March 29, 2022

ஜபம்-பதிவு-719 (சாவேயில்லாத சிகண்டி-53)

 ஜபம்-பதிவு-719

(சாவேயில்லாத

சிகண்டி-53)

 

ஆனால் நான்

எந்த ஒரு பாவமும்

செய்யவில்லை

அப்படி

இருக்கும் போது

எனக்கு ஏன்

இத்தனை கஷ்டங்கள்

எதற்காக இப்படி

கஷ்டப்படுகிறேன்

நான் ஏன்

கஷ்டப்பட வேண்டும்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

உனக்கு நேர்ந்த

இந்த கஷ்டங்கள்

சென்ற பிறவிகளில்

நீ செய்த

கர்ம வினையினால்

உனக்கு நேர்ந்த

கஷ்டங்களாக

இருக்கலாம்

 

அல்லது

 

உன்னுடைய

பெற்றோர்கள்

உன்னுடைய

முன்னோர்கள்

செய்த செயல்களால்

உண்டான

கர்மவினையின்

விளைவாகக்

கூட இருக்கலாம்

 

அம்பை :

நான் செய்த

கர்மவினையின்

விளைவுகளை

நான் அனுபவித்தால்

ஏற்றுக் கொள்ளலாம்

அதை சரி என்று

கூட சொல்லலாம்

 

ஆனால்

மற்றவர்கள் செய்த

கர்மவினையின்

விளைவுகளை

நான் ஏன் ஏற்றுக்

கொள்ள வேண்டும்

அது தவறல்லவா

 

எனக்கு சம்பந்தம்

இல்லாத

கர்மவினையின்

விளைவுகளை

நான் ஏன்

அனுபவிக்க

வேண்டும்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

கர்மவினையைப்

பற்றி நீ கேட்ட

இந்த

கேள்வியைத் தான்

இந்த உலகத்தில்

உள்ள

அனைவரும்

கேட்டுக்

கொண்டிருக்கிறார்கள்

 

இந்த கேள்விக்கான

பதிலை கேட்டுத்

தெரிந்து

கொள்ள முடியாது

உணர்ந்து தான்

தெரிந்து

கொள்ள முடியும்

 

கர்மவினையைப்

பற்றி

படித்தவர்களால்

இந்த கேள்விக்கு

பதிலளிக்க

முடியாது

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தவர்கள்

மட்டுமே இந்த

கேள்விக்கு

பதிலளிக்க முடியும்

 

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தவர்கள்

சொன்னாலும்

உணர்ந்தால்

மட்டுமே

கர்மவினையைப்

பற்றி

மற்றவர்கள் புரிந்து

கொள்ள முடியும்

உணராமல்

கர்மவினையைப்

பற்றி புரிந்து

கொள்ளவே முடியாது

 

கர்மவினையைப்

பற்றி

பெரும்பாலும்

யாரும்

எழுதியிருக்க

மாட்டார்கள்

கர்மவினையைப்

பற்றி

கேள்விகள்

கேட்டால்

பெரும்பாலானவர்கள்

பதில் தெரியாததால்

சொல்லவும்

மாட்டார்கள்

கர்மவினையைப்

பற்றி

கேள்விகள் கேட்டாலே

பெரும்பாலானவர்கள்

அதைத் தவிர்த்து

விட்டுச் சென்று

விடுவார்கள்

 

ஆன்மீகத்தில்

உயர்நிலையில்

இருப்பதாக தங்களைக்

காட்டிக் கொள்பவர்கள்

கர்மவினை

சம்பந்தப்பட்ட

கேள்விகளை மட்டும்

கேட்காதீர்கள்

என்று தடையே

போட்டு

வைத்திருப்பவர்களும்

உண்டு

 

கர்வினையைப் பற்றி

கேள்விகள் கேட்டாலே

ஓடி ஒளிந்து

கொள்பவர்களும்

உண்டு 

 

ஆன்மீகத்தில்

உயர்ந்தவர்கள் என்று

தங்களைச் சொல்லிக்

கொள்பவர்களில்

பெரும்பாலானவர்கள்

கர்மவினையைப்

பற்றி

உணராதவர்களாகத்

தான் இருக்கிறார்கள்

ஏனென்றால்

கர்மவினையைப்

பற்றி

அறிந்தவர்கள் அதிகம்

உணர்ந்தவர்கள்

குறைவு

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 -----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-718 (சாவேயில்லாத சிகண்டி-52)

 ஜபம்-பதிவு-718

(சாவேயில்லாத

சிகண்டி-52)

 

(ராஜரிஷியும் தவசியுமான

ஹோத்திரவாஹனர்

அம்பை

தங்கியிருக்கும்

ஆசிரமத்திற்கு

வந்தார்.

அம்பையைப் பற்றிய

அனைத்து

விவரங்களையும்

கேட்டறிந்த

ஹோத்திரவாஹனர்

அம்பையிடம் பேசத்

தொடங்கினார்.)

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

உன்னைப் பற்றிய

விவரங்கள்

அனைத்தையும்

கேட்டுத் தெரிந்து

கொண்டேன்

 

நீ யார்

என்பதைத் தெரிந்து

கொண்டேன்

 

நீ என்னுடைய

பரம்பரை என்பதைத்

தெரிந்து கொண்டேன்

 

உனக்கும் எனக்கும்

இரத்த சம்பந்தம்

இருக்கிறது என்பதைத்

தெரிந்து கொண்டேன்

 

ஆமாம்

அம்பையே

உன்னுடைய

தாய் புராவதி

என்னுடைய மகள்

நீ என்னுடைய

மகளுடைய மகள்

 

கர்மவினையினால்

உன் தாயை

விட்டுப் பிரிந்திருக்க

வேண்டிய சூழ்நிலை

எனக்கு ஏற்பட்டு

விட்டது

அதே கர்மவினை

தான் உன்னையும்

என்னையும்

இப்போது ஒன்றாக

சேர்த்திருக்கிறது

 

ஒரு குடும்பத்தில்

உள்ள ஒருவர்

தவம் செய்தால்

அவர் தவம்

செய்ததினால்

அவருக்குக் கிடைத்த

தவசக்திகள்

அவர் சார்ந்த

குடும்பத்தில்

உள்ளவர்கள்

யாரேனும்

கஷ்டப்பட்டால்

அவர்கள்

எங்கிருந்தாலும்

எந்த

இடத்திலிருந்தாலும்

அவர்களை

அந்த

கஷ்டத்திலிருந்து

காப்பாற்றுவதற்காக

தவம்

செய்தவருடைய

தவசக்திகள்

உதவும் என்று

ஆன்மீக நூல்கள்

கூறுகின்றன

 

நம்முடைய

குடும்பத்தில்

நான் தவம்

செய்ததினால்

எனக்குக் கிடைத்த

தவசக்திகள்

எங்கோ

கஷ்டப்பட்டுக்

கொண்டிருந்த

உ.ன்னுடைய

கஷ்டத்தைப்

போக்குவதற்காக

உன்னை என்னிடம்

கொண்டு வந்து

சேர்த்திருக்கிறது

 

கர்மவினையில்

உண்டாகும்

விளைவின்

தாக்கத்தைத்

தடுக்க முடியாது

ஆனால்

அதனுடைய

தாக்கத்தைக்

குறைக்கலாம்

 

கர்மவினையினால்

அல்லலுறும்

உன்னுடைய

கஷ்டங்களை

நான் போக்குவேன்

அதற்கு எத்தகைய

செயல்களைச்

செய்ய வேண்டுமோ

அதைச் செய்வேன்

 

உன்னை

கஷ்டத்திலிருந்து மீட்டு

வருவதற்கு

என்னால் என்ன

செய்ய முடியுமோ

அதைச் செய்வேன்

 

அம்பை :

பெற்றோர்களுடனும்

காதலனுடனும்

உறவுகளுடனும்

தோழிகளுடனும்

அன்பால் பிணைந்து

இளவரசியாக

வாழ்ந்த நான்

இப்போது யாரும்

இல்லாத

அனாதையாக

நிர்க்கதியாய்

நிற்பதற்குக்

காரணம் என்ன

 

என்னுடைய இந்த

அவல நிலைக்குக்

காரணம் என்ன

 

நான் பிறந்தது முதல்

இப்போது வரை

யாருக்கும் துரோகம்

செய்ததில்லை

 

யாருடைய

குடியையும்

கெடுத்ததில்லை

மனதால் கூட

யாரும் கெட்டுப்

போக வேண்டும்

என்று

நினைத்ததில்லை

 

பாவம்

செய்திருந்தால்

கர்மவினையின்

விளைவானது

என்னை பாதித்து

இருக்க வேண்டும்

 

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

March 25, 2022

ஜபம்-பதிவு-717 (சாவேயில்லாத சிகண்டி-51)

 ஜபம்-பதிவு-717

(சாவேயில்லாத

சிகண்டி-51)

 

அம்பை

குறிப்பிட்ட நாளில்

குறிப்பிட்ட கிழமையில்

குறிப்பிட்ட கடவுளுக்காக

அசைவ உணவு

சாப்பிடாமல்

இருக்கிறார்களே

அவ்வாறு இருந்தால்

கடவுள்

அருள் கிடைக்குமா

 

சைகாவத்யர் :

கடவுளின் அருளைப்

பெறுவதற்கு

உடல் தூய்மை

முக்கியமில்லை

உள்ளத் தூய்மை

தான் முக்கியம்

 

உள்ளத்தை

தூய்மையாக

வைக்காமல் உடலை

தூய்மையாக

வைத்தால்

கடவுள் அருள்

புரிவாரா

 

பிறர்

வாழ்க்கையை

அழிக்க நினைப்பது

பிறர் மனம்

வருத்தப்படும்படி

நடந்து கொள்வது

ஏமாற்றுவது

திருட்டுத்தனம்

செய்வது

பொய் பேசுவது

யாரும்

பார்க்கவில்லை

என்று செய்யக்கூடாத

தவறுகள்

அனைத்தையும்

செய்வது

போன்ற தகாத

செயல்களைச்

செய்து விட்டு

குறிப்பிட்ட நாளில்

குறிப்பிட்ட கிழமையில்

குறிப்பிட்ட கடவுளுக்காக

அசைவ உணவு

சாப்பிடாமல்

இருந்தால் கடவுள்

அருள் கொடுத்து

விடுவாரா

 

வீட்டிற்கு வெளியே

வெள்ளை அடித்து

சுத்தமாக வைத்து

விட்டு

வீட்டிற்குள்

குப்பையை போட்டு

வைத்தால் யாராவது

வீட்டிற்குள் வந்து

தங்குவார்களா

 

அதைப்போல் தான்

உடலைத் தூய்மையாக

வைத்து விட்டு

உள்ளத்தை

களங்கத்துடன்

வைத்தால்

இறைவன் எப்படி

உள்ளத்தில் வந்து

தங்குவான்

நமக்கு அருள்

புரிவான்

 

உடல் அழுக்காக

இருந்தாலும்

பரவாயில்லை

அசைவம்

சாப்பிட்டாலும்

பரவாயில்லை

குறிப்பிட்ட நாளில்

குறிப்பிட்ட கிழமையில்

குறிப்பிட்ட கடவுளுக்காக

அசைவ உணவு

சாப்பிடாமல்

இருக்க வேண்டிய

அவசியமும் இல்லை

உள்ளம் தூய்மையாக

இருந்தால்

போதும்

இறைவன் வந்து

அருள் புரிவான்

 

அம்பை :

தவம் செய்பவர்கள்

என்ன செய்ய

வேண்டும்

என்ன செய்யக்கூடாது

என்பதை

என்ற உண்மையை

எனக்குச் சொன்னீர்கள்

 

தவம் செய்வது

எப்படி என்பதை

எனக்கு கற்றுத்

தாருங்கள்

 

சைகாவத்யர் :

நாளை

ஹோத்திரவாஹனர்

இந்த ஆசிரமத்திற்கு

வருகிறார்

தவத்தில்

சிறந்தவர் அவர்

அவரிடம்

கற்றுக் கொண்டால்

நன்றாக இருக்கும்

 

அவர் வரட்டும்

அவரிடம் கேட்போம்

அவர் என்ன

சொல்கிறார்

என்று பார்ப்போம்

 

இப்பொழுது சென்று

மகிழ்ச்சியாக

உணவருந்துங்கள்

அமைதியாக

ஓய்வெடுங்கள்

நிம்மதியாக

உறக்கம் கொள்ளுங்கள்

 

நாளை பார்ப்போம்

 

(சைகாவத்யர்

சென்று விடுகிறார்.

அந்த ஆசிரமத்தில்

உள்ள பெண்கள்

உணவு உண்பதற்காக

அம்பையை

அழைத்து செல்கின்றனர்.

ஆனால் அம்பை

உணவு எதுவும்

உண்ணவில்லை

இரவு முழுவதும்

உறங்கவில்லை.

 

ஒரு

பாறையின் மேல்

அமர்ந்து கொண்டு

இரவு முழுவதும்

வானத்தையே

பார்த்துக் கொண்டு

எதையோ ‘

எண்ணிக் கொண்டு

இருந்தாள் அம்பை.)

 

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-716 (சாவேயில்லாத சிகண்டி-50)

 ஜபம்-பதிவு-716

(சாவேயில்லாத

சிகண்டி-50)

 

சைகாவத்யர் :

சைவ உணவைச்

சாப்பிட்டால் ஆன்மீகத்தில்

உயர் நிலை

அடையலாம் என்றால்

ஏன் சைவ உணவு

சாப்பிடுபவர்கள்

அனைவரும்

ஆன்மீகத்தில்

உயர்நிலை

அடையவில்லை

 

அசைவ உணவைச்

சாப்பிட்டால்

ஆன்மீகத்தில்

உயர்நிலை அடைய

முடியாது என்றால்

அசைவ உணவைச்

சாப்பிட்டவர்கள்

எத்தனையோ பேர்

ஆன்மீகத்தில்

உயர் நிலை அடைந்து

இருக்கிறார்களே

 

அம்பை :

உயிர்களைக்

கொல்லக்கூடாது

என்கிறார்களே

 

சைகாவத்யர் :

உயிர்கள் என்றால்

மனிதர்களின்

கண்களுக்கு தெரிபவை

ஆடு மாடு கோழி

போன்ற விலங்குகள்

மட்டும் தான்

 

மனிதனும் ஒரு

உயிர் தானே

 

ஆடு மாடு கோழி

போன்ற விலங்குகளை

கொல்லக்கூடாது

என்று சொல்பவர்கள்

மனித உயிர்களை

கொல்கிறார்களே

அது பாவம்

இல்லையா

 

உணவிற்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

புலி மானைக்

கொல்வது

பாவம் இல்லை

ஏனென்றால் புலி

மானை உணவிற்காகக்

கொல்கிறது

உணவிற்காகக்

கொல்வது

பாவம் இல்லை

 

உணவிற்காகவும்

அத்தியாவசிய

தேவைக்காகவும்

மனிதன்

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

அம்பை :

அத்தியாவசியத் தேவை

என்று நீங்கள்

எதைச் சொல்கிறீர்கள்

 

சைகாவத்யர் :

குளிரிலிருந்து தன்னை

பாதுகாத்துக் கொள்ள

விலங்குகளின் தோலுக்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை

 

ஓரிடத்திலிருந்து

மற்றொரு இடத்திற்கு

பிரயாணம்

செல்லும் போது

உணவையும்,

நீரையும்

கொண்டு செல்ல

விலங்குகளின்

தோலைப்

பயன்படுத்துவதற்காக

விலங்குகளைக்

கொல்வது

பாவம் இல்லை.

 

அம்பை :

அசைவ உணவு

சாப்பிடுவது உயிரை

அசுத்தப்படுத்தாதா

 

சைகாவத்யர் :

நம்முடைய தவறான

எண்ணங்கள் தான்

நம்முடைய உயிரை

அசுத்தப்படுத்தும்

 

உண்ணும் உணவு

உயிரை

அசுத்தப்படுத்தாது

 

தினமும் குளித்து

உடலை எப்படி

தூய்மையாக

வைத்திருக்கிறோமோ

அவ்வாறு தவங்கள்

செய்து உயிரை

தூய்மையாக வைத்துக்

கொள்ள வேண்டும்

 

நாம் தினமும்

தவம் செய்வதால்

உயிரில் உள்ள

கர்மா என்னும்

அழுக்குகள் நீங்கும்

 

அம்பை :

48 நாட்கள் விரதம்

இருக்கும் போது

அசைவ உணவு

சாப்பிடக்கூடாது

என்கிறார்களே

 

சைகாவத்யர் :

48 நாட்கள் விரதம்

இருக்கும் போது

எந்த உணவையும்

சாப்பிடக்கூடாது

 

பால்

தண்ணீர் மட்டுமே

சாப்பிட்டு தவம்

செய்ய வேண்டும்

 

காலை மாலை

குளிக்க வேண்டும்

 

வெறும் தரையில்

படுக்க வேண்டும்

 

48 நாட்கள் விரதம்

இருந்து தவம்

செய்யும் போது

உடல்

தளர்ச்சி அடையும்

உடல்

தளர்ச்சி

அடையும் போது

பிரபஞ்ச சக்தி

உடலுக்குள் இறங்கும்

 

48 நாட்கள் விரதம்

இருப்பது என்பது

பிரபஞ்ச சக்தி

நம்முடைய

உடலுக்குள்

இறங்குவதற்காகத்

தான்

 

பிரபஞ்ச

சக்தியுடன் தொடர்பு

கொள்வதற்காகத் தான்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------25-03-2022

-----வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////