September 24, 2017

இயேசுகிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-மூலப்-பதிவு-81-(1)

  இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(1)

      """"பதிவு எண்பத்துஒன்றை விரித்துச் சொல்ல
         ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

"அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி:  நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்"
---------- லூக்கா - 18 : 18

"அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஓருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே"
---------- லூக்கா - 18 : 19

"விபசாரஞ் செய்யாதிருப்பாயாக. கொலைசெய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்"
---------- லூக்கா - 18 : 20

"அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்."
---------- லூக்கா - 18 : 21

"இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்"
---------- லூக்கா - 18 : 22

"அவன் அதிக ஐஸ்வரியமுள்வனான படியினால், இதைக் கேட்ட பொழுது , மிகுந்த துக்கமடைந்தான்."
---------- லூக்கா - 18 : 23


"அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு, ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில்  பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது"
---------- லூக்கா - 18 : 24

"ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்."
---------- லூக்கா - 18 : 25

"அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்பக்படக்கூடும் என்றார்கள்"
---------- லூக்கா - 18 : 26

"அதற்கு அவர்:  மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்"
---------- லூக்கா - 18 : 27

"அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்."
---------- லூக்கா - 18 : 28

"அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்ஜியத்தினிமித்தம்  வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டு விட்ட எவனும்,"
---------- லூக்கா - 18 : 29

"இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."
---------- லூக்கா - 18 : 30

உலகில் உள்ள இன்பங்களை எல்லாம்
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்.
மனிதன் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம்
இந்த இரண்டு நிலைகளுக்குள் அடங்கும்.
பல்வேறு பட்ட நிலைகளில்
மனிதன் பல்வேறு நிலைகளில்
இன்பங்களை அனுபவித்தாலும்,
உலகில் மனிதன் துய்க்கும் இன்பங்களை
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்.
 நிலை ஒன்று : வெளியிலிருப்பவைகள் மனித உடலுக்குள்
               வரும்போது ஏற்படும் இன்பம்.

நிலை இரண்டு:  மனித உடலில் உள்ளவைகள்
                       வெளியில் செல்லும்போது ஏற்படும் இன்பம்.


நிலை ஒன்று:

வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள் வரும்போது ஏற்படும் இன்பத்தை
மூன்று நிலைகளில் பிரித்து விடலாம்.

 ஒன்று  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுக்குள்
                       வரும்போது ஏற்படும் இன்பம்
இரண்டு  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                       இணையும் போது ஏற்படும் இன்பம்
 மூன்று  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                       தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது ஏற்படும் இன்பம்

வெளியிலிருப்பவைகள் மனித உடலுக்குள் வரும் போது
ஏற்படும் இன்பம் மூன்று நிலைகளில் இருந்தாலும்,
அது ஒரே ஒரு நிலையைத் தான்
தன்னுள் கொண்டிருக்கிறது.
அதாவது வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள் செல்லும் போது ஏற்படும் இன்பம்..

வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள் வருவது என்பது
சாப்பிடுதாவலும், குடிப்பதாலும்
ஏற்படக்கூடிய இன்பத்தைக்
குறிக்கும்.

வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
இணைவது என்பது
வெளியில் உள்ள பொருள்
மனித உடலைத் தொடுவதைக் குறிக்கும்.

வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது என்பது
வெளியில் உள்ளவைகளைப்
பார்ப்பதன் மூலமும்,
கேட்பதன் மூலமும்,
உணர்வு பூர்வமாக ஏற்படும் இன்பத்தைக் குறிக்கும்

மூன்றுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து
கொள்வோமேயாகில் இன்பம் எந்த நிலைகளில்
ஏற்படுகிறது என்பது தெரிந்து விடும்.


ஒன்று :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுக்குள்
                     வரும்போது ஏற்படும் இன்பம்

வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள் வருவது என்பது
சாப்பிடுதாவலும், குடிப்பதாலும்
ஏற்படக்கூடிய இன்பத்தைக்
குறிக்கும்.

நாம் சாப்பிடும் சாப்பாட்டில்
பிரியாணி நமக்கு பிடிக்கிறது என்றால்,
அதை நாம் சாப்பிடும் போது
அது நம் உடலுக்குள் செல்கிறது.
அதனால் நம்முடைய கனவு நிறைவேறுகிறது.
இன்பம் பூர்த்தியாகிறது.
இது வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள் வரும் போது ஏற்படும்
இன்பத்தைக் குறிக்கும்.


இரண்டு:  வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                      இணையும் போது ஏற்படும் இன்பம்


வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன் இணைவது
என்பது வெளியில் உள்ள பொருள் மனித உடலைத்
தொடுவதைக் குறிக்கும்

நமக்கு ஒரு தங்க நகை பிடித்திருக்கிறது;
அந்த டிசைன் தங்க நகை நமக்கு பிடித்திருக்கிறது;
அதன் அழகு பிடித்திருக்கிறது;
அது இருக்கும் அழகு பிடித்திருக்கிறது;
அதை நாம் வாங்கி அணிகிறோம் என்றால்,
அதனால் நமக்கு ஒரு இன்பம்.
இது வெளியிலிருப்பவைகள்
மனித உடலுடன் இணையும் போது       
ஏற்படும் இன்பம்.


மூன்று : வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                     தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது ஏற்படும் இன்பம்

வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது என்பது
வெளியில் உள்ளவைகளைப்
பார்ப்பதன் மூலமும்,
கேட்பதன் மூலமும்,
உணர்வு பூர்வமாக ஏற்படும்
இன்பத்தைக் குறிக்கும்.

நமக்கு ஒரு திரைப்படம் பிடிக்கிறது
அதை ரொம்ப நாட்களாக பார்க்க வேண்டும்
என்ற ஆசை இருக்கிறது.
ஆனால் பார்க்க முடியவில்லை;
வேலை காரணமாக பார்க்க முடியவில்லை;
நேரம் இல்லாத காரணத்தினால் பார்க்க முடியவில்லை;
சில பல வேலைகள் காரணமாக
பார்க்க முடியவில்லை;
ஆனால் அதற்கான நேரம் கிடைக்கும் போது,
அந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது,
அந்த திரைப்படத்தை பார்க்க நேரம் கிடைக்கும் போது,
அந்த திரைப்படத்தை பார்த்தால்
இன்பம் ஏற்படுகிறது,
பல நாள் தேக்கி வைத்த ஆசை நிறைவேறும் போது
இன்பம் ஏற்படுகிறது.
இது தான் வெளியிலிருப்பவைகள்
மனித உடலுடன் தொடர்பு கொள்ளும்
ஏற்படுத்திக் கொள்ளும் போது
ஏற்படும் இன்பம்.

வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள் வரும்போது ஏற்படும் இன்பங்கள்
மூன்று நிலைகளில் இருந்தாலும்,
அது ஒரே ஒரு நிலையைத் தான் குறிக்கின்றன.
அதாவது வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள் வரும் போது
ஏற்படும் இன்பத்தை
குறிக்கின்றன,
நிலை இரண்டு:
மனித உடலில் உள்ளவைகள்
வெளியில் செல்லும்போது ஏற்படும் இன்பம்.
அதாவது,
வெளியிலிருப்பவைகள் மனித உடலுக்குள் வரும்போது
அதன் பாதிப்பால்
மனித உடலில் உள்ளவைகள்
வெளியில் செல்லும்போது ஏற்படும் இன்பத்தை
மூன்று நிலைகளில் பிரித்து விடலாம்..

ஒன்று  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுக்குள்
                       வரும்போது அதன் பாதிப்பால் மனித உடலில் உள்ளவைகள்  
                       வெளியில் செல்லும் போது ஏற்படும் இன்பம்
இரண்டு  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                        இணையும் போது அதன் பாதிப்பால் உடலிலிருந்து 
                        வெளியேறுபவைகளால் ஏற்படும் இன்பம்
 மூன்று  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                       தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது அதன் பாதிப்பால்  
                        உடலிலிருந்து வெளியேறுபவைகளால் ஏற்படும் இன்பம்

உள்ளிலிருந்து வெளியேறுபவைகள்
ஏற்படும் இன்பம் 
வெளியிலிருந்து உள்ளே வருபவைகளால் ஏற்படுகிறது.
இது அடக்கி வைக்கப்பட்ட துன்பம்
அல்லது மன அழுத்தம் அல்லது
அடக்கி வைக்கப்பட்ட ஏதாவது ஒன்றை
வெளியேற்ற வெளியிலிருந்து
உள்ளே வருபவைகள் மூலம்
ஏற்படும் இன்பத்தைக் குறிக்கும்,
இந்த மூன்றும் வெவ்வேறு நிலைகளில்
ஏற்பட்டாலும்
ஏற்படும் இன்பம் என்பது
ஒன்றை மட்டும் தான் குறிக்கும்

ஒன்று  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுக்குள்
                       வரும்போது அதன் பாதிப்பால் மனித உடலில் உள்ளவைகள்  
                       வெளியில் செல்லும் போது ஏற்படும் இன்பம்

நாம் தண்ணீர் குடிக்கிறோம்;
தாகத்தால் அதிக அளவு
தண்ணீர் குடிக்கிறோம்;
பசித்தது என்று
அதிக அளவு தண்ணீர் குடிக்கிறோம்;
சிறிது நேரத்தில் தேவையற்ற தண்ணீர்
சிறுநீராக வெளியேறும்;
நாம் குடித்த தண்ணீர் மட்டுமல்ல
தேவையற்றவை
சிறுநீரில் கலந்து கழிவு நீராக வெளியேறும்.
அந்த சமயத்தில்
நாம் நிறைய தண்ணீர் குடித்த சமயத்தில்
வெளியே செல்கிறோம்;
நாம் வெளியில் செல்கிறோம்;
வெளியில் மாட்டிக் கொண்டோம்;
சிறுநீர் கழிக்க முடியவில்லை.
சிறுநீர் கழிக்க இடம் கிடைக்கவில்லை.
சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறோம்;
சிறுநீர் கழிக்க முடியாமல் தொல்லைப்படுகிறோம்;
இந்த நிலையில் சிறுநீர் கழிக்க இடம் கிடைத்து
நாம் சிறுநீர் கழித்தால் அது தான் இன்பம்
இது தான் வெளியிலிருப்பவைகள்
மனித உடலுக்குள்  வரும்போது
அதன் பாதிப்பால்
மனித உடலில் உள்ளவைகள்  
வெளியில் செல்லும் போது ஏற்படும் இன்பம்




இரண்டு  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                        இணையும் போது அதன் பாதிப்பால் உடலிலிருந்து 
                        வெளியேறுபவைகளால் ஏற்படும் இன்பம்

ஒரு ஆண் ஒரு பெண்ணைத்
திருமணம் முடித்து,
ஒரு புதிய சந்ததியை
உருவாக்க இணையும் போது,
ஒரு புதிய குழந்தையை
உருவாக்க இணையும் போது,
இருவரும் ஒன்றாக இணையும் போது,
அதாவது இரு உடல்கள் ஒன்றாக இணையும் போது,
ஆணுக்குளிருந்தும், பெண்ணுக்குள்ளிருந்தும்,
உடலுக்குள்ளிலிருந்து
சக்தி வெளிப்படுகிறது.
அதன் காரணமாக உடல் இன்பத்தை
அனுபவிக்கிறது.
உடலும், மனமும்
இன்ப நிலை அடைகின்றன,.
இது தான் வெளியிலிருப்பவைகள்
மனித உடலுடன் இணையும் போது
அதன் பாதிப்பால்
உடலிலிருந்து   வெளியேறுபவைகளால்
ஏற்படும் இன்பம்.



மூன்று  :  வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
                       தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது அதன் பாதிப்பால்  
                        உடலிலிருந்து வெளியேறுபவைகளால் ஏற்படும் இன்பம்


வாங்கிய கடனால் பாதிக்கப்பட்டு,
கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு,
கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு,
கடன் தொல்லையால் அவமானப்பட்டு,
கடன் தொல்லையால் அவதிப்பட்டு,
கடன் தொல்லையால் மனம் பாதிக்கப்பட்டு,
கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு,
கடன் தொல்லையால் வேதனைப்பட்டு,
வாழ முடியாமல்,
வாழ வழியில்லாமல்,
வாழ்வதற்கு வழி தெரியாமல்,
வாழ்வதற்கு முடியாமல்
அனைவரும் கைவிட்டு விட்ட நிலையில்,
அனைவரும் கைவிரித்து விட்ட நிலையில்,
குடும்பத்துடன் தற்கொலை
செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து,
குடும்பத்துடன் தற்கொலை செய்து
கொள்ள முயற்சிக்கும் நேரத்தில்,
குடும்பத்துடன் தற்கொலை செய்து
கொள்வதற்கான வேலைகளை செய்யும் நேரத்தில்,
ஒரு போன் கால் வருகிறது
அவருக்கு நெருக்கமான நண்பர் பேசுகிறார்
உங்கள் கடனை அடைப்பதற்கு தேவையான
பணம் கிடைத்து விட்டது
வட்டி இல்லை
பணம் வந்தபிறகு கொடுக்கலாம்
என்று அவருடைய நண்பர் ஒருவர் சொல்கிறார்

நான்  பணம் எடுத்துக் கொண்டு வருகிறேன்
உங்களை கடனை அடைத்து விடலாம்
வருத்தப்பட வேண்டாம்
நான் உங்கள் வீட்டிற்கு வந்து கொண்டு
இருக்கிறேன்
நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருங்கள்.
நான் உங்கள் வீட்டிற்கு உங்களைப்
பார்க்க வந்து கொண்டு இருக்கிறேன்
என்று அவர் நண்பர் சொல்கிறார்.
குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று,
மன வருத்தத்தில் இருந்தவருக்கு
சோகத்தின் உச்சத்தில் இருந்தவருக்கு
எப்படி இருக்கும்
செய்தியைக் கேட்ட மாத்திரத்தில்,
அழுத்தி வைக்கப்பட்ட மன அழுத்தம்,
அழுத்தி வைக்கப்பட்ட சோகம்,
அழுத்தி வைக்கப்பட்ட கவலை,
அழுத்தி வைக்கப்பட்ட துன்பங்கள்
அனைத்தும் விலகி
மனம் லேசாகி இன்பம் அடைகிறது.
தன்னை அறியாமல் உள்ளுக்குள் இருந்து
கண்ணீர் கண்களில் தாரை தாரையாக வருகிறது.
அது அழுத்தி வைக்கப்பட்டவைகள் விலகி
ஆனந்தம் வெளிப்படுத்துவதால்
அதற்கு ஆனந்தக் கண்ணீர் என்று பெயர்
வெளியிலிருப்பவைகள் மனித உடலுடன்
தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது அதன் பாதிப்பால்  
உடலிலிருந்து வெளியேறுபவைகளால் ஏற்படும் இன்பம்.

இத்தகைய
பல்வேறு நிலைகளில் பெறப்படும்
இன்பத்தை அடைவதற்கு
இச்சமுதாயம் மற்றவரை
அடிமைப் படுத்த நினைக்கிறது;
அடிமை நிலையில் வைக்க நினைக்கிறது;
அடிமையாக வைத்திருக்க நினைக்கிறது;
அடிமை மனப்பான்மையை வளர்க்கிறது;
அடிமைத் தன்மையை ஊக்குவிக்கிறது;
அடிமை நிலையை பெருக்குகிறது;
அடிமை சிந்தனையை எழச் செய்கிறது;
அடிமை முறையை வளர்க்க உதவுகிறது;

---------இதன் தொடர்ச்சி
 இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(2)
----------பார்க்கவும், படிக்கவும்




1 comment: