June 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-11


               ஜபம்-பதிவு-503
          (அறிய வேண்டியவை-11)

துரோணர் :
“நான் உங்களுக்கு
வருண மந்திரத்தை
உபதேசித்து
இருக்கிறேன் அல்லவா?”

துரியோதனன் :
“ஆமாம்”

துரோணர் :
“அதை ஏன்
பயன்படுத்தவில்லை”

துரியோதனன் :
“அக்னி உருவானால்  
வருணமந்திரத்தை
பயன்படுத்த வேண்டும்
என்று நீங்கள்
சொல்லிக் கொடுத்து
இருக்கிறீர்கள்;
அக்னி உருவாகாததால்
நாங்கள்
வருணமந்திரத்தைப்
பயன் படுத்தவில்லை “

துரோணர் :
“வருணமந்திரத்தை
சொன்னால் நீர்
வரும் என்பது
உண்மை தானே?”

துரியோதனன் :
“ஆமாம்! குருநாதா”

துரோணர் :
“நீங்கள் குடத்தை ஆற்று
நீரில் அழுத்திப்
பிடித்துக் கொண்டு
வருண மந்திரத்தை
சொல்லி இருந்தால்
குடம் நிரம்பி
இருக்குமா இருக்காதா?”

துரியோதனன் :
“ஆமாம்! நிரம்பி இருக்கும்”

துரோணர் :
“ஆமாம்! அர்ஜுனன்
இந்த செயலைத்
தான் செய்தான் ;
குடத்தை நீரில்
அழுத்திப் பிடித்துக்
கொண்டு
வருணமந்திரத்தை
செபித்தான் ;
குடத்தில் நீர்
நிரம்பி விட்டது “

“அர்ஜுனனுடைய குடம்
நிரம்பியதற்கான
காரணத்தை நீங்கள்
தெரிந்து கொண்டு
விட்டீர்கள் அல்லவா?”

துரியோதனன் :
“தெரிந்து
கொண்டு விட்டோம்”

துரோணர் :
“சரி உங்களுடைய
குடங்களை
எடுத்துக் கொண்டு
மீண்டும் செல்லுங்கள்;
குடத்தை ஆற்று
நீரில் அழுத்திப்
பிடித்துக் கொண்டு
வருணமந்திரத்தை
செபித்து குடத்தை
நிரப்பி கொண்டு
வாருங்கள் ;
அனைவரும் செல்லுங்கள் ;”

(அனைவரும் குடத்தை
எடுத்துக் கொண்டு
ஆற்றை அடைந்தனர் ;
குடத்தை ஆற்று
நீரில் அழுத்திப்
பிடித்துக் கொண்டு
வருணமந்திரத்தை
சொல்ல முயற்சி
செய்த போது
யாராலும் சரியாக
வருணமந்திரத்தை
சரியாக உச்சரிக்க
முடியவில்லை ;
பலருக்கு வருணமந்திரம்
மறந்து விட்டது ;
அதனால் யாராலும்
குடத்தில் ஆற்று நீரை
நிரப்ப முடியவில்லை ;
தோல்வியுடன்
குருவை நாடி வந்தனர் ;
துரோணர் முன்பு
குடத்தை வைத்தனர் )

துரோணர் :
“யாராவது
குடத்தில் நீரை
நிரப்பி இருக்கிறீர்களா ?”

துரியோதனன் :
“எங்களால் முடியவில்லை”

துரோணர் :
“துரியோதனா நான்
வருணமந்திரத்தை
உங்கள் அனைவருக்குமே
சொல்லிக் கொடுத்தேன் ;
வருணமந்திரத்தை
சொன்னால் நீர்
வரும் என்றும்
சொல்லிக் கொடுத்தேன்;
குடத்தில் நீரை நிரப்பி
வாருங்கள் என்று
நான் அனைவரிடமும்
சொன்ன போது
அர்ஜுனன் மட்டுமே
வருணமந்திரத்தை
பயன்படுத்தினால்
நீர் வரும்
என்பதை உணர்ந்து
வருணமந்திரத்தை
எந்த சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும்
என்பதை உணர்ந்து
வருணமந்திரத்தைப்
பயன்படுத்தி குடத்தில்
நீரை நிரப்பி
நீர் நிரம்பிய
குடத்தைக்
கொண்டு வந்தான்;
வருணமந்திரத்தை
எந்த சூழ்நிலையில்
எப்படி பயன்படுத்த
வேண்டுமோ
அப்படி பயன்படுத்தி
குடத்தில் நீரை
நிரப்பி குடத்தை
கொண்டு வந்தான் ;
நீங்கள் யாரும்
அவ்வாறு
செய்யவில்லை ;”

“மீண்டும் உங்களுக்கு
சொன்னேன் ;
வருணமந்திரத்தை
சொன்னால் குடத்தில்
நீர் நிரம்பும்
என்று சொன்னேன் ;
நீரை நிரப்பி
வாருங்கள் என்று
சொன்னேன் - உங்களில்
சிலர் வருணமந்திரத்தை
மறந்து விட்டனர் ;
பலர் வருணமந்திரத்தை
சரியாக
உச்சரிக்கவில்லை ;
அதனால் உங்களால்
குடத்தில் நீரை நிரப்ப
முடியவில்லை “

“நான் வருணமந்திரத்தை
சொன்னால் நீர்
வரும் என்று
அனைவருக்கும்
சொல்லிக் கொடுத்தேன்
அர்ஜுனன் மட்டுமே
வருணமந்திரத்தை
எங்கே பயன்படுத்த
வேண்டும் ;
எப்படி பயன்படுத்த
வேண்டும் ;
எந்த நிகழ்வில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த நேரத்தில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த காலத்தில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த இக்கட்டான
சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும் ;
என்று யோசித்தான் ;
பயன்படுத்தினான் ;
வெற்றி பெற்றான் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment