September 24, 2017

இயேசுகிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-மூலப்-பதிவு-81-(3)

இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(3)

     """"பதிவு எண்பத்துஒன்றை விரித்துச் சொல்ல
        ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

      நிலை இரண்டு : நாமே பிறரிடமோ அல்லது ஒன்றிடமோ
               அடிமையாவது

நாகரிகம் வளராத காலம் என்று
சொல்லப்படக்கூடிய கூத்துக்கள் நடந்த
அந்தக் காலத்தில் கூட,
மக்கள் நடிகர்கள் பின்னால் செல்லவில்லை
நடிகர்கள் தான் மக்கள் பின்னால் சென்றார்கள்.

நாகரிகம் வளர்ந்து விட்டது என்று
சொல்லப்படக்கூடிய சினிமா பார்க்கும்
இந்தக் காலத்தில் மக்கள் நடிகர்கள்
பின்னால் செல்கிறார்கள்.

நாகரிகம் வளரவில்லை என்று
சொல்லப்படக்கூடிய அந்தக் காலத்தில்
அதாவது கூத்துக்கள் நடைபெற்ற  காலத்தில்
கூத்தாடிகள் அதாவது மக்களை மகிழ்விப்பவர்கள்
இப்பொழுது நடிகர்கள் என்று
சொல்லப்படக்கூடியவர்கள்
மக்கள் வீட்டு வாசல் முன்பு காத்துக்
கொண்டிருந்தனர்.

ஆனால்
நாகரிகம் வளர்ந்து விட்டது என்று
சொல்லப்படக்கூடிய இந்தக் காலத்தில்
மக்கள் நடிகர்கள் வீடுகளில்  கூட இல்லை,
நடு ரோட்டில் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

நாகரிகம் வளராத காலம் என்று சொல்லப்படக்கூடிய
அந்தக் காலத்தில் மக்கள் கூத்து முடிந்தவடன்
தங்கள் வாழ்க்கையைப் பார்க்க சென்று விடுவர்;
நடிகர்களையே நினைத்து கொண்டிருக்கவில்லை;
ஆனால்,
நாகரிகம் வளர்ந்து விட்டது என்று
சொல்லப்படக்கூடிய இந்தக் காலத்தில்
திரைப்படம் விட்டு வீட்டிற்கு வந்தாலும்,
திரைப்படம் பார்த்து விட்டு வந்தாலும்,
தங்கள் வாழ்க்கையை பார்க்க போவதில்லை,
சினிமாவில் வரும் நடிகர்களை நினைத்து கொண்டு
தங்கள் வாழ்க்கைளை வீணாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

நாகரிகம் வளர்ச்சியடையாத காலம்;
அறிவு வளர்ச்சியடையாத காலம்;
சிந்தனை வளர்ச்சியடையாத காலம்;
அறிவியல் வளர்ச்சியடையாக காலம்;
என்று சொல்லப்படக்கூடிய
கூத்தாடிகள் காலத்தில்
மக்கள் கூத்தை பார்ப்பதோடு நிறத்திக் கொண்டனர்;
கூத்தாடிகள் பின்னால் செல்லவில்லை;
கூத்தாடிகளையே நினைத்துக் கொண்டிருக்கவில்லை;
கூத்தாடிகள் வீட்டு வாசலில்
காத்துக் கொண்டிருக்கவில்லை;
ஆனால்.
நாகரிகம் வளர்ச்சியடைந்த காலம்,
அறிவு வளர்ச்சியடைந்த காலம்,
சிந்தனை வளர்ச்சியடைந்த காலம்,
அறிவியல் வளர்ச்சியடைந்த காலம்,
என்று சொல்லப்படக்கூடிய,
திரைப்படம் வந்த இந்தக்காலத்தில்,
திரைப்படம் பார்க்கும்
மக்கள் வாழும் இக்காலத்தில்
மக்கள் திரைப்படம் பார்த்து விட்டு
வீட்டிற்கு வந்தவுடன்
திரைப்படத்தில் வரும் நடிகர்களையே
நினைத்துக் கொண்டிருக்கின்றனர்;
திரைப்படத்தில் வரும்
நடிகர்கள் பின்னால் செல்கின்றனர்;
திரைப்பட நடிகர்கள் வீட்டு வாசலில்
காத்துக் கிடக்கின்றனர்;

இதனால்.
நமக்கு விடை தெரியவில்லை,
நாகரிகம் வளராத காலம் என்று
சொல்லப்படக்கூடியது
அக்காலமா அல்லது இக்காலமா?
அறிவு வளர்ச்சியடைந்து விட்டது என்று
சொல்லப்படக்கூடியது
அக்காலமா அல்லது இக்காலமா?
சிந்தனை வளர்ச்சியடைந்து விட்டது என்று
சொல்லப்படக்கூடியது
அக்காலமா அல்லது இக்காலமா?
அறிவியல் வளர்ச்சியடைந்து விட்டது
என்று சொல்லப்படக்கூடியது
அக்காலமா அல்லது இக்காலமா ?
என்று சிந்தித்துப் பார்த்தாலே தெரியும்,
எது அறிவு வளர்ச்சியடைந்த காலம்,
எது அறிவு வளர்ச்சியடையாத காலம் என்று.

அறிவு வளர்ச்சியடையாத காலம் என்று
சொல்லப்படக்கூடிய கூத்தாடிகள் காலத்தில்
யாரும் நேரடியாக தாங்களாகவே
கூத்தாடிகளுக்கு அடிமையாக இருக்கவில்லை;
ஆனால்.
அறிவு வளர்ச்சியடைந்த காலம்
என்று சொல்லப்படக்கூடிய
திரைப்படம் வந்த இக்காலத்தில்,
திரைப்படம் பார்க்கும் இக்காலத்தில்,
திரைப்படத்தில் வரும் நடிகர்களுக்கு,
நேரடியாக தாங்களாகவே
அடிமையாக இருக்கின்றனர்.

இது தான் ஒருவர் நேரடியாக
தானே விருப்பப்பட்டு ஒன்றுக்கோ அல்லது
ஒருவருக்கோ அடிமையாவது;
ஒருவர் நேரடியாக விருப்பப்பட்டு
தானே அடிமையாக இருப்பது;

பெரிய திரை மட்டுமல்ல சிறிய திரையிலும்
பலபேர் இவ்வாறே தாங்களாகவே
விருப்பப்பட்டு நேரடியாக
ஒன்றுக்கோ அல்லது ஒருவருக்கோ
அடிமையாக இருக்கின்றனர்;
நன்றாக உற்றுக் கவனித்தால்
அவர்கள் தங்களை அறியாமலேயே
முதலில் அடிமையாக இருந்தனர்;
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நேரடியாக
தாங்களாகவே ஒன்றுக்கு அடிமையாக இருக்கின்றனர்.

பெரிய திரை என்றால் ஒரு குறிப்பிட்ட
அளவிலேயே நேரடியாக ஒன்றுக்கு
அடிமையாக இருந்தனர்;
ஆனால் சிறிய திரையில்
கணக்கிலடங்கா மக்கள்
நேரடியாக தாங்களாகவே
விருப்பப்பட்டு அடிமையாக இருக்கின்றனர்.

சின்னத்திரையில் காட்டப்படும்
நிகழ்ச்சிகள், நாடகங்கள்
ஆகியவற்றைப் பார்த்து,
அடிமையாக இருக்கின்றனர்;
பெரும்பாலும் நாடகத்தைப் பார்த்தே
அடிமையாக இருக்கின்றனர்;
நாடகத்தைப் பார்த்து அடிமையாக இருப்பது என்பது
உயிரை பெரும் அளவில் பாதிக்கும்;
மேலும் உயிரின் படர்க்கை நிலையான
மனதையும் பெரும் அளவில் பாதிக்கும்;
பெரும்பாலும் நாடகங்களில்
அக்காலத்தில் பெண்கள்
நல்லவர்களாகவும்
அன்பும், கருணையும்,
கொண்டவர்களாகவும் காட்டப்பட்டது;
ஆனால் இக்காலத்தில் பெண்கள்
வில்லிகளாகவும், அடங்காப்பிடாரிகளாகவும்,
அடக்கம் இல்லாதவர்களாகவும்,
பிறர் குடும்பத்தைக் கெடுப்பவர்களாகவும்,
கல்யாணம் ஆகாத பெண்
கல்யாணம் ஆன ஆணை காதலிக்க முயற்சி செய்வதாகவும்,
அதற்கு தாயே துணை போவது போலவும்,
பல்வேறு சொல்ல முடியாத விதத்தில் கூட
பெண்களை நாடகத்தில் காட்டி
பெண்களை எவ்வளவு இழிவு படுத்த வேண்டுமோ
அவ்வளவு இழிவு படுத்துகின்றனர்;
பெண்கள் இப்படி எல்லாம்
இழிவு படுத்தப்படுகிறார்களே என்று
யாரும் வருத்தப்படுவதும் இல்லை;
அதற்காக யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதும் இல்லை;
வருத்தப்படுவதும் இல்லை;
இத்தகைய இழி நிகழ்வுகள் மட்டுமல்ல
மேலும் பல்வேறு இழி நிகழ்வுகள்
சின்னத் திரையில் காட்டப்படுகிறது.
அதை விருப்பப்பட்டு பார்க்கின்றனர் மக்கள்

அந்த நேரம் வந்தால்
அவர்களுக்கு பார்த்தே ஆக வேண்டும்
வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை;
பசி என்று கேட்டால்
யாருக்கும் சாப்பாடு போடுவதில்லை;
தங்களை மெய் மறந்து நாடகம் பார்க்கின்றனர்;
ஒரு நாள் பார்க்க முடியவில்லை என்றால்,
அதைப்பற்றி பிறரிடம் கதை கேட்கின்றனர்;
அல்லது ரிக்கார்டிங் பண்ணி  வைத்து
பிறகு பார்க்கின்றனர்;
அல்லது அதற்கென்று உள்ள
இணையதளத்தில் பார்க்கின்றனர்;
இந்த நிலை தான் மோசமான அடிமை நிலை;

மது அருந்துபவர்கள் மது அருந்தவில்லை எனில்
அந்த நேரம் வந்தவுடன் கை உதறல் எடுக்கும்;
அதே போல் தான்
நாடகம் அன்றாடம் பார்க்கும் மக்களுக்கும்
நாடகம் பார்க்கவில்லை எனில்
உதறல் எடுக்கிறது;

மது குடிப்பது எத்தகைய
ஒரு அடிமை  நிலையோ
அத்தகைய நிலையை விட
ஒரு மோசமான அடிமை நிலை;
இந்த நாடகம் பார்க்கும் நிலை;
நாடகத்திற்கு அடிமையாக இருக்கும் நிலை;
இது தான் ஒருவர் நேரடியாக
தன் விருப்பப்படியே
ஒன்றுக்கு அடிமையாக இருப்பது;

சமுதாயத்தில் உள்ள ஒவ்‘வொருவரும்
ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருக்கின்றனர்;
ஆனால் தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக
நினைத்துக் கொள்கின்றனர்;

சமுதாயத்தில் உள்ள அனைவரும்
பிறர் ஒருவரை நேரடியாக அடிமையாக வைத்திருப்பது
பிறர் ஒருவரை மறைமுகமாக அடிமையாக வைத்திருப்பது
ஒருவர் நேரடியாக தானே விருப்பப்பட்டு ஒன்றுக்கு அடிமையாக இருப்பது
இந்த மூன்றில் ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருக்கின்றனர்

இந்த மூன்றில் முதல் இரண்டு நிலையில்
இருந்து விடுபட்டு விடலாம்;
ஆனால் மூன்றாவது நிலையில்
இருந்து விடுபடுவது கடினம்;

சுதந்திரத்திற்கும், விடுதலைக்கும்
சிறிதளவு வேறுபாடு இருக்கிறது;

பிறர் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தால்
நமக்கு அது பிடிக்காமல்
நாம் அவர்களை எதிர்த்து போராடினால்
அவர்களால் தாக்கு பிடிக்க முடியாமல்
அவர்கள் நம்மை அடிமை நிலையிலிருந்து
விடுவித்து விட்டு செல்வதற்குப் பெயர்
சுதந்திரம்.

நாமே ஒன்றின் மேல் விருப்பப்பட்டு
அதற்கு அடிமையாகி
அதிலிருந்து நாமே விடுபட்டால் அதற்குப் பெயர்
விடுதலை.
சுதந்திரம் பெறுவதற்கு போராடினால்
பெற்று விடலாம்
ஆனால்,
விடுதலை பெறுவது தான் கடினம்.

ஏனென்றால் சுதந்திரம் என்பது
பிறர் நமக்கு தருவது;
ஆனால் விடுதலைஎன்பது
நாமே ஏற்படுத்திக் கொள்வது;
அதனால் சுதந்திரத்தை விட
விடுதலை பெறுவது தான் கடினம்.

பிறர் நம் விருப்பம் இல்லாமல்
நம்மை நேரடியாக அடிமைப்படுவது;
பிறர் நம்மை அடிமைப்படுத்துகிறார் என்பது கூடத்
தெரியாமல் அடிமைப்பட்டுக் கிடப்பது;
இந்த இரண்டில் இருந்து விடுபடுவது தான்
சுதந்திரம்.

நாமே ஒன்றை விரும்பி
அதற்கு அடிமையாகி இருந்து
அதிலிருந்து விடுபடுவது விடுதலை.

ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்த நாம்
ஆங்கிலேயரை எதிர்த்து நாம் போராடியதால்
அவர்கள் நமக்கு கொடுத்து விட்டு போனது 
சுதந்திரம்.

நாமே விருப்பப்பட்டு
நாம் மதுவுக்கு அடிமையாகி இருந்து
அதிலிருந்து விடுபட்டு வந்தால்
அதற்குப் பெயர் விடுதலை.

சுதந்திரம் கூட போராடிப் பெற்று விடலாம்
ஆனால் விடுதலை என்பது
போராடிப் பெறுவது கடினம்.
எது எப்படி இருந்தாலும்
இச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும்
ஏதோ ஒன்றிற்கு அடிமையாகி இருக்கின்றனர்;
ஆனால் அவர்கள் சுதந்திரமாக இருப்பதாக
நினைத்துக் கொண்டிருக்கின்றனர்;

அப்பொழுது தலைவன் ஒருவன்
அவரை நோக்கி நல்ல போதகரே
நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வதற்கு
என்ன செய்ய வேண்டும் என்றார்,

அதற்கு இயேசு
என்னை நல்லவன் என்று சொல்வானேன்
தேவன் ஒருவனைத் தவிர
நல்லவன் யாரும் இல்லை
என்னை நல்லவன் என்று அழைக்காதே
என்றார்.

மேலும் அவர்,
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக,
கொலை செய்யாதிருப்பாயாக,
களவு செய்யாதிருப்பாயாக,
பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக,
உன் தகப்பனையும்
உன் தாயையும் கணம் பண்ணுவாயாக,
என்கிற கற்பனைகளை
நீ அறிந்திருக்கிறாயே என்றார்

அதற்கு அவன் இவைகளையெல்லாம்
நான் என்னுடைய சிறுவயது முதல்
பின்பற்றி வருகிறேன் என்றான்.

இன்னும் உன்னிடத்தில் ஒரு குறை இருக்கிறது
உனக்கு என்று எவைகள் எல்லாம்
சொந்தமாக இருக்கிறதோ,
அவற்றை எல்லாம் விற்று
இல்லாத ஏழைகளுக்கு கொடு.
அப்பொழுது பரலோகத்திலே
உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்
பிறகு என்னைப் பின்பற்றி வா என்றார்.

அவன் அதிக ஐஸ்வரியமுள்ளவனாக
இருந்த படியினால்
இதைக் கேட்ட பொழுது
மிகுந்த துக்கமடைந்தான்.

ஐஸ்வரியவான் எனப்படுபவர் யார் எனில்
அசையும் சொத்து,
அசையாச் சொத்து,
ஆகியவற்றை பிறரை விட
அதிக அளவில் வைத்திருப்பவன்
ஐஸ்வரியவான்.

அசையும் சொத்து மற்றும் அசையாச் சொத்து
ஆகியவற்றின் மேல்
அளவுக்கு அதிகமாக பற்று வைத்திருப்பவன்
அடிமை நிலையில் இருப்பவன் என்பது பொருள்.
விடாப்பிடியாக பிடித்து வைத்திருப்பவன்;
யாருக்கும் கொடுக்காமல் வைத்திருப்பவன்;
மேலும், மேலும் சேர்ப்பவன்
அடிமை நிலையில் இருக்கின்றான் என்பது பொருள்.
அதாவது ஐஸ்வரியவான் தன்னிடமுள்ள
ஐஸ்வரியத்தை காப்பாற்றுவதற்காக,
ஐஸ்வரியத்தை பெருக்குவதற்காக,
ஐஸ்வரியத்தை கூட்டுவதற்காக,
முயற்சிகள் பல செய்து
மேலும், மேலும் பெருக்க
ஐஸ்வரியத்தை பெருக்க முயற்சி செய்கிறான்
இது தான் ஒ.ன்றிற்கு அடிமையாக இருக்கும் நிலை.

ஐஸ்வரியவானே ஒன்றிற்கு
அடிமையாகத் தான் இருக்கிறான்
ஆனால் நிறைய தொழிலாளிகளை
நிறைய வேலைக்காரர்களை
வைத்திருக்கும் ஐஸ்வரியவான்
தான் நிறைய அடிமைகளை வைத்திருப்பதாக
நினைத்துக் கொள்கிறான்;
அவனே ஒன்றிற்கு அடிமை
அவன் எப்படி இன்னொருவரை
அடிமையாக வைத்திருக்க முடியும்;
தன் செல்வத்தைப் பெருக்குவதற்கும்,
தன் செல்வத்தை பாதுகாப்பதற்கும்,
பாடுபடும் ஒருவன்
அதற்கு அடிமையாக இருக்கும் ஒருவன்,
எப்படி பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்.

அடிமை நிலையில் இருக்கும் ஒருவன்
எப்படி பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்
அதனால் தான் இயேசு,
ஐஸ்வரியவான் எவனும்
பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்கிறார்.
ஐஸ்வரியவான் ஒன்றின் மேல் ஆசையாக இருக்கிறான்;
பற்றுடன் இருக்கிறான்;
அடிமையாக இருக்கிறான்;
அவன் எப்படி பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்;
அதனால் தான் இயேசு
ஐஸ்வரியவான் எவனும் பரலோக
ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது
என்கிறார்.

அதனால் தான் இயேசு
அனைத்தையும் விட்டு விட்டு வா
அப்பொழுது உனக்கு பரலோக ராஜ்ஜியத்தில்
பொக்கிஷம் உண்டாயிருக்கும்;
பிறகு என்னைப் பின்பற்றி வா
பரலோக ராஜ்ஜியத்தில் பொக்கிஷம் சேர வேண்டுமானால்
அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்கிறார்.
அனைத்தையும் விட்டு விட்டால்
அவன் தூய்மையாகி விடுவான்;
அதனால் அவனுக்கு பரலோக ராஜ்ஜியத்தில்
பொக்கிஷம் கிடைக்கும்;
என்ற அர்த்தத்தில்
பரலோக ராஜ்ஜியத்தில் பொக்கிஷம் சேர வேண்டுமானால்
அனைத்தையும் விட்டு விட்டு வா
பிறகு என்னைப்  பின்பற்றி வா என்கிறார்.
என்னைப் பின்பற்ற வேண்டுமானால்
அனைத்தையும் விட்டு விட வேண்டும்
என்கிறார் இயேசு.

அனைத்தையும் விட்டு விட்டு
எப்படி இருக்க முடியும்
அனைத்தையும் விற்று விட்டு
ஏழைகளுக்கு கொடுத்து விட்டு
எப்படி இருக்க முடியும் - என்று
ஐஸ்வரியவான் நினைத்தான்.

இயேசு கூறியதைக் கேட்ட ஐஸ்வரியவான்
இயேசு சொன்னதைக் கேட்ட பொழுது
மிகுந்த துக்கமடைந்தான்
அவன் துக்கமடைந்ததைக் கண்டு
இயேசு மேலும் கூறினார்
ஐஸ்வரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில்
பிரவேசிப்பது கடினம்,
எவ்வளவு கடினம்,
எவ்வளவு அரிது
என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்.

நடக்காத விஷயமே நடக்கும்
ஆனால், இந்த விஷயம் நடக்காது என்பதற்கு
ஒரு உதாரணத்தை சுட்டிகாட்டி
நடக்காத ஒரு விஷயத்தை
சுட்டிக் காட்டுகிறார்.

ஊசியின் காதில் ஓட்டகம் நுழையும்
என்பது நடக்காத ஒரு விஷயம்
நடக்காத அந்த விஷயமே நடக்கும்.
அதாவது ஊசியின் காதில்
ஒட்டகம் நுழைய முடியாது.
அதுவே நடக்கும்
ஆனால்,
ஐஸ்வரியவான் எவனும் பரலோக ராஜ்ஜியத்தில்
நுழைய முடியாது என்கிறார்.

அதைக் கேட்டவர்கள்
அப்படியானால் யார் பரலோக ராஜ்ஜியத்தில்
பிரவேசிக்க முடியும் என்றனர்.
அதற்கு இயேசு மனிதனால் முடியாதது
தேவனால் முடியும் என்றார்.

அதற்கு பேதுரு இயேசுவை நோக்கி,
நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு
உங்களைத் தான் பின்பற்றி இருக்கிறோம்
என்றான்.

அதற்கு இயேசு,
தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற வேண்டுமானால்,
பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டுமானால்,
நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமானால்,
தந்தையையோ; தாயையோ;
சகோதரரையோ; சகோதரிகளையோ;
மனைவியையோ;
மகனையோ; மகளையோ;
விட்டு விட்டவர்களுக்கு
பரலோக ராஜ்ஜியம் கிடைக்கும் என்கிறார்.

உயிரற்ற பொருட்களை விட முடியாதவன்
உயிருள்ளவற்றை விட மாட்டான்;
உயிரற்றவைகளின் மேல் பற்று வைத்திருப்பவன்
உயிருள்ளவைகளின் மேல் பற்று வைத்திருப்பான்;
உயிரற்றவைகளை துறக்க விரும்பாதவன்
உயிருள்ளவைகளை துறக்க மாட்டான்;
உயிரற்றவைகளை விட மறுப்பவன்
உயிருள்ளவைகளை விட மாட்டான்;
உயிரற்றவைகளை வேண்டாம் என்று சொல்லாதவன்
உயிருள்ளவைகளை வேண்டாம் என்று சொல்ல மாட்டான்;
உயிரற்றவைகளின் மேல் பற்று கொண்டவன்
உயிருள்ளவைகளின் பற்று கொண்டவனாகத் தான் இருப்பான்;
உயிரற்றவைகளின் மேல் ஆசை வைத்திருப்பவன்
உயிருள்ளவைகளின் ஆசை வைத்திருப்பவனாகத் தான் இருப்பான்;
உயிரற்றவைகளின் மேல் பாசம் வைத்திருப்பவன்
உயிருள்ளவைகளின் மேல் பாசம் வைத்திருப்பவனாகத் தான் இருப்பான்;
உயிரற்றவைகளின் மேல் உயிரை வைத்திருப்பவன்
உயிருள்ளவைகளின் உயிரையே வைத்திருப்பான்;
உயிரற்றவைகளின் பற்று வைத்திருப்பவன்
உயிருள்ளவைகளின் பற்று வைத்திருப்பான்;
உயிரற்றவைகளை விட மறுப்பவன்
உயிருள்ளவைகளை விட மாட்டான்;
உயிரற்றவைகளை வெறுக்காமல் இருப்பவன்
உயிருள்ளவைகளை வெறுக்க மாட்டான்;
உயிரற்றவைகளின் பற்று வைத்திருப்பவன்
உயிருள்ளவைகளின் மேல் பற்று வைத்திருப்பான்;


ஆனால்,
உயிருள்ளவைகளையே விட்டு விடுபவன்
உயிரற்றவைகளை விட்டு விடுவான்;
உயிருள்ளவைகளையே துறந்து விடுபவன்
உயிரற்றவைகளை துறந்து விடுவான்;

உயிருள்ளவைகளை துறக்காதவன்
உயிரற்றவைகளை துறக்க மாட்டான்;
உயிருள்ளவற்றை விட துணிந்தவன்
உயிரற்றவைகளின் மேல்
பற்று இல்லாதவனாகத் தான் இருப்பான்;

உயிருள்ளவைகளையே ஒருவன்
துறக்க துணிந்து விட்டால்,
அவன் உயிரற்றவைகளை
துறந்து விட்டவனாக தான் இருப்பான்;

எனவே தான் இயேசு,
தன் தந்தையையோ; தாயையோ;
சகோதரரையோ; சகோதரிகளையோ;
மனைவியையோ;
மகனையோ; மகளையோ;
விட்டு விடுபவன்
பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான்
என்கிறார்.

இயேசு சொன்ன அந்த ஒரு வார்த்தையில்
இரண்டு அர்த்தங்கள் மறைந்து இருக்கிறது.
      
ஒரு அர்த்தம் மேலோட்டமாக இருக்கிறது
ஒரு அர்த்தம் ஆழ்ந்து இருக்கிறது
‘அதை ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் தெரியும்;
நன்றாக யோசிப்பவர்களுக்கே தெரியும்;

ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்தான்
இவர்கள் காதலிப்பது
அந்த பெண் வீட்டாருக்கு தெரிந்து விட்டது
பெண் வீட்டாருக்கும்,
பையன் வீட்டாருக்கும் ஜென்ம பகை
அதனால் தன் பெண் காதலிக்கும்
அந்த பையனை கையும் களவுமாக
பிடிக்க வேண்டும் என்று
முடிவு செய்தார்கள்.

அந்த பெண்ணும், பையனும்
எங்கே சந்திக்க வேண்டும்
எப்பொழுது சந்திக்க வேண்டும் என்பதை
ஒரு காகிதத்தில் எழுதி
புரிந்து கொண்டு
அதற்கு ஏற்ற விதத்தில்
சிந்தித்துக் கொள்வார்கள்.

ஆனால் அவர்கள் எழுதுவதை
புரிந்து கொள்வது சற்று கடினம்;
என்ன எழுதினார்கள் என்பது
யாருக்கும் தெரியாது;
அந்த காதலர்களுக்கு தான்
அந்த வார்த்தைகள் தெரியும்;

காதலன் எழுதிய கடிதம்
காதலிக்கு போய் சேராமல்
பெண்ணின் பெற்றோர் கைக்கு கிடைத்து விட்டது
அது அவர்களுக்கு புரியவில்லை
அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதி இருந்தது
       ""நாளை அல்வா""
இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே எழுதி இருந்தது
எப்படி எப்படியோ படித்து பார்த்தும்
யாருக்கும் புரியவில்லை.
அவர்களுக்கு நாளை என்ற
வார்த்தை மட்டுமே புரிந்தது;
நாளை எங்கே சந்திக்கப் போகிறார்கள்;
நாளை எப்படி சந்திக்கப் போகிறார்கள்;
எந்த இடத்தில் சந்திக்கப் போகிறார்கள்;
என்பது அவர்களுக்கு புரியாத காரணத்தினால்
நாளை அல்வா வாங்கி வருவதாகக் கூறி இருக்கிறான்
என்று நினைத்துக் கொண்டார்கள்.
அவர்கள் ஓடிப்போக திட்டமிடவில்லை என்று
அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து
அதை பெரிது படுத்தாமல்
அந்த கடிதத்தை அந்த காதலிக்கும்
பெண்ணிடமே கொடுத்து விட்டார்கள்.


ஆனால் அந்த காதலர்கள் இருவரும்
இரவு ஊரை விட்டு ஓடிப் போய் விட்டார்கள்
இந்த நிகழ்வு நடந்து பல வருடங்கள் கழித்த பின்
பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்
இரண்டு குடும்பங்களும்
ஒன்றாக இணைந்து விட்டன.
அதில் ஒருவர் நாளை அல்வா‘
என்ற வார்த்தைக்கு அர்த்தம்
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
அந்த காதலர்களிடம்
நாளை அல்வா என்றால் என்ன
அர்த்தம் என்று கேட்டார்.

அதற்கு அந்த பெண் சொன்ன பதில் இதுதான்
நாங்கள் ஏற்கனவே ஊரை விட்டு
ஓடிப்போக திட்டமிட்டோம் ;
எப்பொழுது என்பதை
என் காதலர் நாளை அல்வா 
என்ற வார்த்தையில் சொன்னபோது
நான் அதை புரிந்து கொண்டு சென்றேன்;
ஊரை விட்டு ஓடினோம்;
திருமணம் செய்து கொண்டோம் என்றாள்.

அதற்கு அர்த்தம் இது தான்
அல், எல் என்று இரண்டு வார்த்தைகள்
தமிழில் இருக்கிறது
அல் என்றால் இரவு என்று பொருள்.
எல் என்றால் பகல் என்று பொருள்.

நாளை அல்வா என்றால்
அல்+வா=அல்வா
நாளை இரவு வா என்று அர்த்தம்

என் காதலர் நாளை இரவு வா என்றார்
நான் இரவு சென்றேன்
இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய்
திருமணம் செய்து கொண்டோம்
என்றாள் அந்தப் பெண்.
அதனால் நான் இரவு கிளம்பி சென்றேன்
என்றார்கள்

இதைப் போலத் தான்
வார்த்தைகள் வித்தியாசமானவை
ஒரே வார்த்தை இரண்டு பொருள் தரும்
ஒன்று நேரடியாக வரும்
கண்டு பிடிக்கும் விதத்தில் இருக்கும்;
இரண்டாவது அர்த்தம் மறைமுகமாக இருக்கும்;
‘அந்த இரண்டாவது அர்த்தத்தை கண்டு பிடித்தால்
முதல் அர்த்தம் அதனுடன் தொடர்புடையது
தெரியவரும்.

அதனால் தான் இயேசு உன்
தந்தையையோ; தாயையோ;
சகோதரரையோ; சகோதரிகளையோ;
மனைவியையோ;
மகனையோ; மகளையோ;
விட்டு விட்டு வா என்றார்.

அதற்கு இரண்டு பொருள் உண்டு
உயிருள்ளவைகளை எவன்
ஒருவன் விட்டு விடுகிறானோ
அவனால் மட்டுமே உயிரற்றவைகளை விட முடியும்;
உயிரற்றவைகளை விட முடியாதவன்
உயிருள்ளவைகளை விட முடியாது;

அதனால் தான் இயேசு
முதலில் உயிரற்றவைகளை விடு என்றார்
முடியவில்லை என்று சொன்ன காரணத்தினால்
உயிருள்ளவைகளை விடு என்றார்.

உயிருள்ளவைகளை விடு என்றாலே
உயிரற்றவைகளை விட்டு விட முடிந்தால்
மட்டுமே உயிருள்ளவைகளை விட முடியும்
என்பதை உணர்ந்த இயேசு
வார்த்தைகளை வேறு மாதிரி
உபயோகித்தார்.

உயர்ந்த நிலைகளில் இருப்பவர்களால்
மட்டுமே இந்த நிலையில்
இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும்.

உயிரற்றவைகளையும்
உயிருள்ளவைகளையும்
யார் ஒருவர் விட்டு விட்டு வருகிறாரோ
அவர் நித்திய ஜீவனை அடைய முடியும்;
அவ்வாறு
உயிரற்றவைகளையும்,
உயிருள்ளவைகளையும்,
விட முடியாதவர்களால்
நித்திய ஜீவனை அடைய முடியாது
அடையப் போவதில்லை
மெய்யாகவே சொல்கிறேன் என்கிறார் இயேசு.

உயிரற்றவைகளையும்,
உயிருள்ளவைகளையும்,
யார் விட்டு விட்டார்களோ
அவர்களுக்கு இந்த பிறவியில்
அதிகமானவைகள் கிடைக்கும்;
இறந்த பின் அவர்களுக்கு
நித்திய ஜீவன் கிடைக்கும்;
உயிரற்றவைகளையும்,
உயிருள்ளவைகளையும்,
விட்டு விடாதவர்களுக்கு
அது கிடைக்காது என்று நான்
‘மெய்யாகவே சொல்லுகிறேன்
என்கிறார் இயேசு.

இதைத் தான் இம்மையில் அதிகமானவைகளையும்
மறுமையில் நித்திய ஜீவனை
அடையாமற் போவதில்லையென்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்கிறார்
இயேசு.

---------இதன் தொடர்ச்சி
  இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(4)
                            ----------பார்க்கவும், படிக்கவும்









No comments:

Post a Comment