September 24, 2017

இயேசுகிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-மூலப்-பதிவு-81-(4)

        இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(4)

                       """"பதிவு எண்பத்துஒன்றை விரித்துச் சொல்ல
                ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""


அழுகுணிச் சித்தர்

"""""""மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்ந்தகம்பம்
மேலப் பதிதனிலே என்கண்ணம்மா
               விளையாட்டைப் பாரேனோ"""""
                              -------அழுகுணிச் சித்தர்
                              -------பெரிய ஞானக்கோவை


அறிவுரை சொன்னால் அதை கேட்பவர்களை
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்
  
       ஒன்று    : அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்பவர்கள்
       இரண்டு  : அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளாமல்
                    எதிர்த்துப் பேசுபவர்கள்
 

ஒன்று    : அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்பவர்கள்

பல வருடங்களாக கவிதை எழுதுபவர்
புதிதாக கவிதை எழுதுபவரைப் பார்த்து
சில அறிவுரைகளைக் கூறுகிறார்.
கவிதை எப்படி இருக்க வேண்டும்;
எந்த நிலையில் இருக்க வேண்டும்;
எந்தவிதமான தன்மைகளைத்
தன்னுள் கொண்டிருக்க வேண்டும்;
எந்தவிதமான அமைப்புகளைத்
தன்னுள் வைத்திருக்க வேண்டும்;
எந்த விதத்தில் சொல்ல வரும்
கருத்துக்கள் இருக்க வேண்டும்;
எந்தவிதமான இலக்கண அமைப்பு
இருக்க வேண்டும்;
புதுக் கவிதைக்கும்
மரபுக் கவிதைக்கும்
என்ன என்ன வேறுபாடு இருக்க வேண்டும்;
மரபுக் கவிதை என்றால் என்ன?
புதுக் கவிதை என்றால் என்ன?
இலக்கண மரபுகளுக்குள் எப்படி
கவிதை எழுத வேண்டும்;
இலக்கண மரபுகளை எப்படி
மீறாமல் கவிதை எழுதுவது;
அர்த்தங்கள் எப்படி வெளிப்பட வேண்டும்;
என்பவைகளைப் பற்றி எல்லாம்
விளக்கமாக சொல்லி,
கவிதை எப்படி எழுத வேண்டும்-என்று
புதிதாக கவிதை எழுதுபவருக்கு
சொல்கிறார்.
அதற்கு உதாரணமாக
ஒரு கவிதை சொல்கிறார்.
நீண்ட நாட்களாக கவிதை எழுதுபவர்
புதிதாக கவிதை எழுதுபவருக்கு
கவியரசு கண்ணதாசன் எழுதிய
கவிதையை அதற்கு உதாரணமாக
சொல்லி விளக்குகிறார்.

கண்ணதாசன் எழுதிய கவிதையில்
எதுகை இருக்கிறது;
மோனை இருக்கிறது;
சந்தம் இருக்கிறது;
எந்த கருத்தை சொல்ல வேண்டுமோ
அந்த கருத்தை சொல்லி இருக்கிறார்.
ஒரு கருத்தை நேரடியாக சொல்லாமல்
இன்னொரு கருத்தை ஒற்றுமைப் படுத்தி
சொல்லி இருக்கிறார் - என்று நீண்ட வருடங்களாக
கவிதை எழுதுபவர்
புதியதாக கவிதை எழுதுபவருக்கு
கவிதை என்றால்
இப்படித் தான்இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
கவிதையில் உள்ள குறைகளையும் சுட்டிக் காட்டி
அதை நிவர்த்தி செய்ய வேண்டிய
முறைகளையும் சொல்கிறார்;
அதில் உள்ள நிறை குறைகளைச்
சொல்கிறார்;
நிறைகளை சொல்லி அதை எப்படி
மெருகேற்றுவது என்பதை
பற்றியும் சொல்கிறார்;
மொத்தத்தில்
கவிதை எப்படி இருக்க வேண்டும்
என்பதைப் பற்றியும்,
கவிதை எந்த நிலையில் இருக்க வேண்டும்
என்பதைப் பற்றியும்,
கவிதை எப்படி எழுத வேண்டும்
என்பதைப் பற்றியும்,
நீண்ட வருடங்களாக கவிதை எழுதுபவர்
புதிதாக கவிதை எழுதுபவருக்கு சொல்லி
அவர் எழுதிய கவிதையும் சொல்லி
கண்ணதாசன் எழுதிய கவிதையும்
சொல்லி ஒப்பிட்டு
விளக்குகிறார்.

கவிதை எப்படி இருக்க வேண்டும்
என்று கதை எழுதியவருக்கு
சொல்லப்பட்ட அறிவுரையை
ஒருவர் ஏற்றுக் கொள்வாரேயானால்
அது அறிவுரை சொல்வதை ஏற்றுக் கொள்பவர்
வரிசையில் வருகிறார்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்


""""""" உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா- அவன்
அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா - இந்த
உயிர் எல்லாம் வாழுதடா வெள்ளையப்பா"""""""

""""பக்தருக்கு அருள் குறிப்பு
பாமரர்க்கு பொருட்குறிப்பு
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா- அது
முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா""""""""

வெள்ளைத்துணி ஒன்றை எடுத்துக் கொள்வோம்
அதில் அழுக்கு படிந்திருக்கிறது;
கறை படிந்திருக்கிறது;
அழுக்கு படிந்த வெள்ளைத்துணியின்
அழுக்கை நீக்க வேண்டுமானால்,
சோப்பை போடுவதன் மூலம் நீக்கலாம்;
சோப்பை போட்டு நன்றாக தேய்த்து
துவைக்க வேண்டும்;
அதை பாறையிலோ அல்லது கல்லிலோ
போட்டு அடிக்க வேண்டும்;
அடுத்து
தண்ணீரில் கழுவ வேண்டும்;
தண்ணீரில் கழுவுவதன் மூலம்
கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்;
அவ்வாறு நீங்கும்போது
கறை படிந்த அழுக்குத்துணி
மீண்டும் நல்ல துணியாக
நல்ல வெள்ளைத்துணியாக மாறுகிறது;
முதலில் வெள்ளைத் துணியாக இருந்தது
பிறகு கறை படிந்த துணியானது
இறுதியில் வெள்ளைத்துணியாக மாறுகிறது.

ஆன்மாவில் கர்மா இருக்கும்வரை
பிறப்பு ஒன்று இருக்கும்
கர்மா என்ற ஒன்று இல்லையென்றால்
பிறப்பு என்ற ஒன்று இருக்காது.

ஒரு குழந்தை இந்த உலகத்தில்
பிறக்கிறது என்றால்
அது தன் கர்மாவைத் தீர்க்க பிறக்கிறது
என்று பொருள்.
இந்த பூமியில் பிறக்கும் குழந்தை
கர்மாவைத் தீர்ப்பதற்காக
கர்மாவை சுமந்து கொண்டு
வந்து தான் இந்த உலகத்தில் பிறக்கிறது.
கர்மா என்ற ஒன்று இருக்கும் வரை
இந்த உலகத்தில் அந்த குழந்தைக்கு
பிறப்பு என்ற ஒன்று உண்டு.
கர்மா என்ற ஒன்று
அந்த குழந்தைக்கு இல்லை என்றால்
பிறப்பு என்ற ஒன்று இல்லை.

இந்த உலகத்தில் கர்மாவுடன் பிறக்கும் குழந்தை
கர்மாவைக் கழித்து விட்டால்
அந்த குழந்தைக்கு மீண்டும்
ஒரு பிறப்பு இல்லை
ஆனால்,
இந்த உலகத்தில் பிறந்த குழந்தை
கர்மாவைத் தீர்க்கவில்லையெனில்
அதற்கு மீண்டும் ஒரு பிறப்பு உண்டு.

அடுத்த பிறவியிலும் அந்த குழந்தை
தன் கர்மாவை சுமந்து செல்கிறது
அந்த பிறவியிலும்
அந்த குழந்தை தன் கர்மாவைத் தீர்க்கவில்லையெனில்
அந்த பிறப்பு தொடர்ந்து கொணடே இருக்கும்.

ஜீவாத்மாவில் பதிந்துள்ள
கர்மாவைக் கழிக்க வேண்டுமானால்
ஜீவாத்மா பரமாத்மாவுடன்
இணைய வேண்டும்;
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்தால்
ஜீவாத்மாவில் பதிந்துள்ள கர்மாக்கள் கழியும்
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையாவிட்டால்
கர்மாக்கள் கழியாது
பிறப்பின் சுழற்சி இருந்து கொண்டே இருக்கும்.

உயிரில் பதிந்துள்ள கர்மவினையின் காரணமாக
உயிர்கள் இந்த உலகத்தில் பிறக்கிறது
கர்மாக்கள் இருக்கும் வரை
இந்த உலகத்தில் பிறப்பு இருக்கிறது.

குழந்தை பிறக்கிறது
இந்த உலகத்தில் பிறந்தவுடன்
பந்தங்களாலும் பாசங்களாலும்
பின்னப்பட்டு;  கட்டப்பட்டு;
பல்வேறு விதமான நிலைகளைக் கடந்து,
பல்வேறு விதமான கவலைகளை அனுபவித்து,
பல்வேறு விதமான இன்பங்களைக் கடந்து,
பல்வேறு விதமான அனுபவங்களைக் கடந்து,
பிறந்த உயிர் கஷ்டப்படுகிறது.

பாவப்பட்ட மனித வாழ்க்கையில் இருந்து
விடுபட வேண்டுமானால்
பிறப்பு அற்ற நிலை வர வேண்டும்;
பிறப்பின் சுழற்சி அறுபட வேண்டும்;
இறப்பு உடைபட வேண்டும்;
இறப்பு அற்று இருக்க வேண்டும்;
அதற்கு ஆன்மா கர்மா அற்று இருக்க வேண்டும்;

ஆன்மாவில் பதிந்துள்ள கர்மாக்கள் அனைத்தும் கழிந்தால்,
ஆன்மாவில் பதிந்துள்ள கர்மாக்கள் கழிந்து
ஆன்மா தூய்மை பெற்றால்,
ஆன்மா பரமாத்மாவுடன் இணைகிறது;
பரமாத்மாவுடன் இணையும்
ஜீவாத்மா முக்தி அடைகிறது;
பிறப்பற்ற நிலை அடைகிறது;
எதற்கு பிறப்பு இல்லையோ
அதற்கு இறப்பு இல்லை
பிறப்பு இறப்பு அற்ற நிலையை
ஜீவாத்மா அடைகிறது.

ஜீவாத்மா தூய்மை பெற வேண்டுமானால்
பரமாத்மாவின் அருள் வேண்டும்
பரமாத்மாவின் அருள் இருந்தால்
மனிதன் தன் ஜீவாத்மாவில் பதிந்துள்ள
கர்மாக்களைக் கழிந்து
பரமாத்மாவுடன் இணையும்
பேற்றைப் பெறுகிறான்;
ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையும்
உயர்ந்த நிலையை அடைகிறான்;
மனிதன் தன் ஜீவாத்மாவில் படிந்துள்ள
பதிந்துள்ள கர்மாக்களைக் கழித்து,
பரமாத்மாவில் கலக்கிறான்;
அவன் அதுவாகவே மாறுகிறான்;
அது அதுவாக மாறுகிறது;

உயிரே அழுக்குத்துணி என்றால்,
உயிரில் கலந்துள்ள கர்மாக்கள் என்று பொருள்.

உவர்மண்ணே நம் பிறப்பு என்றால்
உயிரில் கர்மாக்கள் பதிந்துள்ளதால்
இந்த பூமியில் மனித உயிர் பிறக்கிறது
என்று பொருள்.

மோதி அடிக்கையிலே,
முற்றும் கசக்கையிலே,
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
என்றால்,
இந்த பூமியில் பிறந்த உயிர்
உயிரில் பதிந்துள்ள கர்மாக்களின் செயலால்
பல்வேறு விதமான விளைவுகளை அனுபவித்து
பரமாத்மாவின் அருளால்
உயிரில் பதிந்துள்ள கர்மாக்கள் கழிந்து
உயிர் பரமாத்மாவுடன் இணைந்து
அது அதுவாகிறது.

துணியில் பதிந்துள்ள அழுக்கை
நீக்க சோப்பு போட்டு
நன்றாக கல்லில் அடித்து
ஓடும் நீரில் முக்கி எடுத்தால்
எப்படி துணியில் படிந்துள்ள
அழுக்குகள் எல்லாம் நீங்குகிறதோ?
அதைப்போல்
ஜீவாத்மாவில் பதிந்துள்ள கர்மாக்களின் விளைவாக
இந்த உலகத்தில் பிறந்த குழந்தை வளர்ந்து
பல்வேறு இன்னல்களை அனுபவித்து துன்பப்படுகிறது.

பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்து
தன் கர்மாக்களைக் கழித்து இறைவனுடன்
இரண்டறக் கலக்கிறது;
அது அதுவாகவே மாறுகிறது;
என்கிறார்
கண்ணதாசன்.

கடவுளை வணங்குபவர்களை
மூன்று நிலைகளில் பிரித்து விடலாம்
  ஒன்று : கடவுளிடமிருந்து செல்வங்களைக் கேட்டு பெறுபவர்கள்
இரண்டு : கடவுளிடமிருந்து அருளை கேட்டு பெறுபவர்கள்
 மூன்று : கடவுளிடமிருந்து முக்தியை கேட்டு பெறுபவர்கள்

பாமரருக்கு என்றால்
இல்லாதவர்கள் என்று பொருள்
இல்லாதவர்கள் கடவுளிடமிருந்து
தனக்கு பொருள்கள், செல்வங்கள் வேண்டும்
என்று கேட்பார்கள்.

பக்தர்கள் என்றால்
அருளை வேண்டி இருப்பவர்கள்.
கடவுளிடமிருந்து
கடவுளையே நினைத்து இருக்க வேண்டும்
என்று கேட்பவர்கள்.
கடவுள் அருளை கேட்டு பெறுபவர்கள்.

சத்தியம் என்றால் உண்மை,
சத்தியத்தை தேடி அலையும் பக்தர்கள்
கடவுளிடம் தனக்கு முக்தி வேண்டும் என்றும்
அதற்கான வழியை
எனக்கு காட்டு என்றும் கேட்பார்கள்.

கடவுளை வணங்குபவர்களில் ஒரு பிரிவினர்
தனக்கு செல்வங்கள் வேண்டும் என்று கேட்பர்;

கடவுளை வணங்கும் இரண்டாவது பிரிவினர்
தனக்கு கடவுளின் அருள் வேண்டும் என்று கேட்பர்;

கடவுளை வணங்கும் மூன்றாவது பிரிவினர்
தனக்கு முக்தி வேண்டும் என்று கேட்பர்;

அதற்கான வழிமுறைகளை எங்கே
இருக்கிறது என்று தேடி அலைபவர்கள்
புத்தகத்தில்; இதிகாசத்தில்;
வேதத்தில்; உபநிடதங்களில்;
தேடிப்பார்ப்பர்;
அப்படி தேடிப்பார்த்தால்
கடவுளை வணங்குபவர்களுக்கு
அவர்களுடைய ஆசைக்கு ஏற்ப
அதில் குறிப்புகள் காணப்படும்.
அந்த குறிப்புகளை புரிந்து கொண்டால்
நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்.

ஆன்மீகத்தில் உயர உயர
எண்ணங்கள்  உயரும்;
அதற்கேற்றவாறு தான் மனிதர்களின்
அதாவது
பக்தர்களின் தேவைகள்
எண்ணங்கள் அமையும்;
அதை அடிப்படையாக வைத்து
தங்கள் தேவையை தேடுபவர்;
கடவுளிடம் அதையே கேட்பார்;
புத்தகங்களிலும் அதையே தேடுவார்;

பக்தர்களுக்கு அருட்குறிப்பு என்றால்
கடவுளின் அருளைப் பெற விரும்பும் பக்தர்களுக்கு
கடவுளிடமிருந்து அருளை எப்படி பெறுவது
விவரங்கள் அடங்கியிருக்கும்.
புத்தகத்தை படிப்பதன் மூலம்
அதில் கடவுளிடமிருந்து எவ்வாறு
அருளைப் பெறுவது என்பது விளக்கப்பட்டிருக்கும்.
அதனைப் பின்பற்றினால்
அந்த அருட்குறிப்பைப் பயன்படுத்தினால்
கடவுளின் அருளைப் பெற முடியும்.

பாமரருக்கு பொருட்குறிப்பு என்றால்
பொருள் தேவைப்படுபவர்களுக்கு,
பொருளை நாடிச் செல்பவர்களுக்கு,
பொருளைப் பெறும் வழிமுறைகளை சொல்லும்
புத்தகங்களை கண்டறிந்து
அதை படிப்பதன் மூலம்
பொருளைப் பெறலாம்.

சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா
அது முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா
என்றால்,
உண்மையாக இருக்கக்கூடிய,
என்றும் இருக்கக் கூடிய,
அழிவில்லாமல் இருக்கக் கூடிய,
பரம்பொருளாகவே மாறக்கூடிய,
முக்தியை அடையக்கூடிய,
வழியை கண்டறிந்து
அடைய விரும்பும் பக்தர்களுக்கு தேவைப்படும்
புத்தகங்களை கண்டறிந்து,
அதை பின்பற்றுவார்களேயானால்
அவர்களுக்கு முக்திக்கான வழி
கிடைக்கும் என்கிறார்.

நம் முன்னோர்கள் அனைத்து
கருத்துக்களையும்
தேடல்களையும்
உயர்ந்து கருத்துக்களையும்,
பரம்பொருள் ரகசியங்களையும்,
மறைபொருள் விளக்கங்களையும்,
சூட்சும விஷயங்களையும்,
புத்தகங்களில் ரகசியமாக எழுதி வைத்து
விட்டு பாடல்களாக எழுதி வைத்து விட்டு
சென்றிருக்கிறார்கள்,
.
அதை படிப்பதன் மூலம்
ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களுக்கே,
அவர்களுடைய நிலைக்கு ஏற்ப
அவர்களுடைய எண்ணங்களுக்கேற்ப,
பாடல்களில் உள்ள அர்த்தங்கள்
விளங்க ஆரம்பிக்கும்.
ஆன்மீகத்தில் உயராதவர்களுக்கு
சித்தர் பாடல்களில் உள்ள விளக்கங்கள் புரியாது;
ஆன்மீக புத்தகத்தில் உள்ள அர்த்தங்கள் புரியாது;
என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நாட்களாக கவிதை எழுதுபவர்
நீண்ட வருடங்களாக கவிதை எழுதுபவர்
புதிதாக கவிதை எழுதுபவரைப் பார்த்து
சில அறிவுரைகளைக் கூறுகிறார்.
அவர் சொன்ன அறிவுரைகளை
ஏற்றுக் கொண்டால்
கவிதை எப்படி இருக்க வேண்டும் - என்று
புதிதாக கவிதை எழுதியவருக்கு
சொல்லப்பட்ட அறிவுரையை
புதிதாக கவிதை எழுதுபவர்
ஏற்றுக் கொள்வாரேயானால்
அது அறிவுரை சொல்வதை ஏற்றுக் கொள்பவர்
வரிசையில் வருகிறார்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்


  இரண்டு  : அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளாமல்
               எதிர்த்துப் பேசுபவர்கள்

"""""முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்-கடைச்சங்கம்
ஆம்போ ததுவூதும் அம்மட்டோ இம்மட்டோ
நாம்பூமி வாழ்ந்த நலம்""""""


மேற்கண்ட பட்டினத்தார் பாடலுக்கு
பல்வேறு விதமான கருத்துக்கள்
விளக்கங்கள் கூறப்பட்டாலும்

கீழ்க்கண்டவாறும் விளக்கம் கொடுக்கலாம்

வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்
முதல் நிலை, இடை நிலை, கடை நிலை

முதல் நிலை என்பது குழந்தை நிலை
இரண்டாவது நிலை என்பது திருமண நிலை
மூன்றாவது நிலை என்பது இறப்பு நிலை

மூன்றுமே ஒரு முக்கியமான கருத்துடன்
தொடர்பு கொண்டு இருக்கும்;
இன்னும் உன்னிப்பாக கவனித்தால்
மூன்றுமே ஒரு முக்கியமான கருத்தை
சொல்ல வந்ததாக இருக்கும்;
இந்த மூன்றுமே அதி ரகசியமான
ஒன்றை வெளிப்படுத்துவதாக இருக்கும்;

இந்த பாடல் மிக முக்கியமான
ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறது;
அதாவது உயிரின் நிலையை விளக்குகிறது;
முதல் நிலையான குழந்தை நிலையில்
உயிர் இயக்கத்திற்கு வருவதைக் குறிக்கிறது;
நடுநிலையான திருமண நிலையில்
புதிய உயிர் ஒன்று உருவாகப் போவதைக் குறிக்கிறது;
இறுதி நிலையான இறப்பு நிலையில்
புதிய உயிர் ஒன்று பிறக்கப்போவதைக் குறிக்கிறது;

மனிதனின் இந்த மூன்று நிலைகளும்
உயிர் புதியதாக தோன்றுவதைக் குறிக்கும்.

முதல் நிலை : குழந்தை நிலை
இயக்கமற்ற நிலையை மையமாக வைத்து
அதாவது சுத்தவெளியை
மையமாக வைத்து
அதாவது இயக்கமற்ற நிலையிலிருந்து
இயக்க நிலை தோன்றுகிறது;
இயக்கமற்ற நிலை என்பது கடவுள் நிலை
இயக்கமற்றதிலிருந்து
இயக்கமுள்ளது தோன்றுகிறது;
சுத்த வெளியை மையமாக வைத்து,
இயக்கமுள்ள நிலை தோன்றுகிறது;
இயக்கமற்ற நிலையை மையமாக
வைத்து இயக்கமுள்ள நிலை தோன்றுகிறது;

இயக்கமற்ற நிலையிலிருந்து எப்படி
இயக்கமுள்ள நிலை தோன்றியதோ
அதைப் போல,
தாயின் வயிற்றில்
இயக்கமற்ற நிலையை மையமாக வைத்து
இயக்கமுள்ள நிலை தோன்றுகிறது;
அதாவது உடல் தோன்றுகிறது;

உடலுக்குள் இயக்கமற்ற நிலையாக
சுத்தவெளி;  வெட்டவெளி; பரம்பொருள்;
உடலில் இருக்கிறது.

குழந்தை பிறந்து வெளியே வருகிறது
மூச்சுக் காற்றின் ஒரு சுற்று என்பது
உடலுக்குள் இருந்து வெளியே வரும்
சுவாசக் காற்றானது மீண்டும்
உடலுக்குள் செல்வது.

முதன் முதலில் மையப்புள்ளியில்
இருந்து தான் சுவாசக் காற்று வெளியே வருகிறது.
அந்த மையப்புள்ளி என்பது சுத்தவெளி.

இயக்கமற்ற நிலையிலிருந்து
வெளியே வரும் உயிரானது
காற்றானது இயக்கம் பெறுகிறது;
குழந்தையிடமிருந்து வெளியே வந்து
இந்த பிரபஞ்சத்துடன்  தொடர்பு கொண்டு
பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு
மீண்டும் உள்ளே செல்கிறது;
ஒரு சுற்று முடிகிறது;
குழந்தை  உயிர் பெறுகிறது;
இயக்கம் பெறுகிறது;
இது தான் முதன் முதலில் குழந்தையை
உயிர் பெற வைக்கிறது;

நாம் குழந்தை உயிர் வாழ
முதலில் சங்கில் பால் தருகிறோம்
அது தான் குழந்தை உயிர் வாழ தருவது
ஆனால் அது தான் முதல் நிலை அல்ல
ஆனால் அதற்கு முன்பே குழந்தை
உயிர் வாழ சுவாசக் காற்றானது
இயக்கமற்ற மையப்புள்ளியிலிருந்து
வெளிப்பட்டு இயங்குகிறது.

அது தான் குழந்தையை
முதன் முதலில் உயிர்ப்பிக்கிறது;
வாழ வைக்கிறது;
இயங்க வைக்கிறது;
குழந்தைக்கு ஏற்படக்கூடிய
இந்த நிலை தான்
முதல் நிலை.
இதைத் தான் முதற்சங்கம்
என்கிறார் பட்டினத்தார்.

இது தான் உயிர் உற்பத்தி நிலை,
இது தான் உயிர் இயக்கம் பெறும் நிலை,
இது தான் உயிர் இயக்கத்திற்கு வரும் நிலை,
இன்னும் நன்றாக உற்று கவனித்தோமேயானால்
இது உயிர் உற்பத்தி நிலை
கிடையாது என்று தெரியும்.
தாயின் வயிற்றுக்குள் உயிர் தோன்றினாலும்
இந்த பிரபஞ்சத்தில்
இந்த உயிர் இயக்கத்திற்கு வரும் நிலை
என்று கூறலாம்.
எனவே, குழந்தை தோன்றும் முதல் நிலையை
குழந்தை தோன்றும் நிலை என்றும்
குழந்தை இயக்கத்திற்கு வரும்  நிலை என்றும்
கூறலாம்.


நடு நிலை :  திருமண நிலை
திருமண நிலை என்பது
இரண்டு உயிர்கள் இணையும் நிலை,
இரண்டு உயிர்கள் சங்கமிக்கும் நிலை,
இரண்டு உயிர்கள் பிணையும் நிலை,
இரண்டு உயிர்கள் ஒன்றாகும் நிலை,
என்று மட்டும் நினைத்தால் தவறு
புதிய ஒன்று பிறப்பதற்கான
நிலை என்று கூட சொல்லலாம்;
திருமண நிலை என்பது
இரண்டு உயிர்கள் இணையும் நிலை
என்று சொல்வதை விட
புதிய ஒன்று பிறப்பதற்கு
அடித்தளம் அமைக்கும் நிலை
என்று சொல்லாம்;
புதிய ஒரு உயிரை உருவாக்கும்
நிலை என்று சொல்லலாம்;
புதிய ஒரு உயிர் பிறப்பதற்கான
நிலை என்று சொல்லலாம்;
திருமண நிலை என்பது
புதியதாக ஒரு உயிரை
இந்த உலகத்தில் பிறக்க வைப்பதற்கான
முயற்சி என்று சொல்லலாம்;

முதல் நிலை என்பது
குழந்தை இயக்க நிலைக்கு வருவது மட்டும் அல்ல
குழந்தை பிறக்கும் நிலை கூட என்று சொல்லலாம்;
அதைப் போல நடுநிலை எனப்படும் திருமண நிலை
உயிர் பிறக்கும் நிலை அதாவது
புதியதாக ஒரு உயிரை
உற்பத்தி செய்யும் நிலை;
புதியதாக இந்த உலகத்தில்
ஒரு உயிரை உற்பத்தி செய்யும் நிலை;

இறுதி நிலை : இறப்பு நிலை
இறுதி நிலை
எனப்படுவது இறப்பு நிலை
உயிர் உடலை விட்டு பிரிவதால்
இதை இறப்பு நிலை
இறுதி நிலையான
இந்த இறப்பு நிலையையும்
இறப்பு நிலை என்று
சொல்லாமல்
புதிய உயிர் ஒன்று
பிறப்பதற்கான அடித்தள நிலை
என்று சொல்லலாம்.

கர்மாவை சுமந்து கொண்டு இறக்கும்
கர்மாவால் இறக்கும் உயிர்
தன் கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறக்கும்;
கர்மா கழியும் வரை  தொடர்ந்து பிறக்கும்;
உயிரில் கர்மா பதிந்துள்ள
உயிரின் உடலானது
இறந்து மீண்டும் பிறக்கும்;
உயிர் தன் கர்மாவைத் தீர்க்க பிறக்கும்;

உயிர் தன் கர்மாவைத் தீர்க்க உடல் எடுக்கும்;
அதாவது பிறப்பு எடுக்கும்;
சாதாரணமான நிலையில் உயிர்
தன் கர்மாவால் இறக்கிறது;
கர்மாவைத் தீர்க்க  மீண்டும் பிறக்கிறது;

ஆக மூன்று நிலைகளையும்
நாம் நன்கு உற்று நோக்கினால்,
முதல் நிலையாகிய
குழந்தை நிலையில்
உயிர் பிறக்கிறது:

நடுநிலையாகிய
திருமண நிலையில்
உயிர் பிறக்கிறது:

இறுதி நிலையான
இறப்பு நிலையிலும்
உயிர் பிறக்கிறது:

உயிரில் கர்மா இருக்கும் வரை
பிறப்பு என்பது நிகழ்ந்து
கொண்டே இருக்கும்;
உயிர் என்பது பிறந்து
கொண்டே இருக்கும்;

சாதாரண மனிதர்களுக்கு
இந்த மூன்றும் நிகழ்ந்து
கொண்டே இருக்கும்;

பிறப்பு என்ற சுழலில் இருந்து விடபட வேண்டுமானால்
ஆன்மீகத்தில் உயர் நிலை அடைய வேண்டும்;
ஆன்மீகத்தில் உயர்ந்து
முக்தி அடையும் ஆன்மாக்களுக்கு
பிறப்பு என்பது கிடையாது;
பிறப்பின் சுழற்சி அறுபடும்;
இறப்பு என்பது கிடையாது;
இறப்பு என்பது எந்த உயிருக்கு கிடையாதோ
அதற்கு பிறப்பு என்பது கிடையாது;
பிறப்பு என்பது எந்த உயிருக்கு கிடையாதோ
அந்த உயிருக்கு இறப்பு என்பது கிடையாது;

நடுநிலைக்கு முன்பே
ஒரு உயிர் முக்தி அடைந்து விட்டால்,
அதற்கு நடு நிலை மற்றும்
இறுதி நிலை என்பது கிடையாது.

நடுநிலை கடந்த
ஒரு உயிர் முக்தி அடைந்து விட்டால்
அதற்கு இறுதி நிலை என்பது
கிடையாது.
என்பதை நாம் உணர்ந்து
கொண்டால்
சாதாரண மனித வாழ்க்கையில் இருந்து
மூன்று நிலைகளையும் அனுபவிக்காமல்
ஆன்மீகத்தில் உயர்ந்து,
முக்தி நிலை அடைந்து,
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து
விடுபடலாம் என்கிறார் பட்டினத்தார்.

கவிதை என்றால் இப்படித்தான்
இருக்க வேண்டும்
எவ்வளவு ஆழமான கருத்துக்களைத்
தன்னுள் கொண்டிருக்கிறது என்றும்,
எவ்வளவு அழகான வார்த்தைகளைத்
தன்னுள் கொண்டிருக்கிறது என்றும்,
அதைப்போலத் தான்
கவிதை இருக்க வேண்டும்
ஆனால் உங்கள் கவிதை அவ்வாறு இல்லை
எனவே கவிதை
இவ்வாறு எழுத கற்றுக் கொள் - என்று
நீண்ட ஆண்டுகளாக கவிதை எழுதும் ஒருவர்
புதிதாக கவிதை எழுதும் ஒருவரைப் பார்த்து
சொல்கிறார் என்றால்
அதை புதிதாக கவிதை எழுதுபவர்
அவருடைய அறிவுரையை மதிக்காமல்
ஏற்றுக் கொள்ளாமல்
எதிர்த்துப் பேசுகிறார்;

என் கவிதை நன்றாகத் தான் இருக்கிறது;
நான் நன்றாகத் தான் கவிதை எழுதுகிறேன்;
உங்களை விட நான் நன்றாக கவிதை எழுதுகிறேன்;
நீங்கள் முதலில் நன்றாக கவிதை எழுதுங்கள்;
அப்புறம் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்;
என்று புதிதாக கவிதை எழுதுபவர்
நீண்ட ஆண்டுகளாக கவிதை எழுதுபவரை
எதிர்த்துப் பேசுகிறார்;
அவர் அறிவுரையை கேட்காமல் எதிர்த்து பேசுகிறார்;
இது தான் ஒருவர் அறிவுரை சொன்னால்
மற்றொருவர் அதை ஏற்றுக் கொள்ளாமல்
எதிர்த்துப் பேசுவது ஆகும்.

---------இதன் தொடர்ச்சி
 இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதிவு-81-(5)
                                                                                                                                                                      ------------பார்க்கவும், படிக்கவும்




No comments:

Post a Comment