April 03, 2020

பரம்பொருள்-பதிவு-176

                   ஜபம்-பதிவு-424
                        (பரம்பொருள்-176)

(சூரிய பகவானும்
சந்திர பகவானும்
அந்த இடத்தை
விட்டு சென்ற
பிறகு கிருஷ்ணன்
புரோகிதரை சந்தித்து
பேசத் தொடங்கினார்)

கிருஷ்ணன்  :
“நான் எந்த செயலை
நடத்த வேண்டும் என்று
நினைத்திருந்தேனோ
அந்த செயல்
நல்லபடியாக
நடந்து விட்டது  

“நாம் எந்த செயலை
முடிக்க வேண்டும்
என்பதற்காக - இங்கே
கூடியிருந்தோமோ
அந்த செயல்
நினைத்ததை விட
அற்புதமாக
முடிந்து விட்டது “

“எது நடக்க
வேண்டும் என்று
நினைத்திருந்தேனோ
அது நடந்து விட்டது ;
எதை முடிக்க
வேண்டும் என்று
நினைத்திருந்தோமோ
அது முடிந்து விட்டது ; “

“ஆமாம்
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் ;
ஆமாம்
இன்றைய
சதுர்த்தசி திதி
அமாவாசையாக
மாறி விட்டது ; “

புரோகிதர் :
“என்னது
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டீர்களா ? “

கிருஷ்ணன்  :
“ஆமாம்
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் ;
சதுர்த்தசி திதியாக
இருந்த
இன்றைய தினத்தை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் ;
இப்போது
சதுர்த்தசி திதி
முடிந்து விட்டது ;
அமாவாசை
ஆரம்பித்து விட்டது ;
அமாவாசை
தற்போது நடந்து
கொண்டிருக்கிறது ;”

“எதற்காக
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றினேனோ
அந்த செயலை
செய்வதற்குரிய நேரம்
நெருங்கி விட்டது “

“அமாவாசை சென்று
கொண்டிருக்கிறது  

“எனக்காக மிக
முக்கியமான ஒரு செயல்
காத்துக் கொண்டிருக்கிறது  

“நான் உடனே
செல்ல வேண்டும் “

புரோகிதர் :
“நீங்கள் முக்கியமான
செயல் என்று சொல்வது
அரவானை களப்பலி
கொடுப்பதைப் பற்றி தானே “

கிருஷ்ணன் :
“ஆமாம் அதைத்
தான் சொல்கிறேன் ;
அரவானைக் களப்பலி
கொடுப்பதைப் பற்றித்
தான் சொல்கிறேன் ; “

“அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்குரிய நேரம்
நெருங்கிக் கொண்டிருக்கிறது “

புரோகிதர்  :
“அரவானை களப்பலியாக
கொடுப்பதற்குரிய அனைத்து
வேலைகளையும் செய்து
முடித்து விட்டீர்களா ? “

கிருஷ்ணன்  ;
“அரவானைக்
களப்பலியாக கொடுப்பதற்கு
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்யுமாறு
பாண்டவர்களிடம் சொல்லி
விட்டு வந்திருக்கிறேன் “

“காளி தேவி
சிலையின் முன்னால்
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு தேவையான
அனைத்து ஏற்பாடுகளையும்
பாண்டவர்கள்
செய்து இருப்பார்கள் “

“அனைத்து
ஏற்பாடுகளையும் செய்து
முடித்து விட்டு
எனக்காகக் காத்துக்
கொண்டிருப்பார்கள் “

“நான் சென்றால் தான்
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கான
வேலையைச் செய்ய
முடியும் - அதனால்
நான் செல்ல வேண்டிய
நேரம் நெருங்கி விட்டது “

“நான் உங்களிடமிருந்து
விடை பெறுகிறேன் “

“இங்கே நீங்கள்
இருந்து கொண்டு
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
தொடர்ந்து செய்து
கொண்டிருங்கள்  

(என்று சொல்லி விட்டு
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தேர்ந்தெடுத்த இடத்தை
நோக்கி சென்று
கொண்டிருந்தார்
கிருஷ்ணன்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-04-2020
//////////////////////////////////////////

1 comment:

  1. அருமையான வரிகள்
    பாராட்டுகள்

    ReplyDelete