August 18, 2024

ஜபம்-பதிவு-1011 மரணமற்ற அஸ்வத்தாமன்-143 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

ஜபம்-பதிவு-1011

மரணமற்ற அஸ்வத்தாமன்-143

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

(வேத வியாசர் ஆசிரமம்)

அஸ்வத்தாமன் : பிரயாச்சித்தம் செய்ய வந்திருக்கிறேன்

வேத வியாசர் ; பாவம் செய்தால் தான் பிராயச் சித்தம் செய்ய வேண்டும். பாவம் உண்டாகும் அளவுக்கு அப்படி என்ன பெரிய பாவத்தைச் செய்து விட்டாய்.

அஸ்வத்தாமன் : ஆமாம் மிகப்பெரிய பாவத்தைச் செய்து விட்டு வந்து இருக்கிறேன்

நீக்க முடியாத பாவத்தைச் செய்து விட்டு வந்திருக்கிறேன்.

அந்த பாவத்தின் விளைவு என்னை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிராயச்சித்தம் செய்ய வந்திருக்கிறேன்.

வேத வியாசர் : அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல் ஆகியவற்றின் மூலம் தான் ஒருவன் பாவம் செய்கிறான்.

இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் தாங்கள் எந்த நிலையில் இருந்து பாவம் செய்தோம் என்று தெரியாமல் பாவம் செய்கிறார்கள்.

இந்த மூன்றில் எதன் மூலம் நீ பாவம் செய்தாய் என்று உனக்குத் தெரிகிறதா.

நீ செய்த பாவம் இதில் எதில் அடங்குகிறது என்று தெரிகிறதா.

உணர்ச்சி வயப்பட்டு செய்தேன் உணர்ச்சி இருந்ததால் என் நண்பனுக்காக செய்தேன்.

இந்த மூன்றில் எந்த ஒன்றில் பாவம் செய்தாலும், பிராயச்சித்தம் செய்தால் மட்டும் போதாது.

மேல் பதிவு போட வேண்டும். அடியோடு அழிக்க வேண்டும்.

அப்போது தான் நாம் செய்த பாவத்தின் விளைவு மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு நமக்குத் துன்பத்தைக் கொடுக்காது.

அஸ்வத்தாமன் : என்னால் இப்போது பிராயச்சித்தம் தான் செய்ய முடியும். அதனால், நான் இப்போது பிராயச் சித்தம் செய்து விடுகிறேன்.

தேவைப்படும் போது மேல் பதிவு போடுகிறேன்.

இறுதியாக அடியோடு அழிப்பதற்கு தவம் செய்ய காட்டிற்கு சென்று விடுகிறேன்.

இப்போது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள் முனிவரே

வேத வியாசர் : என்ன பாவம் செய்து இருக்கிறாய்

அஸ்வத்தாமன் : பாண்டவர்களைக் கொன்று விட்டேன்

வேத வியாசர் : அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைக்கிறாயா

அஸ்வத்தாமன் : ஆமாம்

வேத வியாசர் :  அவர்கள் இறக்கவில்லை

அஸ்வத்தாமன் : நான் செல்கிறேன்

வேத வியாசர் : எங்கே செல்கிறாய்

அஸ்வத்தாமன் : என்னுடைய கடமை இன்னும் முடியவில்லை. துரியோதனனுக்கு நான் கொடுத்த வாக்கு இன்னும் பாக்கி இருக்கிறது

அதை நிறைவேற்ற போகிறேன்

வேத வியாசர் : நீ போக வேண்டிய அவசியம் இல்லை

அஸ்வத்தாமன் : ஏன்

வேத வியாசர் : நீ இங்கு தான் இருக்கிறாய் என்பது பாண்டவர்களுக்குத் தெரிந்து விட்டது

உன்னைத் தேடி இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அஸ்வத்தாமன் : நான் அவர்களைத் தேடிச் செல்கிறேன்

வேத வியாசர் : எதற்காக

அஸ்வத்தாமன் : நான் இங்கே வந்து மறைந்து இருக்கிறேன். இந்த ஆசிரமத்தில் உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டு இருக்கிறேன். நான் ஒரு கோழை என்று நினைத்து விடுவார்கள்

வேத வியாசர் : நீ இங்கு இருப்பது தான் பாதுகாப்பு

அஸ்வத்தாமன் : யாருக்கு

வேத வியாசர் : அனைவருக்கும்

அஸ்வத்தாமன் : அனைவருக்கும் என்றால்

வேத வியாசர் : இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும்

 அஸ்வத்தாமன் : எதற்காக அவ்வாறு சொல்கிறீர்கள்

வேத வியாசர் : தெய்வீக அஸ்திரங்கள் உங்கள் இருவரிடமும் உள்ளது அதை பயன்படுத்தி விட்டால் உலகம் அழியக் காரணமாகி விடும்

அஸ்வத்தாமன் : விஷ்ணுவுக்குரிய அஸ்திரம் நாராயண அஸ்திரம்,

பிரம்மாவிற்குரிய அஸ்திரம் பிரம்மாஸ்திரம்,

சிவனுக்குரிய அஸ்திரம் பாசுபதாஸ்திரம்,

மும்மூர்த்திகளுக்குரிய அஸ்திரங்களை வைத்திருப்பவன்

நான் மட்டுமே

இந்த அஸ்வத்தாமன் மட்டுமே

 

பிரம்மாஸ்திரம் கற்றவன் மனிதரில் சிறந்தவன்,

நாராயண அஸ்திரம் தெரிந்தவன் தேவர்களுக்கு சமமானவன்,

பாசுபதம் கற்றவன் தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவன்.

 

இந்த யுகத்தில்

நாராயணாஸ்திரம்,

பிரம்மாஸ்திரம்,

பாசுபதாஸ்திரம்

பெற்ற ஒரே ஒரு வீரன்

இந்த அஸ்வத்தாமன் மட்டுமே.!

 

இந்த யுகத்தில் இந்த மூன்று அஸ்திரங்களும் என்னிடம் மட்டுமே உள்ளது

இந்த மூன்று அஸ்திரங்களையும் வைத்திருக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும்.

 

பாண்டவர்கள் தான் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும். அர்ஜுனன் தான் என்னிடம் சண்டையிட பயப்பட வேண்டும்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

  

No comments:

Post a Comment