August 18, 2024

ஜபம்-பதிவு-1021 மரணமற்ற அஸ்வத்தாமன்-153 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1021

மரணமற்ற அஸ்வத்தாமன்-153

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

 

பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக்கூடிய

நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்
ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

9-கிரகங்கள்,

12- வீடுகள்,

27 நட்சத்திரங்கள்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்

 

இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து மடிந்த உயிர்கள்

பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிர்கள்

இனி பிறந்து வாழப் போகின்ற உயிர்கள்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

மேல் ஏழு உலகம்

கீழ் ஏழு உலகம்

ஆகியவற்றின் மேல் ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

முப்பத்து முக்கோடி தேவர்களின் மேல்

ஆணையிட்டு சாபம் கொடுக்கிறேன்.

 

""என் நெற்றியிலிருந்து

எப்போது எல்லாம்

இரத்தம் வழிந்து

இந்தத் தரையில் விழுகிறதோ

அப்போது எல்லாம்  

அந்த இரத்ததைக்

குடிக்கக் கூடிய

ஒரு புழுவாக

நீயும் என்னுடன்

என்றும் இருப்பாய்,.""

 

என்று சாபம் கொடுக்கிறேன்.

இது தான் என்னுடைய சாபம்

(என்று கடவுளுக்கே சாபம் இட்டான் அஸ்வத்தாமன்

இந்த உலகத்திலேயே

கடவுளிடம் இருந்து சாபம் பெற்றவனும் அஸ்வத்தாமன் தான்,

கடவுளுக்கே சாபம் கொடுத்தவனும் அஸ்வத்தாமன் தான்)

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

No comments:

Post a Comment