August 18, 2024

ஜபம்-பதிவு-1022 மரணமற்ற அஸ்வத்தாமன்-154 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1022

மரணமற்ற அஸ்வத்தாமன்-154

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அஸ்வத்தாமன்

பசியால் வாடிய அஸ்வத்தாமன்

சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்ட அஸ்வத்தாமன்

தன்னுடைய திறமையால் வாழ்க்கையில் உயர்ந்த அஸ்வத்தாமன்

வீரத்தால் வீழ்ந்த முடியாத நிலையை அடைந்த அஸ்வத்தாமன்

மும்முர்த்திகளிடம் இருந்து மூன்று அஸ்திரங்களைப் பெற்ற ஒரே துவாபாரயுகத்தின் நாயகன் அஸ்வத்தாமன்

போன யுகத்திற்கும், இந்த யுகத்திற்கும் பாலமாக இருக்கும்

கடைசி மானிடன் அஸ்வத்தாமன்.

 

சிவ தொண்டில் தலை சிறந்த பக்தன் அஸ்வத்தாமன்

 

மந்திரத்தில் உயர்ந்த நிலை அடைந்த அஸ்வத்தாமன்

அரசனாக இருந்து நாட்டை ஆண்ட அஸ்வத்தாமன்

அரசர்களுக்கு சமமாக இருந்த அஸ்வத்தாமன்

அரசர்களையே ஆட்டி வைக்கும் நிலையில் இருந்த அஸ்வத்தாமன்

மனித குலம் வாழ வேண்டும் என்பதற்காக தன் சாவை

தினம் தினம் தள்ளி வைக்கும் தயாளன் அஸ்வத்தாமன்

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்ததால்

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களால்

தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டான் அஸ்வத்தாமன்.

 

எப்போதும் இந்த உலகம்

ஏழ்மை நிலையில் இருந்து

தன்னுடைய திறமையால்

உயர்ந்த நிலைக்கு வந்தவர்களை

தவறாகத் தான் சித்தரிக்கும்

என்பதற்கு அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்த அதிகார வர்க்கம்

ஏழைகளை மேலே விடாது என்பதற்கும்,

அப்படியே வந்தாலும் அவர்களை வாழ விடாது என்பதற்கும்,

அப்படியே வாழ்ந்தாலும் அவர்களை அழிக்காமல் விடாது என்பதற்கும்,

அப்படியே அழிக்கவே முடியவில்லை என்றாலும்,

அவர்களை அவமானப்படுத்தும் என்பதற்கும்,

அப்படியே அவமானப்படுத்த முடியவில்லை என்றாலும்,

அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயல்களைச் செய்து

அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதற்கும்

அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்களால்

திறமையானவர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த முடியும்

என்பதற்கு அஸ்வத்தாமன் மிகச் சிறந்த உதாரணம்

 

பணம் பதவி அதிகாரம் படைத்த அதிகார வர்க்ககத்தால்

அஸ்வத்தாமனுக்கு எவ்வளவு தான்

கெட்ட பெயரை ஏற்படுத்தினாலும்

இன்றும் அனைவருடைய இதயங்களிலும்

வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

 

கி.பி.4044--ம் வருடம்

கல்கி அவதாரம் எடுக்கும் சமயத்தில்

அஸ்வத்தாமனுக்கு முக்தி கிடைக்கும் என்றும்

அதுவே மனித குலத்தின் அழிவு என்றும்

சொல்லப்படுகிறது.

 

பரிட்சித்து மகாராஜன் அரியணை ஏறியதும்

தம் வாழ்நாளை முடித்துக் கொள்ள

இமயம் புறப்பட்ட பாண்டவர்கள்

அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும்,

அதன் பிறகு அவர் மனித சமுதாயத்தின்

கண்ணில் படவில்லை என்றும்

புராணங்கள் சொல்கின்றன.

 

காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பன் தான் அஸ்வத்தாமன்

காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்.

இறப்பு இல்லாத நாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

யாராலும் அழிக்க முடியாதவனாக கதாநாயகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன் தான் அஸ்வத்தாமன்

 

ஏனென்றால்

அஸ்வத்தாமன்

மரணமற்ற அஸ்வத்தாமன்

மரணமற்ற அஸ்வத்தாமன்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment