November 11, 2011

பதி--பசு--பாசம்


                 பதி--பசு--பாசம்
ஆன்மீக உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான ஒரு வார்த்தை பதி - பசு -பாசம் ஆகும்
பதி என்றால் கடவுள் அதாவது பரமாத்மா
பசு என்றால் ஆன்மா உயிர் அதாவது ஜீவாத்மா
பாசம் என்றால் ---- ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் இணைய விடாமல் தடுக்கும் ஆணவம்--கன்மம் --மாயை என்ற மும்மலங்கள்


இதனைத் திருமூலர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்
        ”"""ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
              ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
              ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
              ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே””””””””””
                                                                                -------திருமந்திரம் -----திருமூலர்--------

சிவன்--நந்தி---பலிபீடம்
இந்த பாடலின் தத்துவத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கோயிலில் உள்ள ஒரு அமைப்பை எடுத்துக் கொள்வோம்
சிவன் கோயிலில் சிவன் சிலை இருக்கும்
நேர் எதிரே நந்தி இருக்கும்
நந்திக்குப் பின்புறம் பலிபீடம் இருக்கும்

இந்த அமைப்பை சிவன் கோயிலுக்கு சென்ற அனைவரும் பார்த்திருப்பீர்கள் அதனை நம் மனக்கண் முன்னே கொண்டு வருவோம்
“”””””ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்”””””””
சிவன் கோயிலில் உள்ள சிவலிங்க மூர்த்தம் தான் பதி ஆகும்


“””””””ஆய பசுவும் அடலே றெனநிற்கும்””””””””
சிவலிங்கத்துக்கு எதிராக அதற்கு முன்னே உள்ளே வலிமை மிக்க காளை தான் ஜீவாத்மாவாகிய பசு ஆகும்

“”””””””ஆய பலிபீட மாகுநற் பாசமாம்””””””””
இந்த காளையாகிய நந்திக்குப் பின்னாக வட்ட வடிவில் கல் ஒன்று அமைந்திருக்கும் அது தான் பலிபீடம் எனப்படும் இந்த பலிபீடமே பாசம் ஆகும்


“””””””””ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே””””””””””
நம்முடைய உலக பந்தங்களை அதாவது பாசத்தை பலிபீடத்தில் வைத்து அழித்து விட்டால் அல்லது எரித்து விட்டால் ஜீவாத்மாவாகிய பசு பரமாத்வாகிய சிவனுடன் இணைகிறது
பதியாகிய சிவனை பசுவாகிய ஜீவாத்மா இணைய வேண்டும் என்றால் பாசமாகிய மும்மலங்கள் விலக வேண்டும் என்பதைக் குறிக்க அமைக்கப் பட்டதே சிவன்-நந்தி-பலிபீடம்

பதி-பசு-பாசம் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை தத்துவத்தை ரகசியத்தை யார் ஒருவர் அறிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்காமல் பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்புறாமல் ஞானம் அடைவர் என்கிறார் திருமூலர்
நந்தியின் காதுகளில் சொல்லுவது
சிவன் கோயிலில் நடக்கும் மற்றொரு செயலின் ரகசியத்தை இப்பொழுது பார்ப்போம்
சிவன் கோயிலில் நந்தியின் காதுகளில் சிலர் ஏதோ முணுமுணுப்பார்கள் நந்தியின் காதுகளில் நமக்கு என்ன தேவையோ அதை சொன்னால் நமக்கு தேவையானவை கிடைக்கும் என்பது ஐதிகம்

இதன் அர்த்தம் என்னவென்றால்
நாம் பிராணாயாமம் வாசியோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைச் செய்து மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் எனப்படும் மலக்காற்றோடு உள்ளே இழுக்கப்படும் பிராணன் எனப்படும் உயிர்க் காற்றைக் கலந்து ஆற்றல் மிக்க காற்றாக்கி

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறாதாரங்களைத் துளைத்து மேலேற்றி பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைக்க வேண்டும்
அவ்வாறு இணைத்தோமானால் அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது தான் அர்த்தம்

இருப்பு ---இயக்கம்-----உணர்வு
இந்த பதி--பசு--பாசம் என்ற மூன்றை சித்தாந்தவாதிகள் இருப்பு-- இயக்கம்-- உணர்வு என்ற மூக்கூறாக்கி கூறுகின்றனர்
இந்த இருப்பு நிலையைத் தான் கிறிஸ்தவர்கள் பிதா என்றும்

இருப்பு நிலை அசைந்து உண்டாகும் நுண்ணலையான விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரை கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவி என்றும்
உணர்வு நிலையான மனதை கிறிஸ்தவர்கள் சுதன் என்றும் கூறுகின்றனர்

இதனை ஒரு அட்டவணையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்
ஆன்மீகம் ------ சித்தாந்தவாதிகள் ----- கிறிஸ்தவர்கள்
பதி                                            இருப்பு                                          பிதா
பசு                                             இயக்கம்                                       பரிசுத்த ஆவி
பாசம்                                      உணர்வு                                        சுதன்

பதி-பசு-பாசம் என்பதைப் பற்றி திருமூலர் பல்வேறு பாடல்களின் மூலம் விளக்குகிறார் அதில் பதி -பசு பாசம் மூன்றினுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி திருமூலர் கூறும் பாடல் ஒன்றைப் பற்றி பார்ப்போம்

   
””””    "  பதிபசு பாசம் எனப்பகர்; மூன்றிற்
               பதியினைப் போற்பசு பாசம் அனாதி
               பதியினைச் சென்றது காப்பசு பாசம்
               பதியணு கிற்பசு பாசம் நில்லாவே”””””””
                                                                                      ------திருமந்திரம்--திருமூலர்-----

””    பதிபசு பாசம் எனப்பகர்; மூன்றிற்
     பதியினைப் போற்பசு பாசம் அனாதி””””””
ஆன்மீக உலகில் பதி-பசு-பாசம் என்ற மூன்று உண்டு இந்த மூன்றைப் பற்றி ஆராய்ந்தோமானால் பதி எனப்படுகின்ற பரமாத்மா எப்படி ஆதி நிலையாக, இருப்பு நிலையாக இருக்கிறதோ அதைப் போலவே பசு எனப்படுகின்ற ஜீவாத்மாவும் பாசமும் அனாதியே ஆகும்
அது எப்படி என்றால் ஆதிநிலை, முதல்நிலை, மூலநிலை, இருப்பு நிலை என்று சொல்லப்படுவது பதி எனப்படுகின்ற பரமாத்மா

இருப்பு நிலை அசைந்து நுண்ணலையான விண் என்று சொல்லப்படுகின்ற பசு ஆகிய ஜீவாத்மா உண்டாகிறது

இருப்பு நிலையும் இயக்க நிலையும் இணைந்து உண்டாவது தான் இந்த பிர்பஞ்ச தோற்றங்கள் எல்லாம் இது தான் பாசம் எனப்படுகிறது
இருப்பு நிலையிலிருந்து தான் பசு பாசம் இரண்டும் உண்டாவதால் அல்லது இருப்பு நிலையே இயக்க நிலையாக விரிவடைவதால் பதி எப்படி அநாதியோ பசு பாசம் இரண்டும் அநாதியே ஆகும்


””   பதியினைச் சென்றது காப்பசு பாசம்
     பதியணு கிற்பசு பாசம் நில்லாவே”””””””
பதி பாசம் என்றால் என்னவென்றும் அதில் உள்ள ரகசியங்கள் என்னவென்றும் உணர்ந்து கொண்டு இந்த உலக மாயையிலிருந்து விடுபட்டு ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைத்து விட்டால் பிறப்பு இறப்பற்ற நிலை உருவாகி விடும் முக்தி நிலை உருவாகி விடும்
இல்லையென்றால் மாயையில் அகப்பட்டு துன்பச் சகதியில் சுழன்று பிறப்பு, இறப்பு என்ற மாயையில் வாட வேண்டியது தான் என்கிறார் திருமூலர்



பதி-பசு-பாசம்---சின் முத்திரை
பதி -பசு- பாசத்தை விளக்கும் திருமூலர் கீழ்க்கண்ட பாடலில் சின்முத்திரையின் ரகசியத்தை தன் பாடலின் மூலம் விளக்குகிறார்
 ””””””பசுப்பல கோடி பிரமன் முதலாய்
           பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு
           பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற்
           பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே””””””””””
                                                                                      ---------திருமந்திரம்------திருமூலர்---------

“””””பசுப்பல கோடி பிரமன் முதலாய்””””””
பிரமன் - படைப்புக் கடவுள் படைப்புக்குக் காரணமாக இருப்பவர்
இருப்பு நிலை - இயக்க நிலைக்கு வரும் பொழுதே படைப்பு தோன்றி விட்டது

இருப்பு நிலை - இயக்க நிலைக்கு வரும் பொழுது தோன்றிய நுண்ணலையான விண் எனப்படுகின்ற ஜீவன் பல்கிப் பெருகி கோடான கோடி ஜீவன்களாக உருவாகி விட்டது இந்த ஜீவனைத் தான் நாம் பசு என்கிறோம்
இருப்பு நிலை அசைந்து இயக்க நிலைக்கு வரும் பொழுதே அதாவது படைப்பு என்பது தோன்றிய நாள் முதல் இன்று வரை பசு எனப்படுகின்ற உயிர் இந்த பிரபஞ்சம் முழுவதும் கோடிக்கணக்கில உருவாகி இந்த பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது



”””””பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு””””””
பசு எனப்படுகின்ற உயிரானது உலக பந்தங்களில் ஈடுபட்டு ஆணவம-கன்மம்-.மாயை என்ற மூன்றில் சிக்குண்டு தவிக்கிறது
ஆணவம்
நாம் ஒரு செயலைச் செய்கிறோம் அது பதிந்து விடுகிறது அந்த செயலின் மேல் கொண்ட பற்றுதலின் காரணமாக அந்த செயலைத் திரும்பத் திரும்பச் செய்கிறோம் நல்லன தவிர் தீய செயல்களை திரும்ப திரும்ப செய்ய செய்ய துன்பம் அதிகரிக்கும் தீய செயல்களைச் செய்வதன் மூலம் உண்டாகும் விளைவு தீயதாகத் தான் இருக்கும் என்று தெரிந்தும் செய்யக் கூடாத செயல்களையே மனிதன் செய்கிறான் தகாத செயல்களிலேயே ஈடுபடுகிறான் இது தான் ஆணவம்


கன்மம்
இந்த ஆணவத்தின் காரணமாக மனிதனுக்கு ஆறு குணங்கள் உண்டாகின்றன அவையாவன காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகியவை ஆகும் இந்த ஆறு குணங்கள் வாயிலாக செயல்கள் செய்யும் போது துன்பமே விளைவிக்கக் கூடிய செயல்கள் மட்டுமே தான் விளையும் அதைத் தான் கன்மம் என்கிறோம்


மாயை
ஆணவத்திலேயும் கன்மத்திலேயும் சிக்கிக் கொண்ட மனதிற்கு சிந்தித்து செயல்படக் கூடிய தன்மை இருக்காது இதைச் செய்ய வேண்டும் இதைச் செய்யக் கூடாது செய்தால் என்ன விளைவு உண்டாகும் என்பது தெரியாமல் செயலைச் செய்து துன்பங்களை அனுபவித்து ஒரு வித மயக்கத்தில் இருக்கக் கூடிய நிலை மாயை எனப்படும்

இந்த ஆணவம் -கன்மம்-மாயை எனப்படுகின்ற பாசத்தை செய்து ஜீவாத்மாவில் (உயிரில்) மூன்று களங்கங்களை ஏற்படுத்திக் கொள்கிறான்


””””பசுத்தன்மை நீக்கியப் பாசம் அறுத்தாற் 
         பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே”””””””””” 
பசு எனப்படுகின்ற ஜீவாத்மாவை களங்கப் படுத்தி வைத்திருப்து பாசம் பாசத்தின் மூன்று அங்கங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றில் சிக்கிண்டு மனிதன் செய்யும் செயல்கள் கர்ம வினைகளாக பதிந்து விடுகிறது
இந்த கர்ம வினைகளை தவம், பிரணாயாமம் வாசியோகம் போன்றவற்றால் நீக்கி விட்டால் ஜீவாத்மா துhய்மை அடைந்து விடும். எந்த ஜீவாத்மா கர்ம வினைகள் நீக்கப் பட்டு துhய்மை அடைந்து இருக்கிறதோ அந்த ஜீவாத்மாவே பரமாத்மாவிடம் இணையும்
கர்ம வினைகள் கழிக்கப் பெறாத ஜீவாத்மா பர்மாத்மாவுடன் இணையாது பிறப்பு இறப்பு என்ற பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்பச் சகதியில் சுழல வேண்டியது தான்

இந்த தத்துவத்தை விளக்குவதற்காகவே முனிவர்களும் யோகிகளும் ஒரு முத்திரையை பயன்படுத்துகின்றனர் அது தான் சின் முத்திரை


சின்முத்திரை
சின்முத்திரை என்பது இந்த சமூகத்திற்கு ஒரு ரகசியத்தை சொல்லுவதற்காக காட்டப்படும் ஒரு முத்திரை ஆகும்


சின்முத்திரை சொல்லும் தத்துவம் இதுதான்

1. முதலில் வலது கையை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஐந்து விரல்கள் இருக்கின்றன
2. சுண்டு விரல் ஆணவம் எனப்படுகிறது
3. மோதிர விரல் கன்மம் எனப்படுகிறது
4. நடுவிரல் மாயை எனப்படுகிறது
5. ஆள்காட்டி விரல் ஜீவாத்மா எனப்படுகிறது
6. கட்டை விரல் பரமாத்மா எனப்படுகிறது


ஜீவாத்மாவுடன் ஒட்டியிருக்கும் ஆணவம் - கன்மம்- மாயை ஆகியவற்றை விலக்கி விட்டு ஜீவாத்மா விலகி வந்தால் பரமாத்மாவுடன் இணையும் என்ற தத்துவத்தைக் குறிப்பதற்காகவே சின்முத்திரை காட்டப்படுகிறது












திரௌபதி- பட்டினத்தார்


                 திரௌபதி- பட்டினத்தார்
பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் கௌரவர்களில் துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கூட்டி வந்து சபையில் அவள் சேலையை உருவும் போது கண்ணன் (கடவுள்) வந்து காப்பாற்றினான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்
இதில் ஒரு கருத்து மறைந்துள்ளது அது என்னவென்று இப்பொழுது பார்ப்போம்

திரௌபதி
திரௌபதி தன் இரண்டு கைகளாலும் தன் உடலை மூடி கடவுளே காப்பாற்று என்றாள் கடவுள் வரவில்லை
தன் உடலை ஒரு கையால் மூடி ஒரு கையை மேலே துhக்கி கடவுளே காப்பாற்று என்றாள் கடவுள் வர்வில்லை

தன் இரண்டு கைகளையும் மேலே துhக்கி கடவுளே காப்பாற்று என்றாள் அப்பொழுது தான் கடவுள் வந்து புடவை கொடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றினார்
அதாவது தன் இரண்டு கைகளாலும் தன் உடலை மூடி தன் மானத்தை தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று திரௌபதி முயற்சி செய்யும் பொழுது கடவுள் வரவில்லை

ஒரு கையால் தன் உடலை மூடியாவது தன் உடலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திரௌபதி முயற்சி செய்யும் பொழுதும் கடவுள் வரவில்லை
இரண்டு கைகளையும் மேலே துhக்கி தன் மானத்தை தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று திரௌபதி உணர்ந்து கடவுளே காப்பாற்று என்று கூறும் பொழுது கடவுள் வந்து திரௌபதிக்கு புடவை கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றினான்

இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது

இதைத் தான் சரணாகதி என்பார்கள்
பட்டினத்தார்
சரணாகதியைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பட்டினாத்தார் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்
பட்டினத்தார் விநாயகர் ஆலயத்திற்குள் சென்று உள்ளே அமர்ந்து தியானத்திலிருந்தார் அவரைச் சுற்றி அந்த இடத்தைச் சுற்றி இருள் சூழ்ந்திருந்தது

அம்மாதிரி அவர் தியானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் அவ் வழியாக வந்த திருடர்கள் தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரை பிள்ளையார் என்ற நினைத்து அவரிடம் வேண்டுதல் செய்தனர்

நாங்கள் இன்று இந்த ஊரை ஆண்டு கொண்டிருக்கும் பத்திரகிரி மன்னருடைய மாளிகையில் சென்று திருடப் போகிறோம் அப்படி திருடி நாங்கள் மாட்டாமல் வந்தால் உனக்கு அதாவது பிள்ளையாருக்கு ஒரு பங்கு தருகிறோம் என்று வணங்கி விட்டு சென்றனர்
அவ்வாறே அவர்கள் அந்த ஊரை ஆளும் பத்திரகிரி மன்னருடைய மாளிகையில் புகுந்து பட்டாடைகளையும் அணிகலன்களையும் பிற பொருள்களையும் திருடிக் கொண்டு திரும்புகையில் மீண்டும்

அவ் விநாயகர் ஆலயம் அடைந்து விநாயகரிடம் வேண்டிக் கொண்டதின் படி விநாயகருக்கு ஒரு பங்கு தர நினைத்து ஒரு விலையுயர்ந்து மாலையை இருளில் தியானத்தில் அமைர்ந்து கொண்டு இருந்த பட்டினத்தாரை விநாயகர் என்று நினைத்து அந்த மாலையை பட்டினத்தார் அவர் கழுத்தில் அணிந்து விட்டு சென்றார்கள்
திருட்டுப் போன விஷயங்கள் தெரியவர காவலர்கள் ஊர் முழுவதும் சோதனை செய்து வரும் பொழுது தியானத்தில் இருந்த பட்டினத்தார் கழுத்தில் இருந்த மாலையைக் கண்டனர் பட்டினத்தார் தான் மாளிகையில் புகுந்து திருடினார் என்று முடிவு கட்டி அவரை பலவாறு துன்புறுத்தியதால் அவர் தியானத்தில் இருந்து விழித்துக் கொண்டார்

காவலாளிகள் பட்டினத்தாரை அழைத்துக் கொண்டு போய் அர்சமன்றமேற்றினர் அர்சர் உண்மை நிலை எது என்று அறியாத பட்டினத்தாரை கழு மர்த்தில் ஏற்ற ஆணை இட்டார்
தண்டனையை நிறைவேற்றுபவர்கள் பட்டினத்தாரை கழுமர்த்திற்கு கொண்டு சென்றார்கள்

அந்த இக்கட்டான சூழ்நிலையில் பட்டினத்தார் பாடிய பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
“”””””என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
     உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
     பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
     முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே””””””””

                                                                                       ----------பட்டினத்தார்;------------------


“””என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
   உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன்”””””;
நான் குற்றமற்றவன் என்பதை நிருபிக்க எத்தகைய உண்மைகளைச் சொல்ல வேண்டுமோ அந்த உண்மைகளை எல்லாம் சொல்லி விட்டேன்
எத்தகைய செயல்களை செய்தால் நான் குற்றமற்றவன் என்று நிருபிக்க முடியுமோ அத்தகைய செயல்களை எல்லாம் செய்து விட்டேன்

நான் குற்றமற்றவன் என்பதை நிருபிக்க எந்த அளவு முயற்சி எடுக்க முடியுமோ அந்த அளவு முயற்சி எடுத்து விட்டேன் ஆனால் நான் குற்றமற்றவன் என்பதை இந்த உலகமும் நம்பவில்லை இந்த ஊரில் உள்ள மன்னரும் நம்பவில்லை
அதனால் என்னுடைய உயிரை என்னால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன் மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வ சக்தியால் அதாவது கடவுளால் மட்டுமே என்னுடைய உயிரை காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்



“”””பின்செய்த தீவினையாதொன்று மில்லை””””
பின் செய்த தீpவினை என்றால் பிறந்த பின் செய்த தீவினை என்று பொருள்
பிறந்த பின் செய்த தீவினை என்பது பிராரப்த கர்மம் ஆகாம்ய கர்மம் ஆகிய இரண்டு கர்ம வினைகள் ஆகும்

பிராரப்த கர்மம்
நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள் பிராரப்த கர்மம் என்று அழைக்கப் படுகிறது
நாம் பிறந்து வாழும் காலத்தில் செய்யும் செயல்களின் விளைவுப் பதிவு தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை நம் ஆன்மாவில் பதிந்து திரும்ப திரும்ப ஆன்மாவுக்கு நினைவு ஊட்டி செயலுக்கு மாற்றும் விதியை பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம்

ஆகாம்ய கர்மம்
ஆ என்றால் ஆன்மா காம்யம் என்றால் இச்சை ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது ஆகாம்ய கர்மம் எனப்படும்
சஞ்சித கர்மம் பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய செயல்களின் பதிவுகளால் இனி என்ன செய்ய வேண்டும் என்று துhண்டப்படும் எண்ணங்களும் செயல்களும் ஆகாம்ய கர்மம் எனப்படும்

பின்செய்த தீவினையாதொன்று மில்லை என்றால்
பின் செய்த தீவினை என்று சொல்லப்படக் கூடிய சஞ்சித கர்மம் பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு கர்ம வினைகளையும் என் தவ வலிமையால் எரித்து விட்டேன் எனவே பின்செய்த தீவினையால் எனக்கு இந்த துன்பம் நடைபெற எந்த காரணமும் இல்லை என்று பொருள்



““”பிறப்பதற்கு முன்செய்த தீவினையோலிங் ஞனேவந்து மூண்டதுவே”””
முன் செய்த தீவினையே எனக்கு இந்த துன்பம் நடைபெற காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் பட்டினத்தார்

முன் செய்த வினை என்பது பிறப்பதற்கு முன் செய்த வினை ஆகும் பிறப்பதற்கு முன் செய்த வினை சஞ்சித கர்மம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது

சஞ்சித கர்மம்
சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர் முதல் பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம் கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள் அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள் சஞ்சித கர்மம் என்று அழைக்கப் படுகிறது
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே என்றால்

பிறப்பதற்கு முன் செய்த தீவினை என்று சொல்லப் படக்கூடிய சஞ்சித கர்மத்தால் ஏற்பட்ட விளைவே தான் கழுமரம் ஏற்றப்பட்டதற்குக் காரணம் என்று பொருள்
பட்டினத்தார் இந்த பாடலைப் பாடி முடித்ததும் உடனே கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று இச்செய்தி கேட்ட அந்த ஊரின் மன்னர் பத்திரகிரியார் விரைந்து வந்து அவர் பாதம் பணிந்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினான்

திரௌபதி தன் மானத்தை காக்க கடவுளிடம் சரணாகதி அடைந்தாள் அவள் மானம் காப்பாற்றப்பட்டது பட்டினத்தார் தன் உயிரை காக்க கடவுளிடம் சர்ணாகதி அடைந்தார் அவர் உயிர் காப்பாற்றப் பட்டது
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் மனித சக்தியால் ஒரு செயல் முடியாது என்ற நிலை வரும் பொழுது தான் தெய்வ சக்தி வந்து நம்மை காப்பாற்றும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்




















பிரணவ தவம்




                              பிரணவ தவம்


பிரணவ தவம் உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமாக செய்யப்படுகிறது

பிரணவ தவத்தை திபெத்தியர்கள் செய்கிறார்கள் அதில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் செய்யப்படுகிறது இந்தியர்கள் அதனை கற்று தங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி செய்கிறார்கள்


பிரணவ தவம் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களால் மட்டுமே செய்யப்படுகிறது இந்த தவம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மனிதர்களால் மட்டுமே செய்யப்படக் காரணம் இந்த தவத்தின் சிறப்புகள் மற்றும் அதன் மகிமைகள் பல பேருக்கு தெரியாத காரணத்தால் தான்
பிரணவ தவத்தை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சொல்லலாம்

ஓம் காரம் எழுச்சி------- பிரணவம்
ஓம் தான் பிரணவம்
ஓம் என்ற சொல்லின் உட் பொருள் தான் பிரணவம்
பிரணவம் தான் இறைநிலையின் அடையாளம் ஓம் ------ம்----?---------ம்

 பிரணவ தவம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

1 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது
2 ஆன்மா பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் சக்தியைப் பெறுகிறது
3 ஆன்மா பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறிந்து கொள்ளும் படி செய்கிறது
4 நம் ஆன்மாவுடன் மற்ற ஆன்மாக்கள் இணக்கமாக செல்லும் நிலையைப் பெறுகிறது

பிரணவ தவம் செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை
பிரணவ தவம் அதிகாலை 03.00 மணியிலிருந்து அதிகாலை 08.00 மணிவரை செய்யலாம்
பிரணவ தவம் அதிகாலை 03.00 மணியிலிருந்து அதிகாலை 05.00 மணிவரை செய்வது உத்தமம்
பிரணவ தவம் யாரும் இல்லாத தனி அறையில் செய்ய வேண்டும்
தவம் செய்வதற்கு முன் காப்பு மந்திரம் போட வேண்டும்
காப்பு மந்திர்ம் தெரியாதவர்கள் திக்கு கட்டு உடல் கட்டு போன்ற கட்டு மந்திரங்களை கண்டிப்பாக  போட வேண்டும்


பிரணவ தவம் செய்யும் முறை
பிரணவ தவம் செய்யும் முறையில் இரண்டு படிநிலைகள் உள்ளன

படிநிலை -1
1 முதலில் தனி அறையில் அமர வேண்டும்
2 பிறகு தன்னைச் சுற்றி காப்பு மந்திரம் போட வேண்டும்
3 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் தன்னைச் சுற்றி கட்டு மந்திரம் போட வேண்டும்

4 மூலாதாரத்தில் மனதை செலுத்தி ஓம் என்று உச்சரித்து மூச்சை இழுத்துக் கொண்டே துரியம் வரை    செல்ல வேண்டும்
5 மூச்சை விட்டுக் கொண்டே துரியத்திலிருந்து மூலாதாரம் வரை வர வேண்டும்
6 மேலே சொன்னபடி தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும்

மூலாதாரம்----முதல்------- துரியம்----வரை----------ஓம்------10 முறை
 துரியம்-------முதல்--------மூலாதாரம்---வரை
7  அதைப் போலவே மூலாதாரத்தில் மனதை செலுத்தி ஓம் என்று உச்சரித்து மூச்சை இழுத்துக் கொண்டே துவாத சாங்கம் வரை செல்ல வேண்டும்
8  மூச்சை விட்டுக் கொண்டே துவாதசாங்கத்திலிருந்து  மூலாதாரம் வரை வர வேண்டும்
9 மேலே சொன்னபடி தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும்
மூலாதாரம்-----முதல்------துவாத சாங்கம்---வரை----ஓம் ------10 முறை
துவாதசாங்கம்---முதல்---- மூலாதாரம்-------வரை

மேற்கண்ட செயல்களை எப்படி செய்தோமோ அப்படியே கீழ்க்கண்ட செயல்களையும் செய்ய வேண்டும்
மூலாதாரம்------முதல்-----சக்தி களம்-----வரை-----ஓம் ------10 முறை
சக்தி களம்------முதல்-----மூலாதாரம்------வரை
மூலாதாரம்-----முதல்------சிவ களம்-----வரை------ஓம் -----10 முறை
சிவ களம்------முதல்----- மூலாதாரம்----வரை
மூலாதாரம்------முதல்-----துரியம்------வரை--------ஓம் -----10 முறை
துரியம்----------முதல்-----மூலாதாரம்--வரை

படி நிலை 2
1  மூலாதாரத்திற்கும் துரியத்திற்கும் கம்பி போல் ஒரு இணைப்புக் கொடுத்து முதலில் சூக்கும் சரிரீத்த உடலின் இருபுறமும் மூன்று அடி அகலம் வரை விரிக்க வேண்டும்
2  பிறகு வீட்டு அளவு சூக்கும சரிரீரத்தை விரிக்க வேண்டும்
3  பிறகு ஊர்  அளவு சூக்கும சரிரீரத்தை விரிக்க வேண்டும்
4  பிறகு  மாநில அளவு நாடு அளவு சூக்கும சரிரீரத்தை விரிக்க வேண்டும்     
5  சூக்கும சரிரீரம் விரிந்த நிலையிலேயே தவம் செய்ய வேண்டும்
6  தவத்தினை முடிக்கும் போது நாடு அளவு மாநில அளவு ஊர்  அளவு வீட்டு அளவு உடலைச் சுற்றி மூன்று அடி இறுதியாக துரியம் வந்து தவத்தை நிறைவு செய்ய வேண்டும்
பிரணவ தவத்தை செய்யும் போது சூக்கும உடலை உடலுக்கு மேலே கொண்டு சென்று பிரபஞ்சத்தில் கலக்கிறோம்  அதைப் போல பக்க வாட்டில் சூக்கும உடலை விரித்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறோம்


சூக்கும உடலை பிரபஞ்சத்தில் இணைத்து தவம் இயற்றுவதால் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுடன் இணக்கமாக செல்லும் தன்மையை சூக்கும உடல் பெறுகிறது


சூக்கம உடலில் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் பதிவாகி விடுகிறது காலம் வரும் போது வெளிப்படுகிறது


பிரணவ தவம் சோதித்து அறியும் முறை
நாம் புதிதாக ஒரு இடத்துக்குச் செல்கிறோம் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் நமக்கு அறிமுகம் ஆகாதவர்கள் என்று வைத்துக் கொள்வோம்
அந்த இடத்தில் பிரணவ தவம் பண்ணும் பொழுது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நமக்கு நெருங்கிய நண்பர்கள் போலவும் நாம் சொல்லும் வேலைகளைச் செய்பவர்களாகவும் நமக்கு அடங்கி நடப்பவர்களாகவும் இருப்பார்கள்

இதிலிருந்து பிரணவ தவத்தின் சக்தி நமக்கு அதிகரித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்


ஓரே ஒரு எச்சரிக்கையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் பிரணவ தவத்தை அதிகமாக பண்ணக் கூடாது ஏனென்றால் மனம் பித்து பிடித்து விடும் சித்த பிரமை வந்தது போல் ஆகிவிடும்


எனவே பிரணவ தவத்தை ஒரு அளவோடு பண்ணுவது அனைவருக்கும் நலம்









November 02, 2011

கட்டு மந்திரம்


கட்டு மந்திரம்

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்

நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


திக்கு கட்டு
1.             திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.             புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு    
     முன்புறம் போடவும்
3.             வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4.             சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5.             மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்

குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்

பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை  நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே                      
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே



உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)


கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்


தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் 

பிள்ளையார் தோப்புக்கரணம்


பிள்ளையார் தோப்புக்கரணம்

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம் எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டு உள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்

இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது

இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும் இதயத்தில் ஒரு பின்னல் போட்டும் புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது

வலது கால் பெருவிரவலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும் இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும் புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது

சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள்ள ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்

நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது

அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறதுஅதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது

பல தடவை தொடர்ந்து தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தியை துhண்டி மேலே எழ வைக்கிறதுதோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுந்து சுழுமுனை நாடி வழியாக புருவமத்தியில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது

ஜப்பானில் ஜென் புத்த மதத்துறவிகள் இந்த தோப்புக் கரணத்தை குண்டலினி சக்தியை கிளப்புவதற்கு உபயோகப் படுத்துகிறார்கள்

நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்ப தோப்புக் கரணம் போடுகிறோம் இந்த தோப்புக் கரணத்தை பிள்ளையாருக்கு மட்டும் ஏன் போட வேண்டும் பிள்ளையார் சிலை முன் ஏன் போட வேண்டும் என்பதை பார்ப்போம்

மனிதர்களுடைய உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன ஒவ்வொரு ஆதாரத்திற்கும் ஒரு தெய்வசக்தி உண்டு ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ள தெய்வ சக்தியின் அருள் நமக்குக் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெற முடியும்

ஆறு ஆதாரங்களும் அந்த ஆதாரங்களுக்கு உரிய தெய்வசக்திகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
ஆதாரம்                      தெய்வசக்திகள்
மூலாதாரம்  -------------           விநாயகர்
சுவாதிட்டானம் ------------          பிரம்மா
மணிபு+ரகம்  -----------------                 விசணு
அநாகதம்    ------------             ருத்திரன்
விசுக்தி           -------------      மகேஸ்வரன்
ஆக்கினை   -------------            சதாசிவன்

இந்த ஆறு ஆதார தெய்வ சக்திகளின் அருளால் கிடைப்பது தான் சகஉறஸ்ரார சித்தி ஆகும்

மேற்கண்ட காரணங்களால் தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்

கரும்புள்ளி பயிற்சி

                                  

                              கரும்புள்ளி பயிற்சி

கரும்புள்ளி பயிற்சி மிக குறைந்த எண்ணிக்கையுடைய மனிதர்களால் மட்டுமே செய்யப்படுகிறது.
இப்பயிற்சியில் நம்முடைய உயிராற்றல் சக்தி செலவாகிறது

இப்பயிற்சி ஒருவரை அவருடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க வைப்பதற்காகவும் மற்றவர்களை வைத்து தன்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் மற்றவர்களை தனக்கு அடிமையாக வேலை வாங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது

இது பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற செயல்கள் செய்பவர்களின் ஆரம்ப நிலை பயிற்சியாக இருந்து வருகிறது மனிதர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற பலன்கள் உடனே கிடைத்து விடுகிறது

இந்த பயிற்சியை செய்பவர்கள் சக்தி அவர்கள் உள்ளேயே இருக்கும் வெளியே சென்று இயங்காது கரும்புள்ளி பயிற்சி மூலம் கிடைத்த சக்தியை சோதனை செய்ய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன


கரும்புள்ளி பயிற்சியின் ரகசியத்தை கீழ்க்கண்டவாறு சொல்லலாம்
மந்திரம் என்பது கரும்புள்ளி பயிற்சி அட்டை
யந்திரம் என்பது பயிற்சி செய்பவர்
தந்திரம் என்பது தான் சூட்சுமம்



கரும்புள்ளி பயிற்சி செய்வதால் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுகிறது
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் உடலில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் மனது எப்பொழுதும் வருத்தமுடன் இருப்பது போலவே தோன்றும் கவலையாக இருப்பதற்குரிய அறிகுறிகள் முகத்தில் தோன்றும்

கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் சாலையில் நடந்து செல்லும் போதும் வீட்டில் சில நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் அடிக்கடி தவறி விழுந்து விடுவார்கள் சிறுசிறு விபத்துக்கள் கூட ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு 

குடும்பத்தில் இருந்து கொண்டு இந்த பயிற்சியை செய்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது



கரும்புள்ளி அட்டை செய்யும் விதம்
1 பாஸ்போர்ட் கார்ட் அளவு உள்ள ஒரு வௌளை அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்
2 அதன் மையத்தில் ஒரு 25 பைசா வைத்து அதனைச் சுற்றி ஒரு வட்டம் வரைய வேண்டும்
3 வரையப்பட்ட அந்த 25 பைசா வட்டத்திற்குள் கருப்பு நிற மையினால் வர்ணம் அடிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி செய்வதற்கு உரிய கரும்புள்ளி அட்டை தயாராகி விட்டது


கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
1 கரும்புள்ளி பயிற்சியை அதிகாலை 03.00 மணியிலிருந்து 08.00 மணிக்குள் செய்ய வேண்டும்
2 அதிகாலை 03.00 மணியிலிருந்து 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்
3 அதிகாலை 08.00 மணிக்கு மேல் கண்டிப்பாக கரும்புள்ளி பயிற்சி செய்யக் கூடாது
4 கரும்புள்ளி பயிற்சியை தனியாக அமர்ந்து தனி அறைக்குள் தான் செய்ய வேண்டும்
5 கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும்
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு உடல்கட்டு போன்ற கட்டு மந்திரங்களை தன்னைச் சுற்றி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்



கரும்புள்ளி பயிற்சி முறை 1
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 2 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை மட்டுமே பார்க்க வேண்டும்
4 பிறகு கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும்
5 மேற்கண்ட செயல்முறையை மூன்று முறை அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


கரும்புள்ளி பயிற்சி முறை 2
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 தியானம் தெரிந்தவர்கள் நெற்றிக்கண்ணில் தனது நினைவை செலுத்த வேண்டும் நெற்றிக் கண்ணில் உறுத்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும்
4 பிறகு கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 20 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை பார்க்க வேண்டும்
5 கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும் அவ்வாறு கவனிக்கும் போது நெற்றிக்கண்ணில் மனதை நிறுத்தி உள்ளே கவனிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக செய்யப்பட்டாலும் அதில் உள்ள சிறந்த இரண்டு முறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவர நமது உடலில் சக்தி படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கும் வளர்ந்த சக்தியை ஒவ்வொரு படிநிலையிலும் பரிசோதனை செய்ய சில செயல்முறைகள் உள்ளன
முதல் படிநிலையில் அடைந்த சக்தியை சோதனை செய்ய கீழ்க்கண்ட பரிசோதனையை செய்து பார்க்கலாம்


சோதனை முறை
நாம் பேருந்திலோ இரயிலிலோ பயணம் செய்கிறோம் அவ்வாறு பயணம் செய்யும் போது நமக்கு முன்னால் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ள வேண்டும்

அவருடைய முதுகு பக்கத்தை தொடர்ந்து பார்த்து நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து நமது மனதுக்குள் சொல்லி வர வேண்டும் அவ்வாறு தொடர்ந்து சொல்லி வரும்பொழுது அவர் திரும்பி நம்மை பார்ப்பார்

இச் சோதனை முதல் படிநிலையில் வளர்ந்த சக்தியை அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது

இதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளுக்கான பல்வேறு சோதனைகள் உள்ளன
கரும்புள்ளி பயிற்சி முறை தவறானவர்களால் தவறான காரியத்திற்கு பயன்படுத்தப்படுவதால்மற்ற சோதனை முறைகள் மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது

மனித இனம் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி முறைகள் தவறாக பயன் படுத்தப் பட்ட காரணத்தால் பல்வேறு பயிற்சி முறைகள் மறைபொருளாக வைக்கப் பட்டிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்

அறிந்து கொண்ட பயிற்சி முறைகளை நல்ல காரியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம்.