர் செய்வதற்கு

உங்கள் முன்னால்

ஒரு பெண்

வந்தால் போர்

செய்வீர்களா

 

அர்ஜுனன் :

போர் செய்ய

மாட்டேன்

 

சிகண்டி :

நீங்கள் மட்டுமல்ல

அர்ஜுனனே

 

மன்னர் யுதிஷ்டிரன்

பீமன் நகுலன்

சகாதேவன்

என்னுடைய அண்ணன்

திருஷ்டத்யும்னன்

உட்பட

இந்த உலகத்தில்

உள்ள எந்த

ஒரு ஷத்திரியனும்

போர்க்களத்தில்

தனக்கு எதிராக

போரிடுவதற்கு

தனக்கு முன்னால்

ஒரு பெண்

வந்தால்

ஆயுதங்களை

கீழே வைத்து

விடுவார்கள்

போரிட மாட்டார்கள்

 

திருஷ்டத்யும்னன் :

சிகண்டி சொல்வது

உண்மை தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment