August 27, 2024

ஆன்மீகம்-(42)-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-பிதாவே இவர்களை மன்னியும்-27-08-2024

 ஆன்மீகம்-(42)-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-பிதாவே இவர்களை மன்னியும்-27-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பிறப்பொக்கும்

எல்லா உயிர்க்கும்

என்ற தமிழின்

திருக்குறளின்

பொருளின்

 

பிதாவே

இவர்களை மன்னியும்

என்ற கிறித்துவத்தின்

பொருளும்

 

ஒன்று தான்

என்பதைத்

தெரிந்து

கொள்வோம்

 

நன்றி,

 

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----27-08-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////



August 25, 2024

வரலாறு-(22)-பாண்டியர்களால் கட்டப்பட்ட மருதூர் அணைக்கட்டு-25-08-2024

 

வரலாறு-(22)-பாண்டியர்களால் கட்டப்பட்ட மருதூர் அணைக்கட்டு-25-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மருதூர் அணைக்கட்டு

பாண்டியர்களால்

கட்டப்பட்ட மிகச்சிறந்த

அணைக்கட்டு

 

பாண்டியர்கள்

அறிவிற் சிறந்தவர்கள்

தொழில்நுட்பத்தில்

உயர்ந்தவர்கள்

கலை பண்பாடு கலாச்சாரம்

ஆகியவற்றில்

தனிச்சிறப்புப் பெற்றவர்கள்

என்பதை வெளிப்படுத்தும்

அணைக்கட்டு

 

மருதூர் அணைக்கட்டை

காட்சிப்பதிவாக்கி

வரலாற்றில் பொறிக்க

உதவியவர்கள்

 

திரு.தென்பொதிகை குடும்பர்

தென்பொதிகை ஆவணக் காப்பகம்,

தென்காசி,

 

திரு.மீராஸ் என்கிற ராஜசேகரன்,

மங்களபுரம்,

 

திரு.பாக்கியராஜ்,

கண்மணியாபுரம்

 

ஆகியோருக்கு

நன்றி,

 

-----25-08-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////




August 24, 2024

வரலாறு-(21)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(3)-24-08-2024

 

வரலாறு-(21)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(3)-24-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சிலம்பம் அ.அருணாசலம்

அவர்கள்

சிலம்பத்திற்காக தன்

வாழ்க்கையையே

அர்ப்பணித்தவர்

 

சிலம்பத்தின்

சூட்சும விஷயங்கள்,

நுணுக்கங்கள்,

போர்முறைகள்

ஆகியவற்றைப்

பற்றி பல நூல்கள்

எழுதி இருக்கிறார்

 

பல விருதுகள்

பல பெற்று

இருக்கிறார்

 

சிலம்பம் இவரால்

இந்த மண்ணில்

வாழ்ந்து

கொண்டிருக்கிறது

 

சிலம்பத்தின்

தன்மைகளை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

உணர்ந்து கொள்ள

இவர் ஒரு

முக்கிய காரணம்

 

இவருடைய திறமையை

இந்த உலகம்

அறிந்து பெருமைப்படுத்தி

இருக்கிறது

 

உலக நாடுகள்

பெருமைப்படுத்திய

ஒரு தமிழரை

நீங்கள்

அறிந்து கொள்ளுங்கள்

 

நன்றி

 

-----24-08-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////





August 23, 2024

ஆன்மீகம்-(41)-மனிதனை ஆட்டுவிக்கும் கர்மா-23-08-2024

 

ஆன்மீகம்-(41)-மனிதனை ஆட்டுவிக்கும் கர்மா-23-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கர்மா

மனிதனுடைய

வாழ்க்கையை

எவ்வாறு

ஆட்டிப் படைக்கிறது

என்பதை

அனைவரும்

புரிந்து கொள்ளும்

வகையில்

எளிய தமிழ் நடையில்

விளக்கி இருக்கிறார்

திரு.கல்யாண சுந்தரம்

சமூகப் பற்றாளர்

 

அவர்கள்

 

கர்மாவைப் புரிந்து

கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----23-08-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




August 22, 2024

சிலப்பதிகாரம்-(10)-சிலப்பதிகாரம், மணிமேகலை அரங்கேற்றம் செய்யப்பட்ட வரலாறு-22-08-2024

 

சிலப்பதிகாரம்-(10)-சிலப்பதிகாரம், மணிமேகலை அரங்கேற்றம் செய்யப்பட்ட வரலாறு-22-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்த உலகத்தில்

எந்த ஒன்றை

ஒருவன் படைக்கிறானோ

அவன் இறைவன்

 

சிலப்பதிகாரத்தை

படைத்தது

இளங்கோவடிகள்,

மணிமேகலையைப்

படைத்தது

சீத்தலைச் சாத்தனார்

படைத்ததினால்

இவர்கள் இறைவன்

 

எவ்வாறு

இவர்கள் படைத்தார்கள்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----22-08-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////




August 21, 2024

சிலப்பதிகாரம்-(9)-கண்ணகிக்கு சிலை எடுத்து பத்தினி கோட்டம் கட்டிய சேரன் செங்குட்டுவன்-21-08-2024

சிலப்பதிகாரம்-(9)-கண்ணகிக்கு சிலை எடுத்து பத்தினி கோட்டம் கட்டிய சேரன் செங்குட்டுவன்-21-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கண்ணகி சிலை செய்து

அந்த சிலையை

தான் போரிட்டு

வெற்றி பெற்ற

கனக விஜயரின்

தலையில் வைத்து

கொண்டு வந்து

கண்ணகிக்கு பத்தினி

கோட்டம்

மைத்தான்

சேரன் செங்குட்டுவன்

தான் சொன்னதை

செய்து முடித்த

தமிழன்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----21-08-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////





August 18, 2024

ஜபம்-பதிவு-1022 மரணமற்ற அஸ்வத்தாமன்-154 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1022

மரணமற்ற அஸ்வத்தாமன்-154

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அஸ்வத்தாமன்

பசியால் வாடிய அஸ்வத்தாமன்

சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்ட அஸ்வத்தாமன்

தன்னுடைய திறமையால் வாழ்க்கையில் உயர்ந்த அஸ்வத்தாமன்

வீரத்தால் வீழ்ந்த முடியாத நிலையை அடைந்த அஸ்வத்தாமன்

மும்முர்த்திகளிடம் இருந்து மூன்று அஸ்திரங்களைப் பெற்ற ஒரே துவாபாரயுகத்தின் நாயகன் அஸ்வத்தாமன்

போன யுகத்திற்கும், இந்த யுகத்திற்கும் பாலமாக இருக்கும்

கடைசி மானிடன் அஸ்வத்தாமன்.

 

சிவ தொண்டில் தலை சிறந்த பக்தன் அஸ்வத்தாமன்

 

மந்திரத்தில் உயர்ந்த நிலை அடைந்த அஸ்வத்தாமன்

அரசனாக இருந்து நாட்டை ஆண்ட அஸ்வத்தாமன்

அரசர்களுக்கு சமமாக இருந்த அஸ்வத்தாமன்

அரசர்களையே ஆட்டி வைக்கும் நிலையில் இருந்த அஸ்வத்தாமன்

மனித குலம் வாழ வேண்டும் என்பதற்காக தன் சாவை

தினம் தினம் தள்ளி வைக்கும் தயாளன் அஸ்வத்தாமன்

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்ததால்

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களால்

தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டான் அஸ்வத்தாமன்.

 

எப்போதும் இந்த உலகம்

ஏழ்மை நிலையில் இருந்து

தன்னுடைய திறமையால்

உயர்ந்த நிலைக்கு வந்தவர்களை

தவறாகத் தான் சித்தரிக்கும்

என்பதற்கு அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்த அதிகார வர்க்கம்

ஏழைகளை மேலே விடாது என்பதற்கும்,

அப்படியே வந்தாலும் அவர்களை வாழ விடாது என்பதற்கும்,

அப்படியே வாழ்ந்தாலும் அவர்களை அழிக்காமல் விடாது என்பதற்கும்,

அப்படியே அழிக்கவே முடியவில்லை என்றாலும்,

அவர்களை அவமானப்படுத்தும் என்பதற்கும்,

அப்படியே அவமானப்படுத்த முடியவில்லை என்றாலும்,

அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்து

அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதற்கும்

அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களால்

திறமையானவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த முடியும்

என்பதற்கு அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்த அதிகார வர்க்ககத்தால்

அஸ்வத்தாமனுக்கு எவ்வளவு தான்

கெட்ட பெயரை ஏற்படுத்தினாலும்

இன்றும் அனைவருடைய இதயங்களிலும்

வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

 

கி.பி.4044--ம் வருடம்

கல்கி அவதாரம் எடுக்கும் சமயத்தில்

அஸ்வத்தாமனுக்கு முக்தி கிடைக்கும் என்றும்

அதுவே மனித குலத்தின் அழிவு என்றும்

சொல்லப்படுகிறது.

 

பரிட்சித்து மகாராஜன் அரியணை ஏறியதும்

தம் வாழ்நாளை முடித்துக் கொள்ள

இமயம் புறப்பட்ட பாண்டவர்கள்

அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும்,

அதன் பிறகு அவர் மனித சமுதாயத்தின்

கண்ணில் படவில்லை என்றும்

புராணங்கள் சொல்கின்றன.

 

காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பன் தான் அஸ்வத்தாமன்

காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்.

இறப்பு இல்லாத நாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

யாராலும் அழிக்க முடியாதவனாக கதாநாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

 

ஏனென்றால்

அஸ்வத்தாமன்

மரணமற்ற அஸ்வத்தாமன்

மரணமற்ற அஸ்வத்தாமன்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

ஜபம்-பதிவு-1021 மரணமற்ற அஸ்வத்தாமன்-153 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1021

மரணமற்ற அஸ்வத்தாமன்-153

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

 

பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக்கூடிய

நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்
ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

9-கிரகங்கள்,

12- வீடுகள்,

27 நட்சத்திரங்கள்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்

 

இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து மடிந்த உயிர்கள்

பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிர்கள்

இனி பிறந்து வாழப் போகின்ற உயிர்கள்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

மேல் ஏழு உலகம்

கீழ் ஏழு உலகம்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

முப்பத்து முக்கோடி தேவர்களின் மேல்

ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

""என் நெற்றியிலிருந்து

எப்போது எல்லாம்

இரத்தம் வழிந்து

இந்தத் தரையில் விழுகிறதோ

அப்போது எல்லாம்  

அந்த இரத்ததைக்

குடிக்கக் கூடிய

ஒரு புழுவாக

நீயும் என்னுடன்

என்றும் இருப்பாய்,.""

 

என்று சாபம் கொடுக்கிறேன்.

இது தான் என்னுடைய சாபம்

(என்று கடவுளுக்கே சாபம் இட்டான் அஸ்வத்தாமன்

இந்த உலகத்திலேயே

கடவுளிடம் இருந்து சாபம் பெற்றவனும் அஸ்வத்தாமன் தான்,

கடவுளுக்கே சாபம் கொடுத்தவனும் அஸ்வத்தாமன் தான்)

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1020 மரணமற்ற அஸ்வத்தாமன்-152 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1020

மரணமற்ற அஸ்வத்தாமன்-152

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

துரியோதனனுடன் பீமன் போர் புரியும் போது துரியோதனனின் இடுப்புக்குக் கீழே தொடையை அடித்து கொல்லச் சொன்னாய். பீமனும் அவ்வாறே செய்து துரியோதனனைக் கொன்றானே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜெயத்ரதனை வெளியே வரச்செய்து, ஜெயத்ரதன் வெளியே வந்ததும் சூரியன் அஸ்தமிக்கவில்லை என்று சொல்லி

ஜெயத்ரதனை அர்ஜுனனை விட்டு கொல்லச் செய்தாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது

பூரிசிரவஸ், சாத்தகி போர் செய்து கொண்டிருந்த போது அர்ஜுனனை வைத்து பூரிசிரவஸ் கையை வெட்டி எடுத்து சாத்தகி மூலம் பூரிசிரவஸ்ஸின் தலையை வெட்டச் செய்து பூரிசிரவஸ்ஸைக் கொன்றாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

அர்ஜுனனைக் கொல்வதற்காக கர்ணன் பெற்ற சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவச் செய்து கடோத்கஜனைக் கொன்று அர்ஜுனனின் உயிரைக் காப்பாற்றினாயே அங்கே உன்னுடைய சூழ்ச்சி நிறைந்து இருந்தது.

இவ்வளவு சூழ்ச்சிகளையும் செய்து விட்டு நல்லவன் போல நடிக்கிறாய்

இவ்வளவு அக்கிரமங்களையும், அநியாயங்களையும் செய்த நீ நல்லவன். சுயநலமாக இருக்கும் நீ நல்லவன்.

 

சொந்த அத்தையான குந்திதேவிக்காக அனைத்தையும் செய்யும் நீ நல்லவன்.

 

அத்தையின் மகன்களான பாண்டவர்களைக் காக்க போராடும் நீ நல்லவன்.

 

தர்மம் என்ற பெயரைச் சொல்லி அதர்மச் செயல்களைச் செய்யும்

நீ நல்லவன்

 

எந்த ஒரு விஷயத்திற்காகவும் ஆசைப்படாதவன்.

தந்தையின் மரணத்திற்காக பழி வாங்க நினைத்தவன்

நண்பன் துரியோதனன் மரணத்திற்காக அனைவரையும் கொன்றவன்

நீ செய்த தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டியவன்

நீ நல்லவன் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தியவன்

உன் முகத்திரையைக் கிழித்தவன்

உன் போலி முகத்தை இந்த உலகம் உணர்ந்து கொள்ளும்படிச் செய்தவன்

உன் இரட்டை வேடத்தை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியவன்

இத்தகைய செயலைச் செய்த நான் கெட்டவன்.

 

நீ சாபம் கொடுத்தால் மற்றவர்களைப் போல்

நான் வாங்கி விட்டு

அமைதியாக சென்று விடுவேன் என்று நினைத்தாயா

 

நீ சாபம் கொடுத்தால் நான் வருந்துவேன் என்று நினைத்தாயா

 

உன் சாபத்தைக் கண்டு நான் பயப்படுவேன் என்று நினைத்தாயா

 

சாபம் கொடுத்தால் சாப விமோசனம் கொடு என்று

உன்னைக் கெஞ்சுவேன் என்று நினைத்தாயா

 

எதற்கும் அஞ்சாதவன் இந்த அஸ்வத்தாமன்

எதைப் பற்றியும் கவலைப்படாதவன் இந்த அஸ்வத்தாமன்

 

பிச்சைப் போட்டுத்தான் பழக்கப்பட்டவன் இந்த அஸ்வத்தாமன்

பிச்சை எடுத்து பழக்கப்படாதவன் இந்த அஸ்வத்தாமன்

 

தர்மத்தின் பெயரைச் சொல்லி சொல்லியே

அதர்மச் செயல்களைச் செய்து கொண்டிருக்கும் நீ சாபமிடலாம்

தர்மத்தையே பின்பற்றி தர்மத்தையே செய்து கொண்டிருக்கும்

நான் சாபமிடக்கூடாதா

 

கடவுள் மனிதனுக்கு சாபம் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை

ஆனால் மனிதன் கடவுளுக்கு சாபம் கொடுப்பது என்பது பெரிய விஷயம்

அத்தகைய ஒரு சாபத்தை நான் இப்போது உனக்கு கொடுக்கப் போகிறேன்

கடவுளுக்கே சாபம் கொடுக்கப் போகிறேன்

இந்த அஸ்வத்தாமன் கடவுளுக்கே சாபம் கொடுக்கப் போகிறான்

இந்த உலகத்தில் நடக்காத ஒரு விஷயம்

இனி இந்த உலகத்தில் நடக்க முடியாத ஒரு விஷயம்

மனிதன் கடவுளுக்கு சாபம் கொடுப்பது

இதோ நான் உனக்கு சாபம் கொடுக்கிறேன்

 

இந்த அஸ்வத்தாமன் உனக்கு சாபம் கொடுக்கிறேன்.

இந்த அஸ்வத்தாமன் கடவுளுக்கே சாபம் கொடுக்கிறேன்.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////