September 24, 2017

இயேசுகிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-மூலப்-பதிவு-81-(2)


இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(2)

      """"பதிவு எண்பத்துஒன்றை விரித்துச் சொல்ல
         ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

இத்தகைய அடிமைத் தன்மையை
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

நிலை ஒன்று : பிறர் நம்மை நம் விருப்பம் இல்லாமல்
               அடிமைப்படுத்துவது
      நிலை இரண்டு : நாமே பிறரிடமோ அல்லது ஒன்றிடமோ
               அடிமையாவது

அடிமை நிலையை சமுதாயத்தில் மூன்று
பிரிவைச் சேர்ந்தவர்கள் தான்
வளர்க்கிறார்கள்.

       ஒன்று   :  அரசியல் தலைவர்கள்
இரண்டு :  மதத் தலைவர்கள்
மூன்று  :  பொருளதாரத் தலைவர்கள்

இவர்கள் மூவர் தான் அடிமை நிலையை
சமுதாயத்தில் வளர்த்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் தான் வளர்க்கிறார்கள்
என்பது யாருக்கும் தெரியாது,
இவர்கள் தான்
அடிமை நிலையை வளர்க்கிறார்கள்
என்பது கூட தெரியாமல்
மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும்.
அடிமைப்படுத்தப்பட்டு
அடிமையாகி வருகின்றனர்.


நிலை ஒன்று : பிறர் நம்மை நம் விருப்பம் இல்லாமல்
       அடிமைப்படுத்துவது

பிறர் நம்மை நம் விருப்பம் இல்லாமல்
அடிமைப்படுத்துவததை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்.

  ஒன்று : ஒருவர் மற்றவரை நேரடியாக அடிமைப் படுத்துவது
இரண்டு : ஒருவர் மற்றவரை மறைமுகமாக அடிமைப்படுத்துவது

இந்த இரண்டு அடிமை நிலைகளும் ஆபத்தானவை
சமுதாயத்தில் மிக கொடியவைகள்
இந்த இரண்டும்
சமுதாயத்தில் இல்லை என்றால்
சமுதாயம் நன்றாக இருக்கும்
சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்கும்
சமுதாயம் நல்லவிதமாக இருக்கும்
சமுதாயம் மகிழ்ச்சி உடையதாக இருக்கும்
சமுதாயம் அமைதியாக இருக்கும்
சமுதாயம் நிம்மதியாக இருக்கும்
சமுதாயம் உண்மையாக இருக்கும்
சமுதாயம் உயர்வானதாக இருக்கும்
சமுதாயம் சிறப்பானதாக இருக்கும்
சமுதாயம் மகிழ்வுடையதாக இருக்கும்
சமுதாயம் நிலையானதாக இருக்கும்


ஒன்று : ஒருவர் மற்றவரை நேரடியாக அடிமைப் படுத்துவது

ஒருவர் பிறரை
நேடியாக அடிமைப் படுத்துவது என்பது
சமுதாயத்தில் காலம் காலமாக
நடைபெற்று வருகிறது என்பது
பல பேருக்கு தெரியும்.
இது நம் விருப்பம் இல்லாமல்
நம்மை நேரடியாக அடிமைப்படுத்துவது
நம் விருப்பம் இல்லாமல்
நம்மை நேரடியாக அடிமைப்படுத்துவது
பணக்காரர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள்
உயர்ந்தவர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள்
உயர்ந்த ஜாதி என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள்
சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதாகத்
தங்களை நினைத்துக் கொள்பவர்கள்
ஜாதியில் உயர்ந்தவர்களாகத் தங்களை நினைத்துக் கொள்பவர்கள்
தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தாழ்வாக நினைத்துக் கொண்டு
தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள்
பிறரை அடிமை நிலையில் வைத்து இருப்பார்கள்.

தங்களுக்கு அடிமையாக இருப்பவர்கள்
தங்கள் முன் வரும்போது மேல் சட்டை போடக்கூடாது
மேலே துண்டு போட்டு இருந்தால்
தங்கள் முன் வரும் போது துண்டை இடுப்பில் கட்ட வேண்டும்
கையை எடுத்து வாயை பொத்திக் கொள்ள வேண்டும்
காலில் செருப்பு போடக் கூடாது
அப்படியே போட்டாலும்
தாங்கள் வரும் போது
செருப்பை எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும்
இரண்டு அடி தள்ளி தான் நிற்க வேண்டும்
தாங்கள் வரும் போது எழுந்து நிற்க வேண்டும்
கூழைக் கும்பிடு போட வேண்டும்
தனக்கு சமமாக அமர்ந்து பேசக்கூடாது
என்ற நிபந்தனைகளுடன்
அதை பின்பற்ற வேண்டும்
என்று அடிமைகளாக பல பேரை
அடிமை நிலைக்கு ஆளாக்கி வைத்து இருந்தார்கள்.

அடிமையாக ஆக்கப்பட்டவர்கள்
தங்களுக்கு அடிமைகளாக
இருப்பதில் ஒருவித மகிழ்ச்சி.
பிறரை அடிமையாக வைத்து இருப்பதில்
அதில் ஒரு இன்பம்
சிலருக்கு ஏன் பல பேருக்கு பிறரை அடிமையாக வைத்திருப்பதில்
பிறர் தனக்கு அடிமையாக இருப்பதை பார்ப்பதில் இன்பம்
அதில் ஒரு குரூர புத்தி அவர்களுக்கு இருக்கும்
அடிமை நிலையில் தங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கும் வரை
தான் அமைதியாக இருப்பார்கள்
தங்களை எதிர்த்தால்
தங்கள் அடிமை நிலையில் இருந்து விலகினால்
அடிமை நிலையை எதிர்த்து கிளர்ச்சி செய்தால்
அடிமை நிலைக்கு எதிராக செயல்பட்டால்
அடிமையாக இருக்க மாட்டேன் என்று சொன்னால்
அடிமை நிலையை எதிர்த்து போராடினால்
அடிமை நிலையை எதிர்த்து கருத்துக்கள் சொன்னால்
அவர்களுக்கு பிடிக்காது
அவர்களுக்கு அடிமை நிலைக்கு தள்ளப்பட்டு
அடிமை ஆக்கப்பட்டவர்கள்
அடிமையாகத் தான் இருக்க வேண்டும்
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டு
அடிமை நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள்
அடிமை நிலையை விட்டு வெளியே வரக்கூடாது
அப்படி அவர்கள் அடிமை நிலையை விட்டு
வெளியே வந்தால்
அவர்களுடைய இன்பம் பாதிக்கப்படும்
அவர்களுடைய இன்பம் பாதிக்கப்பட்டால்
அவர்களுக்கு கடுமையான கோபம் வரும்
அது தான் சண்டையாக உருவெடுக்கிறது.

அடிமையாக இருந்தவன்
தான் அடிமை நிலையில் இருக்கக் கூடாது
தன் பரம்பரை தான் அடிமை நிலையில் இருந்தது
தன் தாத்தா, அப்பா என்று பரம்பரையாக
அடிமையாக கை கட்டி வேலை செய்தது
நானும் அடிமையாக இருக்க வேண்டுமா
என்று யோசித்து சிந்தித்து
சுயமரியாதையுடனும்
பகுத்தறிவுடனும் செயல்பட்டு
அடிமை நிலையிலிருந்து விடுபட
தங்களை ஆண்டாண்டு காலமாக
அடிமையாக  வைத்திருந்தவர்களை எதிர்த்தால்‘
அடிமையாக இருந்தவன் தானும்
பிறருடன் சமமாக இருக்க வேண்டும்
என்று நினைத்து அடிமை நிலையை எதிர்த்து
புரட்சி செய்தால்
அடிமையாக இருந்தவன் தானும் இந்த
மண்ணில் மனிதனாக இருக்க வேண்டும்
என்று ஆசைப்பட்டால்
அடிமையாக இருந்தவன் தானும் இந்த
உலகத்தில் சுயமரியாதையுடன்
வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டால்.
அதற்காக கிளர்க்சி செய்தால்
அடிமை நிலையை எதிர்த்து
தங்கள் சுதந்திரத்திற்காக போராடினால்,
சமுதாயம் அடிமை நிலையை எதிர்த்து
போராடியவர்களை தான் எதிர்த்து
போராடுமே தவிர
அடிமையாக வைத்திருந்தவர்களை
குறை சொல்லாது
ஏன் குறை சொல்லாது என்று
நன்றாக யோசித்துப் பார்த்தோமேயாகில்
அதில் அரசியல், மதம், பொருளாதாரம்
இந்த மூன்றும் அதில் அடங்கி இருப்பதும்
நன்றாகத் தெரியும்.

இந்த மூன்றும் எங்கெல்லாம் இருக்கிறதோ
அங்கெல்லாம் நாம் எந்தவித
மாற்றத்தையும்
கொண்டு வந்து விட முடியாது

சமுதாயம் எப்போது உயர்ந்தவர்களுக்கு
ஆதரவாகத் தான் செயல்படும்
ஏழை மக்களுக்கு
அடிமையாக வைக்கப்பட்ட மக்களுக்கு
ஆதரவாகச் செயல்படாது
ஆனால் அவர்களுக்கு ஆதரவாக
இருப்பது போல் செயல்படும்
அடிமையாக இருக்கும் மக்களை
நன்றாக ஏமாற்றும்
நயவஞ்சக வார்த்தைகளை கூறும்
இன்சொல்லில் நஞ்சை கலந்து வைத்திருக்கும்
போற்றுவது போல் தூற்றி கொண்டிருக்கும்

சாதாரண மக்கள் தவறு செய்வதற்கும்
அடிமை நிலையில்இருப்பவன் தவறு
செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது
அதை நன்றாக உற்று கவனித்தால்
சமுதாயத்தில் நன்றாக தெரியும்
நன்றாக சிந்திப்பவர்களுக்கு தெரியும்
நன்றாக யோசிப்பவர்களுக்கு தெரியும்
சமுதாயம் எவ்வளவு கொடூரமானது
சமுதாயம் எவ்வளவு கேவலமானது
சமுதாயம் எவ்வளவு குரூருமானது
சமுதாயம் எவ்வளவு மானங்கெட்டது
சமுதாயம் எவ்வளவு ரோசங்கெட்டது
சமுதாயம் எவ்வளவு தவறானது
என்பது தெரியும்

சாதாரண மனிதன் அதாவது
அடிமை நிலையில் வைக்கப்பட்டவர்களைத்
தவிர மற்றவர்கள் அனைவரும்
பெரிய தவறு அதாது  மறைக்க முடியாத
பெரிய தவறு செய்தால்
அதை சிறிய தவறாக சமுதாயம் காட்டி
அதை பெரிது படுத்தாமல் விட்டு விடும்
அதாவது முழு பூசணிக்காயை
சோற்றில் போட்டு மறைத்து விடும்
அதில் பணக்காரர்கள்
உயர்ந்த சாதிக் காரர்கள் என்று தங்களை
சொல்லிக் கொள்பவர்கள்
உயர்ந்தவர்கள் என்று சமுதாயம்
நினைத்துக் கொண்டிருப்பவர்கள்
அதிகாரத்தில் இருப்பவர்கள்
அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்துக்
கொண்டிருப்பவர்கள்
அனைவரும் இதில் அடக்கம்.

ஆனால் அடிமை நிலையில் இருப்பவன்
ஒரு சிறிய தவறு செய்தால்
அதை பெரியதாக்கி
பெரிய தவறாக படம்பிடித்துக் காட்டி
பெரிய நிகழ்வாக்கி
அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும்
இந்த சமுதாயம்

இதிலிருந்தே தெரியும்
சமுதாயம் எவ்வளவு கேவலமானது என்று
எவ்வளவு கேவலமான குணத்தை
தன்னுள் கொண்டு இருக்கிறது என்று
எவ்வளவு தவறான கொள்கைகளை
தன்னுள் கொண்டிருக்கிறது என்று

அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்களை
கேவலமாகத் தான் வைத்திருக்கிறது
இச்சமுதாயம்
அரசியல், மதம், பொருளாதாரம்
இந்த மூன்றையும் ஆண்டு
கொண்டிருப்பவர்கள் இருக்கும் வரை
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்
அடிமை நிலையை எதிர்த்து
போராடவும் முடியாது
அடிமை நிலையை எதிர்த்து போராடினால்
யாரும் ஆதரவும் தர மாட்டார்கள்
என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்
இது தான்
ஒருவர் மற்றவைரை நேரடியாக அடிமைப் படுத்துவது


இரண்டு : ஒருவர் மற்றவரை மறைமுகமாக அடிமைப்படுத்துவது

நேரடியாக அடிமைப் படுத்துவதை நாம் எதிர்க்கலாம்
ஆனால் மறைமுகமாக அடிமைப் படுத்துவதை
நாம் எதிர்க்கக் கூட முடியாது
நாம் மறைமுகமாக அடிமைப்படுத்தப்படுகிறோம்
என்பதை உணராமலே
அடிமையாக மாறிக் கொண்டு இருப்பார்கள்
அடிமையாகவே இருப்பார்கள்
இன்னொன்றுக்கோ அல்லது
இன்னொருவருக்கோ அடிமையாக இருப்பார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமையாக இருப்பார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்களை
நினைத்து பார்த்து
எள்ளி நகையாடிக் கொண்டு இருப்பார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்களை
கேவலமாக நினைப்பார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு
எதிராக கருத்து சொல்வார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்களை
இழிவாக நினைப்பார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்
அடிமை நிலையில் தான் இருக்க வேண்டும்
என்று நினைப்பார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்
அடிமை நிலையை எதிர்த்து போராடினால்
கலகத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்று
வார்த்தை ஜாலம் பேசுவார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்
தங்கள் உரிமைகளைக் கேட்டால்
சம்பந்தமில்லாத கருத்துக்களை
பைத்தியக்காரத் தனமாக உளறுவார்கள்
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
அடிமை நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்
சுதந்திரமாக இருப்பவர்களைப் பார்த்து
நாங்களும் பிறருக்கு சமமாக வர வேண்டும்
நாங்களும் பிறருக்கு சமமாக இருக்க வேண்டும்
எங்களையும் பிறரைப் போல் சமமாக மதிக்க வேண்டும்
என்று கேட்டால் சட்டம் பேசுவார்கள்

ஆனால் தாங்களும் தங்களுக்கே தெரியாமல்
சமுதாயத்தால் மறைமுகமாக
அடிமையாகப்பட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்
தாங்கள் அடிமையாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கிறோம்
என்பது கூடத் தெரியாமல்
தாங்கள் அடிமையாக இருக்கிறோம்
என்று கூடத் தெரியாமல்
அடிமையாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்

நோயாளி இல்லை என்றால்
மருத்துவருக்கு வேலை இல்லை
அது சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளுக்கு வேலை இல்லை

குற்றம் நடைபெறவில்லை எனில்
தவறு செய்யப்படவிலை எனில்
தவறு யாரும் செய்யவில்லை எனில்
காவல் துறைக்கு,
காவல் அதிகாரிகளுக்கு
நீதி மன்றத்திற்கு,
வக்கில்களுக்கு
அது சம்பந்தப்பட்ட
பல்வேறு துறைகளுக்கு
வேலை இல்லை.

இது தான் சமுதாயம்
ஒன்று மற்றொன்றின் துணையுடன் இயங்குகிறது
ஒன்று மற்றொன்றில்லாமல்
இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்பது
இதன் மூலம் தெரியும்
விதை இல்லை என்றால் செடி முளைக்காது
அது போல் நோய் இல்லை என்றால்
மருத்துவத்துறையும்
அது சம்பந்தப்பட்ட துறையும் இல்லை

அது போல் குற்றம் நடைபெற வில்லை என்றால்
காவல் துறையும் இல்லை
நீதித் துறையும் இல்லை
அது சம்பந்தப்பட்ட துறைகளும் இல்லை

உலகில் நடைபெறும் குற்றங்களுக்கு
எல்லாம் மூல காரணமாக இருப்பது
இரண்டே இரண்டு நிலைகள் தான்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

 ஒன்று :  உடல் களங்கப்படுவதால் ஏற்படும் குற்றம்
இரண்டு:   உயிர் களங்கப்படுவதால் ஏற்படும் குற்றம்

உடலும் உயிரும் களங்கப்பட்டு போனதால் தான்
சமுதாயத்தில் பல்வேறு குற்றங்கள்
பல்வேறு குறைகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன
எல்லாவிதமான குறைகளும், குற்றங்களும்
இந்த இரண்டில் தான் ஏற்படுகிறது
என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
இந்த இரண்டும் களங்கப்பட்டு போனதால் தான்
சமுதாயம் குறைகளோடும்
குற்றங்களோடும் நிரம்பி இருக்கிறது என்பதை
நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
நாம் அறிந்து கொள்ள வேண்டும்
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

இச்சமுதாயம் உயிரையும் உடலையும்
களங்கப்படுத்துவதற்கான
செயல்களைச் செய்து
குறைகளையும் குற்றங்களையும் உண்டாக்கி
அனைவரையும் மறைமுகமாக
அடிமையாக வைத்திருக்கிறது

இச்சமுதாயத்தில் நாம் அடிமையாகஇருக்கிறோம்
என்று கூட தெரியாமல்
நாம் அடிமையாக இருக்கிறோம்
நாம் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு
நாம் அடிமையாக இருக்கிறோம்
உடல் களங்கப்பட்டு போனால்
குறை ஏற்படுகிறது
அதனால் நாம் மருத்துவரையும்
அது சம்பந்தப்பட்ட துறைகளையும் நாடுகிறோம்

உயிர் களங்கப்பட்டு போனால்
குறை ஏற்படுகிறது
அதனால் நாம் காவல் துறையையும்
நீதித் துறையையும்
அது சம்பந்தப்பட்ட துறையையும்
நாடுகிறோம்

இவைகள் இரண்டையும் நாம்
உதாரத்திற்காகத் தான் எடுத்திருக்கிறோம்
எவ்வளவோ நிலைகள்
இதைப் போல் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்து
களங்கத்தை ஏற்படுத்தி
குற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கின்றன

உடல் களங்கப்படுவது மற்றும்
உயிர் களங்கப்படுவது
ஆகிய இரண்டின் காரணத்தால் தான்
இச் சமுதாயம்
குறையாக இருப்பதற்கும்
குற்றத்துடன் இருப்பதற்கும்
களங்கப்பட்டு இருப்பதற்கும்
காரணம் என்பதை
நாம் மீண்டும் மீண்டும்
நினைவில் கொள்ள வேண்டும்

உதாரணத்திற்கு
மருத்துவத் துறையை மட்டும்
எடுத்துக் கொள்வோம்
ஒருவருக்கு சிறுநீரகக் கல்
உருவாகி விட்டது
அதற்கு செய்யப்படும்
வைத்தியங்கள் என்பவை
மிகப்பெரியவை
மிகக் கடினமானவை
மிகவும் வலியை ஏற்படுத்தக் கூடியவை
அதற்காக செலவிடப்படும் தொகையும் அதிகமானவை
அதற்காக செலவிடப்படும் நேரமும் அதிகமானவை
அதற்காக செலவிடப்படும் காலமும அதிகமானவை

மருத்துவத் துறை என்று
எடுத்துக் கொண்டாலே
மருத்துவமனை
மருத்துவர்
மருந்தை செய்யும் இடம்
மருந்தை விற்பனை செய்யும் இடம்
அறுவை சிகிக்சை செய்யும் இடம்
அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்கள்‘
என்று பல்வேறு நிலைகள் ஒன்றாகக் கூடும்
ஒரு நிலை தான் மருத்துவத் துறை

இது ஒரு மிகப்பெரிய சங்கிலித் தொடரை
தன்னுள் கொண்டிருக்கும்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்கும்
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு
இது தெரியாது
யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்
என்று யாருக்கும் தெரியாது
ஒருவருக்கும் மற்றொருவருக்கும்
மிகப்பெரிய நிலையில் தொடர்பு இருக்கும்
கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு
கொண்டிருக்கும்
மருத்துவமனை
மருந்துகம்
மருந்துகள்
ஆகியவை தொடர்பில் இருக்கும்
வியாபார நிலைக்கு ஏற்ப
இவைகள் இருக்கும்
நோய் என்பது மனிதனுக்கு ஏற்படவில்லை என்றாலோ
நோய் ஏற்பட்டு மிக எளிதாக யாராவது
குணப்படுத்தி விட்டாலோ
பாதிக்கப்படுவது
இந்த சங்கிலித் தொடரில்
இணைக்கப்பட்ட மறைமுகமாக
வியாபாரங்கள்

1.சிறுநீரகக் கல் ஒருவருக்கு உண்டாகி விட்டது என்றால்
அது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே
இருக்கும்
2.அவ்வாறு உருவாகி விட்டால் அத்தகையவர்
அசைவ உணவு சாப்பிடக்கூடாது
3,உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது
குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்
4.தக்காளி அதிகமாக சாப்பிடக்கூடாது
தக்காளியில் உள்ள கொட்டடைகளை நீக்கி விட்டு
சமைத்து சாப்பிட வேண்டும்
5.காரங்கள் குறைத்து விட வேண்டும்
6.எலுமிச்சை பழ ஜுஸ் சாப்பிட வேண்டும்
7.வாழைத்தண்டு ஜுஸ் சாப்பிட வேண்டும்
என்று பல்வேறு விதமான கட்டுப்பாடுகள்

அதுமட்டுமல்ல
சிறுநீரகக்கல் தோன்றி விட்டால்
அதற்கு வழங்கப்படும் மருத்துவ முறையானது
அதிகப்படியான வலியை உண்டாக்கக் கூடியது
உடலையும் வாட்டி விடக் கூடியது
வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியது
சிறுநீரகக் கல் ஆனது
சிறுநீரகக் குழாய் வழியாக இறங்கும் போது
மரண வலியை கொடுக்கும்
அதன் வலியை தாங்க முடியாது
செத்து விடலாம் போல தோணும்

சிறுநீரகக் கல் வந்து விட்டது
மருத்துவர்  உறுதி செய்த பிறகு
அதற்காக முன்பெல்லாம்
செய்யப்படும் மருத்துவ முறையானது வேதனையானது
அறுவை சிகிச்சை செய்து தான்
சிறுநீரகக் கல்லை எடுப்பார்கள்
ஆனால் தற்போது
அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து
சிறுநீரகக் கல் எடுக்கப்படுவதில்லை
அறுவை சிகிச்சை செய்யாமல்
அதற்கென்று உள்ள ஒரு
மருத்துவ முறையை பயன்படுத்தி
சிறுநீரகக் கல்லை எடுப்பார்கள்

வைத்தியம் செய்யப்படும் போது
சிறுநீரகக் கல் உடைந்து வெளியேறுவதற்காக
மருந்துகள் கொடுப்பார்கள்
நடைபயணம் செய்யச் சொல்வார்கள்
வாழைத் தண்டு ஜுஸ் சாப்பிட சொல்வார்கள்
சிறிது நாட்கள் கழித்து
எக்ஸ் ரே எடுத்து பார்ப்பார்கள்
தேவைப்பட்டால் ஸ்கேன் எடுத்து பார்ப்பார்கள்
சிறுநீரகக் கல் நீங்கி விட்டால்
தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய
முறைகளை சொல்லி நோயாளியை
கடைபிடிக்க சொல்வார்கள்.

மாதத்திற்கு ஒரு முறையோ
மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ
அனைத்து விதமான
டெஸ்ட்களையும் எடுத்து
நோய் வந்தவர் பரிசோதனை செய்து
கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கல் நமக்கு தோன்றினால்
இவ்வளவு நிலைகள் உள்ளது என்பதையும்,
இத்தனை விஷயங்களையும் நாம்
அனுபவித்து கடந்து தான் வர வேண்டும்
என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை சிறுநீரகக் கல் தோன்றினால்
அது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே
இருக்கும்.

பெரும்பாலான நோய்களுக்கு
இன்னும் மருந்தே கண்டுபிடிக்கப்படவே இல்லை.
பெரும்பாலான நோய்களை
நாம் குணப்படுத்த முடியாது
கட்டுக்குள் தான் வைக்க முடியும்;
அவ்வப்போது தான் சரி செய்ய முடியும்;
பெரும்பாலான நோய்களுக்கு குணப்படுத்தக் கூடிய
மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

சிறுநீரகக் கல் நீக்க
இவ்வளவு கடினமான முறைகளையும்,
அளவுக்கதிகமான உழைப்பையும்,
அளவுக்கதிகமான வலியையும்,
தாங்கி கொண்டு செயல்பட வேண்டிய
அவசியமில்லை.

சிறுநீரகக் கல்லை நீக்க
எளிமையான வழி ஒன்று உள்ளது
பணமும் அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை,
வலியும் இல்லை,
மீண்டும், மீண்டும்,
சிறுநீரகக் கல் தோன்றாமல்
பார்த்துக் கொள்ளலாம்
அந்த முறையை நம் முன்னோர்கள்
பாரம்பரியமாக பயன்படுத்திக் கொண்டு
வந்துள்ளனர்;
அதை ரகசியமாக பாதுகாத்து
வைத்து வந்திருக்கின்றனர்;
இந்தக் காலத்திலும் இது ஒரு சில
பேருக்கு மட்டுமே தெரியும்;
சில பேர் பல முறைகளைக் கூறுவர்;
மூலிகை வைத்தியம் பற்றி சொல்வர்;
பல்வேறு விதமான
மூலிகைகளைப் பற்றி சொல்வர்;
அதைப் பயன்படுத்தி பார்க்கச் சொல்வர்;
பெரிய நெருஞ்சி முள்
சிறிய நெருஞ்சி முள் - என்று
பல்வேறு மூலிகைகளை சொல்வர்
அதை பயன்படுத்தச் சொல்வர்
ஆனால்
அதைவிட வலிமை வாய்ந்த
மிக எளிமையாக வைத்தியம் ஒன்று உள்ளது
அது தமிழ்நாட்டில் மிக சிலருக்கே தெரியும்;
அதுவும் மிக முக்கியமானவர்களுக்கே தெரியும்;
அவர்களும் அதை வெளியில் சொல்லாமல்
அமைதியாக இருக்கின்றனர்;
பாதிக்கப்பட்டவர்கள் வரும்பொழுது மட்டும்
அவர்களுக்கு அந்த முறைகளைச் சொல்லி
நோயைக் குணப்படுத்துகின்றனர்.

அது ஒரு சிறப்பான மூலிகை,
வித்தியாசமான மூலிகை,
எளிமையான மூலிகை,
எளிதில் கிடைக்கும் வகையில் இருக்கும் மூலிகை,
எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்கும் மூலிகை,
எளிதில் மருந்து செய்யப்பட்டு
பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை,
அந்த மூலிகையை முறைப்படி எடுத்து
எந்த முறையில் மருந்து செய்ய வேண்டுமோ,
அந்த முறையில் மருந்து செய்து பயன்படுத்தினால்
எந்த முறையில் மருந்தை சாப்பிட்டு வந்தால்
நோய் குணமாகுமோ
அந்த முறையில்
சாப்பிட்டு வர வேண்டும்.
அந்த முறையில் சாப்பிட்டால்
எந்த பத்திய முறைகளைக் கையாள வேண்டுமோ,
அந்த பத்திய முறைகளைக் கையாண்டால்
நோய் எளிதில் மட்டுமல்ல
விரைவில் குணமாகி விடும்;
சிறுநீரகக் கல் இருந்த இடம்
தெரியாமல் மறைந்து விடும்;

குறிப்பிட்ட காலத்திற்கு மருந்தை
உண்டு வருவதன் மூலம்
நோய் குணமாகி விடும்;
சிறுநீரகக் கல் இருந்த இடம்
தெரியாமல் போய்விடும்;
நோயை எளிதில் குணமாக்கும்;
இந்த முறை அனைவருக்கும் தெரிந்தால்,
இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கும்
இனி பாதிக்கப்படப் போகிறவர்களுக்கும் நன்மை
நிறைய எண்ணிக்கையில்
அனைவரும் பயன்பெறுவர்.

ஆனால் இது சங்கிலித் தொடரில் உள்ள
மருத்துவத் துறைக்கு பிடிக்காது
ஏனென்றால் கோடிக்கணக்கில் பணம்
செலவழித்து செயல்படும்
இந்த சங்கிலித் தொடரில்
குறைவான பணத்தில் எளிமையாக குணமாகும்
நிலை தெரிந்தால்
எதிர்ப்பு வலுக்கும்;
அது கோபமாக மாறும்;
வஞ்சமாக மாறும்;
அதன் விளைவால்
இந்த எளிய முறையை சொன்ன
அந்த மருத்துவருக்கு
பல்வேறு இன்னல்களை
மறைமுகமாகவும், நேரடியாகவும் கொடுப்பர்;
போலி மருத்துவர் என்று முத்திரை குத்துவர்;
போலி மருந்துகள் என்று முத்திரை குத்துவர்;
அதை பயன்படுத்தக் கூடாது
என்று கூக்குரலிடுவர்.
அது தவறான பக்குவத்தில்
செய்யப்பட்ட மருந்து என பிரகடனப்படுத்துவர்;
அதை பயன்படுத்தக் கூடாது
என்று சொல்லுவர்;
ஆங்கில மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும்
அது தான் சிறந்தது என்றும் சொல்வர்.
இத்தகைய இழிவான செயல்களுக்கு பயந்தே,
இத்தகைய தரக்குறைவான செயல்களுக்கு பயந்தே,
இத்தகைய தவறான செயல்களுக்கு பயந்தே,
மக்களுக்கு நன்மை பயக்கும்
உயர்ந்த விஷயங்களை,
உயர்ந்த செயல்களை,
மறைத்தே செய்கின்றனர்;
பிறர் அறியாமல் செய்கின்றனர்;
யாருக்கும் தெரியாத வகையில் செய்கின்றனர்;
யாரும் கண்டுபிடிக்க முடியாத
வகையில் செய்கின்றனர்;
பலருக்கும் நன்மை பயக்கும் செயல்கள்
மறைத்தே செய்யப்படுகின்றன;
பலருக்கும் நன்மை பயக்கும் செயல்கள்
யாருக்கும் தெரியாமல் செய்யப்படுகின்றன;
அதற்கு காரணம் சமுதாயத்தில் நிலவும்
ஒரு சில இழிவான தன்மைகள்.

மருத்துவத் துறையின் நீண்ட சங்கிலித் தொடர்
எங்கே சிதைவு ஏற்பட்டாலும்,
எங்கே தொடர்பு அறுபட்டாலும்,
பல்வேறு பிரச்சினைகள் அனைத்து
நிலைகளிலும் ஏற்படும்;
பல்வேறு விளைவுகள் அனைத்து
நிலைகளிலும் ஏற்படும்;
என்ற காரணத்திற்காகவே,
எளிய முறையில் வைத்தியம்
செய்யும் மருத்துவர்கள்
தங்கள் செயல்களை,
தாங்கள் செய்யும் மருத்துவ முறைகளை,
வெளியில் சொல்வதில்லை;
தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை;
தனியாக செய்கின்றனர்;
தனிப்பட்ட முறையில் செய்கின்றனர்;
யாரும் அறியாமல் செய்கின்றனர்;

எளிய முறை வைத்தியம் இருக்கும் போது
கடினமான முறை வைத்தியத்தை
இச் சமுதாயம் பின்பற்றுகிறது;
கடினமான முறை வைத்தியமே சிறந்தது என்பதை
இச்சமுதாயத்தை நம்ப வைத்து விட்டனர்;
எளிய முறை வைத்தியத்தை முடிந்த வரை
வளரவிடாமல் அழித்து விட்டனர்;
அதனால் மக்கள் எது சிறந்தது எளிமையானது
என்பதை உணராமல் இருந்து விட்டனர்;

இவ்வாறு
தவறான ஒன்று மக்களுக்கு போதிக்கப்பட்டு
தவறான ஒன்றை மக்கள் பின்பற்றப்படும்படி
வைத்து விட்டு மறைமுகமாக மக்களை
அடிமைகளாக வைத்து விட்டனர்.
இது தான்
ஒருவர் மற்றவரை மறைமுகமாக அடிமைப்படுத்துவது

---------இதன் தொடர்ச்சி
  இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(3)
       ------------பார்க்கவும், படிக்கவும்





No comments:

Post a Comment