March 30, 2020

பரம்பொருள்-பதிவு-168


                ஜபம்-பதிவு-416
              (பரம்பொருள்-168)

அரவான் :
சிற்றின்பத்தின்
சீர் சொல்லும்
சில்லறைகளின்
செயல்களால்
விளைந்த
இன்பத்தின்
எழில்களும் ;
இதயப்
பாசறையின்
பாசமிகு
பண்புகளும் ;
உயர் காவியம்
படைக்கும்
உன்னத
உயிரோவியங்களும் ;
தணலில்
வீழ்ந்து
தள்ளாடும்
தகைமையின்
தகைசான்ற
அன்பின்
அருமைகளும் ;
அரற்றி
கொண்டிருக்கும்
அறியாமையின்
எழுச்சி
பிம்பங்களும் ;
எழுந்தாட
முடியாமல்
ஒய்யாரக்
கூச்சலிடும்
உவகையின்
ஒற்றுமைகளும் ;
சரிந்து வீழ்ந்த
சகாப்தத்தை
சரியாமல் காக்க
சந்தடி சாக்கில்
எழுந்து நிற்கும்
இலக்கணத்தின்
இனிமைகளும் ;
இன்புற்று விளங்க
மூடப்பழக்கம்
முக்காடு
போட்டுக் கொள்ள
முயன்றும்
முடியாமல் போன
ஆசைகள்
அரியணை ஏற
ஆவலாய் அரற்ற
ஓடோடி வந்த
தகுதிகள்
எழுச்சியை
இலக்கணம் காட்ட
தன்மைகளை
காலங்கள்
சுழற்றிக் காட்டி
ஏகாத வேளையில்
இன்ப ஊற்று
ஏறி நிற்க
முயன்று பார்க்க
முடியாமல்
போனதுகள்
முக்கியும்
முனகியும்
முக்காட்டை
கழற்ற முடியாமல்
கனல் நெருப்பில்
கதகதத்து
பொருள் தேடும்
பொருள் நிலை
நாடும் – பொல்லாத
நிலைகளின்
ஆணவம்
அண்ட முடியாமல்
நினைவை
சிப்பிக்குள்
வைத்து விட்டால்
மட்டும் என்ன
முத்து மட்டும்
முல்லைப்பல்
காட்டுமா
முடியாதவைகள்
முயன்றால்
முடிந்தவைகள்
முழுமுதற்
பொருளை
நாடினால்
வாயாரப் புகழும்
வந்தேறிகளும்
வருங்காலத்தின்
நாழிகைகளை
கணக்கிடும்
கணக்கர்களும்
கண்மூட
வேண்டியது தான்
வினாக்களின்
விடை தேட
முடியாமல்
எழுச்சிகள்
எழுந்து
நிற்கா விட்டால்
எது ? முன் நிற்கும் ?
பரவெளியின்
பண்புணராமல்
பாரின் பல்கலை
நினையாமல்
அறிவின்
அடித்தளம்
மனத்தின்
அறிவு சான்ற
விளக்கம் – எங்கே ?
என்று தேடா
விட்டால்
இயலாமைகள் அழ
தோல்விகள்
கண்ணீர்
உகுக்க
புரட்சிகள்
புதைகுழி போக
வேண்டியது தான்?
புல் பூண்டு
செடிகளும்
பொங்கியெழும்
புவனத்தின்
பேர் சொல்லும்
பங்குகளும்
பார்வையில்
படாமல்
மறைந்திருப்பதால்
என்ன பயன்?
விழிக்கதவு
விழிப்பெற்றெழட்டும்
உன் விதியை
அது உணர்த்தட்டும்
பரிவுடன்
பாசம் காட்டி
பண் பளர்க்க 
பாரில் உள்ளோர்
பண் பட்டாலும்
பக்கத்தில்
உள்ளோர்
உள்ளில்
உருவகிக்க
வேண்டியது தான்

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment