June 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-10


                 ஜபம்-பதிவு-502
           (அறிய வேண்டியவை-10)

(மறுநாள் காலை
பாண்டவர்கள் மற்றும்
கௌரவர்கள்
அனைவரும் துரோணர்
முன்பு வந்து
வந்து நின்றனர்;

துரோணர் முன்பு
குடங்கள் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன)

துரோணர் :
“இந்தக் குடங்களில்
ஆளுக்கொன்று
எடுத்துக் கொள்ளுங்கள் ;
அருகில் இருக்கும்
ஆற்றிற்குச் சென்று
இந்தக் குடம்
முழுவதும் நீர்
நிரப்பி கொண்டு
வாருங்கள் - யார்
முதலில் வருகிறாரோ
அவரே வெற்றி
பெற்றவர் “

“எனவே ஆளுக்கொரு
குடத்தை எடுத்துக்
கொண்டு உடனே
செல்லுங்கள் “

(பாண்டவர்கள் ஐவர்
மற்றும் கௌரவர்கள்
அனைவரும்
ஆளுக்கொரு குடத்தை
எடுத்துக் கொண்டு
குடத்தைப்  பார்த்தனர் ;
அனைவருக்கும் அதிர்ச்சி
குடத்தின் வாய்
மூடப்பட்டிருந்தது ;
குடத்தின் வாயில்
ஒரு சிறு துளை
மட்டுமே இருந்தது)

துரியோதனன் :
“குருதேவா! இந்தக்
குடத்தின் வாயில்
உள்ள துளையானது
மிளகு நுழையும்
அளவிற்குத் தான்
உள்ளது-அதுவும்
மிகச் சிறியதாக
இருக்கிறது
இந்தக் குடத்தில்
எப்படி ஆற்று நீரை
நிரப்பி கொண்டு வருவது”

துரோணர் :
“நான் சொன்னதை
செய்யுங்கள்  ;
செல்லுங்கள் “

(அனைவரும்
அங்கிருந்து அகன்றனர் ;
ஆற்றை நோக்கி
சென்றனர் – ஆற்று
நீரில் குடத்தை அழுத்தி
பிடித்துக் கொண்டு
நீரை நிரப்ப
அனைவரும் முயற்சி
செய்து கொண்டிருந்தனர் ;
அர்ஜுனன் குடத்தை
ஆற்று நீரில்
சிறிது நேரம் அழுத்தி
பிடித்துக் கொண்டான் ;
குடத்தை எடுத்தான் ;
யாரிடமும் எதுவும்
பேசவில்லை ;
குடத்தை எடுத்துக்
கொண்டு அங்கிருந்து
சென்று விட்டான்)

துச்சாதனன் :
“அண்ணா! அர்ஜுனன்
உடனே சென்று விட்டான் “

துரியோதனன் :
“அர்ஜுனனால் முயற்சி
செய்து கூட பார்க்க
முடியவில்லை ;
தன்னால் இச்செயலைச்
செய்ய முடியவில்லை
என்று மன்னிப்பு கேட்க
குருவைத் தேடிச்
சென்றிருப்பான் ;
நாம் செய்ய நினைக்கும்
முயற்சியைக் கூட
அவனால் செய்ய
முடியவில்லை ;
இதிலிருந்து தெரிகிறதா
அர்ஜுனன் ஒரு
கோழை என்று ;”

நாம் முடிந்த அளவு
முயற்சி செய்வோம் ;
பிறகு குருவை
சந்திக்க செல்லலாம் ;”

(கெளரவர்களோடு
மீதியுள்ள பாண்டவர்களும்
எவ்வளவோ முயற்சி
செய்தும் அவர்களால்
குடத்தில் ஒரு சில
துளிகள் மட்டுமே
நீரை நிரப்ப முடிந்தது ;
அந்த குடத்தை
எடுத்துக் கொண்டு
சென்று குருவின்
முன்னால் வைத்தனர்)

துரியோதனன் :
“எங்களால் முடிந்த
அளவு முயற்சி செய்து
இந்த குடத்தில் நீரை
சேகரித்திருக்கிறோம்  ;
ஆனால், அர்ஜுனன்
முயற்சி ஏதும் செய்யாமல்
பயந்து உடனே ஓடி
வந்து விட்டான் “

துரோணர் :
“நீங்கள் அனைவரும்
இங்கு வந்து
அர்ஜுனனுடைய
குடத்தில் நீர்
நிரம்பி இருக்கிறதா ?
இல்லையா ?
என்று பாருங்கள் “

(அனைவரும் வந்து
அர்ஜுனன் குடத்தை
தூக்கினர் குடம்
முழுவதும் நீர்
நிரம்பி இருந்தது)

துரியோதனன் :
“எப்படி இது சாத்தியம் ;
இது நடப்பதற்கு
வாய்ப்பே இல்லை ;
எங்கள் முன்னால்
ஓடி வந்தவனுடைய
குடத்தில் எப்படி
ஆற்று நீர்  
நிரம்பி இருக்கும் ;
குடத்தை செய்யும்
போதே நீரை ஊற்றி
செய்து இருப்பார்களோ?”

துரோணர் :
“குடத்தை செய்யும்
போது எப்படி நீர்
நிரப்ப முடியும்
யோசிக்காமல்
பேசுகிறாயே
துரியோதனா ? “

(அனைவரும்
சிரிக்கின்றனர்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment