April 03, 2020

பரம்பொருள்-பதிவு-174


               ஜபம்-பதிவு-422
             (பரம்பொருள்-174)

(சூரிய பகவானும்
சந்திர பகவானும்
கிருஷ்ணனை
சந்தித்து
தங்களுடைய
சந்தேகத்தை
நிவர்த்தி
செய்வதற்காக
பூலோகம் வந்தனர்

ஆற்றின் கரையில்
அமர்ந்து மந்திரங்கள்
சொல்லிக் கொண்டு
இருந்த கிருஷ்ணனை
தனியாக அழைத்து
கிருஷ்ணனிடம்
பேசத் தொடங்கினர் )

கிருஷ்ணன்  :
“சூரிய பகவானும்
சந்திர பகவானும்
என்னை சந்திக்க
இவ்வளவு
தொலைவு
வந்திருக்கிறீர்களா
என்னுடைய
வணக்கத்தை
ஏற்றுக் கொள்ளுங்கள் “

சூரிய பகவான்  :
“நீங்கள்
என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள் ? “

கிருஷ்ணன் :
“நான் என்ன செய்து
கொண்டிருக்கிறேன்
என்று எனக்குத்
தெரிகிறது - ஏன்
உங்களுக்கு
தெரியவில்லையா ? “

சந்திர பகவான்  :
“எங்களுக்கு
தெரிகிறது - ஆனால்
நீங்கள் செய்யும்
செயல்கள்
உங்களுக்கு
சரியானதாகத்
தெரிகிறதா ? “

கிருஷ்ணன்  :
“எனக்கு
சரியானதாகத்
தெரிந்ததால்
தானே செய்து
கொண்டிருக்கிறேன் “

சூரிய பகவான்  :
“எதை சரி
என்கிறீர்கள் ? “

கிருஷ்ணன்  :
“நான்
செய்வதைத் தான்
சரி என்கிறேன் “

சூரிய பகவான்  :
“சரியில்லாத ஒரு
விஷயத்தை
செய்து கொண்டு
நீங்கள் செய்வதை
எப்படி சரி
என்கிறீர்கள் “

கிருஷ்ணன்  :
“சரியானதை
சரி என்று
சொல்லாமல் வேறு
எப்படி சொல்ல
வேண்டும்
என்கிறீர்கள்  

சந்திர பகவான்  :
“இன்று
சதுர்த்தசி திதி !
நாளை தானே
அமாவாசை !
அப்படி
இருக்கும் போது
சதுர்த்தசி திதியான
இன்று
அமாவாசையன்று
செய்யக்கூடிய
அனைத்து
ஆன்மீக
விஷயங்களையும்
ஏன் செய்கிறீர்கள் “

“நீங்கள் செய்யும்
தவறான செயலைப்
பார்த்து
அனைவரும்
தவறு செய்து
கொண்டிருக்கிறார்கள் “

“நீங்கள்
நிறுத்தினால் தான்
அனைவரும்
நிறுத்துவார்கள் “

“நீங்கள்
அனைத்தையும்
உடனே
நிறுத்துங்கள் “

கிருஷ்ணன்  :
“நான் ஏன்
நிறுத்த வேண்டும் ;
இன்று தானே
அமாவாசை ;
இன்று
அமாவாசையாக
இருக்கின்ற
காரணத்தினால் தானே
அமவாசையன்று
செய்யக் கூடிய
அனைத்து
ஆன்மீக
விஷயங்களையும்
நான் இன்று செய்து
கொண்டிருக்கிறேன் “

“நான் ஒன்றும் தவறு
செய்யவில்லையே
தவறு செய்தால்
தானே நிறுத்த
வேண்டும் “

சந்திர பகவான்  :
“இல்லை நீங்கள்
சொல்வது தவறு
நாளை தான்
அமாவாசை “

கிருஷ்ணன்  :
“எதை வைத்து
நாளை அமாவாசை
என்கிறீர்கள்  ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment